January 15, 2023

ஜபம்-பதிவு-920- மரணமற்ற அஸ்வத்தாமன்-52 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-920-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-52

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஏன் இப்படி

மாறினாய்

அஸ்வத்தாமா

என்னையே

குற்றவாளி

என்கிறாய்

 

நீ பேசவில்லை

துரியோதனனின்

குரலாக நீ

இருக்கிறாய்

 

துரியோதனனின்

குரல் உன்

மூலமாக

வெளிப்படுகிறது

அவ்வளவு தான்

 

அஸ்வத்தாமன் :

நாங்கள் மட்டுமல்ல

இந்த உலகமும்

கேட்கும் கேள்விக்கு

நீங்கள் என்ன

பதில் சொல்லப்

போகிறீர்கள்

 

ஏகலைவனின்

கட்டை விரலுக்கு

என்ன பதில்

சொல்லப்

போகிறீர்கள்

 

அஸ்வத்தாமன் :

ஏகலைவனின்

கட்டை விரல்

இந்த பூமியில்

விழுந்ததற்கு

நான் தான்

காரணம்

என்றால்

என்னுடைய

தலை இந்த

பூமியில்

விழட்டும்

 

விதி அப்படித்

தான் செயல்பட

வேண்டும்

என்றால்

அப்படியே

செயல்படட்டும்

 

அஸ்வத்தாமன் :

ஒரு செயலுக்கு

இன்னொரு

செயல் என்பது

எப்படி சரியாகும்

 

துரோணர் :

ஒருவருக்கு

நாம் செய்ததை

அவரே திருப்பித்

தர வேண்டும்

என்ற அவசியம்

இல்லை

 

வேறு

ஒருவரும்

தரலாம்

அது தான்

கர்மா

 

என்னுடைய

கர்மாவின் படி

ஏகலைவனின்

கட்டை விரலுக்கு

என்னுடைய

தலை தான்

விலை என்றால்

அது மண்ணில்

விழட்டும்

அதை

விழச்செய்பவர்

வரட்டும்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

துரியோதனன்

உண்மையைச்

சொன்னான்

நியாயம்

கேட்டான்

 

அவன் சொன்னது

நியாயம் என்று

எனக்கு தோன்றியது

அதனால் அவன்

பக்கம் நின்று

பேசினேன்

கேட்ட கேள்விக்கு

பதில் சொல்லாமல்

புரியாத வகையில்

பதில் சொல்கிறீர்கள்

 

துரோணர் :

புரியோத வகையில்

பேசவில்லை

புரியும் வகையில்

தான் பேசினேன்

 

நான் பேசியவைகளில்

உள்ள அர்த்தங்களை

காலம் வெளிப்படுத்தும்

 

எது சரி

எது தவறு

என்று

அப்போது

அனைத்தும்

புரியும்

 

இத்துடன்

இன்றைய

வகுப்பை

முடித்துக்

கொள்ளலாம்

வகுப்பு

கலையட்டும்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

 

துரியோதனன் :

குருதேவா

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

 

துரியோதனன் :

குருதேவா

 

துரோணர் :

அனைவரும்

செல்லலாம்

 

வகுப்பு

முடிந்ததும்

அஸ்வத்தாமன்

யாருடனும்

பேசாமல்

தன்னுடைய

குடிலை

நோக்கி

சென்று

கொண்டிருந்தான்

 

அவனுடைய

தோள் மீது

ஒரு கை

பட்டு

நண்பா

என்றது

குரல் வந்த

திசையை

நோக்கி

திரும்பி

பார்த்தான்

அஸ்வத்தாமன்

அங்கே ??????

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment