February 14, 2019

திருக்குறள்-பதிவு-107


                      திருக்குறள்-பதிவு-107

“ அறியாமை ;
மூடநம்பிக்கை ;
வன்முறையுடன்
கூடிய இரத்தம் ;
ஆகியவற்றால்
கட்டப்பட்ட
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும் ;
சர்ச்சுகளையும்; அன்பும்
கருணையும் கொண்டு
மனிதத் தன்மையுடன்
இயங்குவதற்கு
தேவையான
முயற்சிகள் செய்த
என்னை குற்றவாளி
என்று பழிசுமத்தி
மன்னிப்பு கேட்கச்
சொல்கிறீர்கள்; “

“ என்னை நீங்கள்
சிறையில்
அடைத்த போதே
நீங்கள் என்னிடம்
தோற்று விட்டீர்கள் :
அப்படி இருக்கும்போது
என்னிடம்
தோற்றுவிட்ட நீங்கள்
வெற்றி பெற்ற என்னை
மன்னிப்பு கேட்க
சொல்வது தான்
வேடிக்கையான விஷயம் ;”

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டேன்
என்று என்னை
வாழ விடாமல்
என்ன என்ன
செயல்களை எல்லாம்
செய்ய முடியுமோ …………..?
அதை எல்லாம்
எனக்கு எதிராக
செய்தீர்கள் ;
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“ எந்த ஒரு இடத்திலும்
என்னை நிலையாக
வாழ விடாமல்
ஊர் ஊராக
நாடு நாடாக
அலைய விட்டீர்கள்
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“ என்னை ஆறு
வருடங்களுக்கும்
மேலாக சிறையில்
வைத்து சித்திரவதை
செய்தீர்கள் ;
மரண அவஸ்தையை
அளித்தீர்கள் ;
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“அப்பொழுது  எல்லாம்
மன்னிப்பு கேட்காத
நான் இப்போது
மன்னிப்பு கேட்பேன்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களா……………? “

என்று சொல்லிக்
கொண்டே தரையில்
முட்டி போட்டு
உட்கார்ந்திருந்த
ஜியார்டானோ புருனோ
எழுந்து நின்றார்

சிறிது தூரம்
மெதுவாக
நடந்து சென்று
நாற்காலியின்
அருகில் சென்று
அதனை பிடித்துக்
கொண்டு நின்று
கொண்டிருந்தார்

சிறிது நேரம்
மெளனமாக இருந்தார்

“ ஜியார்டானோ
புருனோ சொல்லப்
போகும் அந்த
வார்த்தையில் தான் –
அவர் தண்டிக்கப்
படுவாரா………………………..?
அல்லது
விடுதலை
செய்யப்படுவாரா……………….?
என்பது தெரியும்
என்ற காரணத்தினால் ,
ஜியார்டானோ
புருனோ சொல்லும்
அந்த வார்த்தைக்காக
அந்த அவையில் உள்ள
அனைவரும் காத்துக்
கொண்டு இருந்தனர். ”

“ அனைவரும்
ஜியார்டானோ
புருனோவையே
பார்த்துக் கொண்டு
இருந்தனர் “

“ அந்த இடத்தில் ஒரு
ஆழ்ந்த அமைதி
நிலவியது ‘

நாற்காலியை
பிடித்தவாறு
நின்று கொண்டிருந்த
ஜியார்டானோ புருனோ
மெல்ல
நிதானமாக
அழுத்தம்
திருத்தமாக
ஒவ்வொரு
வார்த்தையாக
சொல்ல ஆரம்பித்தார்


நான்……………………………………………..


மன்னிப்பு…………………………………


கேட்க………………………………………….


மாட்டேன்………………………………..


என்று சொல்லிக்
கொண்டே
நாற்காலியில்
அமர்ந்தார்
ஜியார்டானோ
புருனோ.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  14-02-2019
//////////////////////////////////////////////


February 13, 2019

திருக்குறள்-பதிவு-106


                     திருக்குறள்-பதிவு-106

(ஜியார்டானோ புருனோவிற்கு
எதிரான ரோம் நகரத்தின்
ஐந்தாம் கட்ட விசாரணை
தொடங்கியது.

சித்திரவதையினால் உடல்
தளர்ந்து போய் இருந்த
ஜியார்டானோ புருனோவை
இரண்டு காவலர்கள்
கைத்தாங்கலாக பிடித்துக்
கொண்டு ஜியார்டானோ
புருனோவுடன்
நின்று கொண்டிருந்தனர்

கார்டினல் சார்டோரி  
பெல்லரமினோ ஆகியோரும்
கார்டினல்களும் அந்த
அறையில் இருந்தனர்.)

கார்டினல் சார்டோரி :
“ Father ஜியார்டானோ
புருனோ அவர்களே !
உங்களுக்கு வழங்கப்பட்ட
கால அவகாசம்
முடிந்து விட்டது “

“ நீங்கள் சொல்லும்
பதிலுக்காக இந்த
நீதிமன்றம் காத்துக்
கொண்டிருக்கிறது “

“ நீங்கள் மன்னிப்பு
கேட்டு கொள்கிறீர்களா “

ஜியார்டானோ புருனோ :
“நான் என்ன
சொன்னேன்……………..!”

“சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது என்று
தானே சொன்னேன் ; “

“ கிறிஸ்தவ மதத்தின் மூலம்
அரசியலைக் கைப்பற்றி ;
அதிகாரத்தைப் பயன்படுத்தி ;
மக்களை அடிமைகளாக
வைக்க வேண்டாம் என்று
தானே சொன்னேன் ; “

“ மதத்தை அரசியலோடும்
கல்வியோடும் கலக்காதீர்கள்
என்று தானே சொன்னேன் ; “

“ இதில் என்ன
தவறு இருக்கிறது……………………………….?  

“ அன்பையும் கருணையையும்
போதித்து வந்த
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ; சர்ச்சுகளும் ;
இப்போது அன்பையும்
கருணையையுமா
போதிக்கின்றன………………….? “

“ மனிதத் தன்மையை
அழித்து விட்டு
மதத் தன்மையையும்
மத வெறியையும்
தானே போதிக்கின்றன “

“ உண்மையான
கிறிஸ்துவத்தை
போதித்து உண்மையான
கிறிஸ்தவர்களை
உருவாக்காமல்
சிறந்த பேச்சாளர்களையும் ;
கிறிஸ்தவ மதத்தை
வைத்து பிழைப்பு
நடத்துபவர்களையும் ;
தானே உருவாக்கிக்
கொண்டிருக்கின்றன “

“ கிறிஸ்தவ மதம்
சாராத ஒருவரை
கிறிஸ்தவ மதத்திற்கு
மதம் மாற்றி – அதன்
மூலம் கிறிஸ்தவ மதத்தை
வளர்ப்பதற்காகச்
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் - கிறிஸ்தவ
மதத்தின் கருத்துக்களை
மக்களிடம் கொண்டு சென்று
அவர்களை நல்வழிப்
படுத்துவதற்கு என்றால்
பரவாயில்லை “

“அவ்வாறு எதுவும்
நடைபெறவில்லை”

“ மாறாக கிறிஸ்தவ
மதத்தின் மூலம் அரசியலை
எப்படி கைப்பற்றுவது ;
அதற்கு தடையாக
வருபவர்களை எப்படி
அழிப்பது என்பதைப் பற்றி
தானே கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையும் ;
சர்ச்சுகளும் ;
போதித்து வருகின்றன ; “

“ கிறிஸ்தவ மதமாற்றத்தின்
மூலம் கிறிஸ்தவ மதத்தை
உலகம் முழுவதும் வளர்த்து ;
அரசியலைக் கைப்பற்றி ;
அரசாள்பவர்களை
கைப்பாவையாக்கி ;
அதிகாரத்தைப் பயன்படுத்தி ;
உலகின் எந்த மூலையில்
எத்தகைய மக்கள்
வாழ்ந்தாலும்
அவர்கள் நீங்கள் இடும்
கட்டளைகளை ஏற்று
நடக்கக்கூடியவர்களாக
மக்களை மாற்றுவதற்கும் ;
நீங்கள் இடும் கட்டளைகள்
சரியானதா ? தவறானதா ?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் எத்தகைய
செயலையும் செய்யக்கூடிய
மக்களை உருவாக்குவதற்கும் ;
தங்களுடைய சுயஅறிவைக்
கூட பயன்படுத்தாமல் நீங்கள்
இடும் கட்டளைகளை
மட்டுமே ஏற்று நடத்தும்
தலையாட்டி பொம்மைகளாக
மக்களை ஆக்குவதற்கும் ;
நீங்கள் இடும் கட்டளைகளை
மட்டுமே ஏற்று நடத்தும்
விதத்தில் மக்களை
அடிமைகளாக
வைத்திருப்பதற்காக
செய்யப்படும் செயல்களைத்
தானே நான் எதிர்த்தேன்; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும் ;
சர்ச்சுகளிலும் ; நிரம்பியுள்ள
இந்த நிலையைத்தானே
நான் எதிர்த்தேன் ; ”

“ மக்களுக்கு மிகப்பெரிய
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய
இந்த நிலையைத் தானே
நான் எதிர்த்தேன் ;”

“ அதனால் தான் நான்
செல்லரித்துப்போய்
இருக்கும் இந்த ஓட்டு
மொத்த அமைப்பையும்
மாற்ற வேண்டும்
என்று சொன்னேன் “

“கிறிஸ்தவ மதத்தை
அரசியலுக்கு பயன்
படுத்துபவர்களை
விலக்கி விட்டு அன்பும்,
கருணையும், போதிக்கக்
கூடியவர்களையும் ;
சிறந்த பேச்சாளர்களை
விலக்கி விட்டு  - பைபிளில்
சொல்லப்பட்ட உண்மைகளை
உணர்ந்தவர்களையும் ;
கிறிஸ்தவ மதத்தை வைத்து
பிழைப்பு நடத்துபவர்களை
விலக்கி விட்டு கிறிஸ்தவ
மதத்திற்காக தன்னுடைய
வாழ்க்கையை
அர்ப்பணிப்பவர்களையும் ;
வைத்து கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையையும் ;
கிறிஸ்தவ மதத்தையும் ;
கிறிஸ்தவர்களையும் ;
வழிநடத்தச் சொன்னேன் ; “

“ இதில் என்ன தவறு
இருக்கிறது “

“ உண்மையைச் சொன்ன
என்னை குற்றவாளி
என்கிறீர்கள்……………………………….? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  13-02-2019
//////////////////////////////////////////////


February 12, 2019

திருக்குறள்-பதிவு-105


                     திருக்குறள்-பதிவு-105

பெல்லரமினோ :
“ உங்கள் மேல்
பல்வேறு விதமான
குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டு இருந்தாலும்
அவைகள் அனைத்தையும்
ஒதுக்கி விட தீர்மானித்து
உள்ளோம் - ஆனால்
நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவ மதத்திற்கும் ;
பைபிளுக்கும் ; எதிராக
செயல்பட்டீர்கள்
என்பதற்கு ஆதாரமாக
உள்ள அனைத்து
குற்றச் சாட்டுக்களையும்
ஒதுக்கி விடாமல் ;
அந்த குற்றச்சாட்டுக்கள்
அனைத்தையும் நாங்கள்
எட்டாக சுருக்கி உள்ளோம் “

ஒன்று :
“ நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
போப்பிற்கு எதிராகவும் ;
எழுதி இருக்கிறீர்கள் “

இரண்டு :
“ நீங்கள் கன்னிமேரியின்
கன்னித் தன்மையை
சந்தேதிக்கும் வகையில்
இழிவு படுத்தி
எழுதி இருக்கிறீர்கள் “

மூன்று :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்
பட்டிருக்கும் திருப்பலியில்
வழங்கப்பட்டு
உட்கொள்ளப்படும்
அப்பம் (Bread)
இயேசுவின் உடலாகவும்,
மதுரசம் (Wine)
இயேசுவின் இரத்தமாகவும்
மாற்றமடைகிறது என்ற
கோட்பாடு தவறானது
என்று எழுதி
இருக்கிறீர்கள் “

நான்கு :
“ நீங்கள் இயேசு
கிறிஸ்துவை கடவுளின்
பிள்ளை இல்லை என்றும் ;
அவர் ஒரு மந்திரவாதி
என்றும் ;எழுதி
இருக்கிறீர்கள் “

ஐந்து :
“ நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது என்றும் ;
அதைப்போல்
எண்ணற்ற சூரியக்
குடும்பங்கள் இந்த
பிரபஞ்சத்தில் நிறைய
எண்ணிக்கையில்
நிரம்பி இருக்கிறது
என்றும் ; எழுதி
இருக்கிறீர்கள் “

ஆறு :
“ நீங்கள் மறுபிறப்பில்
நம்பிக்கை கொண்டு
இருக்கின்ற காரணத்தினால்
மறுபிறப்பு
உண்டு என்றும் ;
சொர்க்கமும், நரகமும்
இல்லை என்றும் ;
எழுதி இருக்கிறீர்கள் “

ஏழு :
“ நீங்கள் பிசாசுகளும்
இரட்சிக்கப்படுவார்கள்
என்று எழுதி
இருக்கிறீர்கள் “

எட்டு :
“ அற்புதம் என்பது
இயற்கையுடன்
இணைந்து இருக்கிறது
என்றும் ;
அப்போஸ்தலர்களும் .
தீர்க்கதரிசிகளும் .
மந்திரவாதிகள்
என்றும் நீங்கள்
எழுதி இருக்கிறீர்கள் “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி இருக்கும்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ மத
நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராகவும் ;
நீங்கள் கூறியுள்ள
உண்மைக்கு புறம்பாக
உள்ள இந்த எட்டு
கருத்துக்களையும் ;
நீங்கள் விசாரணையின்
போது கூறி இருக்கிறீர்கள். “

“ நீங்கள் சொன்ன
இந்த எட்டு கருத்துக்களும்
தவறானவை என்றும் ;
இனி இதைப்போல்
தவறுகள் செய்ய
மாட்டேன் என்றும் ;
ஒப்புக் கொண்டு ,
ஸாண்டா மரியா
டெல்லா மினர்வா
சர்ச்சில்
(Church of Santa Maria
della Minerva)
பொது மக்கள்
முன்னிலையில்
மண்டியிட்டு நீங்கள்
பகிரங்கமாக மன்னிப்பு
கேட்க வேண்டும் “

“ நீங்கள் மன்னிப்பு
கேட்டுக் கொண்டு
உங்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்கு
உங்களுக்கு எவ்வளவு
காலம் தேவைப்படுமோ
அவ்வளவு காலத்தை
நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம் “

(என்று சொல்விட்டு
ஜியார்டானோ புருனோவை
பார்த்தார் பெல்லரமினோ)


ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

பெல்லரமினோ :
“ உங்கள் உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்கு
நாங்கள் உங்களுக்கு
நாற்பது நாட்கள்
அவகாசம் தருகிறோம் “

“ உங்கள் உயிரை
காப்பாற்றிக்
கொள்வதற்கான
கடைசி வாய்ப்பு இது “

“ அதனை நீங்கள்
சரியான விதத்தில்
பயன்படுத்திக்
கொள்வீர்கள் என்று
நினைக்கிறோம் “

“ கடவுள் உங்களை
காப்பாற்றட்டும்…………………………..! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  12-02-2019
//////////////////////////////////////////////