June 17, 2019

பரம்பொருள்-பதிவு-26


                      பரம்பொருள்-பதிவு-26

“கல்லில் கடவுள்
இல்லை
என்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று
கடவுளை
வணங்குபவர்கள்

இரண்டு
கடவுளை
வணங்காதவர்கள்

ஒன்று
“ஒரு மதத்தில்
இருந்து கொண்டு
தான் சார்ந்த
மதத்தில் உள்ள
தான் வணங்கும்
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான
நம்பிக்கை
வைத்திருப்பவர்கள் ;
தன்னுடைய
கடவுளை
உண்மையாக
வணங்குபவர்கள் ;
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான பக்தி
வைத்திருப்பவர்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை
இகழ்ச்சியாக
பார்க்க மாட்டார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை
இகழ்ச்சியாக
பேச மாட்டார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளுக்கு எதிராக
தவறான விதத்தில்
நடந்து கொள்ள
மாட்டார்கள் ; “

“ஒரு மதத்தில்
இருந்து கொண்டு
தான் சார்ந்த
மதத்தில் உள்ள
தான் வணங்கும்
தன்னுடைய கடவுளை
உண்மையாக
நம்பாதவர்கள் ;
தன்னுடைய கடவுளை
உண்மையாக
வணங்காதவர்கள் ;
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான பக்தி
வைக்காதவர்கள் தான் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை இகழ்ச்சியாக
பார்ப்பார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை இகழ்ச்சியாக
பேசுவார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளுக்கு எதிராக
தவறான விதத்தில்
நடந்து கொள்வார்கள் ;”

“ தான் வணங்கும்
கடவுள் மேல்
உண்மையான
பக்தி வைத்திருப்பவர்கள் ;
பிற கடவுளை
இகழ மாட்டார்கள் ;
தான் வணங்கும்
கடவுள் மேல்
உண்மையான
பக்தி வைக்காதவர்கள் தான் ;
பிற கடவுளை
இகழுவார்கள் ; “

“இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையைப்
பார்த்து கல் என்றும் ;
கல்லில் கடவுள்
இல்லை என்றும் ;
இகழுவார்கள் ;
இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையை
வணங்குகிறவர்களைப்
பார்த்து கல்லை
வணங்குகிறார்கள்
என்று இகழுவார்கள் ;
இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையை
வணங்குகிறவர்களைப்
பார்த்து
கல்லில் இருக்கும்
தீய சக்தியை
வணங்குகிறார்கள் ;
என்று கொச்சைப்
படுத்தி இகழுவார்கள் ;”

“பிற மதத்தைச்
சார்ந்தவர்களை இழிவாக
நடத்துகிறவர்கள் ;
பிற மதத்தைச்
சார்ந்து இருந்து
பிற மதத்தில்
உள்ள கடவுளை
வணங்குகிறவர்களை
இழிவாக பேசுகிறவர்கள் ;
தன்னுடைய மதமே
உண்மையான
மதம் என்றும் ;
தான் சார்ந்து இருக்கும்
மதத்தில் உள்ள
கடவுளே உண்மையான
கடவுள் என்றும் ;
சொல்பவர்கள்
அனைவரும்
தான் சார்ந்து இருக்கும்
மதத்தின் மீதும்
தான் வணங்கும்
கடவுளின் மீதும்
உண்மையான பக்தி
வைத்திருக்க
மாட்டார்கள் ;
என்பதையும் ,
ஏதோ ஒரு
காரணத்திற்காகத் தான்
அந்த மதத்தை
தழுவி இருக்கிறார்கள்
என்பதையும் ,
ஏதோ ஒரு
காரணத்திற்காகத்
தான் அந்த மதத்தில்
உள்ள கடவுளை
வணங்குகிறார்கள்
என்பதையும் ,
நாம் நினைவில்
கொள்ள வேண்டும் ;”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 17-06-2019
//////////////////////////////////////////////////////////////



June 15, 2019

பரம்பொருள்-பதிவு-25


                      பரம்பொருள்-பதிவு-25

11.கும்பாபிஷேகம்

“பிரதானமாக
இருக்கக்கூடிய ;
முக்கியமாக
இருக்கக்கூடிய ;
கும்பத்தை
தலைமை ஆசாரியன்
(அல்லது)
முக்கியமான
ஆசாரியன் தலையில்
எடுத்துக் கொண்டு
சகலவிதமான
உபசாரங்களுடன்
கோயிலை
சுற்றி வந்து
கர்ப்பக் கிரகத்தில்
நுழைய வேண்டும் ”

“கர்ப்பக் கிரகத்தில்
நுழைந்து கும்பத்தை
கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலைக்கு முன்னால்
வைக்க வேண்டும்”

“எல்லாம் வல்ல
இறைவனை வணங்கி ;
மந்திர ஜபம் செய்து ;
கும்பத்தில் உள்ள நீரை
கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலையின் மீது
அபிஷேகம்
செய்ய வேண்டும் “

“பிராண பிரதிஷ்டை
மூலம் உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலையானது
கும்பாபிஷேகம்
செய்யப்பட்ட பின்
கடவுள் சிலைக்குள்
இருக்கும்
கடவுள் சக்தியானது
இயங்கும்
சக்தியைப் பெறுகிறது ;
தன்னை நாடி வரும்
அன்பர்களுக்கு
அருள் வழங்கும்
சக்தியைப் பெறுகிறது ”

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்து இருக்கும்
இறைவன்
உருவம் ;
அருவம் ;
அருவாரூபம் ;
என்ற மூன்று நிலைகளில்
இந்த உலகத்தில்
எழுந்தருளி இருந்தாலும் ;
இந்த பிரபஞ்சத்தில்
அருவாரூபத்தில் இருக்கும்
இறைவனையும் ;
அருவத்தில் இருக்கும்
இறைவனையும் ;
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
உணர முடியாமல்
இருக்கிறார்கள்
என்ற காரணத்தினால் ;
மக்கள் அனைவரும்
இறைவனை எளிதாக
உணரக்கூடிய நிலையில் ;
பார்க்கக்கூடிய நிலையில் ;
இருக்கும் வகையில் ,
மக்கள் அனைவரும்
உருவத்தில்
இறைவனை வணங்க
வேண்டும் என்ற
காரணத்திற்காக ;
இறைவனை
கடவுள் சிலைக்குள்
எழுந்தருளச் செய்து
இருக்கிறார்கள் ;”

“கடவுள் சிலைக்குள்
எழுந்தருளிய இறைவன் ;
கும்பாபிஷேகம்
முடிந்த பின்
கண்களால்
காணக்கூடிய நிலையில்
கடவுள் சிலையாக
ஒரு உருவமாக
காட்சியளிக்கிறான் “

“இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்து இருந்து ;
இந்த பிரபஞ்சம்
முழுவதையும்
தன்னுள் வைத்து
காப்பாற்றிக்
கொண்டிருந்த இறைவன் ;
கடவுள் சிலை என்ற
ஒரு உருவத்திற்குள்
அடைபட்டாலும் ;
இந்த உலகத்தில்
உள்ள அனைத்தையும்
கட்டிக் காப்பாற்றிக்
கொண்டே இருக்கிறான் ; “

“இது போன்றே
கோயிலுள்ள
ஏனைய பரிவார
தேவதைகளுக்கும் ;
கோபுர ஸ்தூபிகளுக்கும் ;
அவைகளுக்கென்று
ஒதுக்கப்பட்ட கும்பங்களை
மந்திர பூர்வமாய் செய்த
ஜபங்களின் மூலம்
கும்பங்களில்
முழுமை அடைந்து
இருக்கும் கடவுள்
சக்தியை அபிஷேகம்
செய்வதால்
கோயிலானது இறைவன்
வசிக்கும் வீடாக
மாறி விடுகிறது ;

“பாவத்தைப்போக்கி
புண்ணியத்தை நல்கும்
புண்ணியஸ்தலமாக
மாறி விடுகிறது ;”

“ துன்பப் படுபவர்களின்
துயரைத் துடைக்கும்
கலங்கரை விளக்கமாக
மாறி விடுகிறது ; “

“ இல்லாதவர்கள்
வாழ்வதற்கு
தேவையானதை
வழங்கும் அருள்
கூடமாக மாறி
விடுகிறது ;”

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
தீர்த்துக் கொள்ள
முடியாதவர்களுக்காக
உண்டாக்கப்பட்ட
கோயிலானது ;
கும்பாபிஷேகம்
முடிந்தபின்
தன்னை நாடி
வந்தவர்களுக்கு
அனைத்தையும்
வாரி வழங்கி
அருள்பாலிக்கும்
புண்ணியம் மிக்க
ஸ்தலமாக மாறி
விடுகிறது ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 15-06-2019
//////////////////////////////////////////////////////////////


June 13, 2019

பரம்பொருள்-பதிவு-24


                       பரம்பொருள்-பதிவு-24

“பிரபஞ்சத்தில் உள்ள
கடவுள் சக்தியை
கிரகிப்பதற்கு
தேவையான
செயல்களை
கும்பஸ்தாபனம் ;
மூலம்
செய்யப்படுகிறது ;”

“பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிக்கப்பட்ட
கடவுள் சக்தியை
கும்பத்தில்
இறக்கி
கும்பத்திற்குள்
வைப்பதற்கு
தேவையான
செயல்களை
கலாகர்ஷணம் ;
மூலம்
செய்யப்படுகிறது ;”

“கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்வதற்கு
தேவையான
செயல்கள்
யாகசாலையில் ;
செய்யப்படுகிறது ;”

“இவ்வாறு
கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
ஒன்றாக
செயல்பட்டு
பிரபஞ்சத்தில்
இருந்து
கடவுள் சக்தியை
கிரகித்து ;
கும்பத்தில்
இறக்கி ;
கும்பத்தில்
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்யும் முக்கியமான
மூன்று பணிகளைச்
செய்கிறது “

10.ஸ்பர்சாஸீதி
“ஸ்பர்சாஸீதி
கும்பாபிஷேகம்
இரண்டும்
ஒன்றுக்கொன்று
தொடர்புடையவை”

“கடவுள்
சக்தியானது
ஸ்பர்சாஸீதி மூலம்
மறைமுகமாக
கடவுள் சிலைக்கு
செலுத்தப்படுகிறது”

“கடவுள்
சக்தியானது
கும்பாபிஷேகம் மூலம்
நேரடியாக
கடவுள் சிலைக்கு
செலுத்தப்படுகிறது”

“யாகசாலையில்
செய்யப்பட்ட
பல்வேறு
செயல்கள் மூலம்
கடவுள் சக்தியானது
கும்பத்தில்
முழுமையாக இறங்கி ;
கும்பத்தில்
கடவுள் சக்தியானது
முழுமை அடைந்து
இருக்கிறது ;
அதாவது ,
கடவுளானவர்
தனது முழுமையான
சக்தியோடு
கும்பத்தில் இறங்கி
இருக்கிறார் ;
என்று சொல்லலாம் “

“மேலும் நாம்
செய்த செயல்கள் ;
நாம் வேண்டிய
வேண்டுதல்கள் ;
ஆகியவற்றின்
காரணமாக
மக்களுக்கு
அருள் பாலிக்க
வேண்டும் என்ற
நோக்கத்திற்காக
கடவுள் தனது
முழு சக்தியோடு
கும்பத்தில்
இறங்கியிருக்கிறான்;”

“கும்பத்தில் இறங்கி
முழுமை அடைந்து
இருக்கும் இந்த
கடவுள் சக்தியை
கடவுள் சிலையில்
சேர்க்கும் செயலுக்கு
ஸ்பர்சாஸீதி
என்று பெயர்”

“யாகசாலையில்
இருக்கும்
கும்பத்திற்கும் ;
கடவுள் சிலைக்கும் ;
தங்கக் கம்பி
(அல்லது)
வெள்ளிக் கம்பி
(அல்லது)
தர்ப்பைக் கயிறு
மூலம்
இணைப்பு ஏற்படுத்தி
யாகசாலையில்
செய்யப்பட்ட
ஹோமங்களையும் ;
தத்துவங்களையும் ;
தத்துவ
அதிபர்களையும் ;
கடவுள் சிலையில்
சேர்ப்பதற்கு
செய்யப்படும்
செயலுக்கு
ஸ்பர்சாஸீதி
என்று பெயர் “

“இவ்வாறு
ஸ்பர்சாஸீதி
மூலமாக
கடவுள் சக்தியானது
மறைமுகமாக
கடவுள் சிலையில்
சேர்க்கப்படுகிறது”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 13-06-2019
//////////////////////////////////////////////////////////////

June 12, 2019

பரம்பொருள்-பதிவு-23


                        பரம்பொருள்-பதிவு-23

9.யாகசாலை
“ஆலயத்தின்
வடமேற்கு மூலையில்
யாகசாலை
அமைக்கக் கூடாது ;
ஆலயத்தின்
வடமேற்கு
மூலையைத்
தவிர வேறு
ஏதேனும்
திக்குகளில்
ஏதாவது ஒன்றில்
யாகசாலை
அமைக்க வேண்டும் ;”

“வடகிழக்கு
மூலை என்று
சொல்லப்படுகின்ற
ஈசானமூலை
யாகசாலை
அமைப்பதற்கு
உத்தமமாகக்
கருதப்படுகின்றது”

“யாகசாலை
அமைக்கும்போது
பந்தல்கால்களை
நிறுவுவதற்கென்று
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுதியான மரங்களை
உபயோகிப்பார்கள் ;
தென்னை
ஓலைகளைக் கொண்டு
பின்னப்பட்ட
தடுக்குகளை
மேலே கோப்பாக
மூடுவார்கள் ;
இவைகள் மழை
வெயில்
ஆகியவற்றிலிருந்து
யாகசாலையை
பாதுகாப்பாதுடன் ;
பந்தலுக்குக் கீழ்
உள்ள அனைத்து
பகுதிகளுக்கும்
குளிர்ச்சியைத் தந்து;
அந்த இடங்கள்
முழுவதையும்
குளிர்ச்சியாக
வைத்திருக்கும் ;”

“யாகசாலைப்
பகுதியை மூங்கில்
பிளாச்சுகளையும் ;
மண்சுவர்களையும் ;
கொண்டு எளிய
முறையில்
தற்காலிகத் தேவைக்கு
ஏற்றபடியே
அமைக்கிறார்கள் ;”

“இந்த எல்லைக்குள்
தேவைப்படும் வகையில்
தேவையான
இடத்தைக் கணக்கிட்டு
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
வேதிகை (மேடையை)
அமைப்பார்கள்”

“கோயிலில்
எத்தனை கடவுள்
சிலைகளை
நிறுவ வேண்டுமோ?
அத்தனை கடவுள்
சிலைகளிலும்
உள்ள கடவுள்
சக்தியை இயங்க
வைப்பதற்கு ;
எத்தனை கும்பங்கள்
வைக்க வேண்டுமோ
அத்தனை கும்பங்களை
வைக்க வேண்டும்”

“இந்த யாகசாலையில்
இரண்டு காலம்
முதல் ஆறுகாலம்
வரையில்
ஹோமம், பலி,
தியானம், பூஜை
முதலியவற்றால்
ஆராதனை
செய்வார்கள்”

“தூப, தீப, சோடச,
உபசாரங்கள்,
வேத பாராயணம்,
திருமுறை ஓதுதல்
முதலியவற்றோடு
ஒருகால பூஜை
நிறைவேறும்”

“இவ்வாறு 3, 5, 7
அல்லது 9 தினங்கள்
சக்திக்குத் தகுந்தபடி
யாகசாலையில்
பூஜைகள்
நடத்தப்படும்”

“இவ்வாறு தொடர்ந்து
பூஜைகள்
செய்வதன் மூலம்
பிரபஞ்சத்திலிருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பங்களில்
இறக்கப்பட்ட
கர்ப்பக்கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலையில் உள்ள
கடவுள் சக்தி மற்றும்
ஏனைய கடவுள்
சிலைகளில் உள்ள
கடவுள் சக்திகள்
அனைத்தும் அந்தந்த
கடவுள் சக்தி உள்ள
கும்பங்களில் தனது
பரிபூரண நிலையை
அடைகிறது “

“மந்திரங்களால்
செய்யப்படும்
தொடர்ச்சியான
கிரியைகளால் ஏற்படும்
சூட்சும சலனங்களால்
குறிப்பிட்ட
கடவுள் அம்சமானது
குறிப்பிட்ட கலசத்தில்
பரிபூரண நிலையில்
முழுமை அடைகிறது “

“பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்யும் பணியானது
யாகசாலையில்
நடைபெறுகிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 11-06-2019
/////////////////////////////////////////////////////