January 15, 2023

ஜபம்-பதிவு-918- மரணமற்ற அஸ்வத்தாமன்-50 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-918-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-50

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

நீரானது

அது இருக்கும்

இடத்தை பொறுத்து

வடிவம் பெறும்

 

கடலில் விழுந்தால்

அது உப்புத்

தன்மையைப் பெறும்

அழுக்கடைந்த

நீரில் விழுந்தால்

அது அழுக்காகி விடும்

 

அஸ்வத்தாமா

நீ நீரைப்

போன்றவன்

எங்கே இருக்க

வேண்டுமோ

அங்கே இரு

எங்கே சேர

வேண்டுமோ

அங்கே சேரு

 

தவறான

இடத்தில்

சேர்ந்தால்

தவறாகத்

தான்

பேசுவாய்

தவறாகத்

தான்

சிந்திப்பாய்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

என்னை

நீங்கள் நீர்

என்றீர்கள்

அதை நான்

ஏற்றுக்

கொள்கிறேன்

 

ஏன் இந்த நீர்

தென்னை மரத்தின்

வேரில் விழுந்து

தென்னை மரத்தின்

இளநீரில்

சுவை மிகுந்த

நீராக மாற்ற

மடைந்து

இருக்கிறேன்

என்று எடுத்துக்

கொள்ளுங்கள்

 

இந்த நீர்

சிப்பிக்குள் விழுந்து

முத்தாக மாறி

இருக்கிறது என்று

எடுத்துக்

கொள்ளுங்கள்

 

துரோணர் :

உன்னுடைய

பேச்சு

நல்லதாக

இருந்தால்

உன்னுடைய

கருத்தை ஏற்றுக்

கொள்ளலாம்

 

ஆனால்

உன்னுடைய

பேச்சு நல்லதாக

இல்லையே

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

தாங்கள்

அனைத்தும்

அறிந்தவர்

சாஸ்திரங்களில்

வல்லவர்

அஸ்திர

வித்தையில்

சிறந்தவர்

 

குருதேவராக

இருந்து

சீடர்களை

வழிநடத்தக்

கூடியதில்

உயர்ந்து

நிற்பவர்

 

குருவாக

இருப்பவர்

அனைத்து

சீடர்களையும்

ஒன்றாக

நினைக்க

வேண்டும்

ஒரு சீடனை

உயர்வாகவும்

ஒரு சீடனை

தாழ்வாகவும்

நினைக்கக்

கூடாது

 

சீடனை

வளர்க்க வேண்டும்

ஊக்குவிக்க வேண்டும்

அவனுடைய திறமையை

வெளிக்கொண்டு

வர வேண்டும்

அதனை விடுத்து

சீடனை

அழிக்கக்கூடாது

அவனுடைய

வாழ்க்கையை

பாழாக்கக் கூடாது

அது நேரடியாகக்

கற்றாலும் சரி

மறைமுகமாகக்

கற்றாலும் சரி

 

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆக வேண்டும்

என்றால்

அவன்

தன்னுடைய

திறமையை

வளர்த்துக்

கொண்டிக்க

வேண்டும்

அதற்கேற்ற

பயிற்சிகளை

செய்திருக்க

வேண்டும்

அதற்காக

அவன்

உழைத்திருக்க

வேண்டும்

ஆனால்

அவன்

அவ்வாறு

செய்யவில்லை

 

அப்படியே

அர்ஜுனன்

செய்தாலும்

ஏகலைவன்

இருக்கும் வரை

அர்ஜுனனால்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆக முடியாது

என்பதை

உணர்ந்த நீங்கள்

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளி

ஆக வேண்டும்

என்பதற்காக

ஏகலைவனின்

கட்டை விரலை

வெட்டி வாங்கி

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து விட்டீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment