November 12, 2011

சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்


            சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்
சிவம் என்றால் என்ன என்று உணர்ந்தவர்  சிவவாக்கியர் தான் உணர்ந்த சிவத்தை எழுத்தாக்கி வார்த்தையாக்கி வாக்கியமாக்கி அனைவரும் சிவம் என்பதின் உண்மைப் பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற  உயரிய நோக்கில் பாடலாக்கியவர்  சிவவாக்கியர்

சமுதாயத்தில் நிலவிவரும் தவறான கடவுள் கொள்கைகளை பின்பற்றுபவர்களை சமுதாயத்தில் நிலவிவரும் தவறான நடவடிக்கைகளை  தவறு என்று தைரியமாக சுட்டி காட்டி சிவத்தின் உண்மைப் பொருளை இந்த உலகத்திற்குச் சுட்டிக் காட்ட வாக்கியத்தில் எழுதிவைத்ததால் இவர் சிவவாக்கியர்

இவருடைய பாடலில் சில வரிகளில் ராம நாம என்ற வார்த்தை வருவதால் இந்த பாடல் இவர்  எழுதவில்லை என்கின்றனர் சிலர்
இப்பாடல்கள் வைஷ்ணவர்  காலத்தில் எழுதப்பட்டது என்கின்றனர்  சிலர்
எது எப்படி இருந்தாலும் இப்பாடல்களின் அர்த்தத்தை நாம் இப்பொழுது பார்ப்போம்



“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
    எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””
                                                                           --------சிவவாக்கியர்-------------
“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் “””””””
அந்தி - பகல் பொழுது முடியும் நேரம் - அதாவது அந்தி மயங்கி இருட்டத் தொடங்கியது என்று பொருள்
மாலை - பிற்பகலுக்கு பின்னர்  சூரியன் மறையும் வரை உள்ள நேரம் - சாயங்காலம்
உச்சி - பகல் பன்னிரண்டு மணி

இந்த மூன்று வேளைகளிலும் உடலைத் துhய்மைப்படுத்துகிறோம் உடலைத் துhய்மைப்படுத்தி புற வழிபாடு செய்வதால் என்ன பயன் இருக்கிறது ஒரு பயனும் இல்லை
அக வழிபாட்டின் மூலம் பெறப்படும் பயன்களை அடுத்த அடிகளில் குறிப்பிடுகிறார்



””””””சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்”””””””””””””””
சந்தி
பகலும் இரவும் சந்திக்கும் நேரம்-சந்தி எனப்படுகிறது
இதைப் பகலும், இரவும் பிரியும் நேரம் என்றும் சொல்லலாம்
இந்த சந்தி ஒரு நாளில் இரண்டு முறை நடைபெறுகிறது இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் - விடியல் என்றும்
பகலும் இரவும் சந்திக்கும் நேரம் - மாலைப் பொழுது என்றும் கூறப்படுகிறது

இறந்தவரை நினைத்துக் காலையில் ஒப்பாரி  வைப்பதைச் சந்தி அழுகை என்பார்கள்
அதாவது சந்தியில் ஜபம்
சந்தி வேளையில் செய்யப்படும் தர்ப்பணங்கள் தபங்கள் செபங்கள் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படுபவை

சந்தி வேளையில் செய்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையுமா என்ன முறையைக் கையாண்டால் இறந்த ஆத்மா சாந்தி அடையும் என்பதைப பற்றிப்  பார்ப்போம்

இரவு பகல் என்றால்
இரவுக்கு அதிபதி நிலா - அதை இடது நாடி இடகலை என்றும,
பகலுக்கு அதிபதி அதாவது பகலை ஆள்வது சூரியன் - வலது நாடி - பிங்கலை என்றும்
இந்த இரண்டு நாடிகளும் சந்திக்கும் இடம் நெற்றிக் கண் அங்கே பார்த்தால் அருள் இருக்கும்

இந்த இடத்தில் வைத்து இறந்தவர்களை நினைத்து தபங்கள் தர்ப்பணங்கள் செபங்கள் செய்ய ஆத்மா சாந்தி அடையும்
இதை அகவழிபாடு மூலம் செய்ய வேண்டும்

புற வழிபாடு மூலம்  செய்வதால் எந்த பயனும் இல்லை புற வழிபாட்டால் எந்த ஆத்மாவும் சாந்தி அடையர்து
இரண்டு நாடிகளும் சேர்ந்தால் ஆத்மா சாந்தி அடையும் என்பதைப் பற்றி சொன்ன சிவவாக்கியர் எப்படி சேர வேண்டும் என்பதை அடுத்த இரண்டு அடிகளில் சொல்கிறார்



“”””””””சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
       எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””””” 
இரண்டு நாடிகளும் சேர வேண்டுமென்றால், தினம் செபிக்கும் மந்திரம் ஒன்று ஒன்று உண்டு அது என்ன என்று விளக்குகிறார்

ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன உள்ளே இழுக்க வேண்டும்
என வெளியே விட வேண்டும்
இதுவே ராம நாம ஜெபம் எனப்படுகிறது

ராம ராம ராம ராம என்று தொடர்ந்து ஜெபிக்க அதாவது ராம நாம ஜெபம் என்னும் மூச்சுப் பயிற்சியைச் செய்ய படர்க்கையாக விரிந்த நிலையில் உள்ள மனம் அடங்கி நம் கட்டுக்குள் வந்து உயிருடன் இணைகிறது
இதை விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது என்று சொல்லலாம்

ஏவ்வாறெனில் ராம என்று சொல்ல மூச்சுக்காற்றான பிராணன் அக்கினியாக உருவாகி குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி சகஸ்ராரத்தின் வாசல்களைத் திறந்து சிவனுடன் இணையச் செய்கிறது
இங்கே ராம ராம என்ற சொல் வினைவேக ஊக்கியாகச் செயல்படுகிறது   

மேற்கண்ட ரகசியங்களை யார் ஒருவர்  உணர்ந்து கொண்டு ராம ராம - என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கச் செய்கிறார்களோ அவர்களே  முக்தி அடைய முடியும் என்று சிவவாக்கியர் கூறுகிறார்



சிவவாக்கியர்----ராம நாம ஜெபம்----கர்ம வினைகள்
ராம நாம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியைப் பயன் படுத்தி எவ்வாறு கர்ம வினைகளைத் தீர்ப்பது என்பதைப் பற்றி  சிவவாக்கியர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்


“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
        இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
        சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””

                                                                           ----------------சிவவாக்கியர்-------------


எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தை கண்டு பிடித்து எதற்காக பிறந்தோமோ அந்த கடமையை முடித்து விட்டு எதில் போய் சேர வேண்டுமோ? அதில் போய் சேர்ந்து பிறவிப் பெருங்கடலை முடிக்க வேண்டும்

“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்”””””””””””
இந்த பிறவிப் பெருங்கடலைக் கடக்க தடையாக இருப்பவை கர்மவினைகள் இந்த கர்மவினைகள் எப்படி தோன்றுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்
கர்ம வினைகள்
மனிதனிடம் ஆறு வகையான குணங்கள் இருக்கின்றன ஆறு வகையான குணங்கள் எனப்படுபவை  காம குரோத லோப மோக மத மாச்சரியம் எனப்படும்

இதனையே தமிழில் பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனபான்மை வஞ்சம் என்று கூறுவர்

இந்த ஆறு வகையான குணங்களில் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்வது பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய் சூது கொலை கொள்ளை கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்

இந்த ஆறு வகையான குணங்களில் ஒருவன் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்யும் பஞ்சமா பாதகங்கள் கர்ம வினைகளை தோற்றுவிக்கின்றன இந்த கர்மவினைகளே ஒருவனை பிறவிப் பெருங்கடலில் சிக்க வைத்து துன்பச் சகதியில் சுழல வைக்கிறது
இத்தகைய துன்பங்களை கொடுக்கக் கூடிய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்


”””இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்””””
இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்கும் இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்காது என்றும் சரியான மந்திரம் அதாவது உண்மையான மந்திரம் எது என்றும் தெரியாதவர்களை ஏழைகள் என்கிறார்  சிவவாக்கியர்

அவர் பணமில்லாதவர்களை ஏழைகள் என்று சொல்லவில்லை உண்மை மந்திரம் எது என்ற உண்மை நிலை தெரியாதவர்களைத் தான் ஏழைகள் என்று சொல்கிறார்

பாடலில் தொடர்ந்து கர்ம வினைகளை தீர்க்க ஒரு மந்திரம் உண்டு உண்டு என்று சொல்லி வந்த சிவவாக்கியர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம் கர்ம வினையை தீர்க்கக் கூடிய மந்திரம் என்னவென்று அடுத்த அடிகளில் சொல்கிறார்



“”””””””””சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே””””””””””

மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
என்று வெளியே விட வேண்டும்
இதே மாதிரி தொடர்ந்து ராம ராம ராம என்று தொடர்ந்து செய்யும் பொழுது மனம் சுருங்கி உயிராகி உயிர்  பரத்துடன் இணைவதன் மூலம் கர்ம வினை கழிகிறது

கர்ம வினை கழிய ராம ராம மந்திரம் என்னும் மூச்சுப் பயற்சி சிறந்த மந்திரமாக இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்
கர்ம வினைகளை கழிக்க மிகச் சிறந்த மந்திரம் ராம ராம ஜெபம் எனப்படும் - மூச்சுப் பயற்சியே என்கிறார்  சிவவாக்கியர்



சிவவாக்கியர்-----ராம நாம ஜெபம்---- ஆதி மூல ரகசியம்
ராம நாம ஜெபத்தைப் பயன் படுத்தி எவ்வாறு பிரபஞ்சத்தின் ஆதி மூல ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா
        கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே
    ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
    ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே””””””””””””””

                                                                                                                 ------------ சிவவாக்கியர்---------
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா””””””””
நான் என்ற உடலுக்குள் உயிராக நிறைந்திருப்பது எது?
நீ என்ற உடலுக்குள் உயிராக நிறைந்து இருப்பது எது?
நான் நீ என்று சொல்லப்படும் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரானது தோன்றுவதற்கு பொதுவான காரணமாக இருப்பது எது என்று தெரியுமா?



“””””””கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே”””””
கோ - என்றால் அரசன் நாட்டை ஆள்பவன் என்று பொருள்
கோன தேது என்றால் இருப்பு நிலையிலிருந்து நுண்ணலையான விண் என்ற ஐPவன் தோன்றி இயக்க நிலையாகி பிரபஞ்ச தோற்றங்களாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிராக இருப்பதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருப்பது எது? என்று பொருள்

குரு - என்றால் வழி தவறி நடக்காமல் வழி காட்டுபவன் என்று பொருள்
இந்த பிரபஞ்சம் முழுமையும் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும் இயக்க விதி மாறாமல் வழி நடத்திச் செல்வது எது? என்று பொருள்

இந்த ரகசியம் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் என்கிறார்  சிவவாக்கியர்


“””””””ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
      ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே”””””””””””””
 இந்த உலகம் என்று சொல்லக் கூடிய இயக்க நிலையில் உள்ள உயிர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது எது
இந்த உலகம் எல்லாம் அழிந்த பிறகு உலகமெல்லாம் எஞ்சி இருக்கும் நீக்கமற நிறைந்து இருக்கக் கூடிய உயிரானது சென்று சேரும் இடம் எது?

உலகமெலாம் தோன்றுவதற்கு முன்பு இருந்தது எது? உலகமெலாம் அழிந்த பிறகு எஞ்சி இருப்பது எது?

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ராம ராம ராம ஜெபம் செய்ய வேண்டும் என்கிறார்  சிவவாக்கியர்
ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
”  என்று வெளியே விட வேண்டும்

இந்த ராம ராம ராம என்று சொல்லும் ராம நாம ஜெபத்தை அதாவது மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வர விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது
அதாவது மனம் அடக்கம் பெற்று ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட பிரம்ம ரகசியங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்

எனவே ராம ராம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொள்வோம் என்கிறார்  சிவவாக்கியர்


November 11, 2011

காகபுசுண்டர் -வசிட்டர்


                           காகபுசுண்டர் -வசிட்டர்
காகபுசுண்டர்  யுகங்கள் பல கண்டவர்  பிரளயங்கள் பலவற்றை பார்த்தவர் அவருடைய சிறப்புகளை பெருமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது
மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அரிய நுலான பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் நுhலை காகபுசுண்டர்  எழுதியுள்ளார்

ராம பிரானின் குரு யார்? என்ற வினாவை எழுப்பினால் வசிட்ட முனிவர் என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும் ஆனால் வசிட்டரின் குரு யார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்

வசிட்டரின் குரு என்ற சிறப்புக்கு உரியவரும். ராம பிரானின் குருவான வசிட்டருக்கே உபதேசம் செய்தவர் என்ற சிறப்பைப் பெற்றவரும் தான் இந்த காகபுசுண்டர்
இந்த விவரங்களைப் பற்றி காகபுசுண்டரே கூறியிருக்கிறார் . அது அவருடைய நுhலான காகபுசுண்டர்  பெருநுhல் காவியம்-1000 என்ற நுhலில் உள்ளது. அதை நாம் இப்பொழுது பார்ப்போம்.

தானென்ற ஞானமதை வெளியதாகத்
   தான்சொல்ல வேண்டுமென்று வசிஷ்டர் கேட்க

ஏனென்ற சித்தர் களும் வசிஷ்டரோடே
   இட்டமுடன் றான்சேர் ந்து ஞானந்தன்னை

தேனென்ற அமுர் தம்போல் சொல்லவேண்டும்
   திருவருளால் கடைத்தேறச் செய்யவேண்டும்

கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு
   குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே

                        -----------------காகபுசுண்டர்---------பெருநுhல் காவியம் 1000---------

“””””தானென்ற ஞானமதை வெளியதாகத்
         தான்சொல்ல வேண்டுமென்று வசிஷ்டர் கேட்க”””””” 
நான் யார்? என்ற வார்த்தை பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் வார்த்தை
ஆதி அந்தம் இல்லாத இறைவனின் ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வார்த்தை

ஞானம் அடையக் கூடிய வழிகளை தேடிக் கொண்டிருக்கும் யோகிகள், விளக்கம் கண்டுபிடித்து முக்தி நிலை அடையக் காரணமாக இருக்கும் வார்த்தை
சாகாக் கால், வேகாத் தலை, போகாப் புனல், நெருப்பாறு மயிர் ப்பாலம் கடந்து,

போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை யார் ஒருவர் அறிந்து கொண்டு ஆன்மீக பாதையில் செல்கிறார்களோ அவர்களால் மட்டும் தான் நான் யார்? என்பதின் ரகசியம் தெரிந்து கொண்டு ஞானம்   அடைய முடியும்
அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள் அடக்கியுள்ள மிக உயர்ந்த வார்த்தையான நான் யார்? என்பதின் ரகசியம் உணர் ந்து ஞானம் அடையக் கூடிய வழிகளை எனக்குக் கூற வேண்டுமென்று வசிட்டர்  கேட்டார்.



“”””””””ஏனென்ற சித்தர் களும் வசிஷ்டரோடே
       இட்டமுடன் சேர்ந்து ஞானந்தன்னை””””””””

நான் யார்? என்ற கேள்வியை எழுப்பி தங்களைத் தானே நான் யார் என்று கேட்டுக் கொண்டு ஞானம் அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொண்டு இருக்கும் ஏனைய சித்தர்களும், வசிட்டருடன் சேர்ந்து கொண்டு ஞானம் அடையக் கூடிய வழியை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்றனர்.


“”””””தேனென்ற அமுர்தம்போல் சொல்லவேண்டும்
     திருவருளால் கடைத்தேறச் செய்யவேண்டும்””””””


தேனென்ற
உணவுப் பொருள்களில் தேன் ஒன்று மட்டும் தான் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கெட்டுப் போகாது.
தன்னிலை மாறாது நின்று சுவை பயக்கும் நாள் செல்லச் செல்ல புளிக்காது.

தேன் தான் கெடாததோடன்றி, தன்னில் ஊறவைத்த பேரீச்சம் பழம், திராட்சை, இஞ்சி முதலிய பொருள்களையும் கெட விடாது.
லேகியங்களில் தேன் கலப்பதன் கார்ணம் இது தான்.

தேனென்ற என்றால் உடலும் உயிரும் அழிவில்லாமல் இருக்கக் கூடிய வழியை எங்களுக்கு சொல்லுங்கள் என்று பொருள்
அமுர்தம்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி, ஆறு ஆதாரங்களைக் கடந்து பிரம்ம ரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது அமிர்தம் சுரக்கும்.
இதனை உண்பவர்க்கு பிறப்பு, இறப்பற்ற நிலை உண்டாகும்.

அமுர்தம் என்றால் உடலும் உயிரும், பிறப்பு, இறப்பு அற்ற நிலையை அடையக் கூடிய வழிகளை எங்களுக்கு சொல்லுங்கள் என்று பொருள்
கடை நிலை: (கடைத்தேற)
இறைநிலையை கடை நிலை என்று சொல்வார்கள்.
கடை என்பதற்கு பிரம்மம், எல்லாம் வல்ல இறைநிலை என்று பொருள்.
உலகம் பஞ்சபூதங்களால் ஆனது உலகத்திற்கு முன்பாகவும், முடிவாகவும் உள்ளது இறைநிலை.
அது புலன்களுக்கு எட்டாதது வர்ணிக்க முடியாதது, வார்த்தையைக் கடந்தது.

கடை தேற என்றால்-கடவுளை உணரும் நிலையை, அடையும் நிலையை, கடவுளாக மாறும் நிலையை-என்று பொருள்.
தேனென்ற அமிர்தம்போல் சொல்லவேண்டும் திருவருளால் கடைத்தேறச் செய்ய வேண்டும் என்றால்

உடலானது அழிந்து கெட்டுப் போகாமல் உயிரும், உடலும் என்றும் ஒன்றாக இணைந்து, பிறப்பு, இறப்பு அற்ற நிலையை அடையக் கூடிய வழியை எங்களுக்குச்  சொல்ல வேண்டும்  என்றும் காகபுசுண்டர்  தனது மனம் இரங்கி கடவுள் நிலையை அடையக் கூடிய வழிகளை எங்களுக்குச் சொல்லி எங்களைக் கடைத்தேறச் செய்ய வேண்டும் என்று பொருள்


“”””””””கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு
               குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே””””””””
கோ-என்றால் அரசன், அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருப்பவன் என்று பொருள்.

கோனென்ற என்றால்-அரசனைப் போல் அண்ட சாராசரங்களையும் தன் கட்டுக்குள் வைத்து, இயக்க விதி மாறாமல் காத்துக் கொண்டிருப்பவன் யார் என்பதையும், அதன் மூலம் எது? என்ற ரகசியத்தையும் அறிந்தவருமான காகபுசுண்டர் என்று அர்த்தம்.
கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே என்றால்

கடவுளை அடையக் கூடிய வழிகளை அறிந்து அதன் வழி சென்று அதை அடைந்தவன் காகபுசுண்டராகிய நான் என்ற ரகசியங்களை வசிட்டர்
உணர்ந்து தெரிந்து கொண்டதால்  வசிட்டருக்கு ஞானம் அடையக் கூடிய வழிகளைச் சொன்னேன் என்கிறார்  காகபுசுண்டர்
























பதி--பசு--பாசம்


                 பதி--பசு--பாசம்
ஆன்மீக உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தை பதி - பசு -பாசம் ஆகும்
பதி என்றால் கடவுள் அதாவது பரமாத்மா
பசு என்றால் ஆன்மா உயிர் அதாவது ஜீவாத்மா
பாசம் என்றால் ---- ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைய விடாமல் தடுக்கும் ஆணவம்--கன்மம் --மாயை என்ற மும்மலங்கள்


இதனைத் திருமூலர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
        ”"""ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
              ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
              ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
              ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
                                                                                -------திருமந்திரம் -----திருமூலர்--------

சிவன்--நந்தி---பலிபீடம்
இந்த பாடலின் தத்துவத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோயிலில் உள்ள ஒரு அமைப்பை எடுத்துக் கொள்வோம்
சிவன் கோயிலில் சிவன் சிலை இருக்கும்
நேர் எதிரே நந்தி இருக்கும்
நந்திக்குப் பின்புறம் பலிபீடம் இருக்கும்

இந்த அமைப்பை சிவன் கோயிலுக்கு சென்ற அனைவரும் பார்த்திருப்பீர்கள் அதனை நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம்
“”””””ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்”””””””
சிவன் கோயிலில் உள்ள சிவலிங்க மூர்த்தம் தான் பதி ஆகும்


“””””””ஆய பசுவும் அடலே றெனநிற்கும்””””””””
சிவலிங்கத்துக்கு எதிராக அதற்கு முன்னே உள்ளே வலிமை மிக்க காளை தான் ஜீவாத்மாவாகிய பசு ஆகும்

“”””””””ஆய பலிபீட மாகுநற் பாசமாம்””””””””
இந்த காளையாகிய நந்திக்குப் பின்னாக வட்ட வடிவில் கல் ஒன்று அமைந்திருக்கும் அது தான் பலிபீடம் எனப்படும் இந்த பலிபீடமே பாசம் ஆகும்


“””””””””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய சிவனுடன் இணைகிறது
பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்-நந்தி-பலிபீடம்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை தத்துவத்தை ரகசியத்தை யார் ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்
நந்தியின் காதுகளில் சொல்லுவது
சிவன் கோயிலில் நடக்கும் மற்றொரு செயலின் ரகசியத்தை இப்பொழுது பார்ப்போம்
சிவன் கோயிலில் நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

இதன் அர்த்தம் என்னவென்றால்
நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்
அவ்வாறு இணைத்தோமானால் அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான் அர்த்தம்

இருப்பு ---இயக்கம்-----உணர்வு
இந்த பதி--பசு--பாசம் என்ற மூன்றை சித்தாந்தவாதிகள் இருப்பு-- இயக்கம்-- உணர்வு என்ற மூக்கூறாக்கி கூறுகின்றனர்
இந்த இருப்பு நிலையைத் தான் கிறிஸ்தவர்கள் பிதா என்றும்

இருப்பு நிலை அசைந்து உண்டாகும் நுண்ணலையான விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரை கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும்
உணர்வு நிலையான மனதை கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் கூறுகின்றனர்

இதனை ஒரு அட்டவணையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்
ஆன்மீகம் ------ சித்தாந்தவாதிகள் ----- கிறிஸ்தவர்கள்
பதி                                            இருப்பு                                          பிதா
பசு                                             இயக்கம்                                       பரிசுத்த ஆவி
பாசம்                                      உணர்வு                                        சுதன்

பதி-பசு-பாசம் என்பதைப் பற்றி திருமூலர் பல்வேறு பாடல்களின் மூலம் விளக்குகிறார் அதில் பதி -பசு பாசம் மூன்றினுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி திருமூலர் கூறும் பாடல் ஒன்றைப் பற்றி பார்ப்போம்

   
””””    "  பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
               பதியினைப் போற்பசு பாசம் அனாதி
               பதியினைச் சென்றது காப்பசு பாசம்
               பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
                                                                                      ------திருமந்திரம்--திருமூலர்-----

””    பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
     பதியினைப் போற்பசு பாசம் அனாதி””””””
ஆன்மீக உலகில் பதி-பசு-பாசம் என்ற மூன்று உண்டு இந்த மூன்றைப் பற்றி ஆராய்ந்தோமானால் பதி எனப்படுகின்ற பரமாத்மா எப்படி ஆதி நிலையாக, இருப்பு நிலையாக இருக்கிறதோ அதைப் போலவே பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவும் பாசமும் அனாதியே ஆகும்
அது எப்படி என்றால் ஆதிநிலை, முதல்நிலை, மூலநிலை, இருப்பு நிலை என்று சொல்லப்படுவது பதி எனப்படுகின்ற பரமாத்மா

இருப்பு நிலை அசைந்து நுண்ணலையான விண் என்று சொல்லப்படுகின்ற பசு ஆகிய ஜீவாத்மா உண்டாகிறது

இருப்பு நிலையும் இயக்க நிலையும் இணைந்து உண்டாவது தான் இந்த பிர்பஞ்ச தோற்றங்கள் எல்லாம் இது தான் பாசம் எனப்படுகிறது
இருப்பு நிலையிலிருந்து தான் பசு பாசம் இரண்டும் உண்டாவதால் அல்லது இருப்பு நிலையே இயக்க நிலையாக விரிவடைவதால் பதி எப்படி அநாதியோ பசு பாசம் இரண்டும் அநாதியே ஆகும்


””   பதியினைச் சென்றது காப்பசு பாசம்
     பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
பதி பாசம் என்றால் என்னவென்றும் அதில் உள்ள ரகசியங்கள் என்னவென்றும் உணர்ந்து கொண்டு இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டு ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைத்து விட்டால் பிறப்பு இறப்பற்ற நிலை உருவாகி விடும் முக்தி நிலை உருவாகி விடும்
இல்லையென்றால் மாயையில் அகப்பட்டு துன்பச் சகதியில் சுழன்று பிறப்பு, இறப்பு என்ற மாயையில் வாட வேண்டியது தான் என்கிறார் திருமூலர்



பதி-பசு-பாசம்---சின் முத்திரை
பதி -பசு- பாசத்தை விளக்கும் திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் சின்முத்திரையின் ரகசியத்தை தன் பாடலின் மூலம் விளக்குகிறார்
 ””””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்
           பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
           பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
           பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே””””””””””
                                                                                      ---------திருமந்திரம்------திருமூலர்---------

“””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்””””””
பிரமன் - படைப்புக் கடவுள் படைப்புக்குக் காரணமாக இருப்பவர்
இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுதே படைப்பு தோன்றி விட்டது

இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுது தோன்றிய நுண்ணலையான விண் எனப்படுகின்ற ஜீவன் பல்கிப் பெருகி கோடான கோடி ஜீவன்களாக உருவாகி விட்டது இந்த ஜீவனைத் தான் நாம் பசு என்கிறோம்
இருப்பு நிலை அசைந்து இயக்க நிலைக்கு வரும் பொழுதே அதாவது படைப்பு என்பது தோன்றிய நாள் முதல் இன்று வரை பசு எனப்படுகின்ற உயிர் இந்த பிரபஞ்சம் முழுவதும் கோடிக்கணக்கில உருவாகி இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது



”””””பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு””””””
பசு எனப்படுகின்ற உயிரானது உலக பந்தங்களில் ஈடுபட்டு ஆணவம-கன்மம்-.மாயை என்ற மூன்றில் சிக்குண்டு தவிக்கிறது
ஆணவம்
நாம் ஒரு செயலைச் செய்கிறோம் அது பதிந்து விடுகிறது அந்த செயலின் மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக அந்த செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிறோம் நல்லன தவிர் தீய செயல்களை திரும்ப திரும்ப செய்ய செய்ய துன்பம் அதிகரிக்கும் தீய செயல்களைச் செய்வதன் மூலம் உண்டாகும் விளைவு தீயதாகத் தான் இருக்கும் என்று தெரிந்தும் செய்யக் கூடாத செயல்களையே மனிதன் செய்கிறான் தகாத செயல்களிலேயே ஈடுபடுகிறான் இது தான் ஆணவம்


கன்மம்
இந்த ஆணவத்தின் காரணமாக மனிதனுக்கு ஆறு குணங்கள் உண்டாகின்றன அவையாவன காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை ஆகும் இந்த ஆறு குணங்கள் வாயிலாக செயல்கள் செய்யும் போது துன்பமே விளைவிக்கக் கூடிய செயல்கள் மட்டுமே தான் விளையும் அதைத் தான் கன்மம் என்கிறோம்


மாயை
ஆணவத்திலேயும் கன்மத்திலேயும் சிக்கிக் கொண்ட மனதிற்கு சிந்தித்து செயல்படக் கூடிய தன்மை இருக்காது இதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யக் கூடாது செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்பது தெரியாமல் செயலைச் செய்து துன்பங்களை அனுபவித்து ஒரு வித மயக்கத்தில் இருக்கக் கூடிய நிலை மாயை எனப்படும்

இந்த ஆணவம் -கன்மம்-மாயை எனப்படுகின்ற பாசத்தை செய்து ஜீவாத்மாவில் (உயிரில்) மூன்று களங்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறான்


””””பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற் 
         பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே”””””””””” 
பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவை களங்கப் படுத்தி வைத்திருப்து பாசம் பாசத்தின் மூன்று அங்கங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றில் சிக்கிண்டு மனிதன் செய்யும் செயல்கள் கர்ம வினைகளாக பதிந்து விடுகிறது
இந்த கர்ம வினைகளை தவம், பிரணாயாமம் வாசியோகம் போன்றவற்றால் நீக்கி விட்டால் ஜீவாத்மா துhய்மை அடைந்து விடும். எந்த ஜீவாத்மா கர்ம வினைகள் நீக்கப் பட்டு துhய்மை அடைந்து இருக்கிறதோ அந்த ஜீவாத்மாவே பரமாத்மாவிடம் இணையும்
கர்ம வினைகள் கழிக்கப் பெறாத ஜீவாத்மா பர்மாத்மாவுடன் இணையாது பிறப்பு இறப்பு என்ற பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்பச் சகதியில் சுழல வேண்டியது தான்

இந்த தத்துவத்தை விளக்குவதற்காகவே முனிவர்களும் யோகிகளும் ஒரு முத்திரையை பயன்படுத்துகின்றனர் அது தான் சின் முத்திரை


சின்முத்திரை
சின்முத்திரை என்பது இந்த சமூகத்திற்கு ஒரு ரகசியத்தை சொல்லுவதற்காக காட்டப்படும் ஒரு முத்திரை ஆகும்


சின்முத்திரை சொல்லும் தத்துவம் இதுதான்

1. முதலில் வலது கையை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன
2. சுண்டு விரல் ஆணவம் எனப்படுகிறது
3. மோதிர விரல் கன்மம் எனப்படுகிறது
4. நடுவிரல் மாயை எனப்படுகிறது
5. ஆள்காட்டி விரல் ஜீவாத்மா எனப்படுகிறது
6. கட்டை விரல் பரமாத்மா எனப்படுகிறது


ஜீவாத்மாவுடன் ஒட்டியிருக்கும் ஆணவம் - கன்மம்- மாயை ஆகியவற்றை விலக்கி விட்டு ஜீவாத்மா விலகி வந்தால் பரமாத்மாவுடன் இணையும் என்ற தத்துவத்தைக் குறிப்பதற்காகவே சின்முத்திரை காட்டப்படுகிறது