January 15, 2023

ஜபம்-பதிவு-913- மரணமற்ற அஸ்வத்தாமன்-45 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-913-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-45

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(துரோணர்

அஸ்தினாபுரத்தின்

ஆட்சியாளர்களின்

அனுமதியுடன்

கௌரவர்கள்

பாண்டவர்கள்

தன்னுடைய மகன்

அஸ்வத்தாமன்

ஆகியோருக்கு

கல்வி கற்றுக்

கொடுக்கும்

ஆசிரியராக

நியமிக்கப்பட்டு

குருகுலக் கல்வி

கற்றுக் கொடுத்துக்

கொண்டிருந்த

நிலையில்

ஒரு நாள்………….)

 

துரோணர் :

உங்கள்

அனைவரையும்

நான் ஆராய்ந்து

பார்த்ததில்

ஒவ்வொருவருக்கும்

எந்த போர்க்கருவி

பிடித்திருக்கிறதோ

அந்த போர்க்கருவியின்

மீது ஆர்வம்

கொண்டு அந்த

போர்க்கருவியின் மீது 

உங்களுடைய தனிப்பட்ட

கவனத்தைச் செலுத்தி

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்தி எத்தகைய

பயிற்சிகளை எல்லாம்

செய்ய முடியுமோ

அந்த பயிற்சிகளை

எல்லாம் செய்து

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

உங்களுடைய

திறமையை

வளர்த்துக் கொண்டு

அந்த போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலிகளாக

இருந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

உதாரணத்திற்கு

சொல்ல

வேண்டுமானால்

யுதிஷ்டிரன்

ஈட்டியைப்

பயன்படுத்துவதிலும்

பீமன், துரியோதனன்,

துச்சாதனன் ஆகியோர்

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதிலும்

அர்ஜூனன் வில்லைப்

பயன்படுத்துவதிலும்

திறமைசாலியாக

இருக்கிறீர்கள்

 

இங்கே இருக்கும்

அனைவரும்

தங்களுக்கு பிடித்த

போர்க்கருவிகளைப்

பயன்படுத்துவதில்

மட்டுமே ஆர்வம்

காட்டுகின்றனர்

தங்களுடைய

கவனத்தைச்

செலுத்துகின்றனர்

அதற்காகப் பயிற்சி

செய்கின்றனர்

மற்ற போர்க்கருவிகளின்

மீது அக்கறை

செலுத்துவதில்லை

அதைப் பயன்படுத்த

வேண்டும் என்ற

எண்ணமும் யாருக்கும்

ஏற்பட்டதாகத்

தெரியவில்லை

 

ஒரு போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கும் நீங்கள்

மற்ற போர்க்கருவிகளின்

மீதும் உங்களுடைய

ஆர்வத்தைச்

செலுத்தலாமே

அதற்காகப்

பயிற்சிகளைச்

செய்யலாமே

அனைத்து

போர்க்கருவிகளையும்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

மாறலாமே

ஏன் அதற்காக

எந்த ஒரு முயற்சியையும்

யாரும் செய்ய

மாட்டேன் என்கிறீர்கள்

 

தங்களுக்குப் பிடித்த

ஒரு போர்க்கருவியைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கலாம்

தவறில்லை

ஆனால் மற்ற

போர்க் கருவிகள்

எல்லாவற்றையும்

பயன்படுத்தத்

தெரிந்திருக்க

வேண்டும் அல்லவா

மற்ற

போர்க்கருவிகளைப்

பயன்படுத்தத் தெரியாமல்

போருக்கு செல்வதால்

ஒரு பயனும் ஏற்படப்

போவதில்லை

போர்க்கருவிகள்

அனைத்தையும்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருப்பவன் மட்டுமே

போருக்கு செல்ல

தகுதியுடையவன்

 

துரியோதனா

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருக்கும் நீ

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப் போர்க்கலையில்

சிறந்தவனாக

ஆவதற்கு

ஏன் நீ முயற்சி

செய்யக் கூடாது

 

துரியோதனன் :

கதாயுதம் எனக்குப்

பிடித்திருக்கிறது

அதைப்

பயன்படுத்துவதில்

எனக்கு ஆர்வம்

இருக்கிறது

என்னுடைய மனம்

அதையே நாடுகிறது

அதில் எனக்கு

ஆசையும் இருக்கிறது

மேலும் கதாயுதம்

என்னுடைய திறமைக்கு

ஏற்றதாக இருக்கிறது

 

அதனால்

கதாயுதத்தைப்

பயன்படுத்துவதில்

திறமைசாலியாக

இருப்பதையே

நான் விரும்புகிறேன்

 

துரோணர் :

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்க்கலையையும்

கற்றுத் தேர்ந்து

திறமைசாலியாக

ஆகலாம் அல்லவா?

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment