January 15, 2023

ஜபம்-பதிவு-915- மரணமற்ற அஸ்வத்தாமன்-47 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-915-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-47

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

போர் செய்யும்

இருவரும்

வெவ்வேறு

இடத்தில்

தனித்தனியாக

இடைவெளி விட்டு

நின்று கொண்டு

ஒருவர் ஒரு

அஸ்திரத்தை

விடும் போது

அது எந்த அஸ்திரம்

என்பதையும்

அதற்கு

எதிர் அஸ்திரம்

எது என்பதையும்

சிந்தித்துப் பார்த்து

எதிர் அஸ்திரத்தை

விடுவது என்பது

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறாமல்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறுவதால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான போர்

கிடையாது

 

கதாயுதப்போர்

செய்வதற்கு

உடல் வலிமை

மன வலிமை

பார்வைத் திறன்

கவனிக்கும் திறன்

ஆகிய நான்கும்

கண்டிப்பாக

இருக்க வேண்டும்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

உடல் வலிமையும்

மன வலிமையும்

தேவையில்லை

பார்வைத்திறனும்

கவனிக்கும்

திறனும்

இருந்தால்

போதும்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

உடல் வலிமை

மன வலிமை

பார்க்கும் திறன்

கவனிக்கும் திறன்

ஆகியவை

கண்டிப்பாக

தேவைப்படும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

கதாயுதப் போரில்

நான் சிறந்தவனாக

இருப்பதையே

விரும்புகிறேன்

 

கதாயுதப் போரில் 

உலகத்திலேயே

சிறந்த வீரனாக

ஆகவே நான்

ஆசைப்படுகிறேன்

 

அர்ஜுனன்:

துரியோதனா

அப்படி என்றால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

சிறந்தவர்களாகக்

கருதப்படும்

குருதேவர்

துரோணரையும்

தாத்தா

பீஷ்மரையும்

நீ வீரர்கள்

இல்லை

என்கிறாயா

 

துரியோதனன் :

அர்ஜுனா

எப்போதும்

தப்பாகத் தான்

சிந்திப்பாயா

நல்லவிதமாக

சிந்திக்கவே

மாட்டாயா

 

நல்லதையே

நினைக்க

வேண்டும்

நல்லதையே

சொல்ல

வேண்டும்

என்ற எண்ணம்

உனக்கு

ஏற்படவே

ஏற்படாதா

 

எப்போதும்

உன்னுடைய

குள்ள நரி

புத்தியைத்

தான்

வெளிப்படுத்துவாயா

 

எனக்கும்

குரு தேவருக்கும்

இடையே

மன வேறுபாட்டை

உருவாக்காதே

எங்களுக்குள்

பிரிவை

ஏற்படுத்த

நினைக்காதே

 

இருவருக்கிடையே

சண்டையை

உண்டாக்கி

நல்ல பெயர்

வாங்க வேண்டும்

என்ற கேடு

கெட்ட புத்தி

உனக்கு ஏன்

இருக்கிறது

 

நீ நல்லவனாக

இருக்க வேண்டும்

என்றால்

நல்லவன் என்று

பெயர் எடுக்க

வேண்டும் என்றால்

அதற்குரிய

செயல்களைச் செய்

இருவருக்கிடையே

பகையை ஏற்படுத்தி

நல்லவன் என்று

பெயர் எடுக்க

நினைக்காதே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-914- மரணமற்ற அஸ்வத்தாமன்-46 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-914-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-46

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :

விருப்பம் இல்லை

என்று நான்

சொல்ல வரவில்லை

குருநாதா

 

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்க்கலையை

கற்றுக் கொள்கிறேன்

 

ஆனால்

கதாயுதத்தில்

மட்டும்

திறமைசாலியாக

இருக்கவே

விரும்புகிறேன்

என்று தான்

நான் சொல்ல

வருகிறேன்

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

துரியோதனா

ஏன் உனக்கு

கதாயுதம்

பிடித்திருக்கிறது

 

அந்தக்

காரணங்களை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

சொல்

துரியோதனா

 

கதாயுதம்

ஏன் உனக்குப்

பிடித்திருக்கிறது

என்பதற்கான

காரணத்தை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

அனைவரும்

தெரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு செயலும்

கடினமானது தான்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

தனித்தனியாக

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு

செயலும்

கடினமானது

கிடையாது

 

துரோணர் :

கதாயுதத்தைப்

பற்றி சொல்லாமல்

வேறு ஏதோ

ஒன்றைப் பற்றிச்

சொல்கிறாய்

 

துரியோதனன் :

கதாயுதத்தைப்

பற்றித் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

புரியும்

படிச் சொல்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சொல்கிறேன்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படியே

சொல்கிறேன்

 

கதாயுதப் போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும் போர்

அதனால்

கதாயுதப் போர்

கடினமானப் போர்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

போர்

அதனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான

போர்

கிடையாது

 

கதாயுதப் போர்

களத்தில் இறங்கி

நேருக்கு நேராக

நின்று

ஒருவருக்கொருவர்

உடலைத் தாக்கிக்

கொண்டு போர்

செய்யும் போது

எதிரி உடலில்

எப்படி அடிப்பான்

எந்த இடத்தில்

அடிப்பான்

எவ்வளவு வேகத்தில்

அடிப்பான்

என்பதைச் சிந்தித்து
அதைத் தடுத்து

திருப்பி எப்படி

அடிக்க வேண்டுமோ

எந்த இடத்தில்

அடிக்க வேண்டுமோ

எந்த வேகத்தில்

அடிக்க வேண்டுமோ

என்பதை முடிவு செய்து

திருப்பி அடிக்கும்

செயலை

கதாயுதப்

போரில்

செய்வதால்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

கதாயுதப்போரில்

ஒரே சமயத்தில்

நடைபெறுவதால்

கதாயுதப்போர்

கடினமானப் போர்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-913- மரணமற்ற அஸ்வத்தாமன்-45 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-913-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-45

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(துரோணர்

அஸ்தினாபுரத்தின்

ஆட்சியாளர்களின்

அனுமதியுடன்

கௌரவர்கள்

பாண்டவர்கள்

தன்னுடைய மகன்

அஸ்வத்தாமன்

ஆகியோருக்கு

கல்வி கற்றுக்

கொடுக்கும்

ஆசிரியராக

நியமிக்கப்பட்டு

குருகுலக் கல்வி

கற்றுக் கொடுத்துக்

கொண்டிருந்த

நிலையில்

ஒரு நாள்………….)

 

துரோணர் :

உங்கள்

அனைவரையும்

நான் ஆராய்ந்து

பார்த்ததில்

ஒவ்வொருவருக்கும்

எந்த போர்க்கருவி

பிடித்திருக்கிறதோ

அந்த போர்க்கருவியின்

மீது ஆர்வம்

கொண்டு அந்த

போர்க்கருவியின் மீது 

உங்களுடைய தனிப்பட்ட

கவனத்தைச் செலுத்தி

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்தி எத்தகைய

பயிற்சிகளை எல்லாம்

செய்ய முடியுமோ

அந்த பயிற்சிகளை

எல்லாம் செய்து

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

உங்களுடைய

திறமையை

வளர்த்துக் கொண்டு

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலிகளாக

இருந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

உதாரணத்திற்கு

சொல்ல

வேண்டுமானால்

யுதிஷ்டிரன்

ஈட்டியைப்

பயன்படுத்துவதிலும்

பீமன், துரியோதனன்,

துச்சாதனன் ஆகியோர்

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதிலும்

அர்ஜூனன் வில்லைப்

பயன்படுத்துவதிலும்

திறமைசாலியாக

இருக்கிறீர்கள்

 

இங்கே இருக்கும்

அனைவரும்

தங்களுக்கு பிடித்த

போர்க்கருவிகளைப்

பயன்படுத்துவதில்

மட்டுமே ஆர்வம்

காட்டுகின்றனர்

தங்களுடைய

கவனத்தைச்

செலுத்துகின்றனர்

அதற்காகப் பயிற்சி

செய்கின்றனர்

மற்ற போர்க்கருவிகளின்

மீது அக்கறை

செலுத்துவதில்லை

அதைப் பயன்படுத்த

வேண்டும் என்ற

எண்ணமும் யாருக்கும்

ஏற்பட்டதாகத்

தெரியவில்லை

 

ஒரு போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கும் நீங்கள்

மற்ற போர்க்கருவிகளின்

மீதும் உங்களுடைய

ஆர்வத்தைச்

செலுத்தலாமே

அதற்காகப்

பயிற்சிகளைச்

செய்யலாமே

அனைத்து

போர்க்கருவிகளையும்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

மாறலாமே

ஏன் அதற்காக

எந்த ஒரு முயற்சியையும்

யாரும் செய்ய

மாட்டேன் என்கிறீர்கள்

 

தங்களுக்குப் பிடித்த

ஒரு போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கலாம்

தவறில்லை

ஆனால் மற்ற

போர்க் கருவிகள்

எல்லாவற்றையும்

பயன்படுத்தத்

தெரிந்திருக்க

வேண்டும் அல்லவா

மற்ற

போர்க்கருவிகளைப்

பயன்படுத்தத் தெரியாமல்

போருக்கு செல்வதால்

ஒரு பயனும் ஏற்படப்

போவதில்லை

போர்க்கருவிகள்

அனைத்தையும்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருப்பவன் மட்டுமே

போருக்கு செல்ல

தகுதியுடையவன்

 

துரியோதனா

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கும் நீ

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப் போர்க்கலையில்

சிறந்தவனாக

ஆவதற்கு

ஏன் நீ முயற்சி

செய்யக் கூடாது

 

துரியோதனன் :

கதாயுதம் எனக்குப்

பிடித்திருக்கிறது

அதைப்

பயன்படுத்துவதில்

எனக்கு ஆர்வம்

இருக்கிறது

என்னுடைய மனம்

அதையே நாடுகிறது

அதில் எனக்கு

ஆசையும் இருக்கிறது

மேலும் கதாயுதம்

என்னுடைய திறமைக்கு

ஏற்றதாக இருக்கிறது

 

அதனால்

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருப்பதையே

நான் விரும்புகிறேன்

 

துரோணர் :

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்க்கலையையும்

கற்றுத் தேர்ந்து

திறமைசாலியாக

ஆகலாம் அல்லவா?

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

December 04, 2022

ஜபம்-பதிவு-912 மரணமற்ற அஸ்வத்தாமன்-44 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-912

மரணமற்ற

அஸ்வத்தாமன்-44

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

நான் சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணன் இல்லை

சாஸ்திரங்களுடன்

அஸ்திர வித்தைகளையும்

கற்றவன்

 

சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணணாக

மட்டுமே

இருந்திருந்தால்

பிராமணணுக்குரிய

வாழ்க்கையாக

மட்டுமே என்னுடைய

வாழ்க்கை இருந்திருக்கும்

அந்த வாழ்க்கையை

வாழ்ந்து முடித்து

இறந்திருப்பேன்

 

ஆனால் நான்

சாஸ்திரங்களை

மட்டுமல்ல

அஸ்திர வித்தைகளையும்

கற்றவனாக இருப்பவன்

அதனால்

அஸ்திர வித்தைகளைக்

கற்ற எனக்கு

மரணம் என்பது

இயல்பான ஒன்றாக

இருக்காது

போரில் தான்

என்னுடைய

மரணம் என்பது

இருக்கும்

 

அதுவும்

இன்னொருவரின்

கையால் தான்

இருக்கும்

 

அந்த மரணமும்

எனக்கு நல்ல

மரணமாக இருக்குமா

அல்லது

கொடுமையான

மரணமாக இருக்குமா

என்று தெரியவில்லை

 

ஆனால் ஒன்று

மட்டும் உறுதி

என்னுடைய

இறுதி வாழ்க்கையும்

இறுதி நாட்களும்

என்னுடைய மரணமும்

அஸ்தினாபுரத்தில்

தான் என்பது

நிச்சயிக்கப்பட்டு

விட்டது என்று

நினைக்கிறேன்

 

அதனால் தான்

காலம் என்னை

அஸ்தினாபுரம்

நோக்கி இழுக்கிறது

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

நீங்கள்

கவலைப்படாதீர்கள்

 

நான் அருகில்

இருக்கும் வரை

உங்களை யாராலும்

கொல்ல முடியாது

அதற்கு நான்

விட மாட்டேன்

 

நான் இல்லாத

நிலையில்

உங்களை

யாரேனும்

கொன்றால்

நான்

அவர்களை

சும்மா

விடமாட்டேன்

நான்

அவர்களைத்

துடிக்க துடிக்க

கொல்வேன்

 

உங்கள்

இறப்புக்கு

கண்டிப்பாக

நான் பழி

வாங்குவேன்

 

கிருபி :

என் அன்பு

மகனே

 

என்று கிருபி

அஸ்வத்தாமனை

அணைத்துக்

கொள்கிறாள்

 

கிருபி :

நம்முடைய ஏழ்மை

நீங்கி மகிழ்ச்சி

பொங்கும் என்ற

நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

துன்பங்கள் நீங்கி

இன்பம் பொங்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

மகனுக்கு நல்ல

கல்வி கிடைக்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

உங்களுடைய

திறமை வெளிப்பட்டு

நீங்கள் உயர்ந்த

நிலை அடைவீர்கள்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

வாழ்க்கையே

மாறப் போகிறது

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

துரோணர் :

உன்னுடைய

நம்பிக்கை வீண்

போகாது

 

வா செல்லலாம்

 

என்று துரோணர்

சொன்னவுடன்

 

துரோணர் கிருபி

அஸ்வத்தாமன்

அனைவரும்

அஸ்தினாபுரம்

நோக்கி

செல்லத்

தொடங்கினார்

 

அஸ்தினாபுரம்

நோக்கிய

அவர்களுடைய

பயணம்

தொடங்கியது

 

அஸ்வத்தாமன்

அஸ்தினாபுரம்

புறப்பட்டு விட்டான்

 

அன்பு நண்பனுக்கு

கிடைக்க வேண்டிய

அரியணையை

மீட்டுத் தருவதற்காக

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////