December 07, 2011

ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு-1



      ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு -1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

உலகில் வணங்கப் படும் தெய்வங்களில் மிக முக்கிய தெய்வங்களில் மிகச் சிறந்த தெய்வமாக நினைத்து வணங்கப் படும் தெய்வமாக இருப்பதும் ,
பெரும்பாலானவர்களால் பின்பற்றப் பட்டு அதிசய சக்திகள் பலவற்றைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வமாக இருப்பதும்,
கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பக்தர்களின் மனம் குளிரும் படி  அருளை வாரி வழங்கும்  தெய்வமாக இருப்பதும் ,
சித்துக்கள் பலவற்றை தன்னை தியானிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க கொடுக்கும் தெய்வமாக இருப்பதும் ,
பக்தர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் அவர்களின் மனதின் தன்மையை அறிந்து பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் தெய்வமாக இருப்பதும் ,
அதிக அளவு சூட்சும ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வமாக இருப்பதும் ,
சொற்களை வைத்துக் கொண்டு  சொல்ல வரமுடியாத , எழுத்திற்குள் எழுதிக் காட்ட முடியாத பல அதி அற்புத சக்திகளை தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மட்டுமே வெளிக் காட்டும் தெய்வமாக இருப்பதும் ,
ஆகிய பல்வேறு சிறப்புகளை தன்னுள் கொண்டிருக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மனைப் பற்றித் தான்  நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம் .

இத்தகைய மகிமை வாய்ந்த ராஜ  ராஜேஸ்வரி அம்மனை எப்படி வணங்குவது ,எப்படி அம்மனை அழைத்து நமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வது ,
அம்மனின் அருளைப் பெற்று நாம் எப்படி வாழ்க்கையை  மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்வது, என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்;

ராஜ ராஜேஸ்வரி - தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1 எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
2 எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
3 ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது .
4 விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
5 துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.
6 அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும் .
7 சித்து வேலைகள் கை கூடும்.
8 அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை
     தட்டும் .
9 தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும் .
10 அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும் .

விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும் அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன .அவைகளைப் பற்றி பார்ப்போம்:

1.            புலால் உண்ணக் கூடாது.
2.            போதை வஸ்துகளை உபயோகிக்கக் கூடாது.
3.            விரதம் இருக்கும் நாட்களில் பெண்கள் மேல் மோகமும் ,பெண்களுடன் இணையும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
4.            காலையிலும் மாலையிலும் தேவியை நினைத்து மந்திரம் உச்சாடணம் செய்ய வேண்டும்.
5.            முடிந்தால் மூன்று வேளையிலும் அதாவது காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அம்மனை மந்திரத்தால் தியானம் செய்ய வேண்டும்.
6.            48 நாட்கள் எந்த வீட்டில் விரதத்தை ஆரம்பிக்கிறோமோ அந்த வீட்டில் தான்  48 நாட்களையும் நிறைவு செய்ய வேண்டும்.
7.            இரவில் எந்த இடத்திலாவது தங்கி விட்டால் விரதம் பாதியிலேயே முடிந்து விட்டதாகக் கருதப் படும்.
8.            48 நாட்களில் ஒரு லட்சம் மந்திரங்களையும் முடித்து விட்டால் சிறந்தது அப்படி செய்தால் நாம் விரதம் இருந்த பலன் தெரியும்.
9.            48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம்.
10.          அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்
11.          நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம்
12.          எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி என்று தியானிக்கும் பொழுதே  தெரிந்து கொள்ளலாம்

விரதத்திற்கான பூஜை பொருட்கள் :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பவர்கள் விரத பூஜையை ஆரம்பிக்கும் முன்னர் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள் :

48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  ராஜ ராஜேஸ்வரி படம் வாங்கி பிரேம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான யந்திரத்தை கைகளால் வரைந்து பிரேம் போடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போட்ட படம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போடாத யந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்
ஆகிய மூன்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜையில் பயன்படுத்தப் பட வேண்டிய மிக முக்கியமான மூன்று சூட்சுமமான ரகசியங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”




தீபப் பயிற்சி-பதிவு - 2




                                           தீபப் பயிற்சி-பதிவு - 2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இரண்டாம் நிலை - 2
தீபப் பயிற்சியில் முதல் நிலை முடித்தவர்கள் ,இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்யலாம்.

இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .முதல் நிலை முடித்தவர்கள் இரண்டாம் நிலை ஆரம்பித்து விட்டால் ,முதல் நிலை பயிற்சியான எண்ணெய் ஊற்றிய விளக்கைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.
இரண்டாம் நிலையில் என்ன பயிற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ ,அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.

இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்வதற்கு நமக்கு தேவைப்படுபவை : 
1 ஒரு சிறிய நைட் பல்பு (இரவில் உறங்கும் பொழுது பயன் படுத்தும் பல்பு)
2 அந்த நைட் பல்பு ஜீரோ வாட்ஸ் பல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்தால் முழுவதும் மஞ்சள் நிறமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் நிற நைட் பல்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4 நைட் பல்பின் ஒளி நம் கண்களை கூசச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும் :
1 நாம் உட்காராமல் நேராக நின்று கொள்ள வேண்டும்.
2 நைட் பல்பு கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நைட் பல்பை எரிய வைத்து கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
4 நைட் பல்பை தொடர்ந்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை பார்க்க வேண்டும்.
5 நைட் பல்பில் தெரியும் மஞ்சள் நிற ஒளி படிப்படியாக மாற்றம் அடைந்து பல்வேறு நிறங்கள் தெரிவதை பார்க்கலாம்.
6 முழுவதும் மஞ்சள் நிறமாக தெரியும் ஒளி படிப்படியாக சிகப்பு ,பச்சை என்று நைட் பல்பு முழுவதும் ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.
7 நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தீபப் பயிற்சி செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
8 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர அடுத்து, அடுத்து நமக்கு கிடைக்கும் பலன்களை பயிற்சியை செய்பவர்களே தெரிந்து கொள்ளலாம்.
9 பயிற்சி தொடர்ந்து செய்து அதன் பலனை சுவைத்தவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள்.

சோதனை முறை
தீபப்பயிற்சியின் இரண்டு நிலைகளையும் குறைந்தது ஒரு வருடம் செய்தவர்கள் கீழே சொல்லப்பட்ட சோதனை முறையை செய்து பார்த்தால் தங்களிடம் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.

முதல் சோதனை முறை
1 காற்றால் நிரப்பப் பட்ட  ஊதிய பலுhன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .
2 பலுhனை தரையில் வைத்து விட்டு நாமும் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .
3 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும்படி நாம் அமர்ந்திருக்கும் அறையில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடிக்  கொள்ள வேண்டும்.
4 அறைக்குள் காற்று முழுவதுமாக வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும் படியாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.
6 பலுhன் நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தொலைவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
7 நாம் பலுhனை சிறிது நேரம்  ஊற்று நோக்கியபடி மனதிற்குள் தன்னை நோக்கி பலுhன் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே பலுhனைப் பார்க்க வேண்டும்.
               
          “””””வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                    துhண்டும் உருவும் எனதாக வேண்டும்”””

8 அவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது பலுhனை சிறிது அசையத் தொடங்கும் சிறிது ,சிறிதாக நகர்ந்து உருண்டு உருண்டு நகரத் தொடங்கும்.
9 உருண்டு ,உருண்டு நகர்ந்து கொண்டே வந்து நம் அருகே வந்து விடும்.

அப்படி வந்து விட்டால் உங்களிடம் சக்தி வளர்ந்து இருக்கிறது என்று பொருள்

இரண்டாவது சோதனை முறை
1 ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதை மேசையின் மேல் வைக்க வேண்டும்.
2 மேசையின் மேல் அகல் விளக்கை வைத்த பிறகு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்ற வேண்டும்.
3 விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் நம் கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம் கண்களுக்கு நேராக விளக்கின் தீபம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
5 சிறிது நேரம் தீபத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
6 பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபத்தின் முன் வைக்க வேண்டும்.
7 சிறிது நேரம் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை தொடர்ந்து பார்த்து மேலே சொன்ன மந்திரத்தை

         “””” வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்
                 துhண்டும் உருவும் எனதாக வேண்டும்””””

  என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வரவேண்டும்
8 எலுமிச்சை பழம் மேசையில் மெதுவாக அசைய ஆரம்பிக்கும்.
9 பிறகு உருள ஆரம்பிக்கும்.
10 மேசையிலிருந்து உருண்டு வந்து நம்முடைய மடியில் வந்து விழும்.

மேலே சொல்லப்பட்ட பலன் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்.
 அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.

அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தீபப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் .


தீபப்பயிற்சியை செய்பவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து செய்து அதன் பலன்களை அனுபவித்து அதை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் எனறு கேட்டுக் கொள்கிறேன்.

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                     போற்றினேன் தீபப்பயிற்சி யுந்தான்முற்றே “”











December 03, 2011

தீபப் பயிற்சி-பதிவு - 1



                                 தீபப் பயிற்சி-பதிவு - 1

“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.
தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.

தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும்,  தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:
1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.
2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.
3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.
4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.
5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.

தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.
3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.
4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும்.  அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.
5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்   .

தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:
1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .

தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:
முதல் நிலை -1

a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில்   உள்ளவர்கள் செய்யவேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
5 பிறகு கண்களை மூடி  உள்ளே பார்க்க வேண்டும்.
6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.

b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.
5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.
6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.

தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”

December 02, 2011

ஐயப்பன்-தரிசனம்-பதிவு-10- சுபம்



            ஐயப்பன்-தரிசனம்-பதிவு-10- சுபம்

“”பதிவு பத்தை விரித்துச் சொல்ல
               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

ஐயப்பன் - தரிசனம்:
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 18 படிகளில் ஏற வேண்டும் 18 படிகளில் ஏறுவதற்கு முன் தேங்காயை உடைத்து முதலில் வலது கால் வைத்து மேலே ஏறிய பிறகே 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
தலையில் இருமுடி இன்றி 18 படிகளில் ஏறவோ இறங்கவோ கூடாது.
படியின் மேல் ஏறிய உடன் கோயிலைச் சுற்றி வலம் வரவேண்டும். கோயிலைச் சுற்றி வலம் வந்து இருமுடியைத் தலையில் வைக்காமல் ஐயப்பனுக்கு நேராக நின்று காணிக்கை போட்டு தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு கன்னி மேல் கணபதி, நாகர்,  உள்ளிருக்கும் மாளிகைப்புறம், கடுத்த சுவாமி வணங்கி பெரிய அம்பலம் இவைகளை வலம் செய்து பிறகு நடை வாயிலாகவோ வடக்கு நடை வாயிலாகவோ கீழே போக வேண்டும்.
பிறகு நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஆலய அதிகாரிகளுடைய சம்மதத்துடன் உள்ளே அபிஷேகத்திற்குக் கொடுக்கலாம் .அத்துடன் மற்ற வழிபாடுகளையும் உள்ளே செய்ய ஏற்பாடு செய்யலாம்.
இங்கு "உலக்குழி தீர்த்தம்" என்ற ஒரு முக்கியமான இடம் இருக்கிறது இங்கு தான் குளிக்க வேண்டும் ஆனால் அது யாவருக்கும் சாத்தியம் என்று கூற முடியாது .அனைவரும் இங்கு குளிப்பது சாத்தியமில்லை .என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அத்தோட்டில் அதாவது கால்வாயில் குளித்தாலும் அந்தப் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சாஸ்தா மூலமந்திரம்:
ஐயப்பனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட மூலமந்திரத்தை சொல்லி ஐயப்பனை வணங்கலாம்
ஓம் சாஸ்த்ரு மூர்த்தயே நம:

ஐயப்பன் - காயத்ரி மந்திரம்:
ஐயப்பனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தை உச்சாடணம் செய்தும் ஐயப்பனை வணங்கலாம்
ஓம் பூத நாதாய வித்மஹே
பாவ நன்தானாய தீமஹி
தன்னோ சாஸ்தா பிரசோதாயாத்:;

அறுபடை வீடுகள்:
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் எப்படி உண்டோ அதைப் போலவே ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுகிறது
ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று சொல்லப்படுபவை:
                1  ஆரியங்காவு
                2  அச்சன்கோவில்
                3  குளத்துப்புழா
                4  எருமேலி
                5  பந்தளம்
                6  சபரிமலை
சபரிமலை யாத்திரைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் எழுந்தருளி அருள் கொடுக்கும் இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது

தரிசனம்
ஐயப்பன் சபரிமலையில் யோக நிலையில் சின்முத்திரையில் இருக்கிறார் அவர்  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டவற்றை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்

41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் புனிதப் பயணம் ஐயப்பனிடம் சரணாகதி அடைந்து அருளைப் பெற்று மனம் மகிழ்வு அடைவதுடன்  ஐயப்பனின் தரிசனம் முடிவடைகிறது

இயற்கை அன்னையின் அருள் இருந்தால்,
காலம்கண் திறந்து கடைக்கண் காட்டினால்.
சிந்தனையின் கதவுகள் தட்டப் பட்டால்,
மாற்றத்தின் மறுமலர்ச்சிகள் என்னிடத்தில் தோன்றினால்,
கரங்களின் கையணைப்பு என்னை வழிநடத்தினால்,
உவகைகள் பூத்துகுலங்கி உள்ளத்தை வருடினால்,
சூட்சுமம் உரைக்கும் தகுதி வந்தால்,
மேலும்உரைப்பேன் ஐயப்பனின் மகிமையைத் தானே....
                                                 ---கவிதை-------பாலகங்காதரன்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                  போற்றினேன் ஐயப்பன் தான்முற்றதாமே “”

December 01, 2011

ஐயப்பன்-18 படி-பதிவு-9




                         ஐயப்பன் - பதிவு-9

“”பதிவு ஒன்பதை விரித்துச் சொல்ல
                   ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - 18 படி:
சத்தியம் என்றால் என்ன என்றும் சத்தியத்தை அடையும் வழி எது என்றும் உணரத் துடிக்கும் பக்தனின் சத்திய தாகத்தை தீர்த்து வைக்கும் உன்னதமான ஒரு புனித யாத்திரை தான் ஐயப்பனின் சபரிமலை யாத்திரை .
அந்த யாத்திரையில் பக்தன் தன் ஆன்மாவின் துhய்மையையும் வாழ்வின் ரகசியங்களையும் வார்த்தைகளால் குறிப்பிட்டுக் காட்ட முடியாத ஞான விளக்கங்களையும் பெறுகிறான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த புனித யாத்திரையின் ஓரு அங்கமாக இருப்பது தான் 18 படிகளைக் கடந்து சென்று இறைவனை தரிசித்தல் என்ற சடங்காகும் .
18 படிகள் என்று சொல்லக் கூடாது .18 புனிதப் படிகள் என்று சொல் தான் வழக்கில் உள்ளது.
இந்த புனிதமான 18 படிகளைப் பற்றி உலக அளவில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன .அத்தனை கருத்துக்களையும் நாம் ஏட்டினில் எழுத்தாக கொண்டு வந்து நிறுத்த முடியாது .அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட எழுத்திலும் ,சொல்லிலும் உள்ள புனிதமான 18 படிகளின் சிறப்பை மட்டும் இப்பொழுது பார்ப்போம்.

ஆரம்பத்தில் இந்த 18 படிகள் கிரானைட்டால் உருவாக்கப் பட்டிருந்தது பிறகு பஞ்ச உலோகங்கள் எனப்படும்  தங்கம் ,வெள்ளி ,இரும்பு, செம்பு, ஈயம் ஆகியவற்றால் 1985 ல் 18 படிகளை மூடி அலங்காரம் செய்யப்பட்டது.

ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டு தலையில் இருமுடி தரித்து செல்பவர்களுக்கு மட்டுமே 18 படிகளை கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப் படுகிறது .
18 படிகளில் ஏறுவதற்கு முன் தேங்காயை உடைத்து முதலில் வலது கால் வைத்து மேலே ஏறிய பிறகே 18 படிகளைக் கடந்து செல்கின்றனர்.

புராணங்கள்
18 படிகள் 18 புராணங்களைக் குறிப்பிடுவதாக சிலர்  கூறுகின்றனர் 18 புராணங்கள் எனப்படுபவை:
பிரமம், பத்மம், வைணவம் ,சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம் ,ஆக்னேயம், பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், வாமனம், கூர்மம் ,மத்ஸ்யம், காருடம், ஸ்காந்தம், பிர்மாண்டம் ஆகியவை ஆகும்

மலைகள்
18 படிகள் சபரிமலையில் உள்ள 18 மலைகளைக் குறிப்பதாக சிலர் கூறுகின்றனர் .
 18 படியில் உள்ள ஒவ்வொரு படியும் ஒவ்வொரு மலையைக் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது .18 மலைகள் எனப்படுபவை:
பொன்னம்பலமேடு,  கெண்டமலை ,நாகமலை ,சுந்தரமலை ,சிற்றம்பலமேடு, கல்கிமலை ,மாதங்கமலை ,மயிலாடும்மேடு, ஸ்ரீபாதமலை ,தேவன்மலை, நிலைக்கல்மலை ,தலைப்பாறைமலை ,நீலிமலை, கரிமலை, புதுச்சேரிமலை ,காளைகெட்டிமலை ,இஞ்சிப்பாறைமலை, சபரிமலை ஆகியவை 18 மலைகளாகும்.
சாதாரண பக்தனால்  18 மலைகளைக் கடந்து செல்ல முடியாது என்பதால் 18 படிகளை 18 மலைகளாகக் கொண்டு 18 மலைகளை வழிபட்டு கடந்து செல்லும் ஒரு வாய்ப்பாகவே அமைந்திருப்பது 18 படிகளின் சிறப்பாகும்

வீடுபேறு
மனிதன் வீடுபேறு அடைவதற்கு அதாவது முக்தி அடைவதற்கு அவன் கடக்க வேண்டிய 18 படிகளைத் தான் இந்த 18 படிகள் குறிப்பிடுகின்றன என்றும் சிலர்  சொல்லுகிறார்கள்.

வீடு பேறு என்றால் என்ன என்ற விளக்கத்தை முதலில் பார்ப்போம்:
வீடு என்றால் இடம் நாம் எங்கே உட்கார்ந்து இருக்கிறோம் தரையிலே உட்கார்ந்து இருக்கிறோம்.
தரை எங்கே இருக்கிறது உலகத்தில் இருக்கிறது ;
உலகம் எங்கே இருக்கிறது பிரபஞ்சத்தில் இருக்கிறது;
பிரபஞ்சம் எங்கே இருக்கிறது சுத்தவெளியில் இருக்கிறது;
சுத்தவெளி அது தான் வீடு ,அதற்கு ஒரு வீடு இல்லை , வீடு இல்லாத வீடு

மனிதனின் அறிவு உயர்ந்து தன்னை அறிந்து  கொள்ளும் நிலையில் அறிவே தெய்வமாக, இருப்பு நிலையாக ,மெய்ப்பொருளாக காட்சியளிப்பதை அறியும் அறிவாக அறியும் பேறு பெற்றால் அது தான் வீடுபேறு எனப்படும்.

வீடுபேறை விளக்கும் வகையில்  18 படிகள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தப் படுகிறது:

முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற  மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற  சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர்  உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர்  கூறுகின்றனர்.

தத்துவம்
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து  கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .

அதாவது 18 படிகளில் ஒவ்வொரு படியாக ஐயப்ப பக்தர்  அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.

1ம் படி-காமம்                        11 ம் படி----இல்லறப்பற்று
2ம் படி----குரோதம்           12 ம் படி----புத்திரபாசம்   
3 ம் படி---லோபம்               13 ம் படி----பணத்தாசை
4 ம் படி---மோகம்                14 ம் படி---பிறவி வினை
5 ம் படி---மதம்                      15 ம் படி----செயல்வினை
6 ம் படி---மாச்சர்யம்           16 ம் படி----பழக்கவினை
7 ம் படி---வீண்பெருமை  17 ம் படி----மனம்
8 ம் படி---அலங்காரம்         18 ம் படி-----புத்தி
9 ம் படி---பிறரை இழிவுபடுத்துதல்
10 ம் படி---பொறாமை



18 ம் படிக்கு மேலும் பலப்பல விளக்கங்கள் சொல்லப்படுகிறது அதைப்பற்றியும் நாம் பார்ப்போம்:--
தமிழ் இலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களில் எண் 18 ஒரு முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது
பிங்கள நிகண்டு 18 தேவர்களையும் ,18 தர்ம சாஸ்திரங்களையும் ,18 யுகங்களையும், 18 குற்றங்களையும் பற்றி பேசுகின்றது.
மூலகுரு சுருக்கமும் ,அகத்தியர்  பரிபாஷையும் 18 மொழிகளைக் குறிக்கின்றன.
அகஸ்தியர்  கௌமுதி 18 நோய்களைக் குறிப்பிடுகின்றது.
அகஸ்தியர்  வைத்திய சூரணம் 18 ஜாதிகளைப் பற்றி இயம்புகிறது.
சுப்பிரமணியர்  ஞானம் 18 யுகங்களை விவரிக்கின்றது.
தாண்டகம் 18 வகையான இசைக்கருவிகளைப் பற்றி பேசுகிறது.
தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் இருக்கிறது.

தமிழ் ஆதாரங்கள் பெரும்பாலும் பதிணென் சித்தர்கள் என்ற பதினெட்டுச் சித்தர்  வரிசையைக் குறிப்பிடுகின்றன

சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் 18 என்ற எணணுக்கு  ஒரு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டு ஒரு முக்கியமான எண்ணாகக் கருதப்படு வருகிறது
மச்சமுனி என்ற சித்தர்  18 மூலிகைகளைப் பற்றி தன்னுடைய மச்சமுனி - மெய்ஞ்ஞானப் பெருநுhல்காவியம்- 800 - என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்

சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்க்கண்ட 18 உறுப்புக்களைக் கொண்டதாகும் என்று சொல்லப்படுகிறது :
பஞ்ச பூதங்கள் 5 :- நிலம் ,நீர் , நெருப்பு, காற்று, விண்
ஞானேந்திரியங்கள 5: - மெய், வாய் ,கண், மூக்கு, செவி
பஞ்ச தன் மாத்திரைகள் 5: - அழுத்தம் ,ஒலி, ஒளி, சுவை ,மணம்
இவற்றோடு 3: -மனம் ,புத்தி, அகங்காரம் என்று மொத்தம் 18

உலக அளவில்
பதினெட்டுச் சூனியங்களின் கோட்பாட்டின் நிலைகளை அசங்கரும் ,திக் நாகரும் வரிசைப் படுத்தி இருப்பதாக சசிபூஷண்தாஸ் குப்தா தன்னுடைய நுhலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீன புராண இலக்கியங்களின் படி 18 லோஉறன்கள் (அருகதர்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஸேஸ்வர தரிசனம் என்ற புத்தகத்தில் பாதரசத்தை 18 முறைகளில் விரிவு படுத்தும் செய்தி பேசப்படுகிறது.
ஷ்யாம் சுந்தர்  கோஸ்வாமி என்பவர்  சாண்டில்ய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் . அதன்படி நம் தேகத்தில் 18 இடங்களில் உணர்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன.

இந்தியா
தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது.
ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது.
பாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது.
குருஷேத்திரப் போர்  18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில்  18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர்  கூறுகின்றனர்.
பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்கள் 18 படிகளைக் குறிப்பிடுவதாக சிலர்  கூறுகின்றனர்.
18 ஆகமங்கள் உள்ளது.

சோதிடம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் கேதுவைக் குறிக்கிறது .
அது ஞானக்காரகன் ,மோட்சக்காரகன் என்று அழைக்கப்படுகிறது கேது ஞானத்தைக் குறிக்கும் ஒரு கோளாகும்.
எனவே 18 என்ற எண்ணும் உயர்ந்த ஞானத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

நவக்கிரகம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் நவக்கிரகங்களைக் குறிக்கிறது
நவக்கிரகங்கள் எனப்படுபவை சூரியன் ,சந்திரன் ,செவ்வாய், புதன் ,குரு, சுக்ரன், சனி, ராகு ,கேது ஆகியவை ஆகும்
நவக்கிரகங்கள் தான் மனிதனுடைய வாழக்கையில் நடைபெறக்கூடிய இன்பம், துன்பம், அமைதி ,பேரின்பம் என்ற பல்வேறு நிலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது நவக்கிரகங்கள் தான் ஒரு மனிதனை ஆட்டி வைக்கிறது என்று சோதிடம் கூறுகிறது.

சூட்சும ரகசியம்
நவக்கிரகங்கள் இயக்கநிலையில் உள்ளது இயக்க நிலை கழிந்தால் அதாவது இயக்க நிலை கடந்து சென்றால் இருப்பு நிலை அடையலாம் அதைப் போல் 18 படி என்ற இயக்க நிலையை கடந்து யார்  ஒருவர்  செல்கின்றாரோ அவரே இருப்பு நிலை என்று சொல்லப்படுகின்ற மெய்ப்பொருளாகிய ஐயப்பனை அடையலாம் என்பதே 18 படிகளை கடப்பதற்கும் ஐயப்பனை தரிசிப்பதற்கும் இடையே உள்ள சூட்சும ரகசியம் ஆகும்  

முடிவான கருத்து
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் 18 என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நிலை விழிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் 18 படிகள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்

அடுத்து ஐயப்பனை தரிசனம் செய்யும் முறையை பற்றி பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
              போற்றினேன் பதிவுஒன்பது தான்முற்றே