October 07, 2018

திருக்குறள்-பதிவு-32


                        திருக்குறள்-பதிவு-32

5. வாமன அவதாரம்:
தசாவதாரத்தில்
1.மச்ச அவதாரம்,
2.கூர்ம அவதாரம்,
3.வராக அவதாரம்,
என்ற மூன்று
அவதாரங்களும்,
நீரில் உயிரினங்கள்
தோன்றி
விலங்கு நிலை
அடைந்ததைக்
குறிக்கிறது.

நான்காவது அவதாரமான
நரசிம்ம அவதாரம்
என்பது
சிங்க முகமும்,
மனித உடலும்
கொண்ட ஒரு
உயிரினத்திலிருந்து
அதாவது
விலங்கு முகமும்,
மனித உடலும்
கொண்ட யாளி
என்ற உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை தோன்றியது
என்பதைக் குறிப்பது
ஆகும்

5.வாமன அவதாரம்,
6.பரசுராம அவதாரம்,
7.ராம அவதாரம்,
8.பலராம அவதாரம்,
9.கிருஷ்ண அவதாரம்
10.கல்கி அவதாரம்
எனப்படுகின்ற
ஐந்தாவது அவதாரம்
முதல் பத்தாவது
அவதாரம் வரை
உள்ள ஆறு
அவதாரங்களும்
மனிதனின் பரிணாம
வளர்ச்சியை
பற்றி சொல்கிறது

வாமனன் என்றால்
குள்ள வடிவினன்
என்று பொருள்

யாளி என்ற
உயிரினத்திலிருந்து
அதாவது
மிருகமும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
மிருக நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை தோன்றியபோது
அதாவது முழுமையான
மனிதனாக மாற்றம்
அடையும்போது
முதன் முதலில்
மனிதன் குள்ளமாக
மூன்றடிக்குள்
தான் இருந்தான்

மனிதன் மூன்று
அடியில் தோன்றியதையும்,;
முழுமை பெற்ற
மனிதனாக
மாற்றம் அடைந்ததையும்;
குறிப்பது தான்
வாமன அவதாரம் ஆகும்

6.பரசுராம அவதாரம்
குள்ளமாக இருந்த
மனிதன் வளர்ந்து
காட்டில் வாழ்ந்து
வந்தான்

தன் தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்காக
காட்டில் மரங்களை
வெட்டியும்;
தன் பசியை
தீர்த்துக் கொள்வதற்காக
காட்டு விலங்குகளை
வேட்டையாடியும்;
காட்டில் வாழ்வதற்கு
ஏற்ற வகையில்
ஆயுதங்களைக் கையாளத்
தெரிந்தவனாக இருந்தான்;
என்பதைக் குறிப்பதே
பரசுராமர் கையில்
உள்ள கோடாரி
என்ற ஆயுதம் ஆகும்

குள்ளமாக இருந்த
மனிதன் வளர்ந்து
காட்டில் அலைந்து,
தன்னுடைய
தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதற்கு
ஆயுதங்களைப் பயன்
படுத்தினான்
என்பதைக் குறிப்பதே
கோடாரியைக்
கையில் வைத்திருக்கும்
பரசுராமர் என்ற
அவதாரம் ஆகும்

7.ராம அவதாரம்
காட்டில் அலைந்து
திரிந்து கொண்டிருந்த
மனிதன் ஓரிடத்தில்
நிலையாக தங்கி
சிறு சிறு
குழுக்களாக இணைந்து
தங்களுக்கு என்று ஒரு
தலைவனைத்
தேர்ந்தெடுத்து,
தங்களுக்கு என்று
சட்டதிட்டங்களை
உருவாக்கி,
அனைவரும் அமைதியாக
வாழ்வதற்கான
வழி முறைகளை
ஏற்படுத்தி,
ஒழுக்கக் கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொண்டு,
தனக்கென்று ஒரு
இராச்சியத்தை
உருவாக்கிக் கொண்டு,
அரசாட்சி செய்து
கொண்டு வாழ்ந்தான்

மனிதன் நாட்டில்
ஆட்சி செய்து
வாழ்ந்து வந்தாலும்
மனிதனால்
காட்டில் அலைந்து
திரிந்த நினைவு
மறக்கவில்லை என்ற
காரணத்தினாலும்,
காட்டில் அலைந்து
திரிந்த பதிவுகள்
மனிதனுள் பதிந்து
உள்ள காரணத்தினாலும்,
அந்த பதிவின்
காரணமாக மனிதன்
காட்டில் சுற்றி
திரிந்தான்.

ராம அவதாரத்தில்
ராமர் நாட்டில்
ஆட்சி செய்து
வாழ்ந்தாலும்
தன் மனைவியான
சீதையைத் தேடி
காட்டில் அலைந்து
திரிந்தார் என்பதைக்
குறிப்பது தான்
ராம அவதாரம்
ஆகும்

---------  இன்னும் வரும்
----------  07-10-2018
////////////////////////////////////////////////


October 05, 2018

திருக்குறள்-பதிவு-31


                         திருக்குறள்-பதிவு-31

தாயின் வயிற்றில்
கர்ப்பப்பபை
என்னும் உறையில்
நிறைந்துள்ள நீரில்
தான் கருவானது
உருவாகி வளரும்

இந்த உலகத்தில்
உயிரினங்கள்
முதலில்
நீரிலிருந்து தான்
தோன்றியது என்பதை
இது குறிக்கிறது

குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து
பிரிந்து
இந்த பூமியில்
நிலத்தில்
விழுகிறது

நீரில் இருந்த
உயிரினம்
நிலத்தில்
வாழ்வதற்குரிய
தகவமைப்பைப்
பெற்றதை இது
குறிக்கிறது

நிலத்தில் வாழ்ந்து
கொண்டு இருந்த
குழந்தை
தவழ்ந்து செல்கிறது

உயிரினங்கள்
நிலத்தில் தவழ்ந்து
செல்வதை இது
குறிக்கிறது

குழந்தை
தாயின் வயிற்றில்
நீரில் இருந்தது
முதல் தரையில்
தவழ்ந்து சென்றது
வரை உள்ள
நிகழ்ச்சியானது,
நீரில் உயிரினங்கள்
தோன்றியதையும்,
விலங்கின்
பரிணாமத்தையும்,
குறிக்கிறது.

தவழ்ந்து சென்ற
குழந்தை எழுந்து
நிற்க முயற்சி
செய்யும் போது
அடிக்கடி கீழே
தரையில் விழுந்தாலும்
குழந்தை
இரண்டு கால்களால்
நிற்பதற்கு தொடர்ந்து
முயற்சி செய்து
நிற்க ஆரம்பிக்கிறது

இது உயிரினங்கள்
எழுந்து நிற்க
முயற்சி செய்து
எழுந்து நின்றதைக்
குறிக்கிறது

இரண்டு கால்களால்
நிற்க ஆரம்பித்த
குழந்தை
இரண்டு கால்களால்
நடந்து முயற்சி
செய்தபின்
இரண்டு கால்களால்
ஓடுகிறது

எழுந்து நின்ற
உயிரினங்கள்
நடந்து சென்றதையும்
பின்பு ஓடியதையும்
இது குறிக்கிறது

தன்னுடைய
அன்றாடத் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ள
பிறரின் தயவை
நாடிய குழந்தை
வளர்ந்தவுடன்
தன் அன்றாடத்
தேவைகளை தானே
பூர்த்தி செய்வதற்குரிய
ஆற்றலைப் பெறுகிறது.

எழுந்து நின்ற
குழந்தை முதல்
தன் தேவையை
தானே பூர்த்தி
செய்து கொள்வது
வரை உள்ள
நிகழ்ச்சியானது
விலங்கிலிருந்து
மனிதன்
தோன்றியதையும்
மனிதன் அடைந்த
முழு வளர்ச்சியையும்
இது குறிக்கிறது

இவ்வாறு குழந்தையில்
இருந்து தொடங்கி
குழந்தையின் வளர்ச்சியில்
ஏற்பட்ட மாற்றம் வரை
நாம் யோசித்து
பார்த்தோமேயானால்
உயிரினங்களின்
பரிணாமத்தை நாமே
வெளிப்படுத்துவதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

விஞ்ஞானியான
சார்லஸ் டார்வின்
உலகம் முழுவதும்
சுற்றிப் பார்த்து
தான் புறக்கண்களால்
கண்டதை
ஆராய்ச்சி செய்து
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
அதாவது விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்.

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
மெய்ஞ்ஞானியான
நம் முன்னோர்கள்
இருக்கும் இடத்தை
விட்டு எங்கும் நகராது
ஒரே இடத்தில்
இருந்து தன்
அகக் கண்களால்
இந்த உலகம்
முழுவதையும் கண்டு
தாங்கள் கண்டதை
தசாவதாரத்தில்
நரசிம்ம அவதாரத்தின்
உருவமான
சிங்கத்தின் தலையும்
மனித உடலையும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்கள்

இப்பொழுது நாம்
விலங்கு முகமும்,
மனித உடலும் கொண்ட
உயிரினமான
யாளியிலிருந்து
மனிதன் வந்தான் என்ற
புதியதொரு தகவலைத்
தெரிந்து கொண்டிருக்கிறோம்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

 --------- இன்னும் வரும்
----------  05-10-2018
//////////////////////////////////////////////////////////


October 04, 2018

திருக்குறள்-பதிவு-30


                      திருக்குறள்-பதிவு-30

உலகில் பிறக்கும்
எந்த ஒன்றும்
அது பிறக்கும் போது
அந்த பிறப்பு
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருவதில்லை
ஆனால்,
அதன் வளர்ச்சியில்
ஏற்படக்கூடிய
மாற்றமே
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருகிறது

குழந்தை பிறக்கும்போது
அக்குழந்தை
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்,
குழந்தை வளர்ந்து
இச்சமுதாயம்
பாராட்டும் வகையில்
மாற்றம் அடையும் போது
அக்குழந்தை சிறப்பைப்
பெறுகிறது

விதையிலிருந்து செடி
பிறக்கும் போது
அது சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்,
செடி மரமாகி,
மரத்தில்
பூ காயாக
மாற்றம் அடையும்போதும்,
காய் கனியாக
மாற்றம் அடையும்போதும்,
சிறப்பைப் பெறுகிறது

பசுவிலிருந்து கன்று
பிறக்கும் போது
அந்த பசுக்கன்று
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்
பசுக்கன்று வளர்ந்து
பசுவாக மாற்றம்
அடையும் போதும்,
பாலைக் கொடுக்கக்கூடிய
அளவில் மாற்றம்
அடையும் போதும்,
சிறப்பைப் பெறுகிறது

மண்ணினால் பானை
செய்யும்போது
அந்த பானை
பிறக்கிறது
இவ்வாறு
அந்த பானை
பிறக்கும் போது
அப்பானை சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்.
அப்பானையை
நெருப்பில் இட்டு
சுட்டப்பின் பானை
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு மாற்றம்
அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

செங்கலைச்
செய்யும் போது
அச்செங்கல்
பிறக்கிறது
இவ்வாறு செங்கல்
பிறக்கும்போது
அச்செங்கல்
சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்
அந்த செங்கல்
தீயினால் சுடப்பட்டு
சுட்ட செங்கலாக
மாற்றம் அடைந்து
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு
மாற்றம் அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

உலகில் உள்ள
அனைத்தையும்
நாம் உற்று
நோக்கினால்
பிறப்பை விட
மாற்றம் சிறப்பானது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
முடியும்

எனவே,
பிறப்பை விட
மாற்றம் சிறந்தது
என்பதை
பிறப்பின் மூலம்
பிறந்து கொண்டிருக்கும்
ஆண் இனமும்,
பெண் இனமும,
உணர்ந்து கொள்ள
வேண்டும்
அப்படி
ஆண் இனமும்,
பெண் இனமும்
உணர்ந்து கொண்டால்
மட்டுமே
ஆண் இனமும்,
பெண் இனமும்,
மாற்றத்தின் மூலம்
தோன்றிக்
கொண்டிருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
மதித்து நடக்கும்
இல்லையேல்
மதிக்காது என்பதை
நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

நம் முன்னோர்கள்
தசாவதாரத்தில்
சிங்க தலையும்,
மனித உடலையும்
கொண்ட
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

விலங்கும், மனிதனும்
சேர்ந்த உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நாம் தெரிந்து
வைத்திருந்தாலும்;

இவைகள் எல்லாம்
தேவையில்லாமலேயே
நாமே உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
எளிதாகத் தெரிந்து
கொள்ள முடியும்
அது எப்படி
என்பதைப் பற்றி
இனி  பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 04-10-2018
/////////////////////////////////////////