November 19, 2019

பரம்பொருள்-பதிவு--87


            பரம்பொருள்-பதிவு-87
                                       
அர்ஜுனன் :
"நாம் விரும்பும்
ஒருவர் நம்மை
காதலிக்க வேண்டும்
என்றால் அவர் மீது
நாம் கொண்ட
காதல் எவ்வளவு
புனிதமானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
உண்மையானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு ஆழமானது
என்பதையும்; 
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
தெய்வீகமானது  
என்பதையும் ;
முதலில் அவருக்கு
புரிய வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டு
அதற்கேற்றவாறு
செயல்களைச்
செய்ய வேண்டும்;"

"நாம் செய்த
செயல்கள் மூலம்
அவர் மனது
காதலால் பாதிக்கப்பட்டு
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் வரை
நாம் பொறுமையாக
காத்திருக்க வேண்டும் ;
நம்முடைய காதலை
அவர் புரிந்து
கொண்ட பிறகே
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் ;
நம் மீது அவருக்கு
காதல் உண்டான பிறகே
அவர் நம்மை
காதல் செய்வார் ;
அதன் பிறகு தான்
இருவரும் இணைந்து
காதல் செய்ய வேண்டும் ;
இது தான் காதலின்
அடிப்படை இலக்கணம்"

"இது கூட தெரியாமல் ;
காதலின் அடிப்படை
இலக்கணம் கூட
அறியாமல் ;
காதலை
அமைதியான முறையில்
அணுகும் முறை
கூட புரியாமல்  ;
வன்முறையில் இறங்கி
என்னை கடத்தி
வந்து இருக்கிறீர்களே!
இது மட்டும் எந்த
விதத்தில் நியாயம்?"

"உங்களுடைய நியாயப்படி
கடத்தி வருவது
மட்டும் நியாயமா?

"கடத்தி வந்து காதலைச்
சொல்வது மட்டும்
நியாயமா?"

"பிறருடைய மனதை
அறியாமல் கடத்தி
வந்து காதலைச்
சொல்வது மட்டும்
எந்த விதத்தில் 
நியாயம்?"

உலூபி :
"நான் உங்களை
காதலித்ததை குற்றம்
என்கிறீர்களா ? (அல்லது)
தங்களை கடத்தி
வந்து காதலைச்
சொன்னது குற்றம்
என்கிறீர்களா?"

அர்ஜுனன் :
"தாங்கள் என்னைக்
காதலித்ததை குற்றம்
என்று சொல்லவில்லை
ஏனென்றால் அது
தங்களுடைய தனிப்பட்ட
உரிமை - ஆனால் என்னை
கடத்தி வந்து காதலைச்
சொன்னதைத் தான்
நான் குற்றம் என்கிறேன் "

உலூபி :
"பிறருடைய மனதை
அறியாமல் நான்
கடத்தி வந்தது
குற்றம் என்றால்
விசித்ரவீர்யனுக்காக
பீஷ்மர் அம்பா,
அம்பிகா, அம்பாலிகா,
ஆகிய மூவரையும்
கடத்தி வந்தாரே
அவர் யாருடைய
அனுமதி பெற்று
கடத்தி வந்தார்  ?
அந்த மூவரின்
அனுமதியைப் பெற்றா
கடத்தி வந்தார் ?
நானாவது எனக்காக
உங்களை
கடத்தி வந்தேன் - ஆனால்
பீஷ்மர் அவர்களை
இன்னொருவருக்கு மணம்
முடிக்கத் தானே கடத்தி
வந்தார்; - அவர் செய்த
செயல் மட்டும் எந்த
வகையில் நியாயம்;"

அர்ஜுனன் :
(அர்ஜுனன் எதுவும்
பேசாமல்
அமைதியாக
இருந்தான்)

உலூபி :
"ஏன் பேசாமல்
இருக்கிறீர்க்ள்
என் கேள்விக்கு
பதில் சொல்லாமல்
அமைதியாக
இருந்து கொண்டு
அமைதி காக்கிறீர்கள்
வார்த்தை
வரவில்லையா?(அல்லது)
வாயைத் திறக்க
முடியவில்லையா?(அல்லது)
உங்களால் பேச
முடியவில்லையா?(அல்லது)
நடந்த உண்மைக்கு
உங்களால் விளக்கம்
கொடுக்க
முடியவில்லையா.?இல்லை
மறுப்பதற்கு ஏதேனும்
ஆதாரத்தைத் தேடிக்
கொண்டிருக்கிறீர்களா? "

"உங்கள் பீஷ்மர்
அந்த மூவரை
இன்னொருவருக்காக
கடத்தி வந்தது
சரிதான் என்பதற்கான
சரியான காரணத்தை
பீஷ்மரால் சொல்ல
முடியாமல் இருக்கலாம் ;
ஆனால் தங்களை
காதலிக்கும் நான்
தங்களை கடத்தி
வந்ததற்கான சரியான
காரணத்தை என்னால்
சொல்ல முடியும் ;"

அர்ஜுனன் :
"அப்படி என்ன காரணத்தை
சொல்லப் போகிறீர்கள்?"

----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------19-11-2019
//////////////////////////////////////////

November 18, 2019

பரம்பொருள்-பதிவு-86


             பரம்பொருள்-பதிவு-86

அர்ஜுனன்:
"ஒரு பெண் தான்
விரும்பும் காதலனிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துகிறாள்
என்றால் அந்தப் பெண்
ஆணவக்காரி
என்றோ?
அடங்காப் பிடாரி
என்றோ?
பிறரை மதிக்கத்
தெரியாதவள்
என்றோ?
கற்பற்றவள் என்றோ?
பொருள் அல்ல"

"அந்தப் பெண்
இந்தச் சமுதாயத்தின்
கோட்பாடுகளுக்கு
பயப்படாமல்
தன்னுடைய
உணர்வுகளை
வெளிப்படுத்தத்
தெரிந்தவள்
என்று பொருள் ;
இந்தச் சமுதாயத்தின்
ஏச்சுக்களுக்கும்,
பேச்சுக்களுக்கும் ,
கவலைப்படாமல்
தன்னுடைய
வாழ்க்கையை
வாழத் தெரிந்தவள்
என்று பொருள் ;
வாழ்க்கையில்
எந்த கஷ்டம்
வந்தாலும் அதை
எதிர்த்து போராடி
வெற்றி பெறத்
தெரிந்தவள்
என்று பொருள் ;
சாதி, மதம்
சமுதாயக்
கோட்பாடுகளுக்குள்
தன்னை அடக்கி
வைத்துக் கொள்ளாமல்
வாழ்ந்து
கொண்டிருப்பவள்
என்று பொருள் ;
ஒரு பெண்
இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்து காட்டிக்
கொண்டிருப்பவள்
என்று பொருள் ;"

"நீங்கள் என்னை
காதலிக்கிறேன் என்று
சொன்ன போது
ஒரு பெண்ணான
இவள் என்னிடம்
காதலைச் சொல்ல
என்ன தைரியம்
என்று  நான்
உங்களை தவறாக
நினைக்கவில்லை !
உங்கள் குணத்தைப்
பற்றி நான் இழிவாக
நினைக்கவில்லை !
உங்கள் கற்பைப்
பற்றியோ நீங்கள்
வாழும் வாழ்க்கையைப்
பற்றியோ நான்
தவறாக நினைக்கவில்லை.!"

"வீரம் நிறைந்த ஒரு
பெண்ணாகத் தான்
உங்களை நான்
பார்த்தேன் ;
பெண்களுக்கு எதிரான
சமுதாய
கோட்பாடுகளைத்
தகர்த்தெறிந்து
தனக்கென்று ஒரு
புதிய பாதையை
வகுத்துக் கொண்டு
வாழும் ஒரு
புரட்சிப் பெண்ணாகத்
தான் உங்களைப்
பார்த்தேன் ;
ஆண்டாண்டு
காலமாக பெண்களை
அடிமைப்படுத்தி
வைத்திருக்கும்
தவறான
சட்டதிட்டங்களை
உடைத்தெறிந்து
வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு
புதுமைப்பெண்ணாகத்
தான் உங்களைப்
பார்த்தேன் ;"

"நான் உங்களை
இழிவான நிலையில்
வைத்தோ,
தாழ்வான நிலையில்
வைத்தோ,
தவறான கண்ணோட்டத்தில்
வைத்தோ,
உங்களைப்
பார்க்கவில்லை
என்பதை முதலில்
தெரிந்து கொள்ளுங்கள்"

"ஏனென்றால் அர்ஜுனன்
பெண்களை மதித்து
அவர்களை மரியாதையுடன்
நடத்தி வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;
பெண்களின் உணர்வுகளை
உணர்ந்து அந்த
உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;
பெண்களை கடவுள்
நிலையில் வைத்து
அவர்களை வணங்கி
வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;"

"இச்சமுதாயம்
காதல் பற்றிய
கோட்பாட்டில்
பெண்களை அடிமை
நிலையில் வைத்து
இருக்கிறது என்று
பேசத் தெரிந்த நீங்கள்
காதலின் அடிப்படை
இலக்கணத்தையே
புரிந்து கொள்ளாமல்
இருக்கிறீர்கள்
என்பது தான்
வேதனைக்குரிய
விஷயம்"

உலூபி:
"எதை காதலின்
அடிப்படை
இலக்கணம்
என்கிறீர்கள்?"

---------- இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------18-11-2019
//////////////////////////////////////////

November 17, 2019

பரம்பொருள்-பதிவு-85


               பரம்பொருள்-பதிவு-85

உலூபி :
"ஆமாம் விசித்திரமாகத்
தான் இருக்கும் ;
உங்களுக்கு மட்டுமல்ல
இந்த உலகத்திற்கும்
விசித்திரமாகத்
தான் இருக்கும்."

"ஒரு பெண்ணை
விரும்பிய ஒரு ஆண்
தன்னுடைய காதலை
அந்த பெண்ணிடம்
சொல்வதும் தப்பில்லை ;
அவளை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும்
தப்பில்லை. ;
விருப்பப்பட்ட
பெண்ணை அவள்
விருப்பம் இல்லாமல்
கடத்தி செல்வதும்
கூட தப்பில்லை ; "

"ஆனால் ஒரு
ஆணை விரும்பிய
ஒரு பெண்
தன்னுடைய காதலை
அந்த ஆணிடம்
சொல்வதும் தப்பு  ;
அவனை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும் தப்பு  ;
விருப்பப்பட்ட
ஆணை கடத்தி
வருவதும் தப்பு ;"

"ஆணுக்கு ஒரு
நியாயம் பெண்ணிற்கு
ஒரு நியாயம்
என்று இருவேறுபட்ட
நியாயத்தை
வகுத்து
வைத்திருக்கிறீர்களே
இது எந்த
விதத்தில் நியாயம்?"

"அன்பு ; பாசம் ;
நேசம் ; காதல் ;
காமம் ; போன்ற
அனைத்து உணர்வுகளும்
ஆண். பெண் உட்பட
அனைவருக்கும்
ஒன்று தானே !
அப்படியிருக்கும் போது
ஒரு பெண்ணை
விரும்பும் ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
பெண்ணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
தப்பில்லை ;
ஆனால்
ஒரு ஆணை
விரும்பும் ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
ஆணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
மட்டும் எவ்வாறு
தப்பாகும் ;"

"காதல் செய்வதில்
கூட ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் என்ற
நிலையையும் ;
ஒரு பெண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியாது என்ற
நிலையையும் ;
தானே இச்சமுதாயத்தில்
உருவாக்கி
வைத்திருக்கிறீர்கள் "

"ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விருப்பப்பட்ட
ஆணிடம்
வெளிப்படுத்தும்போது
தன்னுடைய காதலை
வெளிப்படுத்தும்
பெண்ணை
இந்த சமூகம் தவறான
கண்ணோட்டத்துடன்
தானே பார்க்கிறது ;
அவளது நடத்தையை
இழிவான பார்வையுடன்
தானே பார்க்கிறது ;
அவளுடைய
கற்பை சந்தேகப்
படும் விதத்தில்
தானே பார்க்கிறது ; "

"உங்களைப் பார்த்தால்
மிகுந்த கற்றவர்
போல் தெரிகிறது ;
உலக அனுபவம்
அதிகம் பெற்றவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை
கடைபிடிப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
அதை உரைப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
நியாயத்தின் வழி
நடப்பவர் போல்
தெரிகிறது ;"

"அப்படி இருக்கும்
தாங்களே 
உங்கள் மேல் நான்
கொண்ட காதலைப்
பார்த்து சிரிக்கிறீர்கள் ;
என்னை தவறான
கண்ணோட்டத்துடன்
பார்க்கிறீர்கள் ;
விசித்திரமாக
இருக்கிறது என்று
கேலி செய்கிறீர்கள் ;"

"உணர்வுகள் என்பது
ஆண் பெண்
இருவருக்குமே சமம்  ;
என்பதை இச்சமுதாயம்
எப்போது உணர்ந்து
கொள்கிறதோ ?
அப்போது தான்
ஒரு பெண்
தன்னுடைய
காதலை தான்
விரும்பும் ஆணிடம்
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் ;"

--------- இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------17-11-2019
//////////////////////////////////////////

November 16, 2019

பரம்பொருள்-பதிவு-84


             பரம்பொருள்-பதிவு-84

அர்ஜுனன் :
“அழகிய பெண்ணே
ஒருவரை
கடத்திக் கொண்டு
வருவது என்பது
எவ்வளவு
பெரிய குற்றம்
என்பது உனக்குத்
தெரியாதா?
எத்தகைய குற்றத்தை
இழைத்திருக்கிறாய்
என்பதை நீ
உணர்ந்திருக்கிறாயா?
சட்டத்தை
காப்பாற்ற வேண்டிய
ஒரு இளவரசியே
குற்றத்தை
துணிந்து செய்வது
சரியாகுமா?
எத்தகைய
எண்ணத்தை
உன் மனதில்
வைத்துக் கொண்டு
இத்தகைய
விரும்பத்தகாத
செயலைச் செய்தாய்?”

உலூபி :
“நான் செய்த
செயல் விரும்பாமல்
செய்த செயல் அல்ல ;
நான் விரும்பியே
செய்த செயல் ;
நான் விருப்பப்பட்டதால்
செய்த செயல் ;”

அர்ஜுனன் :
“என்னை
கடத்தி வந்ததையா ?
நீ விரும்பிய
செயல் என்கிறாய்”

உலூபி :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்?”

உலூபி :
“கங்கைக்
கரையில் தங்களைக்
கண்டேன் ;
தங்களைக் கண்ட
அக்கணமே என்
மனதில் காதல்
பிறந்ததைக்
கண்டேன் ;
என் உணர்வுகள்
அனைத்தும்
தங்களைச் சுற்றியே
வட்டமிடுவதைக்
கண்டேன் ;
என் சிந்தனை
செயலற்று
இருப்பதைக்
கண்டேன் ;
என் அறிவு
உங்களிடம்
மயங்கிக்
கிடப்பதைக்
கண்டேன் ;”

“அதுமட்டுமல்ல
நான் இதுவரை
கண்டிராத
தங்களுடைய
அழகும்  ;
காண்போரை
வசீகரிக்கும்
தங்களுடைய
வசீகரத் தன்மையும் ;
பிறர் மனதை
மயக்கும்
தங்களுடைய
புன்சிரிப்பும் ;
யாராலும்
கணிக்க முடியாத
தங்களுடைய
மௌனமும் ;
இதுவரை நான்
பார்க்காதவை”

“நான் பார்த்த
ஆண்களிலேயே
நீங்கள் மிகவும்
வித்தியாசமானவர்  ;
அதனால் தான்
நான் தங்கள்
மேல் காதல்
கொண்டேன் ;
தங்களைத் தான்
திருமணம் செய்ய
வேண்டும்
என்ற ஆசை
கொண்டேன் ;
தங்களுடன் தான் 
என்னுடைய
இல்லற
வாழ்க்கையை
அனுபவிக்க
வேண்டும்
என்ற விருப்பம்
கொண்டேன்;
அதனால் தான்
நான் உங்களை
என்னுடைய
இருப்பிடத்திற்கு
அழைத்து கொண்டு
வந்தேன்”

அர்ஜுனன் :
“அழைத்து வரவில்லை
என்னுடைய விருப்பம்
இல்லாமல் என்னை
கடத்தி வந்தாய்
என்று சொல்”

உலூபி :
“ஆமாம்! நான்
உங்களை
கடத்தி கொண்டு
தான் வந்தேன்;
விருப்பப்பட்டவரை
கடத்தி கொண்டு
வருவது ஒன்றும்
குற்றம் இல்லையே?”

அர்ஜுனன்:
“குற்றம் தான்”

உலூபி:
“நான்
தங்களை
விரும்பியது குற்றமா”

அர்ஜுனன்:
“விசித்திரமாக
இருக்கிறது
தங்களுடைய கேள்வி”


-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------16-11-2019
//////////////////////////////////////////