January 06, 2019

திருக்குறள்-பதிவு-80


                      திருக்குறள்-பதிவு-80

ரோம் நகரம்
வந்தடைந்த
ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைக்கப் பட்டார்.

ஜியார்டானோ
புருனோவை
விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட
விசாரணைக் குழுவில்
சிறப்பு வாய்ந்த
கார்டினல்கள் ,
திறமை வாய்ந்த
கிறிஸ்தவ
மதபோதகர்கள் ,
ஆகியோர் இருந்தனர்

சிறையிலிருந்து
அழைத்து வரப்பட்ட
ஜியார்டானோ புருனோ
விசாரணை
மண்டபத்தில் ,
விசாரணைக் குழு
முன்னிலையில் ,
தன்னந்தனியாக
கைதியாக நின்று
கொண்டிருந்தார்.

ரோம் நகரத்தில்
விசாரணை
மண்டபத்தில்
விசாரணை
ஆரம்பமானது

“நோலா (Nola)
என்ற நகரத்திலிருந்து
வந்திருக்கும்
தந்தை (Father)
ஜியார்டானோ
புருனோ அவர்களே ! ”

“நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்றும் ;
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறானது“
என்றும் சொல்லி
இருக்கிறீர்கள்”

“இதன் மூலம்
நீங்கள் கிறிஸ்தவ
கடவுளுக்கு எதிராகவும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
புனித தந்தையாக
கருதப்படும் போப்புக்கு
எதிராகவும் ;
கருத்து சொல்லி
இருக்கிறீர்கள்“

“மேலும் நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதபோதனைகளுக்கு
எதிராகவும் ;
தீங்கு விளைவிக்கும்
நடவடிக்கையில்
ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப் பட்டு
இப்போது நீங்கள்
எங்கள் முன்னால்
நின்று கொண்டு
இருக்கிறீர்கள் ”

“இந்த நீதிமன்றம்
உங்களுக்கு
நல்ல முறையில்
நல்லவிதமாக
தீர்ப்பு வழங்கவே
விரும்புகிறது ”

“நீங்கள் பரிசுத்த
ஆவியின் பெயராலே
உங்களுக்காக
வாதாடுவதற்கு
யாரேனும் இருந்தால்
அவர்களை நீங்கள்
கேட்கலாம் “ என்றார்
விசாரணை அதிகாரி.

“நான் யார்
என்பதும் ;
நான் படைத்த
படைப்புகள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவை
என்பதும் ;
அவைகள் எத்தகைய
அர்த்தத்தை
கொடுக்கக் கூடியவை
என்பதும் ;
எனக்கு தெரியும் ! ”

“விசாரணையின் போது
எப்படி பேச
வேண்டும் என்ற
கலையும் ;
பேச்சு வார்த்தையை
எப்படி நடத்த
வேண்டும்
என்ற கலையும் ;
எனக்கு நன்கு தெரியும்
அதனால் எனக்காக
நானே வாதாடிக்
கொள்கிறேன்” என்றார்
ஜியார்டானோ புருனோ ! “

“ உங்களுக்காக
நீங்கள் வாதிடுவது
என்பது உங்கள்
தனிப்பட்ட உரிமை
உங்களுக்கென்று
வழங்கப்பட்ட
அந்த உரிமையை
நல்ல முறையில்
பயன்படுத்திக் கொண்டு
உங்கள் தரப்பு
வாதங்களை
நீங்கள் எடுத்து
வைக்கலாம்”என்றார்
விசாரணை அதிகாரி

“வெனிஸ் நகரத்தில்
நான் சொல்லிய
கருத்துக்கள்
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
மன வருத்தத்தை
தந்து இருக்குமேயானால்
அதற்காக நான்
வருத்தம் தெரிவிக்கிறேன்
என்று நான்
வெனிஸ் நகரத்தில்
கேட்டுக் கொண்டும்
அதனை ஏற்றுக்
கொள்ளாமல்
ரோம் நகரம்
அழைத்து வந்து
நீதி மன்றத்தில்
விசாரணை என்ற
பெயரில் என்னை
கைதியாக நிற்க
வைத்தது மட்டுமல்லாமல்
ஒரு நீதிபதி
முன்னால் நின்று
கொண்டு நான்
விசாரிக்கப்பட வேண்டுமா…..?
ஏன் என்னுடைய
வார்த்தைகள்
உங்களுக்கு போதாதா…………….?
ஏன் அவைகளை
என்னுடைய தரப்பு
வாதங்களாக
நீங்கள் எடுத்துக்
கொள்ளக் கூடாதா ……………….?”
என்றார் ஜியார்டானோ
புருனோ ! “

---------  இன்னும் வரும்
---------  06-01-2019
///////////////////////////////////////////////////////////


January 03, 2019

திருக்குறள்-பதிவு-79


                        திருக்குறள்-பதிவு-79

ஜியார்டானோ புருனோவால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர்த்தப்பட்டு
அற்புதத்தை உணர்ந்து
அற்புதத்தில் அற்புதமாகவே
மாறிய பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவால்
ஆன்ம ஒளி
ஏற்றி வைக்கப்பட்ட
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு தொடர்
விசாரணைக்காக
அழைத்துச் செல்லக்கூடாது
என்பதற்காக போராடிய
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
குற்றமற்றவர்
அவரை விடுதலை
செய்ய வேண்டும்
என்பதற்காக பல்வேறு
முயற்சிகள் எடுத்த
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
என்பவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர் என்பதை
ஜியார்டானோ புருனோ
உயிருடன் வாழும்
காலத்திலேயே அவரை
முழுவதுமாக அறிந்து
வைத்து இருந்த
ஒரே பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாராணைக்காக
அழைத்துச் செல்ல
காத்துக் கொண்டிருந்த
கப்பலுக்கு சற்று
தொலைவில்
நின்று கொண்டிருந்தார் ;

இந்த போஸ்காவைத்
(FOSCA) தான்
ஜியார்டானோ புருனோ
கப்பலில் ஏறுவதற்கு
முன்பு திரும்பி
புன்முறுவல் செய்தார் ;

ஜியார்டானோ புருனோ
போஸ்காவைப் (FOSCA)
பார்த்து சிந்திய
இந்த புன்முறுவலுக்கு
பின்னால் மறைந்திருந்த
ஆயிரக்கணக்கான
மறைபொருள் ரகசியங்கள் ;
வார்த்தைகளால்
வார்க்க முடியாத
உண்மைகள் ;
இவர்கள் இரண்டு
பேருக்கும் மட்டுமே தெரிந்த
ஒரு மாபெரும் ரகசியமாக
இருக்கும் படி
இந்த பிரபஞ்சம் செய்து
விட்டது ; என்பது
மறக்க முடியாத
உண்மை ; என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும் ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு அழைத்து
செல்வதற்காக காத்துக்
கொண்டிருந்த கப்பலில்
ஜியார்டானோ புருனோ
ஏறும் போது ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
முதல் அடியை எடுத்து
அந்த கப்பலில் வைத்தார்

ஜியார்டானோ புருனோ
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான முதல்
அடியாக இருக்குமோ
என்று வெனிஸ் நகரத்தின்
மக்கள் எண்ணினர்.

ஏனென்றால்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த கால கட்டத்தில்
கைதியாக குற்றம்
சுமத்தப்பட்டு ரோம்
நகருக்கு அழைத்துச்
செல்லப் பட்டவர்களில்
பெரும்பாலானவர்கள்
நிரபராதி என்று தீர்ப்பு
வழங்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டதாக
சரித்திரம் இல்லை.

குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக வந்தவர்களை
ரோம் நகரம் முக்கியமாக
மூன்று நிலைகளில்
கொன்றிருக்கிறது

ஒன்று :
சிறையில் வைத்து
கொடுமையான
சித்தரவதை செய்து
கொன்றிருக்கிறது ;

இரண்டு :
வீட்டிக் காவலில் வைத்து
சித்திரவதைகளை அளித்து
கொன்றிருக்கிறது ;

மூன்று :
மனிதத் தன்மை
இல்லாமல் உயிரோடு
எரித்து கொன்றிருக்கிறது ;

இத்தகைய
காரணங்களினால் தான்
ஜியார்டானோ புருனோ
கைதியாக தொடர்
விசாரணைக்காக ரோம்
நகருக்கு செல்வதற்காக
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான
முதல் அடியாக
இருக்குமோ என்று
அங்கு கூடியிருந்த
மக்களை சந்தேகம்
கொள்ள வைத்தது

இருப்பினும்,
ஜியார்டானோ புருனோ
மீண்டும் திரும்பி வருவார்
என்ற நம்பிக்கையுடன்
வெனிஸ் நகரத்தில்
வாழும் மக்கள்
மட்டுமல்ல
வெனிஸ் நகரமே
ஜியார்டானோ புருனோ
வந்து விடுவார் என்ற
நம்பிக்கையுடன்
காத்துக் கொண்டிருந்தது

மிகப்பெரிய தத்துவ
மேதை சிறந்த
எழுத்தாளர்
மாபெரும் விஞ்ஞானி
என்று பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
ஜியார்டானோ புருனோவை
சுமந்து கொண்டு கப்பல்
ரோம் நகரை நோக்கி
சென்று கொண்டிருந்தது

ஆமாம் ஜியார்டானோ
புருனோ கைதியாக
தொடர் விசாரணைக்காக
ரோம் நகரை நோக்கி
கப்பலில் பிரயாணம்
செய்து கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  03-01-2019
///////////////////////////////////////////////////////////


January 02, 2019

திருக்குறள்-பதிவு-78


                        திருக்குறள்-பதிவு-78

"என்னால் அற்புதத்தை
தாங்க முடியவில்லை
புருனோ …………………………………………….!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்னை
காப்பாற்று புருனோ ……………!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்றாள் போஸ்கா (FOSCA)
என்ற அந்த பெண்

“இப்போது நீ !
அற்புதத்தை நேருக்கு
நேராக சந்தித்துக் கொண்டு
இருக்கிறாய்……………………………… !
அற்புதத்தை தரிசனம்
செய்து கொண்டு
இருக்கிறாய்………………………………..!
அற்புதம் என்றால் என்ன
என்று கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டு
வருகிறாய்………………………………….!
அற்புதமாகவே கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……!.

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்………!
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்……..!
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக உணர்ந்து
கொண்டே வருகிறாய்…….!”

இப்போது நீ அற்புதமாகவே
மாறி விட்டாய்………………………! "

"சிறிது நேர
மௌனத்திற்குப்பின்
ஜியார்டானோ புருனோ
மீண்டும் பேச ஆரம்பித்தார்."

"இப்போது நீ படிப்படியாக
மாற்றம் அடைந்து கொண்டே
வருகிறாய்…………………………………….!
உன் சுவாசம் அற்புதத்தின்
மையத்தை விட்டு வெளி
வருகிறது………………………………………..!
இப்போது நீ பழைய
நிலைக்கு கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……..!
நீ பழைய நிலைக்கு
மாறுவதை உன்னால்
உணர முடிகிறது அதை
கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டே
வருகிறாய்…………..!

"கொஞ்சம் கொஞ்சமாக
சுவாசம் உன்னுள் ஓட
ஆரம்பிக்கிறது………………………….!
உட்சுவாசம்
வெளி சுவாசம் என மாறி
மாறி ஓட ஆரம்பிக்கிறது…..! "

"அற்புதத்தின் மூலம்
கிடைத்த சக்தி
உன் உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவ ஆரம்பிக்கிறது………………….!
உன்னுடைய தலையில்
இருந்து படிப்படியாக
கீழே இறங்கி உன்னுடைய
கழுத்திற்கு வருகிறது…….………!
கழுத்தில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய தோளுக்கு
வருகிறது…………………………………………..!
தோளில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய இடுப்பிற்கு
வருகிறது…………………………………………..!
இடுப்பிலிருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய கால்களுக்கு
வருகிறது…………………………………………..!
அற்புதத்தின் அற்புத சக்தி
அற்புதத்தின் அளப்பறிய
சக்தி உன்
உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவுகிறது………………………………………!
பரவிக் கொண்டே
வருகிறது………………………………………..!
இப்போது நீ அற்புதத்தால்
முழுவதும் நிரப்பப்பட்டு
விட்டாய்……………………………………………!!
இப்போது நீ
அற்புதம் என்றால் என்ன
என்பதை உணர்ந்து
கொண்டு விட்டாய்" என்றார்
ஜியார்டானோ புருனோ

"ஜியார்டானோ புருனோ
தன்னுடைய ஆன்ம ஒளியை
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணின் உயிரில்
ஏற்றி வைத்தார்".

ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்,
"அற்புதம் என்றால் என்ன
என்பதை நான் உனக்கு
காட்டி விட்டேன் !
அற்புதம் என்றால் என்ன
என்பதை இந்நேரம் நீ
உணர்ந்து கொண்டு இருப்பாய்…?
இனிமேல் அற்புதம்
அற்புதம் என்று
அற்புதத்தை தேடி
அலையாதே" என்று
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணிடம் பேசி
விட்டு ஜியார்டானோ
புருனோ கதவை திறந்து
கொண்டு வெளியே
சென்று விட்டார்.

அற்புதத்தை நேரில் சந்தித்து
அந்த அற்புதமாக
மாறி விட்ட போஸ்கா (FOSCA)
அற்புதம் என்றால் என்ன
என்பதை ஜியார்டானோ
புருனோவின் மூலமாக
முதன் முதலாக
தெரிந்து கொண்டாள்.

"அற்புதத்தை முதன்
முதலாக தரிசிக்கும் போது
போஸ்காவிற்கு (FOSCA)
ஏற்பட்ட அச்சத்தின் பாதிப்பு
அவளை மிரட்சியடைய
வைத்து விட்டதால்
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
கண்ணீர் அரும்பியது
தன்னை மறந்து அவள்
கதறி அழுதாள் ;
தேம்பி தேம்பி அழுதாள் ;
மனம் விட்டு அழுதாள் ;
அவளுடைய அழுகுரலின்
ஒலி அந்த வீட்டையே
அதிர வைத்தது ;தன்னை
மறந்து அந்த பெண்
சத்தம் போட்டு அழுது
கொண்டு இருந்தாள் ;
அற்புதத்தை உணர்ந்த
நிலையை
போஸ்காவால் (FOSCA)
வார்த்தைகளால் வெளிப்
படுத்த முடியவில்லை !
கண்ணீரால் மட்டுமே
வெளிப்படுத்த முடிந்தது !! " .

---------  இன்னும் வரும்
---------  02-01-2019
///////////////////////////////////////////////////////////