January 15, 2023

ஜபம்-பதிவு-916- மரணமற்ற அஸ்வத்தாமன்-48 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-916-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-48

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

குரு தேவர்

என்னிடம் கேட்ட

கேள்விக்கு

நான் பதில்

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

குருதேவர்

தவறாக

நினைப்பார்

என்று நான்

எதையும்

மறைத்து

பேசவில்லையே

 

என் மனதில்

உள்ளதைத் தானே

சொல்லிக்  கொண்டு

இருக்கிறேன்

 

நான் என்ன

விரும்புகிறேனோ

அதைத் தானே

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

 

நான் எதை

செயல்படுத்த

நினைக்கிறேனோ

அதைத் தானே

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

உண்மையைத்

தானே சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

உள்ளதை

உள்ளபடியே

தானே சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

 

எந்த ஒன்றையும்

நான் மறைத்து

பேசவில்லையே

நல்லவன் போல்

நடிக்கவில்லையே

நல்லவன் போல்

நடிக்க வேண்டிய

அவசியமும்

எனக்கு இல்லையே

 

இந்தத் துரியோதனன்

மனதில் என்ன

நினைக்கிறேனோ

அதைச் சொல்வான்

எது சரியானது என்று

நினைக்கிறானோ

அதை

செயல்படுத்துவான்

 

அர்ஜுனா

நீ நல்லவனாக

நடிக்காதே

நல்லவனாக

மாறுவதற்கு

முயற்சி

செய்

 

அதை விடுத்து

தேவையற்ற

வார்த்தைகளைப்

பேசிக்

கொண்டிருக்காதே

 

நீ பெயர்

வாங்க வேண்டும்

என்பதற்காக

பிறரை

ஏளனமாகப் பேசாதே

 

நீ வீரனாக ஆக

வேண்டும் என்றால்

அதற்குரிய

வேலைகளைச்

செய்

அதனை விடுத்து

தவறான

செயல்களைச்

செய்யாதே

 

துரோணர் :

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த வில்லாளி

ஆகி விட்டான்

இனி தான்

ஆக வேண்டும்

என்ற அவசியம்

அவனுக்கு இல்லை

 

துரியோதனன் :

ஆகவில்லை
ஆக்கப்பட்டான்

 

துரோணர் :

ஆக்கப்பட்டானா

 

துரியோதனன் :

ஆமாம்

ஆக்கப்பட்டான்

 

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப் போரில்

அர்ஜுனனை விட

சிறந்தவர்கள்

இந்த பூமியில்

நிறைய பேர்கள்
இருக்கின்றனர்

 

அதில் ஒருவனாக

விளங்கிய

ஏகலைவனின்

கட்டைவிரலை

குருதட்சணை

என்ற பெயரில்

நீங்கள்

வெட்டி வாங்கி

உலகத்திலேயே

சிறந்த வில்லாளியாக

ஆகி இருக்க

வேண்டியவனுடைய

வாழ்க்கையை அழித்து

அவனுடைய திறமை

இந்த உலகத்திற்கு

தெரியாமல்

செய்து விட்டீர்கள்

 

துரோணர் :

தேவையில்லாதவைகளைப்

பற்றிப் பேசாதே

துரியோதனா

 

அர்ஜுனன் :

துரியோதனன்

பேசும்

அனைத்துமே

தேவையில்லாதது

தான்

 

அஸ்வத்தாமன் :

துரியோதனன்

தேவையுள்ளதைத்

தான் பேசுகிறான்

தந்தையே !

 

துரோணர் :

வகுப்பறையில்

தந்தை என்று

கூப்பிடக் கூடாது

குருதேவர் என்று

தான் சொல்ல

வேண்டும் என்று

நான் சொல்லி

இருக்கிறேன்

அல்லவா

 

தந்தை என்று

என்னை ஏன்

அழைக்கிறாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment