January 30, 2019

திருக்குறள்-பதிவு-92


                       திருக்குறள்-பதிவு-92

“சிறையில்
ஜியார்டானோ புருனோ
சுழலும் ஒரு பெரிய
சக்கரத்தில் கைகளும்
கால்களும் கட்டி
வைக்கப்பட்ட
நிலையில் இருந்தார் “

“ அவருடைய
இரண்டு கைகளில்
வலது கை
வலது புறம்
மேல் நோக்கியும் ;
இடது கை
இடது புறம்
மேல் நோக்கியும் ;
மேலே வானத்தை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அவருடைய
இரண்டு கால்களில்
வலது கால்
வலது புறம்
கீழ் நோக்கியும் ;
இடது கால்
இடது புறம்
கீழ் நோக்கியும் ;
கீழே பூமியை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அந்த பெரிய சுழலும்
சக்கரத்தில் கட்டி
வைக்கப்பட்டிருந்தார் ;

“ கட்டப்பட்ட ஒவ்வொரு
கையும் சிறிய
சுழலும் சக்கரத்துடன்
தனித்தனியாக
கட்டி வைக்கப்பட்டு
இருந்தது “


“ கையுடன் பிணைக்கப்பட்ட
அந்த சிறிய சக்கரத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
சுற்றும் போது
சக்கரமானது கையை
தோள் பட்டையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே இழுத்துக்
கொண்டே இருக்கும் ;
அதனால் ஏற்படக்கூடிய
வலியானது மரண
வேதனையைக் கொடுக்கும் “

“ எவ்வளவு மனவலிமை
படைத்தவர்களாக
இருந்தாலும்
ஒரு குறிப்பிட்ட
அளவு தான் - அந்த
மரண வலியைத்
தாங்க முடியும் “

“தவறு செய்தவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்தவன்
தான் செய்த தவறை
ஒத்துக் கொள்வான் ;
தவறு செய்யாதவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்யாதவன் கூட
தான் தவறு செய்ததாக
இந்த தண்டனையின்
மரண வலி தாங்க
முடியாமல் ஒத்துக்
கொள்வான் ; “

“ ஒரு குறிப்பிட்ட அளவு
தான் வலிகளைத்
தாங்க முடியும் – பலர்
வலி தாங்க முடியாமல்
அலறி விடுவர் ;
சிலர் கண்ணீர் விட்டு
கதறி விடுவர் ;
இந்த தண்டனை
வழங்கப்பட்டவர்கள்
பயங்கரமாக ஓலம்
எழுப்பி கண்ணீர் சிந்தி
கதறி அழுது தான்
சென்று இருக்கிறார்கள் ; “

“ இந்த தண்டனை
யாருக்கு அளிக்கப்பட்டாலும்
தண்டனை முடிந்தபிறகு
அளிக்கப்பட்டவருடைய
கையை அவரால்
தூக்கவே முடியாது ;
உடல் முழுவதும் வலி
இருந்து கொண்டே இருக்கும் ;
நரம்புகள் அனைத்தும்
பாதிக்கப்பட்டு இருக்கும் ;
வலியானது ஒவ்வொரு
செல்லையும்
வேதனைப் படுத்தும் ;
பல நாள்கள்
வலியின் காரணமாக
தூக்கமே வராது ;
வலியைத் தாங்க
முடியாமல் இறந்து
விட நினைத்தவர்களும்
உண்டு ; “

“ இத்தகைய பல்வேறு
வேதனைகளைத்
தரக்கூடிய - இந்த
கொடிய தண்டனை
தான் ஜியார்டானோ
புருனோவிற்கு
கொடுக்கப்பட்டது “

“ சிறையில் விசாரணை
நடக்கும் இடத்தில்
கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ :
ஆகியோர் சிறைக்கூடத்தில்
அமர்ந்து கொண்டு
இருந்தனர் ;
ஃபாதர் டிராகாக்லியோலோ
(Father Tragagliolo)
நின்று கொண்டு இருந்தார் ; “

“ ஜியார்டானோ புருனோ
பெரிய சக்கரத்தில்
கட்டி வைக்கப்பட்ட
நிலையில் சிறை
அதிகாரியால் கேள்விகள்
கேட்கப் பட்டார் “

சிறை அதிகாரி :
“ ஜியார்டானோ புருனோ
மீண்டும் ஒருமுறை
வலியுறுத்தி
உங்களுக்கு நாங்கள்
சொல்ல விரும்புவது
யாதெனில் ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
நீங்கள் செய்த
தவறுகள் : மற்றும்
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொன்ன
கருத்துக்கள் ;
ஆகியவற்றை தவறு
என்று உணர்ந்து கொண்டு
இனிமேல் அத்தகைய
தவறை செய்ய
மாட்டேன் ; என்று
நீங்கள் உறுதி
அளித்தீர்களேயானால்
உங்கள் உயிர் தப்பும் ; “

“ இல்லை என்றால்
உங்கள் உயிர்
உங்களுக்கு சொந்தம்
இல்லை ; - புனித
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களைக் கொண்டு
தீவிரமாக அதிக
அளவில் அனைத்தையும்
நாங்கள் பயன் படுத்த
தயாராக இருக்கிறோம் “

“ ஜியார்டானோ புருனோ
கேட்ட கேள்விக்கு
ஏதேனும் பதில்
தருகிறாரா என்று சிறிது
நேரம் பார்த்தார்கள் “

“ ஜியார்டானோ புருனோ
பதில் எதுவும் சொல்லாமல்
அமைதியாக இருந்தார் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  29-01-2019
/////////////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment