May 12, 2019

அன்னையர் தின வாழ்த்துக்கள்-12-05-2019


அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019 !

அன்பிற்கினியவர்களே !

“பட்டினத்தார் ஞானம் பெற
 வேண்டி அனைத்தையும்  
துறந்து வீட்டை விட்டு
வெளியே செல்லும் போது
தன் தாயிடம் இருந்து
விடை பெறுகிறார்.”

தாயார்
“மகனே செல்ல முடிவு
எடுத்து விட்டாய் !
இனி உன்னை தடுத்து
நிறுத்த முடியாது
எனக்காக ஒன்றே ஒன்று
செய்ய வேண்டும்”

பட்டினத்தார்
“அனைத்தையும் துறந்தவனிடம்
என்ன எதிர்பார்க்கிறீர்கள்”

தாயார்
“நான் செத்தபிறகு நீ
தான் எனக்கு கொள்ளி
போட வர வேண்டும்
வருவாயா மகனே”

பட்டினத்தார்
“அம்மா நான் அனைத்தையும்
துறந்தவன்-தாய் பாசத்தையும்
சேர்த்துத் தான் துறந்து
இருக்கிறேன் - அப்படி
இருக்கும் போது எப்படி
உங்களுக்கு கொள்ளி
போட நான் வருவேன்”

தாயார்
“மகனே உலகில் உள்ள 
எந்த ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது “

பட்டினத்தார்
“அனைத்தையும்
துறந்தவனுக்கு
தாய் என்ன ?
தந்தை என்ன ?
மகன் என்ன ?
எல்லாம் ஒன்று தான்”

தாயார்
“இப்பொழுது நான் சொல்லும்
எதுவும் உன் காதுகளுக்கு
எட்டாது. அனுபவம்
வரும் பொழுது தான்
எல்லாம் உனக்கு புரியும்
இருந்தாலும் நான்
சொல்வதைக் கேள்
இந்த நாணயத்தை நீ
வைத்துக் கொள் தினமும்
நீ அணியும் ஆடையின்
முனையில் இதை முடி
போட்டு வைத்துக் கொள்.”

“நான் இறந்தவுடன் அந்த
முடி அவிழ்ந்து நாணயம்
கீழே விழுந்து விடும்.
நான் இறந்து விட்டேன்
என்று உனக்கு தெரிந்தவுடன்
 நீ எங்கிருந்தாலும் நான்
இருக்கும் இடம் தேடி
வந்து நீ எனக்கு
கொள்ளி வைக்க வேண்டும்.
 நீ கொள்ளி வைத்தால்
தான் என் ஆன்மா
சாந்தி அடையும்.”

பட்டினத்தார்
இச்செயல் நடப்பது என்பது
இயலாத காரியம்
இருந்தாலும் உங்களுக்காக
அந்த நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக் கொள்கிறேன்

என்று அந்த நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர் உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக் கொண்டார்”

“பட்டினத்தார் பல ஆண்டுகள்
பல  இடங்களுக்கும் சென்று
பல்வேறு கருத்துக்களைப்
பரப்பி வந்தார்.
அவ்வாறான செயல்கள்
நடை பெற்றுக்  கொண்டிருக்கும் 
வேளையில், ஒரு நாள்
தவநிலையில் இருக்கும் போது
அவர் உடுத்தி இருந்த
ஆடையில் முடிந்து வைக்கப்பட்ட
 நாணயம் அவிழ்ந்து
 கீழே விழுந்தது.”

“அவர் தாய் இறந்து
விட்டார் என்று அவருக்கு
தெரிந்ததும், அவரையும்
அறியாமல் அவர் மனம்
தடுமாற்றம் அடைந்தது.
உடனே அவர் அருகில்
இருந்தவர்களிடம் தன்
தாய் இறந்து விட்டார்
அவரைப் பார்க்க சென்று
வருகிறேன் என்று சொல்லி
விட்டு கிளம்பி விட்டார்”

“அவர் தாய் இருக்கும்
இடத்திற்கு வந்தபோது
அங்கே அவர் கண்ட
காட்சி அவரை அதிர்ச்சி
அடையச் செய்தது. அவர்
துறவியாகி எல்லாவற்றையும்
துறந்து சென்று விட்டதால்
சாதி வெறியர்கள் அவர்
குடும்பத்தை விலக்கி
வைத்திருந்தனர். அதனால்
அவர் தாயாரின் இறந்த
உடலுடன் ஓரிருவர் மட்டுமே
நின்று கொண்டிருந்தனர்.”

“தன்னுடைய தாயினுடைய
இறந்த உடலை
பார்த்த பட்டினத்தார்
மனம் வேதனையுற்று
தன்னையுமறியாமல்
கண்ணிலிருந்து விழுந்த
கண்ணீரை அடக்க முடியாமல்,
துக்கம் தாளாமல்
தேம்பித் தேம்பி
அழ ஆரம்பித்தார் ;
கதறி அழ ஆரம்பித்தார் ;
தன்னுடைய அழுகையை
கட்டுப்படுத்த முடியாமல்
அழ ஆரம்பித்தார் ;
உடல் என்னும் கூட்டை
விட்டு இதயம் வெடித்து
வெளியே விழுந்து
விடும் என்று எண்ணத்
தோன்றும் வகையில்
ஆழ ஆரம்பித்தார் ;’

“அப்பொழுது தான் அவர்
தாய் சொன்னது அவர்
நினைவுக்கு வந்தது”

“உலகில் உள்ள எந்த
ஒரு பாசத்தையும்
துறக்கலாம் - ஆனால்
தாய் பாசத்தை மட்டும்
துறக்க முடியாது
என்ற வார்த்தை - அவர்
காதில் எதிரொலித்தது”

“தாயின் வார்த்தையில்
உள்ள உண்மைகளை
உணர்ந்து கொண்டார்
பட்டினத்தார்”

அன்னையர் தின
வாழ்த்துக்கள்-12-05-2019

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்


May 10, 2019

பரம்பொருள்-பதிவு-14


                       பரம்பொருள்-பதிவு-14

" கடவுள் சிலை
செய்வதற்காக
உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து ;
தேர்ந்தெடுக்கப்பட்ட
கல்லிடம்
கடவுள் சிலை
செய்வதற்கான
அனுமதியைப் பெற்று ;
ஆகம சாஸ்திர
முறைப்படி
கடவுள் சிலையை
செதுக்கி ;
பிராண பிரதிஷ்டை
மூலம்
சக்தியை செலுத்தி ;
கடவுள் சிலையை
கடவுளாகவே
மாற்றிய பின்னர் ;
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றைப்
பயன்படுத்தி
கடவுள் சிலையை
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவ வேண்டும் “

“கடவுள் சிலையை
நிறுவுவதற்கு
பயன்படுத்தும் முறைக்கு
அஷ்ட பந்தனம்
என்று பெயர்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
வைக்கப்படும்
கடவுள் சிலை
அசையாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
கடவுள் சிலைக்கு
அஷ்ட பந்தனம்
சாத்துவார்கள்”

“கல்லால் செய்யப்பட்ட
கடவுள் சிலையை
கர்ப்பக்கிரகத்தில்
நிறுத்தி வைக்க
வேண்டும் ;
அதாவது கல்லால்
ஆன கடவுள்
சிலையை கல்லோடு
ஒட்டி நிறுத்தி
வைக்க வேண்டும் ;
கல்லால் ஆன
கடவுள் சிலையை
வேறொரு கல்லுடன்
ஒட்டுவதற்கு
கலவை ஒன்று
தயாரிக்கப்படுகிறது;
இதற்கு அஷ்ட
பந்தனம் என்று பெயர்: ”

அஷ்ட பந்தனம்
“அஷ்டம் என்றால்
எட்டு என்று பொருள்;
பந்தனம் என்றால்
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;
அஷ்ட பந்தனம்
என்றால் எட்டுவிதமான
பொருள்களை ஒன்றாக
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;”

“இந்தக் கலவையில்
எட்டு விதமான
பொருட்கள்
சேர்க்கப்பட்டிருக்கும்”

அவையாவன ;

1.கொம்பரக்கு
2.சுக்கான் தூள்
3.குங்கிலியம்
4.கற்காலி
5.செம்பஞ்சு
6.சாதிலிங்கம்
7.வெள்ளை மெழுகு
8.எருமை எண்ணெய்

ஆகிய எட்டு
பொருள்களாகும்

“இந்த அஷ்டபந்தனம்
என்பதை மருந்து
சாத்துதல் என்றும்
சொல்லலாம்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
கடவுள் சிலையை
வைத்து பீடத்திலிருந்து
கடவுள் சிலை
அகலாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
அஷ்ட பந்தன மருந்து
சாத்துவார்கள்”

“இந்த அஷ்ட பந்தன
மருந்து கடவுள்
சிலையை பீடத்துடன்
அழுந்தப் பிடித்துக்
கொள்ளும்”

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலைக்கு
சாத்தப்பட்ட
அஷ்ட பந்தன மருந்து
12 வருடங்களுக்கு
மட்டுமே வேலை
செய்யும் ;
12 வருடங்களுக்குப்
பிறகு அஷ்ட பந்தன
மருந்தானது செயல்
இழந்து விடும் ;
எனவே,
12 வருடங்களுக்கு
பிறகு அஷ்ட பந்தன
மருந்தை மாற்ற
வேண்டும் ;”

“கர்ப்பக் கிரகத்தில்
அஷ்ட பந்தன மருந்து
சாத்தப்பட்டு
கடவுள் சிலை
நிறுவப் படுகிறது ;
இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவப்பட்ட
கடவுள் சிலை
12 ஆண்டுகள் கழித்து
பிரித்து எடுக்கப்
படுகிறது ;
மேலும் கடவுள்
சிலையை பீடத்துடன்
ஒட்டி வைப்பதற்காக
சாத்தப்பட்ட
பழைய அஷ்டபந்தன
மருந்து முற்றிலுமாக
வெளியே எடுக்கப்படுகிறது;
புதியதாக அஷ்ட பந்தன
மருந்து தயாரிக்கப்பட்டு
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலை
பீடத்துடன்
ஒட்டி வைக்கப்படுகிறது”

“இந்த நிகழ்வு
கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படுகிறது”

“கும்பாபிஷேகம் எப்படி
நடத்தப் படுகிறது
என்று பார்ப்போம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  10-05-2019
/////////////////////////////////////////////////////


May 08, 2019

பரம்பொருள்- பதிவு-13


                   பரம்பொருள்- பதிவு-13

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் ஒரு பொருளுக்கு
சக்தியைச் செலுத்தி
உயிரூட்டத் தெரிந்த
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள்
பிராண பிரதிஷ்டையை
இரண்டு விஷயத்திற்காக
பயன்படுத்துகிறார்கள் “

ஒன்று
“நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

இரண்டு
“கெட்ட விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் ;”

ஒன்று
“பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக்கூடிய
இறை சக்தியை
கடவுள் சிலைக்குள்
செலுத்தி
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி
மக்கள் அனைவரும்
தங்களுக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்ள
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
நல்ல விஷயத்திற்காக
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்துகிறார்கள் “

இரண்டு
“ தெரிந்த நபராக
இருந்தாலும் சரி ;
தெரியாத நபராக
இருந்தாலும் சரி ;
அவர் யாராக
இருந்தாலும் சரி ;
நேரில் பார்த்தோ
அல்லது புகைப்படத்தை
பார்த்தோ அவரைப்பற்றி
தெரிந்து கொண்டபின்
உலகின் எந்த
ஒரு மூலையில் அவர்
வசித்தாலும் அவருடைய
உருவத்தை மனதில்
நிறுத்தி முதலில்
அவரைப் போல ஒரு
உருவத்தை பொம்மையில்
செய்து கொள்கிறார்கள் “

“ பிறகு அந்த A என்ற
நபருடைய
உயிர்ச்சக்தியை
அந்த பொம்மைக்குள்
செலுத்துவதற்காக
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள்”

“அதாவது A
என்பவருடைய
உயிர்ச்சக்தியை அந்த
பொம்மைக்குள்
கொண்டு வருவதற்கு
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் “

“ அவ்வாறு
பிராண பிரதிஷ்டை
செய்த பிறகு
அந்த பொம்மைக்குள்
A என்பவரது உயிர்
வந்து விடும் ;
அந்த பொம்மை
A ஆகவே மாறி விடும் ;
ஆமாம் அந்த பொம்மை
A ஆகவே மாறி விட்டது ;”

“இப்போது அந்த
பொம்மையில்
சிறிய ஊசி வைத்து
அந்த பொம்மையின்
வலது கையில்
ஊசியால் குத்தினால்
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருக்கும்
அந்த A என்ற
நபருக்கு வலிக்கும்”

“அந்த பொம்மையின்
கையை ஒடித்தால்
உலகின் எங்கோ ஒரு
மூலையில் இருக்கும்
A என்பவருடைய கை
ஒடிந்து விடும்”

“பொம்மையை நாம்
எத்தகைய நிலைக்கு
துன்பப்படுத்துகிறோமோ
அந்த அளவிற்கு
அந்த A துன்பப்படுவார்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் உலகின் எங்கோ
ஒரு மூலையில்
இருப்பவருடைய
உயிர்ச்சக்தியை
பொம்மைக்குள் செலுத்தி
அவரை எத்தகைய
துன்பத்திற்கும்
உள்ளாக்கலாம் என்றால்
பிராண பிரதிஷ்டை
எவ்வளவு வலிமை
வாய்ந்தது என்பதையும்
பிராண பிரதிஷ்டை
தவறான விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
என்பதையும்
தெரிந்து கொள்ளுங்கள்”

“பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள்
சிலைக்கு உயிர் கொடுத்து
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாற்றுவதற்கு
எப்படி
ஆகம சாஸ்திரம்
விதிமுறைகளை வகுத்து
வைத்து இருக்கிறதோ  ;
அவ்வாறே ,
பிராண பிரதிஷ்டையை
பயன்படுத்தி ஒருவரை
பாதிப்பு அடையச் செய்து
வீழ்த்துவதற்கும் ;
மாந்திரீக சாஸ்திரம்
விதிமுறைகள் வகுத்து
வைத்திருக்கிறது “

“மக்கள் அனைவரும்
துன்பம் நீக்கி
இன்பத்தை நுகர்ந்து வாழ
வேண்டும் என்று
உயர்ந்த நோக்கத்துடன் ;
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுளாகவே
மாற்றுவதற்காக ;
பிராண பிரதிஷ்டை
செய்பவர்கள் நல்ல
செயலுக்குரிய
பலனைப் பெறுவர் ;
பிறரை பாதிப்பு அடையச்
செய்து வீழ்த்த வேண்டும்
என்ற தவறான
நோக்கத்துடன்
பிராண பிரதிஷ்டையை
செய்பவர்கள்
பாவத்தின் சம்பளத்தை
அனுபவித்தே ஆக
வேண்டும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-05-2019
/////////////////////////////////////////////////////