November 16, 2019

பரம்பொருள்-பதிவு-84


             பரம்பொருள்-பதிவு-84

அர்ஜுனன் :
“அழகிய பெண்ணே
ஒருவரை
கடத்திக் கொண்டு
வருவது என்பது
எவ்வளவு
பெரிய குற்றம்
என்பது உனக்குத்
தெரியாதா?
எத்தகைய குற்றத்தை
இழைத்திருக்கிறாய்
என்பதை நீ
உணர்ந்திருக்கிறாயா?
சட்டத்தை
காப்பாற்ற வேண்டிய
ஒரு இளவரசியே
குற்றத்தை
துணிந்து செய்வது
சரியாகுமா?
எத்தகைய
எண்ணத்தை
உன் மனதில்
வைத்துக் கொண்டு
இத்தகைய
விரும்பத்தகாத
செயலைச் செய்தாய்?”

உலூபி :
“நான் செய்த
செயல் விரும்பாமல்
செய்த செயல் அல்ல ;
நான் விரும்பியே
செய்த செயல் ;
நான் விருப்பப்பட்டதால்
செய்த செயல் ;”

அர்ஜுனன் :
“என்னை
கடத்தி வந்ததையா ?
நீ விரும்பிய
செயல் என்கிறாய்”

உலூபி :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்?”

உலூபி :
“கங்கைக்
கரையில் தங்களைக்
கண்டேன் ;
தங்களைக் கண்ட
அக்கணமே என்
மனதில் காதல்
பிறந்ததைக்
கண்டேன் ;
என் உணர்வுகள்
அனைத்தும்
தங்களைச் சுற்றியே
வட்டமிடுவதைக்
கண்டேன் ;
என் சிந்தனை
செயலற்று
இருப்பதைக்
கண்டேன் ;
என் அறிவு
உங்களிடம்
மயங்கிக்
கிடப்பதைக்
கண்டேன் ;”

“அதுமட்டுமல்ல
நான் இதுவரை
கண்டிராத
தங்களுடைய
அழகும்  ;
காண்போரை
வசீகரிக்கும்
தங்களுடைய
வசீகரத் தன்மையும் ;
பிறர் மனதை
மயக்கும்
தங்களுடைய
புன்சிரிப்பும் ;
யாராலும்
கணிக்க முடியாத
தங்களுடைய
மௌனமும் ;
இதுவரை நான்
பார்க்காதவை”

“நான் பார்த்த
ஆண்களிலேயே
நீங்கள் மிகவும்
வித்தியாசமானவர்  ;
அதனால் தான்
நான் தங்கள்
மேல் காதல்
கொண்டேன் ;
தங்களைத் தான்
திருமணம் செய்ய
வேண்டும்
என்ற ஆசை
கொண்டேன் ;
தங்களுடன் தான் 
என்னுடைய
இல்லற
வாழ்க்கையை
அனுபவிக்க
வேண்டும்
என்ற விருப்பம்
கொண்டேன்;
அதனால் தான்
நான் உங்களை
என்னுடைய
இருப்பிடத்திற்கு
அழைத்து கொண்டு
வந்தேன்”

அர்ஜுனன் :
“அழைத்து வரவில்லை
என்னுடைய விருப்பம்
இல்லாமல் என்னை
கடத்தி வந்தாய்
என்று சொல்”

உலூபி :
“ஆமாம்! நான்
உங்களை
கடத்தி கொண்டு
தான் வந்தேன்;
விருப்பப்பட்டவரை
கடத்தி கொண்டு
வருவது ஒன்றும்
குற்றம் இல்லையே?”

அர்ஜுனன்:
“குற்றம் தான்”

உலூபி:
“நான்
தங்களை
விரும்பியது குற்றமா”

அர்ஜுனன்:
“விசித்திரமாக
இருக்கிறது
தங்களுடைய கேள்வி”


-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------16-11-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment