September 14, 2018

திருக்குறள்-பதிவு-20


                      திருக்குறள்-பதிவு-20

டார்வினின்
கண்டுபிடிப்பு
யாருமே கண்டுபிடிக்க
முடியாத அபூர்வமான
கண்டுபிடிப்பு;
உலகையே
புரட்டிபோட்ட
கண்டுபிடிப்பு;
யாரும் நம்பவே
முடியாத கண்டுபிடிப்பு;
சிந்தித்துக் கூட
பார்க்க முடியாத
கண்டுபிடிப்பு:

இத்தகைய உயர்ந்த
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
உயிரிகளின் மிக
அடிப்படையான
ஆதாரத்தை
ஆதாரங்களோடு
உண்மையை
வெளிப்படுத்துவதற்கு,
ஒரு மனிதன்
தன் வாழ்க்கையில்
ஏராளமான
போராட்டங்களையும்
எவ்வளவு கஷ்டங்களையும்
சந்திக்க வேண்டியிருந்தது
என்பதை டார்வின்
வாழ்க்கையைப்
பார்த்தாலே
தெரியும்

சார்லஸ் டார்வின்
உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டைக்
கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
சொன்ன போது
இந்த உலகம்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராக
பல்வேறு
பிரச்சினைகளை
கொண்டு வந்தது.

ஐந்து நாட்கள்
அண்ட சராசரங்களையும்
படைத்த பரமபிதா
ஆறாவது நாள்
களிமண்ணை
உருட்டி ஆதாமையும்
அவன் விலா
எலும்பிலிருந்து
ஏவாளையும் படைத்து
விட்டு ஏழாவது நாள்
ஓய்வு எடுத்துக்
கொண்டார்
என்று பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக ஒரு
மதத்திற்கு எதிராக
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களுக்கு
எதிராக இருந்த
டார்வினின் கண்டுபிடிப்பு
எவ்வளவு
எதிர்ப்புகளை சந்தித்து
இருக்கும்

பைபிளில் சொல்லப்
பட்டதற்கு எதிராக
சார்லஸ் டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
சார்லஸ் டார்வின்
தன் வாழ்நாளில்
பல்வேறு எதிர்ப்புகளைச்
சந்தித்தார்.

மதத்திற்கும் தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பிற்கும்
எந்தவித சம்பந்தமும்
இல்லை என்று
சார்லஸ் டார்வின்
எவ்வளவு எடுத்துச்
சொல்லியும்
இந்த உலகம்
ஏற்றுக் கொள்ளவேயில்லை.

உலகைக் கூர்ந்து
கவனிப்பதையும்
ஆராய்ச்சிகள்
செய்வதையும்
நிறுத்துமாறு
நான் எப்போது
நிர்பந்திக்கப்படுகிறேனோ
அன்றைய
தினமே நான்
இறந்து போவேன்
என்றார் சார்லஸ்
டார்வின்

சார்லஸ் டார்வின்
1882-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
19-ம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார்.
இங்கிலாந்தின்
வெஸ்ட்
மினிஸ்டர் அப்பேயில்
(Westminster Abbey)
அவரது உடல்
அடக்கம் செய்யப்பட்டது
இரண்டு பெரிய
விஞ்ஞானிகளுடன்
ஜான் ஹெர்ஸ்ஷல்
மற்றும்
சர் ஐசக் நியூட்டன்
இவர்களுடன்
சார்லஸ் டார்வின்
ஏப்ரல் 26-ஆம் தேதி
மிகுந்த அரசு
மரியாதையுடன்
சார்ல்ஸ் டார்வின்
உடல் அடக்கம்
செய்யப்பட்டது

சார்ல்ஸ் டார்வின்
இறந்து ஒன்றரை
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர்
அவரின் கோட்பாட்டை
லண்டனின்
தேவாலய சர்ச்
தவறென்று
சொன்னதற்கு மன்னிப்பு
கேட்டுக் கொண்டது

1859-ஆம் ஆண்டு
சார்லஸ் டார்வின்
தான் கண்டுபிடித்த
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
இந்த உலகத்திற்கு
வழங்கிய போது
எவ்வளவு எதிர்ப்புகளை
சார்லஸ் டார்வின்
சந்திக்க வேண்டி
இருந்தது என்பதை
வரலாறு
தெள்ளத் தெளிவாக
நமக்கு உணர்த்துகிறது

ஆனால்,
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
அதாவது
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
புரிந்து கொள்ளும்
வகையில்
எளிமையாக
நம் முன்னோர்கள்
சொல்லி இருக்கிறார்கள்
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

--------- இன்னும் வரும்
---------- 14-09-2018
///////////////////////////////////////////////////////////


September 13, 2018

திருக்குறள்-பதிவு-19


                       திருக்குறள்-பதிவு-19

டார்வினின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
ஹக்ஸ்லி பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய வார்த்தைகளில்
உண்மைகள் இருப்பதையும்,
டார்வினின் கண்டுபிடிப்பு
உண்மை தான்
என்பதையும்,
உணர்ந்த மக்கள்
ஹக்ஸ்லியின்
பேச்சுக்கு நடு, நடுவே
தங்களை மறந்து
மெய்மறந்து
கரகோஷம் எழுப்பினர்
இது அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஹக்ஸிலியின்
வார்த்தைகளைக் கேட்ட
மக்கள் கூட்டம்
அவருடைய கருத்தை
ஏற்றுக் கொண்டது;
நிதானமான
அவருடைய பேச்சும்
மக்கள் புரிந்து கொள்ளும்
வகையில் அவர்
அளித்த விளக்கங்களும்
அங்குக் குழுமியிருந்த
மக்கள் அனைவருடைய
மனங்களையும் கவர்ந்தது;
உண்மைகளை
அழகாக எடுத்துரைத்த
விதம் அனைவரையும்
வியப்படைய வைத்தது;
ஹக்ஸ்லியின்
பேச்சின் முடிவில்
மக்கள் அனைவரும்
இவர் எவ்வளவு
அழகாக பேசினார் என்று
ஒரே நேரத்தில் ஒன்றாக
விண்ணை பிளக்க
வாழ்க டார்வின்
நிலைபெறுக
டார்வினிஸம் என்று
கரகோஷமிட்டு
தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்
இது அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

உண்மையை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளும் வகையில்
அற்புதமாக பேசுபவருக்கே
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷமும்,
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷமும் கிடைக்கும்.

இத்தகைய
இந்த இரண்டு விதமான
கரகோஷங்களும்
டார்வினின் பரிணாமக்
கோட்பாட்டை
உதாரணங்களுடன்
அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
எளிமையாக பேசிய
ஹக்ஸிலிக்கு கிடைத்தது.

அன்றைய விவாதத்தில்
டார்வின் கண்டுபிடிப்பு
வெற்றி பெற்றாலும்
அன்று முதல் இன்று வரை
டார்வின் கண்டுபிடிப்பு
ஒரு விவாதப்
பொருளாகவே இருந்து
வருகிறது.

பரிணாமக் கோட்பாடு
உலகிடையே மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்தி
மாபெரும் புயலைக்
கிளப்பி இருந்தாலும்
அதனைக் கொஞ்சமும்
பொருட் படுத்தாமல்
டார்வின் தனது
ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

அந்தக் கால வரலாறு
முதல் இந்தக் கால
வரலாறு வரை
எடுத்துப் பார்த்தால்,
விஞ்ஞானமானது
மதத்திற்கு
அடிமையாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற எழுதப்படாத
விதி இந்த
சமுதாயத்தில் இருக்கிறது

விஞ்ஞானமானது
மதத்தை எதிர்த்து
கருத்து சொல்வதோ,
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக்
காட்டி பேசுவதோ,
கூடாது
அப்படி விஞ்ஞானமானது
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
செயல்படும் போது
மதமானது அதைப்
பொறுத்துக் கொள்ளாமல்
விஞ்ஞானத்திற்கு எதிராக
செயல்களைச் செய்ய
ஆரம்பிக்கும்

மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
கருத்து சொல்பவர்களை
மதமானது விட்டு
வைப்பதில்லை
மதத்தில் உள்ள தவறுகளை
சுட்டிக் காட்டுபவர்களை
தாங்கள் சொன்ன
கருத்துக்கள் தவறு என்று
மதமானது சொல்ல
வைக்கிறது;
அவர்களை அடிமையாக
வைக்கிறது;
அடிமையாக இருக்க
மறுப்பவர்களை கொல்கிறது;
இது தான் மதத்தின்
முக்கிய செயல்பாடாக
அன்று முதல் இன்று
வரை இருந்து இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக
ஆண்டவன் தான்
மனிதனைப் படைத்தான்
என்று பைபிளில்
சொல்லப்பட்டவைகளுக்கு
எதிராக இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
வெளியிட்டால்
எத்தகைய பிரச்சினைகள்
ஏற்படும் என்பதை
சார்லஸ் டார்வின்
உணர்ந்து இருந்தும்
தன்னுடைய உயிருக்கே
ஆபத்து ஏற்படும்
என்று தெரிந்து இருந்தும்
மதத்திற்கு எதிராக
இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
சார்லஸ் டார்வின்
வெளியிட்டது
அவருடைய தைரியத்தை
குறிக்கவில்லை;
உண்மை இந்த
சமுதாயத்திற்கு கிடைக்க
வேண்டும் என்ற
சார்லஸ் டார்வினின்
உயர்ந்த குணத்தைக்
குறிக்கிறது;

சார்லஸ் டார்வின்
நினைத்தது போலவே
உலகெங்கும் உள்ள
கிறிஸ்தவர்கள்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராகவும்
அவருடைய கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
ஒன்றாக அணி
திரண்டு நிற்கிறார்கள்

--------- இன்னும் வரும்
--------- 13-09-2018
/////////////////////////////////////


September 11, 2018

திருக்குறள்-பதிவு-18


                      திருக்குறள்-பதிவு-18

ஒருவர் பேசிய
கருத்துக்களை மக்கள்
ஏற்றுக் கொண்டார்களா
அல்லது
ஏற்றுக் கொள்ளவில்லையா
என்பதை மக்கள்
எழுப்பும்
கரகோஷத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்.

கர+கோஷம்=கரகோஷம்
கர என்றால்
கையினால்
எழுப்பப்படும் ஒலி என்று
பொருள் எடுத்துக்
கொள்ள வேண்டும்

கோஷம் என்றால்
வாயினால் எழுப்பப்படும்
ஒலி என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

கரகோஷம் என்றால்
கையினாலும், வாயினாலும்
ஒரே சமயத்தில்
எழுப்பப்படும் ஒலி
என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

மக்கள் எழுப்பும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று  : அறிந்து
         எழுப்பப்படும்
         கரகோஷம்

இரண்டு :அறியாமல்
         எழுப்பப்படும்
         கரகோஷம்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வுடன்
எழுப்பப்படுவது

அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வு இல்லாமல்
எழுப்பப்படுவது

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தும் இருக்கலாம்
பிடிக்காமலும்
இருக்கலாம்
ஆனால்,
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தால் மட்டுமே
எழுப்பப்படுவது ஆகும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்


ஒன்று:
ஒருவர் பேச்சை
முடித்தவுடன்
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும்
கரகோஷம் அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
எனப்படும்

இரண்டு:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய பேச்சு
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும் கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்


அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது ஒரே
ஒரு நிலையை மட்டும்
தான் தன்னுள்
கொண்டிருக்கும்

ஒன்று:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
பேசுபவருடைய
பேச்சில் கவரப்பட்டு
மெய்மறந்து
நம்மை அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஒருவர் பேசிக்
கொண்டிருக்கிறார்
அவருடைய பேச்சு
பிடித்து போய்
விட்டதால் ஏற்பட்ட
மகிழ்ச்சியில்
கரகோஷம் எழுப்பினால்
அது அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு பிடிக்கவில்லை
என்றால் பேசுபவருடைய
பேச்சை நிறுத்தச்
சொல்லி
கலாட்டா செய்து
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு அற்புதமாக
இருந்து
தன்னை மறந்து
அதாவது மெய்மறந்து
எழுப்பப்படும் கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம்
பேசுபவர் பேசி
முடித்து விடும்போது
அற்புதமாக பேசினார்
என்று கரகோஷம்
எழுப்பினால் அது
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக் கொண்டிருந்தவர்
பேசி முடித்தவுடன்
பேசி முடித்தான்
கழுத்தை அறுத்து
விட்டான் பாவி
என்று வெறுப்புடன்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
பேச்சின்
இடையிலும்
பேச்சின் முடிவிலும்
எழுப்பப்படும்
ஆனால்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் பேச்சிற்கு
இடையில் மட்டுமே
எழுப்பபப்படும்

ஹக்ஸ்லிக்கு
மக்கள் எந்தவிதமான
கரகோஷத்தை
எழுப்பினார்கள் என்பதை
இனி பார்ப்போம்.

--------- இன்னும் வரும்
--------- 11-09-2018
/////////////////////////////////////////////////////