September 22, 2018

திருக்குறள்-பதிவு-23


                         திருக்குறள்-பதிவு-23

ஒரு விஷயத்தைப்
பொறுத்து
செயல்படுபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : ஒரு விஷயத்தைப்
        பற்றி அறிந்து
        செயல்படுபவர்கள்

இரண்டு :ஒரு விஷயத்தைப்
         பற்றி அறியாமல்
         செயல்படுபவர்கள்

எந்த ஒரு விஷயத்தை
எடுத்துக் கொண்டாலும்
இந்த சமுதாயத்தில்
ஒரு விஷயத்தைப்
பற்றி அறிந்து
செயல்படுபவர்கள் குறைவு
ஆனால்,
எந்த ஒரு விஷயத்தை
எடுத்துக் கொண்டாலும்
இந்த சமுதாயத்தில்
ஒரு விஷயத்தைப்
பற்றி அறியாமல்
செயல்படுபவர்கள்
தான் அதிகம்


விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்று ஒரு விஷயத்தை
பற்றி அறிந்து
செயல்பட்டு
நம் முன்னோர்கள்
அதை சிற்பமாக
செதுக்கினார்கள்

அதை எல்லா
இடங்களிலும்
வைக்கவில்லை
மக்கள் அடிக்கடி
பார்க்கும் வகையில்
வைக்க வேண்டும்
என்பதை உணர்ந்து,
மக்கள் அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடத்தில்
வைக்க வேண்டும்
என்பதை உணர்ந்து,
அந்த சிற்பத்தை
அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடத்தில்
அனைவரும்
பார்க்கும் வகையில்
வைத்தனர்.

மேலும் அவர்கள்
எந்த இடத்தில்
அந்த சிற்பத்தை
வைத்தால்
காலம் காலமாக
இருக்கும் என்பதை
உணர்ந்தும்,
அந்த சிற்பத்தை
பற்றி தெரியாவிட்டாலும்
அந்த சிற்பம்
அந்த இடத்தில் இருந்தால்
பிற்காலம் வருபவர்கள்
உணர்ந்து கொள்வார்கள்
என்பதை உணர்ந்தும்,
அதை அனைவரும்
வந்து செல்லும் ஒரு
இடத்தில் வைத்தனர்.

அதை ஒரு இடத்தில்
வைத்தால் மட்டும்
அது நிலையாக
இருக்காது அழிந்து விடும்
என்ற காரணத்தினால்
பல இடங்களில்
பல சிற்பங்களை செதுக்கி
அந்த சிற்பங்களை
வைத்தனர்.

நம் முன்னோர்கள்
நினைத்தது போலவே
காலத்தால் அழியாமல்
அந்த சிற்பங்கள்
இன்றும் இருக்கிறது;
ஆனால் அது என்ன
என்று தெரியாமல்
எதற்காக இருக்கிறது
என்று தெரியாமல்;
அதனுடைய
விவரங்கள் தெரியாமல்;
அந்த சிற்பங்களைப்
பார்த்து பல்வேறு
கதைகளைப் புனைந்து
இந்த சிலை இதைத் தான்
சொல்ல வருகிறது
என்று ஒவ்வொருவரும்
ஒரு கதையைப்
புனைந்து ஒரு
விஷயத்தைப் பற்றி
அறியாமல்
செயல்படுபவர்கள்
செயல்களைச் செய்து
கொண்டிருக்கின்றனர்.
விவரங்கள் தெரியாதவர்கள்
அவர்கள் சொல்வது
உண்மை என்று
நம்பி அதன் பின்னால்
சென்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு விஷயத்தைப் பற்றி
அறிந்து செயல்படுபவர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
சிற்பமாக வடித்து
வைத்தார்கள்
ஒரு விஷயத்தைப் பற்றி
அறியாமல் செயல்படுபவர்கள்
அந்த சிற்பம் என்ன
என்று தெரிந்தது போல்
பல கதைகளைப்
புனைந்து வைத்து விட்டனர்

விஷயம் அறிந்து
செயல்படுபவர்களால்
செதுக்கி வைக்கப்பட்ட
சிற்பங்கள்
விஷயம் அறியாமல்
செயல்படுபவர்களால்
தவறான தகவல்
மக்களிடம் கொண்டு
செல்லப்பட்டுக்
கொண்டிருக்கிறது

உண்மையைத்
தெரியாதவர்கள்
உண்மையைத் தெரிந்தது
போல சொல்லும்போது
உண்மையைத்
தெரியாதவர்கள்
இது உண்மை
என்று நம்பியதன்
காரணத்தால்
சரியான ஒன்று
தவறாக அர்த்தம்
கொள்ளப்பட்டு
தவறாக மக்களிடையே
உலவிக் கொண்டு
வருகிறது

விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்பதை உணர்ந்து
அதை சிற்பமாக
வடித்து வைத்தார்கள்
விஷயம் அறிந்து
செயல்படுபவர்கள்
ஆனால் ஒரு
விஷயத்தைப்பற்றி
அறியாமல்
செயல்படுபவர்கள்
அதை தவறாக
எடுத்துக் கொண்டு
தவறாகவே மக்கள்
மத்தியில் கொண்டு
சென்று விட்டனர்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பம்
என்ன என்பதையும்,
அது எங்கே
வைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும் பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 22-09-2018
//////////////////////////////////////////////


September 20, 2018

திருக்குறள்-பதிவு-22


                   திருக்குறள்-பதிவு-22

சார்லஸ் டார்வின்
கூற்றுப்படி
குரங்கிலிருந்து
வந்தவன் மனிதன்
அதாவது,
விலங்கிலிருந்து
வந்தவன் மனிதன்

தசாவதாரத்தில்
உள்ள கூற்றுப்படி,
வராக அவதாரம்;
சிம்ம அவதாரம்;
வாமன அவதாரம்;
என்ற வரிசையில்
வராக அவதாரம்
என்பது
விலங்காக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
சிம்ம அவதாரம்
என்பது
விலங்கும், மனிதனும்
சேர்ந்து ஒரு
உருவமாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
வாமன அவதாரம்
என்பது
மனிதனாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;

இந்த தசாவதார
வரிசையில்
விலங்கிலிருந்து
மனிதன் தோன்றினான்
என்று சொல்லப்
பட்டிருக்காது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
சொல்லப்பட்டிருக்கும்

விலங்கிலிருந்து
மனிதன் தோன்றுவதற்கு
முன்பாக இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
ஒன்று உண்டு அந்த
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருப்பார்கள்

சார்லஸ் டார்வின்
விலங்கிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றினான் என்று
சொல்லி இருப்பார்.

சார்லஸ் டார்வின்
சொன்னது போல்
விலங்கிலிருந்து மனிதன்
நேரடியாக தோன்றி
இருக்க முடியாது.

தசாவதாரத்தில் சொல்லப்
பட்டிருப்பது போல
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றி இருக்க முடியும்

நீரில் வாழ்ந்த
உயிரினம்
நேரடியாக நிலத்தில்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்றிருக்கவில்லை.
நீரிலும், நிலத்திலும்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்ற பிறகு,
நீரை விட்டு விட்டு
நிலத்தில் வாழக்கூடிய
தகவமைப்பைப் பெற்றது
பிறகு தான்
நிலத்தில் வாழ்ந்தது.

இரண்டு ஒன்றாக
இருக்கும் போது
இரண்டில் ஒன்று கழிந்து
ஒன்று உருவானது
ஒன்று நேரடியாக
மாற்றமடையவில்லை.

அதைப்போலத்தான்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
பிறகு இதில் உள்ள
விலங்கு நிலை கழிந்து
மனிதன் என்ற
நிலை தோன்றியது.

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பது
சார்லஸ் டார்வின் கருத்து
விலங்குக்கும்
மனிதனுக்கும் இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை என்ற
ஒன்று உண்டு என்பது
தசாவதாரத்தின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்ல வரும் கருத்து

சார்லஸ் டார்வின்
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
கண்டு பிடிக்காமல்
போய் இருக்கலாம்
அல்லது
இன்னும் வாழ்ந்திருந்தால்
அவர் அதனை
கண்டுபிடித்திருக்கலாம்
ஆனால்,
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
இன்றளவும்
யாரும் கண்டுபிடிக்கவில்லை
இந்த விஷயத்தை
கண்டுபிடிக்க
இன்னும் விஞ்ஞானிகள்
எத்தனை நூற்றாண்டுகள்
எடுத்துக் கொள்ளப்
போகிறார்கள் என்பதும்
அல்லது
கடைசிவரை
கண்டுபிடிக்காமல் இருந்து
விடப்போகிறார்கள்
என்பதும் தெரியாது.

ஆனால் பல
நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
நம் முன்னோர்கள்
விலங்கு நிலையிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றவில்லை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
அதில் உள்ள
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
என்கிறார்கள்.

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்பதை
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலைக்கு
ஒரு பெயரை
வைத்திருக்கிறார்கள்
அதனை சிற்பமாக
வடித்து வைத்திருக்கிறார்கள்
அது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்து கொள்வோம்

--------- இன்னும் வரும்
---------- 20-09-2018
////////////////////////////////////////////////





September 18, 2018

திருக்குறள்-பதிவு-21


                      திருக்குறள்-பதிவு-21

இந்த உலகத்தில்
அதர்மம் தலைவிரித்து
ஆடும்போதெல்லாம்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
கடவுள் அவதாரம்
எடுக்கிறார்
ஒவ்வொரு காலகட்டத்திலும்
அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்டுவதற்கு
விஷ்ணு 10
அவதாரங்கள் எடுத்தார்
விஷ்ணுவின் பத்து
அவதாரங்களை
தசாவதாரம்
என அழைக்கிறோம்

உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நம் முன்னோர்கள்
தசாவதாரத்தின்
மூலம் விளக்குகிறார்கள்

(1) மச்ச அவதாரம்

மச்சம் என்றால் மீன்
என்று பொருள்.
மீன் நீரில் வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

இந்த பிரபஞ்சத்தில்
உயிரினங்கள் முதன்
முதலில் நீரில்
இருந்து தான்
தோன்றியது

மீன் நீரில்
வாழும் உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
மச்ச அவதாரம்.

(2)கூர்ம அவதாரம்

கூர்மம் என்றால் ஆமை
என்று பொருள்.
ஆமை நீரிலும்,
நிலுத்திலும்
வாழக்கூடிய
உயிரினம் ஆகும்

நீரில் தோன்றிய
உயிரினம்
அடுத்து தரையில்
வாழ்வதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டாலும்
முழுவதுமாக
அதனால் தரையில்
வாழ முடியவில்லை
எனவே, நீரிலும்,
நிலத்திலும் வாழ்வதற்குரிய
தகவமைப்பைப் பெற்று
நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்தது

ஆமை நீரிலும்
நிலத்திலும் வாழும்
உயிரினம் ஆகும்
இதனைக் குறிப்பது தான்
கூர்ம அவதாரம்

(3)வராக அவதாரம்
வராகம் என்றால்
பன்றி என்று
பொருள்
பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்

நீரிலும் நிலத்திலும்
வாழ்ந்த உயிரினம்
நிலத்தில் மட்டுமே
வாழ்வதற்குரிய
முயற்சிகளை மேற்கொண்டு
நிலத்தில் மட்டுமே
வாழக்கூடிய நிலையை
அடைந்தது
நிலத்தில் மட்டும்
வாழ்ந்தாலும்
தன்னுடைய பழைய
நினைவின் தூண்டுதலினால்
அடிக்கடி போய் நீரில்
படுத்துக் கொள்கிறது
அதாவது பன்றி
சாக்கடையில் போய்
புரண்டு உருள்கிறது
பன்றிக்கு நீரில்
வாழ்ந்த பதிவு
இருக்கின்ற காரணத்தினால்
சாக்கடையில் அடிக்கடி
போய் படுத்துக்
கொள்கிறது

பன்றி நிலத்தில்
வாழும் உயிரினம்
ஆகும்
இதைக் குறிப்பது தான்
வராக அவதாரம்

(4)நரசிம்ம அவதாரம்
நர+சிம்மம்=நரசிம்மம்
நர என்றால் மனிதன்
என்று பொருள்
சிம்மம் என்றால்
சிங்கம் என்று பொருள்
நரசிம்மம் என்றால்
மனிதனும், சிங்கமும்
சேர்ந்தது என்று
பொருள்
அதாவது
நரசிம்மம் என்பதற்கு
மனிதன் உடலையும்
சிங்கத்தின் தலையையும்
கொண்ட உயிரினம்
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
நம் முன்னோர்கள்

விலங்கானது
மனிதன் என்ற நிலையை
அடைவதற்கு முன்பாக
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலை
இருக்கிறது
என்கிறார்கள்
நம் முன்னோர்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
காட்டி இருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
இந்த இடத்தில்
தான் வேறுபடுகிறார்கள்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்கிறார்
அதாவது
விலங்கிலிருந்து
மனிதன்
வந்தான் என்கிறார்
ஆனால்
நம் முன்னோர்கள்
விலங்கிலிருந்து
மனிதன் வரவில்லை
விலங்கிலிருந்து
மனிதன் வருவதற்கு
முன்பாக இடையில்
ஒரு உயிரினம்
இருக்கிறது
அது தான்
மனிதனும், விலங்கும்
சேர்ந்த ஒரு நிலை
என்று உருவகப்படுத்தி
இருக்கிறார்கள்
அதைத் தான்
நரசிம்ம அவதாரமாக
நமக்கு சுட்டிக்
காட்டியிருக்கிறார்கள்

நம் முன்னோர்களும்
சார்லஸ் டார்வினும்
வேறு பட்டு
நிற்கும் நிலையினை
ஆராய்வோம்

--------- இன்னும் வரும்
---------- 18-09-2018
////////////////////////////////////////////////