December 12, 2018

திருக்குறள்-பதிவு-67


                      திருக்குறள்-பதிவு-67

ஜியார்டானோ
புருனோவின்
தந்தையின் பெயர்
ஜியோவான்னி புருனோ
(Giovanni Bruno)
இவரது தந்தை
ஒரு இராணுவ
அதிகாரி இவரது
தாயாரின் பெயர்
பிரௌலிஸா
ஸாவோலினோ
(Fraulissa Savolino)

ஜியார்டானோ
புருனோ
கல்வி பயில்வதற்காக
1562-ஆம் ஆண்டு
நேபில் நகருக்கு
சென்றார்
1565-ஆம் ஆண்டு
தனக்கு வைக்கப்பட்ட
பெயரான
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற பெயரை
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
என மாற்றிக்
கொண்டார்
1572-ஆம் ஆண்டு
இவர் கிறிஸ்தவ
மத போதகராக
ஆவதற்குரிய
மதக்கல்வி பயின்றார்
1575-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
கிறிஸ்தவ
பாதிரியார் ஆனார்

ஜியார்டானோ
புருனோ எதையும்
வெளிப்படையாகப்
பேசக் கூடியவர்
எந்த ஒரு
விஷயத்தையும்
ஆராந்து பார்த்து
எது நல்லது
எது கெட்டது
என்று முடிவு
செய்து அதன்படி
செயல்படுபவர்

ஒருவர் சொன்ன
கருத்து தவறு என்று
தனக்கு தெரிந்தால்
அதை தைரியமாக
சுட்டிக் காட்டத்
தயங்காதவர்
ஒரு தவறான
கருத்தை காலம்
காலமாக மக்கள்
பின்பற்றி வந்தால்
அந்த கருத்து தவறு
என்று எடுத்துக் காட்ட
தயங்காதவர்

ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மத
போதகராக இருந்தும்
கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்காக
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் உள்ள
பழக்க வழக்கங்களை
ஆராய்ந்து அதில்
உள்ள குறைகளைச்
சுட்டிக் காட்டினார்

கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்கு
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் எப்படி
நடந்து கொண்டே
பேச வேண்டும்
என்பதும்
எப்படி நின்று கொண்டே
பேச  வேண்டும்
என்பதும்
எப்படி மனிதர்களுடன்
பழக வேண்டும்
என்பதும்
கற்றுக் கொடுப்பது
என்பது ஒரு
மதபோதகர்
இச்சமுதாயத்தில்
எப்படி செயற்கையாக
நடந்து கொள்வது
என்பதை சொல்லித்
தருவது போல்
அமைகின்ற
காரணத்தினால்
இந்த கற்பித்தல்
முறையின் மூலம்
ஒரே மாதிரியான
ம்த போதனை
செய்பவர்களைத் தான்
உருவாக்க முடியுமே
ஒழிய உண்மையான
மத போதகர்களை
உருவாக்க இயலாது
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ கற்பித்தலில்
உள்ள குறையைச்
சுட்டிக் காட்டினார்

அதற்கு கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையினர்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்கிறார்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
அச்சபை பின்பற்றி
வரும் நடை
முறைகளையும்
எதிர்க்கிறார் என
ஜியார்டானோ புருனோ
அவர்களின் மீது
குற்றம் சுமத்தினர்
எனவே,
ஜியார்டானோ புருனோ
1576-ஆம் ஆண்டு
பாதிரியார் வாழ்க்கையை
துறக்க வேண்டிய
கட்டாயத்திற்கு
தள்ளப் பட்டார்

இதன் தொடர்ச்சியாக
ஜியார்டானோ புருனோ
அறிவு ஒருவனை
உயர்த்தும்
அறியாமை ஒருவனை
வீழ்த்தும் என்பதை
புரிந்து கொண்டார்
இதனால் அவருக்கு
அறிவின்
மேல் காதலும்,
அறியாமையின் மேல்
வெறுப்பும் அவருக்கு
ஏற்பட்டது

இதன் விளைவாக
ஜியார்டானோ புருனோ
ஒரு புரட்சியாளனாக
மாறினார்
பாராம்பரியமாக இருந்து
வரும் அதிகாரத்தையும்
அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்தி அதிகாரம்
செய்பவர்களையும்
அவர் ஏற்றுக்
கொள்ள மறுத்தார்
இதனால் அவர்
தனிமைப் படுத்தப்
பட்டார் இதன்
விளைவாக இவர்
பல நாடுகளில்
நாடோடியாக அலைய
வேண்டி இருந்தது
ஆனாலும் உண்மைகளைச்
சொல்வதில் எந்தவிதமான
தயக்கமும் அவருக்கு
ஏற்படவில்லை

உண்மையை சொல்வதன்
மூலம் என் உயிர்
போகும் என்றால் நான்
அந்த உண்மையை
கண்டிப்பாக சொல்வேன்
என்றார் ஜியார்டானோ
புருனோ

--------- இன்னும் வரும்
---------  11-12-2018
///////////////////////////////////////////////////////////



December 11, 2018

திருக்குறள்-பதிவு-66


                       திருக்குறள்-பதிவு-66

நான் கிறிஸ்தவ
மதத்தை அழித்து
விடுவேன் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் செய்யும்
செயல்களால்
நீங்கள் புனிதமாகக்
கருதும்
பைபிளை கிறிஸ்தவ
மக்கள் புறக்கணித்து
விடுவார்கள் என்று
நீங்கள்
நினைக்கிறீர்களா ?
நான் மரணத்தை
கண்டு அஞ்சவில்லை !
உங்கள் கண்களில்
தெரியும் பயம்
நீங்கள் என் மேல்
கொண்டிருக்கும்
பயத்தை தான்
வெளிப்படுத்துகிறது !
நீங்கள் என்னைப்
பார்த்து பயப்படுகிறீர்கள் !
என்பதைத் தான்
உங்கள் கண்கள்
காட்டுகிறது !

நான் என்
உயிருக்கு பயந்து
மன்னிப்பு கேட்க
மாட்டேன் !
நான் எதற்கும் தயார்
என்று புரட்சி செய்தவர் !!

சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அமைதியாக சொன்னதை
ஆவேசமாகவும் ;
ஆக்ரோஷமாகவும் ;
அழுத்தமாகவும் ;
புரட்சிகரமாகவும் ;
சொன்னவர் ;
விஞ்ஞானிகளில்
புரட்சியாளர் என்று
வர்ணிக்கப்பட்டவர் ;
நாத்திகவாதி என்று
சித்தரிக்கப்பட்டவர் ;
பகுத்தறிவாதி
என்று புனையப்பட்டவர் ;
தத்தவமேதை ;
வானவியலாளர் ;
கணிதவியலாளர் ;
என்று பாராட்டப்பட்டவர்

மிகச் சிறந்த
எழுத்தாளர்களில்
சிறந்தவராகக்
கருதப் படுபவர் ;
நல்ல பேச்சாளர்களே
வியந்து கேட்கும்
படியாக தான்
சொல்ல வந்த கருத்தை
ஆணித்தரமாகவும்
அழுத்தம், திருத்தமாகவும்
அனைவரும் எளிதில்
புரிந்து கொள்ளும்
வகையில்
பேசுவதில் வல்லவர் ;
அறிவு பூர்வமான
கேள்விகளைக்
கேட்டு எதிராளியை
வார்த்தைகளால் மடக்கி
சிந்திக்க வைப்பவர் ;
சிலேடையாக
பேசுவதில் வல்லவர் ;
இறையியலைச் சார்ந்தும்
அதனை அடிப்படையாக
வைத்தும்
அதனை எளிமையாக
விளக்கியும்
தெளிவாக பேசுபவர் ;
அறிவியலின்
கலங்கரை விளக்கம்
என்று போற்றப்பட்டு
கலங்கரை
விளக்கமாக இருந்து
அனைவருக்கும்
வழி காட்டியவர் ;


ஐரோப்பாவின்
மிகச் சிறந்த
புத்திசாலியான மனிதர்
என்று போற்றப்பட்டவர் ;
ஜியோமிதியில் வல்லவர் ;
மொழியியல் வித்தகர் ;
மறுமலர்ச்சி இரசவாதி
என்று போற்றப்பட்டவர் ;
14-ஆம் நூற்றாண்டின்
சாக்ரடீஸ் என்று
அழைக்கப்பட்டவர் ;
அனைத்திற்கும் மேலாக
வானிவியல் தந்தை
என்று அழைக்கப்படும்
கலிலியோ அவர்களின்
மிக நெருங்கிய
நண்பர் என்று
சொல்லப்படுகிறவர் ;

இவ்வாறு பலவேறுபட்ட
நிலைகளில்
பல்வேறுபட்ட
திறமைகளைத் தன்னுள்
கொண்டவர் ;
தான் சொன்ன
கருத்திற்காக உயிரையும்
விடத் தயாராக
இருந்தவர் அவர் தான்
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)


ஜியார்டானோ புருனோ
1548-ஆம் ஆண்டு
இத்தாலியில்
நேபில்ஸ் நகருக்கு
அருகில் நோலா
(Nola near Neples)
என்னும் இடத்தில்
பிறந்தார்.

நோலாவில் தான்
சால்டிய கிரேக்கர்கள்
முதன் முதலில்
காலனி அமைத்தனர்
ரோமானியப் பேரரசின்
காலத்திய முக்கிய
நகரங்களில்
நோலாவும் ஒன்று
உயர்குடி மக்கள்
எனப்படும்
கிறித்துவ திருச்சபையின்
துறவிகள் மடங்களும்
இங்கு தான்
கட்டப்பட்டன
இப்படி வரலாற்று
சிறப்பு மிக்க
இடத்தில் பிறந்தார்
ஜியார்டானோ புருனோ

ஜியார்டானோ
புருனோவின்
பிறப்பு பலவகையிலும்
சிறப்பிடம் பெற்றது
நோலா என்ற
வரலாற்று சிறப்பு
மிக்க இடத்தில்
“பாராசல்ஸ்” என்ற
வேதியியல் விஞ்ஞானி
உலகை விட்டு
மறைந்த பிறகு
ஜியார்டானோ புருனோ
பிறந்தார்

ஜீசஸ் சமூகத்தின்
முதல் ஜெனரலான
“லபோராதேய”
பதவி ஏற்பு இப்போது
தான் ஏற்பட்டது

ஜியார்டானோ
புருனோவிற்கு
(Giordano Bruno)
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற கத்தோலிக்க
கிறிஸ்தவப் பெயர்
சூட்டப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  10-12-2018
///////////////////////////////////////////////////////////


December 09, 2018

திருக்குறள்-பதிவு-65


                       திருக்குறள்-பதிவு-65

வானியலாளர்,
கணிதவியலாளர்
பொருளியலாளர்
என பல்வேறுபட்ட
துறைகளில்
உயர்ந்த திறமைகளை
வெளிப்படுத்திய
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கைகளில்
அவர் எழுதிய நூல்
வைக்கப்பட்ட பிறகு
சிறிது நாட்கள்
கழித்து அதாவது
1543-ஆம் ஆண்டு
மே மாதம் 24-ஆம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இறந்தவுடன்
அவருடன் அவர்
கண்டுபிடித்த
சூரிய மையக் கோட்பாடும்
இறந்து விட்டது என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நினைத்துக் கொண்டு
இருந்தனர்.

ஆனால்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாட்டை
நிறுவும் முயற்சியில்
இறங்கியவுடன் தான்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாடு அவருடன்
இறக்கவில்லை
இன்னும் இந்த
உலகத்தில் உயிரோடு
இருக்கிறது என்பதை
பல ஆண்டுகள் கழித்து
காலதாமதாகத் தான்
புரிந்து கொண்டனர்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின்
அண்டக் கோள்களின்
சுற்றுகள் என்ற நூல்
1517-ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டு
13 ஆண்டுகள் கழித்து
1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்டது

1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்ட நூல்
13 ஆண்டுகள் கழித்து
1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்டது

1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்ட நூல்
73 ஆண்டுகள் கழித்து
1616-ஆம் ஆண்டு
தடை செய்யப்பட்டது

1616-ஆம் ஆண்டு
நூலிற்கு விதிக்கப்பட்ட
தடையானது
18-ஆம் நூற்றாண்டின்
இறுதிவரை
விலக்கப்படவில்லை

1616-ஆம் ஆண்டு
ரோமபுரியில் ஐந்தாம்
போப்பாண்டவர் பால்
(Pope Paul V)
நூல் பதிப்பு ஆசிரியர்
ஒருவருக்கு கடுமையான
ஓர் கண்டன
அறிக்கையை வெளியிட்டார்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
(Revolutions of the
Heavenly Globes)
என்னும் நூலில்
சொல்லப்பட்ட கோட்பாட்டை
உங்களது செய்தித்தாள்
வெளியிட்டிருப்பது
எங்களது கவனத்திற்கு
வந்துள்ளது சூரியன்
பிரபஞ்சத்தின் நடுவில்
அமர்ந்திருப்பதாகவும்
பூமி உள்பட மற்ற
கோள்கள் அதைச்
சுற்றி வருவதாகவும்
அந்த கோட்பாடு
தெரிவிக்கிறது

படைப்பின் கருத்தை
இந்த உலகத்திற்கு
எடுத்து உரைக்கும்
பைபிளைப் பின்பற்றும்
மதக்கோயில் உபதேசத்தை
அந்த கோட்பாடு
நேரடியாக எதிர்க்கிறது
தோற்ற அடிப்படைகளைக்
கூறும் வேதநூல்
பண்டைய டெஸ்டமன்ட்
(Book of Genesis)
பூமி தான் பிரபஞ்ச
மையம் சூரியன் இல்லை
என்று தெளிவாகக் கூறுகிறது

பைபிளை அவமதிக்கும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அந்நூல் இன்றிலிருந்து
படிக்க படாத நூலாக
ஒதுக்கப்பட்டிருக்கிறது
அந்த நூலை ஆதரிப்போர்
கிறிஸ்தவ மதத்
துரோகியாகக் (Heres)
கருதப்பட்டுக் கடும்
தண்டனைக்குள்ளாவார்கள்
என்று அறிவிக்கிறோம்
மேலும், மரண
தண்டனையும்
விதிக்கப்படலாம் என்பது
நன்றாய் உமது நினைவில்
இருக்கட்டும்

இவ்வறிப்பைக்
கேள்விப்பட்டதும்
நீங்கள் இனிமேல்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் உடைய கருத்தை
உமது செய்தித் தாளில்
ஒரு போதும் பதிப்பிக்காமல்
உமது தவறைத்
திருத்திக் கொள்வீர் என்று
உறுதியாக நம்புகிறோம்
என்று சொன்னதிலிருந்து
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கோட்பாடு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர் மீது
எவ்வளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்கிறது என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

1500 ஆண்டுகளாக
மக்களால் நம்பப்பட்டு வந்த
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாட்டை
தவறு என்று சொல்லி
சூரியனை மையமாக
வைத்தே பூமி சுற்றுகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை இந்த
உலகத்திற்கு அளித்து
அறிவு விளக்கை
ஏற்றி வைத்த
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் அறிவு
விளக்கை மக்கள்
மத்தியில் கொண்டு
செல்வதற்கு அரும்பாடு
பட்டவர்கள் தான்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  08-12-2018
///////////////////////////////////////////////////////////