January 15, 2023

ஜபம்-பதிவு-919- மரணமற்ற அஸ்வத்தாமன்-51 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-919-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-51

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

எதிர்காலத்தில்

இந்த உலகம்

அர்ஜுனனை

உலகத்திலேயே

சிறந்த வில்லாளி

என்று ஒவ்வொரு

முறை அழைக்கும்

போதும்

அதற்குப் பின்னால்

இரத்தக் கறை படிந்த

ஏகலைவனின்

கட்டை விரல்

மட்டுமல்ல

அது வெட்டுவதற்கு

காரணமான

உங்களுடைய

பெயரும் இருக்கும்

என்பதை மறந்து

விடாதீர்கள்

 

துரோணர் :

காரண காரியம்

இன்றி

எந்த ஒரு

செயலும்

நடைபெறாது

 

அஸ்வத்தாமன் :

நியாயம் கேட்டால்

அதற்கு காரணம்

காரியத்தின்

மேல் பழி

போடுகிறீர்கள்

 

அர்ஜுனனுக்காக

நீங்கள்

ஏகலைவனின்

கட்டை விரலைக்

கேட்டது

அவனது

வாழ்க்கையை

அழித்தது

அவனுடைய

திறமையை

இந்த உலகத்திற்கு

தெரியாமல்

செய்தது

அர்ஜுனனை விட

ஏகலைவன்

சிறந்தவன்

என்பதை

இந்த உலகம்

அறியாமல் செய்தது

ஆகியவை

அனைத்துமே

தவறு தான்

 

அர்ஜுனனுக்காக

நீங்கள் செய்த

இந்த செயல்

எப்போதுமே

உங்கள்

வாழ்க்கையில்

களங்கமாக இருந்து

கொண்டே தான்

இருக்கும்

பாவமாக

உங்களைத்

துரத்திக் கொண்டு

தான் இருக்கும்

 

உங்களுக்கு ஏற்பட்ட

இந்த களங்கத்தை

எப்படி துடைக்கப்

போகிறீர்கள்

பாவத்தை எப்படி

கழுவப் போகிறீர்கள்

 

துரியோதனன்

கேட்ட கேள்விக்கு

நீங்கள் என்ன

பதில் சொல்லப்

போகிறீர்கள்

 

துரியோதனன்

மட்டுமல்ல

ஏகலைவனைச்

சேர்ந்தவர்களும்

கேள்விகளைக்

கேட்கிறார்கள்

 

துரோணர் :

என்ன

கேள்விகளைக்

கேட்கிறார்கள்

 

அஸ்வத்தாமன் :

சமுதாயத்தால்

தாழ்த்தி

வைக்கப்பட்டவனை

ஒடுக்கி

வைக்கப்பட்டவனை

ஒதுக்கி

வைக்கப்பட்டவனை

அடக்கி

வைக்கப்பட்டவனை

கல்வி கற்க

விட மாட்டீர்களா

 

அவனுக்கு இந்த

சமுதாயமும் கல்வி

கற்றுத் தராது

தானகவே அவனும்

கல்வி கற்றுக்

கொண்டால்

அதனை ஏற்றுக்

கொள்ளவும்

மாட்டீர்கள்

ஏற்றுக்

கொள்வதற்கு

உங்கள் மனமும்

இடம் தராது

 

சமுதாயத்தால்

தாழ்த்தி

வைக்கப்பட்டவன்

கல்வி

கற்றுக்

கொண்டால்

பணம் பதவி

அதிகாரம்

படைத்தவர்களுக்கு

சமமாக வந்து

விடுவான் என்ற

காரணத்தினால்

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து

விடுவீர்களா

என்று இந்த

உலகம் உங்களைப்

பார்த்து கேள்வி

கேட்கிறது

 

அர்ஜுனனுக்காக

தேவையற்ற

செயலைச் செய்து

அழிக்க முடியாத

களங்கத்தைச்

சுமந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

நீக்க முடியாத

பாவம் உங்களைத்

துரத்திக் கொண்டு

இருக்கிறது

 

இப்போது

என்ன

செய்யப்

போகிறீர்கள்

 

துரியோதனனின்

கேள்வி தான்

என்னுடைய

கேள்வியும்

 

எங்களுக்கு

என்ன பதில்

சொல்லப்

போகிறீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment