October 24, 2018

திருக்குறள்-பதிவு-38


                        திருக்குறள்-பதிவு-38

’’’’பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற்
பெரிது””””
       
ஒருவர் செய்யும்
உதவியை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : பிரதிபலனை
        எதிர்பார்த்து
        செய்யும் உதவி

இரண்டு :பிரதிபலனை
         எதிர்பார்க்காமல்
         செய்யும் உதவி

பிரதிபலனை எதிர்பார்த்து
செய்யும் உதவியை
பயன்தூக்கி செய்யும்
உதவி எனலாம்.

பிரதிபலனை
எதிர்பார்க்காமல்
செய்யும் உதவியை
பயன்தூக்கார் செய்யும்
உதவி எனலாம்.

நாம் ஒருவருக்கு
உதவி செய்யும் போது
அவர் நமக்கு மீண்டும்
உதவி செய்வார்
என்பதை எதிர்பார்த்து
செய்யும் உதவி
பயன்தூக்கி செய்யப்படும்
உதவி எனப்படும்.

நாம் ஒருவருக்கு
உதவி செய்யும்போது
அவர் நமக்கு மீண்டும்
உதவி செய்வார்
என்பதை எதிர்பார்க்காமல்
செய்யும் உதவி
பயன்தூக்காரால்
செய்யப்படும்
உதவி எனப்படும்.

பயன்தூக்கார் செய்யும்
உதவியை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று :
இரத்த
சம்பந்தமுடையவர்களால்
செய்யப்படும் உதவி

இரண்டு:
இரத்த
சம்பந்தமில்லாதவர்களால்
செய்யப்படும் உதவி

இரத்த சம்பந்தமுடையவர்கள்
செய்யும் உதவியில்
தாய், தந்தையை
குறிப்பிடலாம்
தாய் நமக்கு
உயிரை அளித்து
அன்பை ஊட்டி
வளர்க்கிறாள்
தந்தை நாம்
சமுதாயத்தில்
வாழ்வதற்குரிய
வழி வகைகளை
ஏற்படுத்திக் கொடுத்து
நமக்கு நன்மை
செய்து வருகிறார்கள்.

இரத்த சம்பந்தமில்லாதவர்கள்
செய்யும் உதவியில்
நம்முடைய சொந்தக்காரர்கள்,
நம்முடைய உறவினர்கள்,
நம்முடைய நண்பர்களைக்
குறிப்பிடலாம்.
நம் வாழ்க்கையில்
குறுக்கிடும் கஷ்டங்கள்
கவலைகள், தோல்விகள்
ஆகிய நிலைகளில்
இருந்து நம்மைக்
காப்பாற்றி நன்மை செய்து
நமக்கு உறுதுணையாக
இருந்து வருபவர்கள்
அவர்கள்.

எந்தவித பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
ஒரு தாய் செய்யும்
உதவியினால்
கிடைக்கும் நன்மைகளை
அனுபவித்துக் கொண்டு
எனக்காக ஒன்றும்
செய்யவில்லை
என்னை ஏன் பெற்றாய்
என்று தாய்மையை
கொச்சைப்படுத்துகிறோம்.

எந்தவிதமான
பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
ஒரு தந்தை செய்த
உதவியை அனுபவித்துக்
கொண்டு சொத்து
சேர்த்து வைத்தாயா
வீடு கட்டி கொடுத்தாயா
வேலை வாங்கித்
தந்தாயா என்று
தந்தையின் அன்பை
கொச்சைப் படுத்துகிறோம்.

சொந்தக்காரர்கள்,
சுற்றத்தார்கள்,
நண்பர்கள் செய்து
கொண்டு வரும்
உதவியினால் பெறப்படும்
நன்மைகளைப்
பெற்றுக் கொண்டு
இதெல்லாம் ஒரு
உதவியா என்று
அவர்கள் செய்த
உதவியை
கொச்சைப் படுத்துகிறோம்.

எந்தவிதமான
பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
இரத்த சம்பந்தமுள்ளவர்களும்
இரத்த சம்பந்தமில்லாதவர்களும்
பயன்தூக்காமல்
உதவி செய்யும் போது
அவர்கள் எந்த
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்து கொண்டு
நமக்கு உதவி செய்தார்கள்

அவர்கள் அந்த உதவியை
செய்வதற்காக எத்தகைய
துன்பங்களை அனுபவித்து
நமக்கு உதவி
செய்தார்கள் என்பதை
நாம் நினைத்து
பார்ப்பதே இல்லை.

எந்தவித பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
இரத்த சம்பந்தமுடையவர்களும்
இரத்த சம்பந்தம்
இல்லாதவர்களும்
எப்படிப்பட்ட சூழ்நிலையில்
நாம் இருக்கும் போது
அவர்கள் நமக்கு
உதவி செய்தார்கள்
எப்படிப்பட்ட சூழ்நிலையில்
அவர்கள் இருக்கும் போது
நமக்கு உதவி
செய்தார்கள் என்ற
இரண்டு நிலைகளையும்
நாம் ஆராய்ந்து
பார்த்தோமேயாகில்
அந்த உதவியினால்
நாம் அடைந்த நன்மை
கடலினும் பெரிது
என்பதை உணரலாம்
என்பதைத் தான்

பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  24-10-2018
//////////////////////////////////////////////////

October 20, 2018

திருக்குறள்-பதிவு-37


                     திருக்குறள்-பதிவு-37

“””தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை
மாற்றல் அரிது”””


தெரியாத ஒன்றைப்
பற்றி விளக்குவதற்கு
தெரிந்த ஒன்றைக்
கொண்டு ஒப்பிட்டு
விளக்குவது
உவமை அணி
எனப்படும்

ஆப்பிள் என்றால் என்ன
என்றே தெரியாதவருக்கு
ஆப்பிள் பற்றி தெரிய
வைக்க வேண்டுமானால்
அதனோடு தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
ஒப்பிட்டு ஆப்பிளை
விளக்க வேண்டும்.

ஆப்பிளை பார்க்காதவருக்கு
ஒரு தக்காளியை
எடுத்துக் கொண்டு
இதே மாதிரி தான்
ஆப்பிள் இருக்கும்
சிவப்பு வர்ணத்தில்
இருக்கும் இதை விட
சற்று பெரியதாக
இருக்கும் என்று
சொல்லி ஆப்பிளைப்
பற்றி அறியாதவருக்கு
ஆப்பிள் எப்படி
இருக்கும் என்று
விளக்க முடியும்

இந்த உலகத்தில்
உள்ள பொருள்களில்
ஏதேனும் ஒரு தெரியாத
பொருளைப் பற்றி
ஒருவர் தெரிந்து
கொள்ள விரும்பினால்
அவருக்கு
அந்த பொருளுடன்
தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்கம் கொடுத்து
அந்த தெரியாத
பொருள் இப்படித்தான்
இருக்கும் என்பதை
அவருக்கு விளக்க
முடியும்

உலகத்தில் உள்ள
எந்த ஒரு
தெரியாத பொருளையும்
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்க முடியும்

ஆனால், இறைவன்
இப்படித் தான் இருப்பான்
இந்த குணங்களைக்
கொண்டு தான் இருப்பான்
என்பதை விளக்க
இந்த உலகத்தில்
எந்த ஒரு
பொருளும் இல்லை
எந்த ஒரு பொருளைக்
கொண்டும் ஒப்பிட்டு
விளக்க முடியாதவன்
இறைவன்
அதனால் தான்
இறைவனை தனக்குவமை
இல்லாதான்
என்கிறோம்.

தனக்குவமை
இல்லாதவன் என்று
சொல்லப்படுகின்ற
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினைகளைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
கிடையாது
பிறவி என்பது
இல்லாதவருக்கு
மனக்கவலை என்பது
ஏற்படாது

ஆனால்
தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காதவருக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
கஷ்டங்கள் ஏற்பட்டு
மனக்கவலை
என்பது ஏற்படும்
தொடர்ந்து பிறவி
எடுத்து வரும்போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி வரும்
மனக்கவலை என்பது வரும்
அவர்களுடைய
மனக்கவலையை
மாற்ற முடியாது.

தனக்குவமை இல்லாதவன்
தாள் சேர்ந்தாற்கல்லால்
என்றால்,
எந்த பொருளோடும்
ஒப்பிட்டுக் காட்டி
விளக்க முடியாத
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்கள்
என்று பொருள்

மனக்கவலை மாற்றல்
அரிது என்றால்,
கர்ம வினையைக்
கழிக்காமல்
பிறவி பல எடுத்து
துன்பப்படுபவர்களுடைய
மனக்கவலையை மாற்ற
முடியாது என்று
பொருள்.

தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்களுக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
வாழ்க்கையில் ஏற்படும்
கஷ்டங்களினால்
உண்டாகக்கூடிய
மனக்கவலையை
மாற்ற முடியாது

ஆனால்,
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினையைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
ஏற்படாத காரணத்தினால்
மனக் கவலை
என்பது உருவாகாது
என்பதைத் தான்

தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை
மாற்றல் அரிது

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  20-10-2018
///////////////////////////////////////////////


October 19, 2018

திருக்குறள்-பதிவு-36



                      திருக்குறள்-பதிவு-36

“”””உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””””

தானும், தனது
குடும்பமும்
இந்த உலகத்தில்
மகிழ்ச்சியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
இரண்டு நிலைகளைப்
பின்பற்ற வேண்டும்

ஒன்று
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டும்

இரண்டு
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்

ஒரு ஊரில் ஆண்கள்
யாரும் கோவணம்
கட்டுவதில்லை
இந்த விஷயத்தை
அறியாது அந்த
ஊருக்கு புதியதாக
வரும் ஒருவர்
கோவணம் கட்டிக்
கொண்டு அந்த ஊருக்குள்
நடந்து செல்கிறார்
அவரை பார்க்கும்
அந்த ஊரில் உள்ளவர்கள்
அனைவரும் அவரைப்
பார்த்து சிரிக்கின்றனர்
பைத்தியக்காரன்
கோவணம் கட்டி
இருக்கிறான் பார்
அவனுக்கு அறிவு
என்பதே இல்லை
என்று கிண்டல்
கேலி செய்கிறார்கள்
அவமானப்படுத்துகிறார்கள்

முட்டாள்கள் கூடி
முட்டாள்தனமாக
ஒரு விஷயத்தை
செய்யும் போது
நாமும் முட்டாள்களுடன்
முட்டாளாக இருந்து
கோவணம்
கட்டாமல் இருந்தால்
நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ முடியும்
நான் அறிவாளி
கோவணம் கட்டிக்
கொண்டு தான் செல்வேன்
என்று சென்றால் நாம்
நிம்மதியாக வாழ முடியாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்கக் கூடாது

இது தான் கோவணம்
கட்டாத ஊரில்
கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன்
என்பதற்கு அர்த்தம்

நாம் பள்ளியில்
படித்துக் கொண்டிருக்கிறோம்
அப்பொழுது
அனைவரும் போட்டி
போட்டுக் கொண்டு
வாழ்க்கையில்
நல்ல வேலை
நல்ல சம்பளம்
கிடைக்க வேண்டுமானால்
நன்றாக படித்து
அதிக அளவில்
மதிப்பெண்கள் எடுக்க
வேண்டும் என்ற
நினைப்பில் அனைவரும்
போட்டி போட்டுக் கொண்டு
படிக்கும் போது
நாமும் அவர்களுடன்
போட்டி போட்டுக்
கொண்டு படித்து
அதிக மதிப்பெண்கள்
எடுத்து நாம்
அறிவாளி என்பதை
நிரூபிக்க வேண்டும்
இந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்க வேண்டும்
முட்டாளாக
இருக்கக் கூடாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
அறிவாளியாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
முட்டாளாக
இருக்கக் கூடாது

தானும், தனது
குடும்பமும் நிம்மதியாக
உலகத்தில் உள்ள
மக்களோடு ஒன்று
பட்டு நிம்மதியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டும்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்
என்பதை
உணராமல்
இருப்பவர்கள்
பலபுத்தகங்களைப்
படித்து பெற்ற
படிப்பறிவு மற்றும்
அனுபவத்தின்
மூலம் பெற்ற
பட்டறிவு
ஆகிய இரண்டு
அறிவினாலும்
ஒரு பயனும் இல்லை
என்பதைத் தான்

“”உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  19-10-2018
////////////////////////////////////////////////