January 30, 2019

திருக்குறள்-பதிவு-92


                       திருக்குறள்-பதிவு-92

“சிறையில்
ஜியார்டானோ புருனோ
சுழலும் ஒரு பெரிய
சக்கரத்தில் கைகளும்
கால்களும் கட்டி
வைக்கப்பட்ட
நிலையில் இருந்தார் “

“ அவருடைய
இரண்டு கைகளில்
வலது கை
வலது புறம்
மேல் நோக்கியும் ;
இடது கை
இடது புறம்
மேல் நோக்கியும் ;
மேலே வானத்தை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அவருடைய
இரண்டு கால்களில்
வலது கால்
வலது புறம்
கீழ் நோக்கியும் ;
இடது கால்
இடது புறம்
கீழ் நோக்கியும் ;
கீழே பூமியை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அந்த பெரிய சுழலும்
சக்கரத்தில் கட்டி
வைக்கப்பட்டிருந்தார் ;

“ கட்டப்பட்ட ஒவ்வொரு
கையும் சிறிய
சுழலும் சக்கரத்துடன்
தனித்தனியாக
கட்டி வைக்கப்பட்டு
இருந்தது “


“ கையுடன் பிணைக்கப்பட்ட
அந்த சிறிய சக்கரத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
சுற்றும் போது
சக்கரமானது கையை
தோள் பட்டையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே இழுத்துக்
கொண்டே இருக்கும் ;
அதனால் ஏற்படக்கூடிய
வலியானது மரண
வேதனையைக் கொடுக்கும் “

“ எவ்வளவு மனவலிமை
படைத்தவர்களாக
இருந்தாலும்
ஒரு குறிப்பிட்ட
அளவு தான் - அந்த
மரண வலியைத்
தாங்க முடியும் “

“தவறு செய்தவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்தவன்
தான் செய்த தவறை
ஒத்துக் கொள்வான் ;
தவறு செய்யாதவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்யாதவன் கூட
தான் தவறு செய்ததாக
இந்த தண்டனையின்
மரண வலி தாங்க
முடியாமல் ஒத்துக்
கொள்வான் ; “

“ ஒரு குறிப்பிட்ட அளவு
தான் வலிகளைத்
தாங்க முடியும் – பலர்
வலி தாங்க முடியாமல்
அலறி விடுவர் ;
சிலர் கண்ணீர் விட்டு
கதறி விடுவர் ;
இந்த தண்டனை
வழங்கப்பட்டவர்கள்
பயங்கரமாக ஓலம்
எழுப்பி கண்ணீர் சிந்தி
கதறி அழுது தான்
சென்று இருக்கிறார்கள் ; “

“ இந்த தண்டனை
யாருக்கு அளிக்கப்பட்டாலும்
தண்டனை முடிந்தபிறகு
அளிக்கப்பட்டவருடைய
கையை அவரால்
தூக்கவே முடியாது ;
உடல் முழுவதும் வலி
இருந்து கொண்டே இருக்கும் ;
நரம்புகள் அனைத்தும்
பாதிக்கப்பட்டு இருக்கும் ;
வலியானது ஒவ்வொரு
செல்லையும்
வேதனைப் படுத்தும் ;
பல நாள்கள்
வலியின் காரணமாக
தூக்கமே வராது ;
வலியைத் தாங்க
முடியாமல் இறந்து
விட நினைத்தவர்களும்
உண்டு ; “

“ இத்தகைய பல்வேறு
வேதனைகளைத்
தரக்கூடிய - இந்த
கொடிய தண்டனை
தான் ஜியார்டானோ
புருனோவிற்கு
கொடுக்கப்பட்டது “

“ சிறையில் விசாரணை
நடக்கும் இடத்தில்
கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ :
ஆகியோர் சிறைக்கூடத்தில்
அமர்ந்து கொண்டு
இருந்தனர் ;
ஃபாதர் டிராகாக்லியோலோ
(Father Tragagliolo)
நின்று கொண்டு இருந்தார் ; “

“ ஜியார்டானோ புருனோ
பெரிய சக்கரத்தில்
கட்டி வைக்கப்பட்ட
நிலையில் சிறை
அதிகாரியால் கேள்விகள்
கேட்கப் பட்டார் “

சிறை அதிகாரி :
“ ஜியார்டானோ புருனோ
மீண்டும் ஒருமுறை
வலியுறுத்தி
உங்களுக்கு நாங்கள்
சொல்ல விரும்புவது
யாதெனில் ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
நீங்கள் செய்த
தவறுகள் : மற்றும்
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொன்ன
கருத்துக்கள் ;
ஆகியவற்றை தவறு
என்று உணர்ந்து கொண்டு
இனிமேல் அத்தகைய
தவறை செய்ய
மாட்டேன் ; என்று
நீங்கள் உறுதி
அளித்தீர்களேயானால்
உங்கள் உயிர் தப்பும் ; “

“ இல்லை என்றால்
உங்கள் உயிர்
உங்களுக்கு சொந்தம்
இல்லை ; - புனித
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களைக் கொண்டு
தீவிரமாக அதிக
அளவில் அனைத்தையும்
நாங்கள் பயன் படுத்த
தயாராக இருக்கிறோம் “

“ ஜியார்டானோ புருனோ
கேட்ட கேள்விக்கு
ஏதேனும் பதில்
தருகிறாரா என்று சிறிது
நேரம் பார்த்தார்கள் “

“ ஜியார்டானோ புருனோ
பதில் எதுவும் சொல்லாமல்
அமைதியாக இருந்தார் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  29-01-2019
/////////////////////////////////////////////////////////////



January 28, 2019

திருக்குறள்-பதிவு-91


                       திருக்குறள்-பதிவு-91

ஜியார்டானோ புருனோ :
" யாருக்காக இடையில்
மறித்து கேள்விகளைக்
கேட்டீர்கள்……………………..?
யாரைக் காப்பாற்றுவதற்காக
கேள்விகளைக்
கேட்டீர்கள்……………………..?
நீங்கள் கேட்ட கேள்விகள்
சரியானவைகள் தானா
என்று யோசித்துப்
பார்த்தீர்களா……………………..?
இந்த விசாரணைக்கு
தொடர்புடையதா
என்று தெரிந்து
தான் கேட்டீர்களா……………………..? "

(ஜியார்டானோ புருனோ
இவ்வாறு கேட்டவுடன்
விசாரணைக்குழு அதிகாரி
கார்டினல்கள் இருக்கும்
இந்த அவையில் தான்
ஏதேனும் தவறாக கேட்டு
விட்டேனா ? என்று
நினைத்து பார்த்ததில்
அவருக்கு பயம் வந்து
மயக்கமே வந்து விடுவது
போல் இருந்தது.)

இந்த சமயத்தில்
கார்டினல் சார்டோரி
எழுந்து கேள்விகள்
கேட்கலானார்)

கார்டினல் சார்டோரி :
" Father Bruno……..!
விசாரணைக்குத்
தேவையானவை எவை
என்பதைத் தெரிந்து
கொண்டு தான்
அவர் கேள்விகளைக்
கேட்கிறார்.

பிரான்ஸ் (France)
நாட்டு நவேரா (Navarre)
மன்னர் மீது நீங்கள்
கொண்டுள்ள
பற்றின் காரணமாக
அவருக்காக பல
சதி வேலைகளைச்
செய்துள்ளீர்கள் "

ஜியார்டானோ புருனோ :
" நான் நவேரா நாட்டு
மன்னரை ஒரு போதும்
சந்தித்தது இல்லை "

கார்டினல் சார்டோரி :
" மறைந்த மன்னர்
ஹென்றி-3 (Henry-III)
அவர்களுடைய நம்பிக்கைக்கு
பாத்திரமானவராக
இருந்து இருக்கிறீர்கள் "

ஜியார்டானோ புருனோ :
" போப் அவர்களை
நேரில் சந்தித்து
ஒரு தனிமையான
நேர்காணலில் மட்டுமே
இந்த கேள்விக்கு என்னால்
பதிலளிக்க முடியும்"

கார்டினல் சார்டோரி :
" ரோம் நாட்டுக்கு எதிராகவும்
போப்புக்கு எதிராகவும்
புதிய அணியை
உருவாக்கி அவர்களை
எதிர்ப்பதற்காக
பிரான்ஸ் நாட்டு ஹென்றி
உங்களை இங்கிலாந்துக்கு
அனுப்பி வைத்து
இருக்கிறார்"

ஜியார்டானோ புருனோ :
" நான் இங்கிலாந்திற்கு
படிக்க தான் சென்றேன்
என்னுடைய பெரும்பாலான
நேரங்களை ஆக்ஸ்போர்ட்
பல்கலைக் கழகத்தில் உள்ள
அறிஞர்களுடன்
கலந்துரையாடல்
செய்வதற்காக செலவிட்டேன்”

கார்டினல் சார்டோரி :
" ஐரோப்பிய மன்னர்களுடன்
தாங்கள் தொடர்பு
வைத்துக் கொணடதற்கான
காரணம் என்ன…………………………? “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

கார்டினல் சார்டோரி :
" ஜியார்னிஸ்ட்டுகள் கொண்ட
ஒரு பிரிவை உண்டாக்கி
உங்களை நீங்களே
தலைவராக நியமித்துக்
கொண்டு இருக்கிறீர்கள்

அதனுடைய
நோக்கம் என்ன"

ஜியார்டானோ புருனோ :
" அந்த பிரிவிலுள்ள
ஒரே ஒரு நபரையாவது
இந்த நீதிமன்ற அறைக்குள்
கொண்டு வாருங்கள்
நான் ஒத்துக்கொள்கிறேன் "

கார்டினல் சார்டோரி :
" நீங்கள் ஏன் ஜெர்மனி
சென்றீர்கள்……………………..? "

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

கார்டினல் சார்டோரி :
" நீங்கள் ஏன் இங்கிலாந்து
சென்றீர்கள்……………………..? "

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

கார்டினல் சார்டோரி :
“ யார் உங்களுடன்
தொடர்பு கொண்டு
இருக்கிறார்கள்……………………..?

யாருடன் நீங்கள்
தொடர்பு கொண்டு
இருக்கிறீர்கள்……………………..?

யாருடைய பேச்சை
கேட்டு நீங்கள் இவ்வாறு
எல்லாம் நடந்து
கொள்கிறீர்கள்……………………..?

உங்களுடைய குறிக்கோள்
தான் என்ன……………………..?

உங்களிடம்
ஒப்படைக்கப்பட்ட
பணி தான் என்ன……………………..?

உங்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள
அரசியல் வேலைகள்
தான் என்ன……………………..? "

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

விசாரணைக்குழு
ஜியார்டானோ
புருனோவிடம் இருந்து
பதில்களை வாங்க
வேண்டுமானால்
இந்த வழிகள் எதுவும்
பலனளிக்காது
என்பதை உணர்ந்து
கொண்ட காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவை
சிறையில் சித்திரவதை
செய்து கொண்டே
கேள்விகள் கேட்பது என்று
முடிவு எடுத்தது.

ரோம் நகரத்தில்
ஜியார்டானோ
புருனோவிற்கு எதிரான
மூன்றாம் கட்ட விசாரணை
சிறையில் சித்திரவதையுடன்
தொடங்கியது.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  28-01-2019
/////////////////////////////////////////////////////////////


January 27, 2019

திருக்குறள்-பதிவு-90


                     திருக்குறள்-பதிவு-90

கார்டினல் சார்டோரி :
“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்று
சொல்லி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ அந்த கருத்தை
நான் சொல்லவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்தைத் தான்
நான் சரியானது
என்று சொன்னேன் “

கார்டினல் சார்டோரி :
“இரண்டும் ஒன்று தான்”

ஜியார்டானோ புருனோ :
“அப்படியும் எடுத்துக்
கொள்ளலாம்”

கார்டினல் சார்டோரி :
“நீங்கள் சொன்னது
பைபிளில் ஆண்டவரால்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருக்கிறது “

“ காலம் காலமாக
பைளிளை புனித
நூலாகக் கருதி
பின்பற்றி வரும்
கிறிஸ்தவர்களின்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ :
“ நான் பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக எதுவும்
சொல்லவில்லை ;
அறிவியல் ரீதியாக
கண்டுபிடித்ததை
சரியானது என்று
சொன்னேன் ; “

கார்டினல் சார்டோரி :
“ அதைத் தான்
நாங்கள் கிறிஸ்தவ
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறோம் “

ஜியார்டானோ புருனோ :
“ விஞ்ஞானத்தை
மதத்துடன்
தொடர்புபடுத்தி
எதிரானது என்கிறீர்கள் ;
விஞ்ஞானத்தை
மதத்துடன் தொடர்பு
படுத்தாதீர்கள் ;
விஞ்ஞானத்தை
சுதந்திரமாக
இருக்க விடுங்கள் ;
மதத்திற்கு அடிமையாக
விஞ்ஞானத்தை மாற்ற
முயற்சி செய்யாதீர்கள் ; “

கார்டினல் சார்டோரி :
“என்ன செய்வது என்று
எங்களுக்கு தெரியும் ;”
அதைப் பற்றி நீங்கள்
பேச வேண்டாம் ; “

ஜியார்டானோ புருனோ :
“நான் சொன்ன
விஞ்ஞான கருத்தை
சரியானதா? தவறானதா?
என்று ஆராய்ந்து
கூட பார்க்காமல்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறீர்கள் “

கார்டினல் சார்டோரி :
“ சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்க நாங்கள்
ஒன்றும் ஆராய்ச்சியார்கள்
இல்லை “

ஜியார்டானோ புருனோ :
“ அதைத் தான் நானும்
சொல்கிறேன் நீங்கள்
ஆராய்ச்சியாளர்கள்
இல்லை ;
மதவாதிகள் என்று;
ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்பை தவறு
என்று மதவாதிகளாகிய
நீங்கள் சொல்வதை
தவறு என்று எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் ;
நான் சொன்னது
சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சி செய்து
சொல்லட்டும் ; “

“ அதை விடுத்து
மதவாதிகளாகிய நீங்கள்
என்னுடைய கருத்தை
தவறு என்றும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் இருக்கிறது
என்றும்,
சொல்வதை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் “

(ஜியோர்டானோ
புருனோவிடம்
வார்த்தைகளால்
மாட்டிக் கொண்டதை
உணர்ந்து கொண்ட
கார்டினல் சார்டோரி
கோபத்துடன் பேசலானார்)

கார்டினல் சார்டோரி :
“ புருனோ கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் சொல்லுங்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நான் கேட்ட
கேள்விகளுக்கு தான்
பதில் சொல்லிக்
கொண்டு இருக்கிறேன் “

கார்டினல் சார்டோரி :
“கேட்ட கேள்விகளுக்கு
தகுந்த பதில்களை
நீங்கள் சொல்வதேயில்லை “

ஜியார்டானோ புருனோ :
“ தகுந்த பதில்களை
சொல்வதற்கு தேவையான
கேள்விகளை நீங்கள்
கேட்பதேயில்லை “

கார்டினல் சார்டோரி :
“ நீங்கள் தேவையற்றதை
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நீங்கள் மட்டும்
தேவையானவற்றை பேசிக்
கொண்டு இருக்கிறீர்களா…….? “

கார்டினல் சார்டோரி :
“ போதும் புருனோ
நிறுத்துங்கள் “

(ஜியார்டானோ
புருனோவுக்கும் ;
கார்டினல் சார்டோரிக்கும் ;
வாக்குவாதம் உச்ச
கட்டத்தை அடைந்ததால்
அதை பார்த்துக்
கொண்டிருந்த
விசாரணைக்குழு
பதற்றத்தைத் தணிக்க
கேள்விகள் கேட்க
தொடங்கியது)

விசாரணைக்குழு
அதிகாரி 1
“ Father Bruno…………..!
நீங்கள் ஜெர்மனியில்
லூத்தரன்களுக்காகவும்,
(Lutherans)
ஜெனிவாவில்
கால்வானிஸ்ட்டுகளுக்காகவும்
(Calvinists)
பணியாற்றி இருக்கிறீர்கள்  

“ நீங்கள் செய்யும்
தவறுகள் அனைத்தையும்
உங்களுடைய அபரிதமான
சாமர்த்தியத்தால் மறைத்து
விடுகிறீர்கள் “


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  27-01-2019
/////////////////////////////////////////////////////////////