November 14, 2019

பரம்பொருள்-பதிவு-83


            பரம்பொருள்-பதிவு-83

“அந்தப் பெண்
அர்ஜுனனை கங்கையின்
அடிவரை தன்னுடைய
மாய சக்தியால்
இழுத்துச் சென்றாள் ;
கங்கையின் அடியில்
கட்டப்பட்டிருந்த
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை
விட்டு விட்டாள் ;
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை விட்டு
விட்ட அந்தப் பெண்
அர்ஜுனனுக்கு
தெரியாத வகையில்
அர்ஜுனன் தன்னைப்
பார்க்க முடியாத
வகையில் ;
அந்தப் பெண்
அந்த அரண்மனையில்
மறைந்து கொண்டாள் ;

“கங்கையின் அடியில்
மிகவும்
பிரமிக்கத்தக்க
விதத்தில்
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
அற்புதம் என்று
ஒரே வார்த்தையில்
சொல்ல முடியாதபடி
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
கற்பனையில் கூட
சிந்தித்துக் கூட பார்க்க
முடியாத வகையில்
அழகுடன் திகழ்ந்த
அந்த அரண்மனையை ;
கண் இமைக்காமல்
அந்த அரண்மனையை
சுற்றிப் பார்த்துக்
கொண்டே வந்தான்
அர்ஜுனன் ;”

“அக்னிஹோத்திரம்
செய்வதற்காக
கங்கையில்
குளித்து விட்டு
கரை ஏறிய
அர்ஜுனனை ;
அக்னிஹோத்திரம்
செய்ய விடாமல் தடுத்து;
அந்தப் பெண்
அர்ஜுனனை
கங்கைக்குள்
இழுத்துச் சென்று ;
கங்கையின்
அடியில் உள்ள
அரண்மனையில்
விட்டு விட்டதால் ;
அக்னிஹோத்திரம்
செய்யாமல் இருந்த
அர்ஜுனன் ;
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடத்தைத் தேடி
அந்த அரண்மனை
முழுவதும் அலைந்தான் ;
நியமங்களைத்
தவறாது கடைபிடிக்கும்
அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடம்
அந்த அரண்மனையில்
இருக்கிறதா என்று
தேடி அலைந்தான்;”

“அந்த அரண்மனையில்
ஒரு இடத்தில்
அக்னி எரிந்து
கொண்டிருப்பதைக்
கண்டான் அர்ஜுனன் ;
அந்த இடம்
அக்னி ஹோத்திரம்
செய்வதற்கு
ஏற்ற இடமாக
இருந்த காரணத்தினால்
அர்ஜுனன் அந்த
இடத்தில் அமர்ந்து
அக்கினையை வளர்த்து
அக்னிஹோத்திரம்
செய்தான் ;”

“அர்ஜுனன் செய்த
அக்னிஹோத்திரத்தை
ஏற்றுக் கொண்ட
அக்னி பகவான்
மனம் குளிர்ந்தார்”

“அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்து முடித்தபின்
மறைவில் இருந்து
வெளிப்பட்டாள்
அந்தப் பெண்”

அர்ஜுனன் :
“அச்சத்துடன்
காணப்படும்
அழகிய பெண்ணே !
வார்த்தைகளால்
சொல்ல முடியாமல்
தயக்கத்துடன்
நின்று கொண்டிருக்கும்
இளம் பெண்ணே !
நீ யார் ?
நீ யாருடைய
பெண் ?
இது எந்த இடம் ?
இந்த அரண்மனை
யாருடையது ?
என்ன காரணத்திற்காக
என்னை இங்கே
கொண்டு வந்தாய் ?
என்னுடைய அனுமதி
இல்லாமல் என்னை
இங்கே கொண்டு
வந்ததன் காரணம் என்ன?
உன்னுடைய நோக்கம்
தான் என்ன ?
நீ என்ன
காரியம் செய்து
இருக்கிறாய் என்று
தெரியுமா ?
நீ மிகப்பெரிய
தவறை செய்திருக்கிறாய்
என்பதை
உணர்ந்திருக்கிறாயா?
என்று அடுக்கடுக்கான
கேள்விகளால்
அந்த பெண்ணை
துளைத்து எடுத்தான்
அர்ஜுனன்”

“அர்ஜுனன் கேட்ட
கேள்விகளால்
தாக்குண்ட அந்தப்
பெண் பேசத்
தொடங்கினாள்”

“ஐராவத
நாக குலத்தில்
பிறந்த
கௌரவ்யனென்னும்
நாகராஜன் ஒருவன்
இருக்கிறான் ;
நான் அவனுடைய
மகளான
நாககன்னிகை ;
நாககன்னிகையான
என்னுடைய பெயர்

உலூபி……….!
உலூபி……….!
உலூபி……….!”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------14-11-2019
//////////////////////////////////////////


No comments:

Post a Comment