November 20, 2018

திருக்குறள்-பதிவு-53


                       திருக்குறள்-பதிவு-53

இரு பிரதான
உலக அமைப்புகள்
தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning
The Two Chief
World Systems)
என்ற கலிலியோவின்
நூலைத் தீயிட்டுக்
கொளுத்தும்படியும்,
கலிலியோவை
வீட்டுக் காவலில்
வைக்கும் படியும்
ரோமபுரி
மடாதிபதிகள்
கட்டளையிட்டதைத்
தொடர்ந்து
கலிலியோவிற்கு
எதிரானவர்கள்
அனைவரும்
ஒன்று கூடி
கலிலியோவிற்கு
எதிராக நடத்திய
செயல்கள்
அனைத்தும்
வருந்தத் தக்கவை.

கலிலியோவின்
புத்தகம் எங்கெல்லாம்
அச்சடிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறதோ
அங்கெல்லாம்
மதவாதிகள் புகுந்து
அச்சடிப்பதை
அவர்களாகவே
நிறுத்தி அச்சடிக்கப்
பட்டுக் கொண்டிருக்கும்
கலிலியோவின்
புத்தகத்தையும்
அச்சடித்து வைக்கப்
பட்டிருக்கும்
கலிலியோவின்
புத்தகத்தையும்
மொத்தமாக
தெருவில்
கொண்டு வந்து
போட்டனர்

பெரிய கடைகள்
சிறிய கடைகள்
என்ற பேதம்
இல்லாமல்
விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தையும்
பறிமுதல்
செய்து தெருவில்
கொண்டு வந்து
போட்டனர்

கலிலியோ
புத்தகத்தில்
என்ன சொல்லி
இருக்கிறார்
என்பதை தெரிந்து
கொள்வதற்காகவும்
அவரை எதிர்த்து
விவாதம்
செய்வதற்காகவும்
அவரை எதிர்த்து
கேள்விகள்
கேட்பதற்காகவும்
கலிலியோவின்
எதிர்ப்பாளர்கள்
வாங்கி வைத்த
தங்களுடைய
புத்தகங்களையும்
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

கலிலியோவின்
கருத்திற்கு ஆதரவு
தெரிவிப்பவர்கள்
கலிலியோவிற்கு
ஆதரவாக
இருப்பவர்கள் யார்
என்பதையும்
தெரிந்து கொண்டு
அவர்களின்
வீட்டிற்குள் புகுந்து
கலிலியோவின்
ஆதரவாளர்கள்
வாங்கி வைத்து
இருந்த
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தையும்
மிரட்டி பறிமுதல்
செய்து அத்தனை
புத்தகங்களையும்
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

அந்த நாட்டில்
உள்ள எந்த
ஒரு வீட்டிலும்
கலிலியோவின்
புத்தகம் இல்லை
என்று சொல்லும்
வகையில்
கலிலியோவின்
புத்தகம்
அனைவரிடமும்
இருந்து
பறிமுதல் செய்து
தெருவில் கொண்டு
வந்து போட்டனர்

நாட்டின் பல்வேறு
இடங்களில்
இத்தகைய
செயல்களின் மூலம்
கலிலியோவின்
புத்தகங்கள்
அனைத்தும்
தெருவில் கொண்டு
வந்து போடப்பட்டு
மலை போல்
குவியலாக வைத்து
தீயிட்டுக்
கொளுத்தப்பட்டன

அதில் எழுந்த புகை
அந்த நாட்டையே
புகை மண்டலமாக
ஆக்கியதோடு
மட்டும் அல்லாமல்
அந்த நாட்டை
இருள் மயமாகவும்
ஆக்கியது
ஒருவரை ஒருவர்
பார்க்க முடியாதபடி
புகை மண்டலம்
உருவானது என்றால்
எவ்வளவு
எண்ணிக்கையில்
கணக்கிலடங்காத
கலிலியோவின்
புத்தகங்கள்
எரிக்கப்பட்டிருக்கும்
என்பதை கற்பனை
செய்து பார்த்துக்
கொள்ளலாம்

கலிலியோவின்
புத்தகத்தை
எரிப்பதன் மூலம்
கலிலியோவையே
எரிப்பது போல்
நினைத்து
தங்களது
மகிழ்ச்சியை
வெளிப்படுத்தி
கொண்டிருந்தனர்
மதவாதிகள்

--------  இன்னும் வரும்
---------  20-11-2018
/////////////////////////////////////////////////



November 19, 2018

திருக்குறள்-பதிவு-52


                       திருக்குறள்-பதிவு-52

சமுதாயத்தில்
ஒரு செய்தியை
மறைமுகமாக
சொல்வதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப்படுகின்றன

ஒன்று :
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இரண்டு:
ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இலங்கையில்
இருந்து ஒரு மந்திரி
தமிழ்நாட்டின்
தலைநகரமான
சென்னைக்கு ஒரு
விஷயமாக வருகிறார்
அவரை எதிர்த்து
தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களில் அதாவது
மதுரை, தென்காசி
திருநெல்வேலி,
கன்னியாகுமரி போன்ற
மாவட்டங்களில்
இலங்கை மந்திரியை
எதிர்த்து போஸ்டர்கள்
அடித்து ஒட்டப் படுகிறது;
போராட்டங்கள்
நடத்தப் படுகிறது;

இந்த செயலைப்
பார்ப்பவர்கள் இந்த மந்திரி
சென்னைக்கு வருகிறார்
இவரை எதிர்ப்பவர்கள்
தென்காசியில் எதற்கு
போஸ்டர் ஒட்டுகிறார்கள்
தென்காசியில் எதற்கு
போராட்டம் நடத்துகிறார்கள்
சென்னைக்கும் தென்காசிக்கும்
என்ன சம்பந்தம்
இருக்கிறது என்று
கேள்வி கேட்கிறார்கள்

சென்னைக்கு வருபவருக்கு
இங்கே தென்காசியில்
நடப்பது எப்படி தெரியும்
இலங்கை மந்திரிக்கு
எதிராக தென்காசியில்
ஒட்டப்பட்ட போஸ்டரை
அவர் என்ன தென்காசியில்
வந்து படிக்கவா
போகிறார் அல்லது
தென்காசியில் அவருக்கு
எதிராக நடக்கும்
போராட்டத்தை நேரில்
வந்து பார்க்கவா போகிறார்
என்று கிண்டல்
செய்கிறார்கள்

இலங்கையில் இருந்து
சென்னைக்கு வரும்
இலங்கை மந்திரியை
எதிர்த்து
ஒட்டப்படும் போஸ்டர்
நடத்தப்படும் போராட்டம்
ஆகிய செயல்கள்
அனைத்தும் இலங்கை
மந்திரிக்கு ஒரு
செய்தியை சொல்வதற்காக
நடத்தப்பட்ட செயல் அல்ல

பல தவறுகள் செய்த
இலங்கை மந்திரியைப்
பற்றி மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
செய்யப்பட்ட
செயல்கள் தான்
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகிய செயல்கள்
அனைத்தும்
அதாவது தவறுகள்
பலவற்றைச் செய்த
இலங்கை மந்திரி
நம் நாட்டுக்குள்
வருகிறார் என்ற
செய்தியை மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
இவரை நம் நாட்டிற்குள்
அனுமதிப்பதன் மூலம்
அவர் செய்த தவறுகள்
நம் நாட்டிலும்
நடப்பதற்கு வாய்ப்புகள்
இருக்கிறது என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
மக்கள் அனைவரும்
விழிப்புடன் இருந்து
தவறுகள் நடக்காத
வண்ணம் தங்களை
பாதுகாத்துக் கொள்ள
வேண்டும் என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும்
செய்யப்பட்ட செயல்கள்
தான் இலங்கை
மந்திரியை எதிர்த்து
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகியவை எல்லாம்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

அதாவது
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

கலிலியோவின்
புத்தகத்தை எரிக்க
உத்தரவிட்டது
கலிலியோவை வீட்டுக்
காவலில் வைக்க
உத்தரவிட்டது ஆகிய
இந்த செயல்கள்
அனைத்தும் கலிலியோ
தன்னை திருத்திக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக வழங்கப்
பட்ட தண்டனை இல்லை
கலிலியோவிற்கு
வழங்கப்பட்ட
தண்டனையைப்
பார்த்து இந்த உலகம்
ஒன்றை தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்
வழங்கப்பட்டது

அதாவது பைபிளுக்கு
எதிராக யார் கருத்து
சொன்னாலும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக யார் நடந்து
கொண்டாலும்
அவர்களுக்கும்
கலிலியோவிற்கு
ஏற்பட்ட இந்த கதிதான்
அனைவருக்கும் ஏற்படும்
என்பதை ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
இந்த மக்களுக்கு
மறைமுகமாக
தெரிவிக்கப்பட்டது

ஒரு நல்ல செயலின்
மூலம் ஒரு நல்ல
செய்தி மறைமுகமாகவும்;
ஒரு கெட்ட செயலின்
மூலம் ஒரு கெட்ட
செய்தி மறைமுகமாகவும்;
இரு வேறுபட்ட
செயல்களின் மூலம்
இரு வேறுபட்ட செய்திகள்
இந்த சமுதாயத்தில் உள்ள
மக்கள் அனைவருக்கும்
தெரியப்படுத்தும் பொருட்டு
தெரியப்படுத்தப் பட்டு
வருகிறது என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  19-11-2018
///////////////////////////////////////////////////////////


November 17, 2018

திருக்குறள்-பதிவு-51



                       திருக்குறள்-பதிவு-51

பைபிளுக்கு எதிராக
நாங்கள் ஒரு சிறு
வார்த்தையையும்
அனுமதிக்க மாட்டோம்;
அப்படி இருக்கும்போது
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறு
என்று சொல்வதையும்
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுவதையும்
நாங்கள் எப்படி
பார்த்துக் கொண்டு
இருக்க முடியும்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படுமானால்
பைபிளில் உள்ள
கருத்துக்கள் சரியானதா
என்று சந்தேதிக்கும்
நிலை வந்து விடும்
கிறிஸ்தவ கடவுள்
உண்மையான
கடவுளா என்று
மக்கள் சிந்திக்கத்
தொடங்கி விடுவார்கள்
அது மட்டுமல்ல
இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகளும்
சரியானவைகள் தானா
என்று கேள்வி
கேட்கும் நிலைக்கு
மக்கள் வந்து
விடுவார்கள்
கடவுளின் பிரதிநிதிகளாகிய
எங்களையே
சந்தேகக் கண் கொண்டு
பார்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டு விடுவோம்

பைபிளில் ஒரு
தவறு இருந்தால்
இன்னும் எத்தனை
தவறுகள்
பைபிளில் இருக்கிறதோ
என்று பைபிளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை
அருளிய கடவுளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை போதிக்கும்
எங்களை தப்பாக
நினைப்பார்கள்;
இவைகளை எல்லாம்
நாங்கள் எப்படி
அனுமதிக்க முடியும்;
என்றார் விசாரணை
நடத்திய போப்

பைபிள் ஒன்றும்
அறிவியல்
கண்டு பிடிப்புகளின்
ஆவணமோ
தகவல் களஞ்சியமோ
கிடையாது
அது ஒரு
வாழ்வியல் நூல்

பைபிள் மனிதன்
இந்த உலகத்தில்
எப்படி வாழ வேண்டும்
என்பதை போதிக்கக்கூடிய
ஒரு மத நூல்
அப்படி இருக்கும்போது
பைபிளில் உள்ள
விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
சரியானவை என்று
எப்படி சொல்ல முடியும்

நான் ஒரு விஞ்ஞானி
நான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
சொன்னேன்;
நான் பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக சொன்னேன்
என்பதையும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறேன்
என்பதையும்,
என்னால் எப்படி
ஏற்றுக் கொள்ள
முடியும்

நான் பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்ல
வேண்டும்
என்பதற்காக கருத்து
சொல்லவில்லை
நான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
இருக்கிறது
அவ்வளவு தான்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படும்போது
அந்த தவறை ஏற்று
திருத்திக் கொள்ள
வேண்டும்
அப்படி திருத்திக்
கொள்ளாமல்
தவறை சுட்டிக்
காட்டுபவர்களை
விசாரரிப்பதில்
ஒரு நியாயமும்
இல்லை

நான் கண்டுபிடித்து
சொன்ன கருத்து
சரிதான்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நான் சொன்ன
கருத்து சரிதான்
நான் என்னுடைய
கருத்தை மாற்றிக்
கொள்ள மாட்டேன்
என்றார் கலிலியோ

இதனால் கலிலியோவை
விசாரித்த போப்புகள்
கலிலியோ சாகும்வரை
பிளாரென்ஸ் நகர்க்கருகில்
அர்செற்றி (ARCETRI)
என்னுமிடத்தில்
வீட்டுக் காவலில்
(HOUSE ARREST)
வைக்க உத்தரவு
இட்டனர்

இரு பிரதான உலக
அமைப்புகள் தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning the
Two Chief World
Systems)
என்ற கலிலியோவின்
நூலைத் தீயிட்டுக்
கொளுத்தும்படி
ரோமபுரி மடாதிபதிகள்
கட்டளையிட்டனர்

கலிலியோவிற்கு
அளிக்கப்பட்ட
வீட்டுக் காவல்
என்ற
தண்டனைச் செய்தி
எல்லாப்
பல்கலைக் கழகங்களிலும்
வாசிக்கப்பட வேண்டும்
என்று கட்டளை
இடப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  17-11-2018
///////////////////////////////////////////////////