January 30, 2019

திருக்குறள்-பதிவு-93


                      திருக்குறள்-பதிவு-93

“ சிறை அதிகாரி
கேட்ட கேள்விக்கு
ஜியார்டானோ புருனோ
பதில் எதுவும்
சொல்லாத காரணத்தினால்
சித்திரவதையை
ஆரம்பிக்குமாறு - ஃபாதர்
டிராகாக்லியோலோவைப்
(Father Tragagliolo)
பார்த்து ,
கார்டினல் சார்டோரி
கண்கள் மூலம்
சைகை செய்ய ,
டிராகாக்லியோலோ
சிறை அதிகாரிக்கு
கண்கள் மூலம்
சைகை செய்தார். “

“ ஜியார்டானோ புருனோவின்
கைகளுடன் பிணைக்கப்பட்ட
சிறிய சக்கரம்
கொஞ்சம் கொஞ்சமாக
முறுக்கப்பட்டது ;
ஜியார்டானோ புருனோவின்
கையானது தோள்
பட்டையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி சென்று
கொண்டு இருந்தது ; “

சிறை அதிகாரி :
“ நீங்கள் செய்த
குற்றங்கள் அனைத்தையும்
ஒப்புக் கொள்ளுங்கள்
குற்றங்களை ஒப்புக்
கொள்ள மாட்டேன்
என்று சொல்லாதீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ சிறிய சக்கரம் மீண்டும்
சுழற்றப்பட்டது ;
சிறிய சக்கரம்
தோள் பட்டையிலிருந்து
கையை கொஞ்சம்
கொஞ்சமாக வெளியே
இழுக்க ஆரம்பித்தது “

சிறை அதிகாரி :
“ நீங்கள் செய்த
குற்றங்களை
நினைத்து வருந்தி
மனந் திரும்புங்கள் ;
பிடிவாதமாக இருக்காதீர்கள் ;
உங்களுடைய பெருமையை
நீங்கள் விட்டு
விடுவீர்களேயானால்
மனந்திரும்புவதற்கு
உரிய வழி
கிடைத்து விடும் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ ஒரு மனிதனால்
எவ்வளவு வலியை
தாங்க முடியுமோ
அந்த நிலையில் வைத்து
அந்த சிறிய சக்கரம்
சுற்றப்பட்டது
இந்த நிலையில் யார்
இருந்தாலும் அவர் கதறி
அழுது விடுவார் ;
வலி தாங்க முடியாமல்
அலறுவார் ;
அத்தகைய ஒரு நிலையில்
ஜியார்டானோ புருனோவிடம்
கேள்விகள் கேட்கப்பட்டன “

சிறை அதிகாரி :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளில்
எத்தகைய சீர்திருத்தங்களை
கொண்டு வர வேண்டும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களோ……..?
அத்தகைய சீர்திருத்தங்களை
எங்களிடம் சொல்லுங்கள்
அந்த சீர்திருத்தங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு
சாத்தியக்கூறுகள்
ஏதேனும் இருக்கிறதா
என்று நாங்கள்
ஆராய்ந்து பார்க்கிறோம் “

“ நடைமுறைப்படுத்துவதற்கு
சாத்தியக்கூறுகள்
இருக்கும் பட்சத்தில்
அவைகளை
நடைமுறைப்படுத்துவதற்கு
தேவையான
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவோம் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ ஒரு மனிதனால் எந்த
வலி வரை
தாங்கிக் கொள்ள
முடியுமோ – அந்த
நிலையையும் கடந்து
ஒரு மனிதனால் எந்த
வலியை தாங்கிக் கொள்ள
முடியாதோ - அந்த
நிலையை அனுபவிக்கும்
வகையில் - அந்த சிறிய
சக்கரம் சுற்றப்பட்டது “

“ இந்த நிலையில்
யாராலும் பேச முடியாது
மனம் பைத்தியம்
பிடித்த நிலையில்
இருக்கும் ;
என்ன பேசுகிறோம்
என்பதை உணராமல்
பித்து பிடித்தது
போல் உளறுவார்கள் ;
இந்த நிலையில் தான்
எந்த குற்றவாளியும்
தன்னை குற்றவாளி - என்று
ஒத்துக் கொள்வான் ;
குற்றம் செய்யாதவனும்
இந்த வலியை பொறுக்க
மாட்டாமல் குற்றம்
நான் தான் செய்தேன்
என்பதை ஒத்துக்
கொள்வான் ; ”

“ அந்த சிறிய சக்கரத்தை
ஒரு சிறிய சுற்று
சுற்றினால் போதும்
கையானது
தோள் பட்டையிலிருந்து
வெளியே வந்து விடும்
நிலையில் அந்த சிறிய
சக்கரம் இருந்தது
மனிதனால் தாங்கிக்
கொள்ள முடியாத
வலியை அது கொடுத்துக்
கொண்டு இருந்தது. “

“ இந்த நிலையில் அந்த
சிறிய சக்கரத்தை
வைத்த பிறகு
ஜியார்டானோ
புருனோவிடம்
கேள்விகள் கேட்கப்பட்டன “

“ ஜியார்டானோ புருனோவிடம்
எந்தவித சிறு
சத்தமோ ஓலமோ
அழுகுரலோ கேட்கவே
இல்லை ;
எப்போதும் இருப்பது
போலவே ஜியார்டானோ
புருனோ இருந்தார் ;

ஆவேசமாக கேள்விகளைக்
கேட்டுக் கொண்டு
இருந்த சிறை அதிகாரி
ஜியார்டானோ புருனோவின்
மன உறுதியைக் கண்டு
தயங்கி தயங்கி
கேள்விகளைக் கேட்கலானார் ;”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  30-01-2019
/////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment