February 17, 2020

பரம்பொருள்-பதிவு-133


            பரம்பொருள்-பதிவு-133

கிருஷ்ணன் :
“பீமா ! நீ என்ன
சொல்கிறாய் ? “

பீமன் :
“அண்ணன்
சொல்வதில்
தவறு எதுவும்
இருப்பதாக எனக்குத்
தோன்றவில்லை ;
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குத்
தோன்றுகிறது  ;
அதனால்
பாண்டவர்களின்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

அர்ஜுனன் :  
“எது நடக்க
வேண்டுமோ அது
நடக்கத் தான்
போகிறது - யார்
தடுத்தாலும்
அது நிற்கப்
போவதில்லை ;
அனைத்தும்
நல்லபடியாக
நடப்பதற்கு
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் “

கிருஷ்ணன் :
“நகுலா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

நகுலன்  :
“பெரியவர்கள்
முடிவு எடுத்தால்
அனைத்தும்
சரியானதாகத்
தான் இருக்கும்  ;
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் ; “

கிருஷ்ணன் :
“சகாதேவா ! நீ
என்ன சொல்கிறாய் ? “

சகாதேவன் :
“அனைத்தும்
உணர்ந்தவர் பரந்தாமர் ;
அவர் எடுத்த
முடிவு என்றைக்கும்
தவறாய்
போனதில்லை ;
பரந்தாமர் எடுத்த
முடிவுக்கு - நானும்
சம்மதிக்கிறேன் ;
ஆமாம் ,
பாண்டவர்களின்
சார்பாக அரவாரனைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
நானும்
சம்மதிக்கிறேன்”

கிருஷ்ணன் :
“திரௌபதி ! நீ
என்ன சொல்கிறாய் ? “

திரௌபதி :
“நல்லது நடக்க
வேண்டும் என்று
அனைவரும் முடிவு
எடுத்து விட்ட பிறகு
நான் எப்படி
நல்லது நடப்பதற்கு
தடையாக
இருப்பேன் - நானும்
சம்மதிக்கிறேன் ;
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலி
கொடுப்பதற்கு நானும்
சம்மதிக்கிறேன் ; ”

கிருஷ்ணன் :
“நீங்கள் அனைவரும்
பாண்டவர்கள்
சார்பாக அரவனைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
வாக்கு கொடுத்து
இருக்கிறீர்கள் ;
நீங்கள் கொடுத்த
வாக்கை மறந்து
விடாதீர்கள் ; “

“இப்போது
பாண்டவர்களின்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு வாக்கு
கொடுத்து விட்டு
பிறகு வாக்கு
மாறக்கூடாது “

தர்மர் :
“நாங்கள் கொடுத்த
வாக்கிலிருந்து
எப்போதும்
தவற மாட்டோம்
பரந்தாமா - எங்களை
முழுவதுமாக
நம்பலாம் “

கிருஷ்ணன் :
“தர்மா ! இப்போது
நீ சொன்னதை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
ஒருவர் உங்களை
சந்தித்து கேள்விகள்
கேட்க வருகிறார்
அவர் கேள்விகள்
கேட்ட பிறகு
நீ வாக்கு தவறாமல்
இருக்கிறாயா
என்று பார்ப்போம் ?”

தர்மர் :
“நாங்கள் கொடுத்த
வாக்கை மீறி
வாக்கு
தவறும் அளவுக்கு
எங்களை சந்தித்து
கேள்விகள் கேட்கப்
போவது யார் ?
யார் அவர்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“வேறு யார்
…………………………..? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 17-02-2020
//////////////////////////////////////////


February 15, 2020

பரம்பொருள்-பதிவு-132


            பரம்பொருள்-பதிவு-132

தர்மர் :
“அப்படி சொல்லாதீர்கள்
பரந்தாமா ! “

“பாலகனான அரவானை
களப்பலி கொடுக்காமல்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறுவதற்கு
வேறு ஏதேனும்
உபாயம் இருக்கிறதா  
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவே கேட்டேன் ? “

கிருஷ்ணன் :
“நீங்கள் என்னைப் பற்றி
முழுமையாக தெரிந்து
வைத்துக் கொண்டு
இருப்பீர்கள் என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளித்து இருப்பீர்கள்  ;
ஆனால் நீங்கள்
என்னைப்பற்றி முழுமையாக
தெரிந்து வைத்துக் கொள்ளாத
காரணத்தினால் தான்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளிக்கவில்லை “

தர்மர் :
“பரந்தாமா உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள் “

"பரந்தாமா நீங்கள்
எங்களை ஒரு விஷயத்தை
செய்யச் சொன்னால் - அது
எங்களுடைய நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

" நீங்கள் இந்த உலகத்திற்காக
ஒரு செயலைச் செய்தால்  
அந்த செயல் இந்த
உலகத்தின் நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
முயற்சி எடுத்து செய்தால்  
அந்த செயல் தோல்வியில்
முடியாது என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
வெற்றிகரமாக முடிக்க
வேண்டும் என்று முடிவு
எடுத்து செயலில் இறங்கி
விட்டால் - அந்த செயலில்
உங்களை எதிர்த்தவர்கள்
அனைவரும் தோல்வியையே
தழுவார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் எந்த ஒரு
தேவையற்ற விஷயத்தையும்
பேச மாட்டீர்கள் என்பதும் ;
எந்த ஒரு தேவையற்ற
செயலையும் செய்ய
மாட்டீர்கள் என்பதும் ;
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் பேசும் பேச்சில்
மட்டுமல்ல - நீங்கள்
செய்யக்கூடிய ஒவ்வொரு
செயலிலும் ஆயிரம்
அர்த்தங்கள் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் இல்லாமல்
செய்யப்படும் - எந்த ஒரு
செயலும் சுமூகமாக
முடியாமல் பிரச்சினையில்
தான் முடியும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் யார் பக்கம்
இருக்கிறீர்களோ - அவர்கள்
வெற்றியைத் தவிர வேறு
எதையும் சுவைக்க
மாட்டார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"யாருக்கு வெற்றியை
அளிக்க வேண்டும்  ;
யாருக்கு தோல்வியை
அளிக்க வேண்டும் ;
என்பதை நிர்ணயிக்கக்கூடிய
மிகப்பெரும் சக்தியாக
நீங்கள் இருக்கிறீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"உங்களை நம்பி
வந்தவர்களை - எந்த
காலத்திலும் கைவிடாமல்
அவர்களுக்காக எதையும்
செய்யத் துணிவீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"அதனால் தான் சொல்கிறேன்
பரமாத்மா - உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள்
உங்களைப் பற்றி எங்களுக்கு
நன்றாகவே தெரியும் ! "

கிருஷ்ணன் :
"தெரிந்து என்ன பயன்
நான் சொன்னவைகளுக்குத்
தான் நீங்கள் ஒப்புதல்
அளிக்கவில்லையே ”

தர்மர் :
"அரவான் பாலகன் என்ற
காரணத்தினால் தான்
நான் ஒப்புதல்
அளிக்கவில்லை - ஆனால்
நீங்கள் பேசியவைகளில்
உள்ள உண்மைகளைத்
தெரிந்து கொண்டேன் ;
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுக்காவிட்டால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
முடியாது என்பதையும்
தெரிந்து கொண்டேன் ; "

"அதனால் நான்
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
அரவானைக் களப்பலியாகக்
கேட்டு வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானைக் களப்பலி
கொடுக்க சம்மதிக்கிறேன் "


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-02-2020
//////////////////////////////////////////

February 14, 2020

பரம்பொருள்-பதிவு-131


             பரம்பொருள்-பதிவு-131

கிருஷ்ணன் :
"மனிதர்கள் தங்களுக்கு
ஏற்பட்ட கஷ்டங்களைப்
போக்கிக் கொள்வதற்காக
ஆடு மாடுகளை
பலியிடுகின்றனர் "

"இதைப்போன்ற சிறிய
விஷயங்களுக்குத் தான்
ஆடு மாடுகளை
பலியிட முடியுமே தவிர
குருஷேத்திரப் போர்
போன்ற பெரிய
போர்களில்
வெற்றி பெறுவதற்கு
ஆடு மாடுகளை
பலியிட முடியாது "

"பாண்டவர்களாகிய
உங்களிடமிருந்து
நிலத்தை அபகரித்துக்
கொண்ட துரியோதனன் ;
அதைத் திருப்பி
தரமாட்டேன் என்று
சொன்ன துரியோதனன் ;
அதைத் தானே
வைத்துக் கொண்டு
அனுபவிக்க வேண்டும்
என்றால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்பதை
அறிந்து கொண்ட
துரியோதனன் ;
போரில் வெற்றி
பெறுவதற்காக
அரவானை
களப்பலியாகக்
கொடுக்கத் தீர்மானித்து
எதிரியான அரவானின்
பாசறைக்கே சென்று
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
அரவானிடம் பேசி
துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
ஒப்புதல்
பெற்று விட்டான் "

" இதைத் தெரிந்து
கொண்டதால்
அதை மாற்றி
அமைப்பதற்காக - நான்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "

"ஆனால் நிலத்தை
இழந்த நீங்கள்
நிலத்தை மீட்க
வேண்டும் என்ற
எண்ணம் இல்லாமல் ;
நிலத்தை மீட்பதற்கு
எந்தவிதமான
முயற்சியும் எடுக்காமல் ;
அன்பு ; பாசம் ;
கருணை ; இரக்கம் ;
என்று பேசிக்கொண்டு
சரியான முடிவு
எதுவும் எடுக்காமல் ;
நான் பேசியதில்
ஏதாவது அர்த்தம்
இருக்குமே என்று
ஆராய்ந்து கூட
பார்க்காமல்;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
போரில் வெற்றி
பெறுவதற்கு
ஏதேனும் உபாயம்
இருக்கிறதா ? - என்று
யோசித்துப் பார்த்துச்
சொல்லுங்கள்
என்கிறீர்கள்  "

"குருஷேத்திரப்போர்
பகைவர்களுக்கிடையே
நடைபெறப்போகும்
போர் அல்ல
உறவுகள்
பகையானதால்
நடைபெறப்போகும் போர் "

"அரவானை
யார் களப்பலி
கொடுக்கிறார்களோ
அவர்கள் தான்
குருஷேத்திரப்
போரில் வெற்றி
பெற முடியும் "

"அதனால் தான்
அரவானின் களப்பலி
பாண்டவர்களுக்காக
நடக்க வேண்டும்
என்று முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "

"நீங்கள் அனைவரும்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளிக்கவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்காக
நான் செய்து கொண்டு
வரும் அனைத்து
முயற்சிகளையும்
நிறுத்தி விடுகிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலி கொடுப்பது
நிறுத்தப் பட்டால் ;
துரியோதனன்
அரவானை
களப்பலி கொடுத்து
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விடுவான் ;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
பாண்டவர்கள்
போரில் வெற்றி பெற
முடியாது என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் போர்
செய்ய வேண்டும்;
நீங்கள் போரிலிருந்து
விலகி காட்டிற்கு
சென்று விடுங்கள் "

"நானும் என்னுடைய
வழியில் சென்று
விடுகிறேன்
போர் தேவையில்லை "

"குருஷேத்திரப்போர்
என்ற ஒன்று
தேவையேயில்லை "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------14-02-2020
//////////////////////////////////////////