April 14, 2019

பரம்பொருள்-பதிவு-1


                      பரம்பொருள்-பதிவு-1

உலகில் உள்ள எந்த
ஒரு மதத்தை
எடுத்துக் கொண்டாலும்
அவர்கள் கடவுளிடமிருந்து
தங்களுக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து
கொள்வதற்கு இறைவனை
இரண்டு நிலைகளில்
வணங்குகிறார்கள்

ஒன்று
ஜபத்தின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

இரண்டு
பிரார்த்தனையின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

ஜபம் என்பது ஒருவர்
மட்டும் தனித்து
இருந்து இறைவனை
வணங்குவது

பிரார்த்தனை என்பது
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்குவது

ஒருவர் மட்டும்
தனியாக இருந்து
மனதை அடக்கிக்
கொண்டே உள்ளே சென்று
மனதின் அடித்தளமாக
இருப்பு நிலையாக உள்ள
இறைவனை வணங்குவது
ஜபம் எனப்படும்

ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
மனதை இந்த பிரபஞ்சம்
முழுவதும் விரித்து
மனதிற்கு அடித்தளமாகவும்
இருப்பு நிலையாகவும்
அனைத்திலும் நீக்கமறவும்
நிறைந்திருக்கும்
இறைவனை வணங்குவது
பிரார்த்தனை எனப்படும்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடிந்தவர்களால்
தனிப்பட்ட முறையில்
செய்யப் படுவது
தான் ஜபம்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
இருப்பவர்கள்
ஒன்று சேர்ந்து
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்கி
தங்களுக்குத் தேவையானதை
பெற்றுக் கொள்வது
தான்  பிரார்த்தனை

ஒருவர் மட்டும்
தனித்த நிலையில்
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
யாருடனும் சேராமல்
செய்வது தான் ஜபம்

ஒன்றுக்கு மேற்பட்டோர்
ஒன்றாகக் கூடி
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
பலருடன் சேர்ந்து
ஒன்றாகக் கூடி
செய்வது தான்
பிரார்த்தனை

பிராணனை கட்டுப்படுத்தும்
சுவாசப் பயிற்சி
பிராணனை அறிய
முற்படும்
பிராணாயாமம்
பிராணனை
முறைப்படுத்தும் வாசி
ஆகியவற்றை
செய்பவர்கள்
ஜபிக்கிறார்கள்
ஜபத்தில் வரும்
அவற்றை தனியாக
மட்டுமே செய்ய முடியும்

மந்திரத்தை வெளிப்படையாக
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
உச்சாடணம் செய்தல்
கடவுளைப் பற்றிய
பாடல்களைப் பலர்
ஒன்றாகக் கூடி
பாடுதல் ஆகியவை
பிரார்த்தனையில்
வரும்

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
ஜபம் என்பது
மனதை ஒடுக்கி
இறைவனை
உட்புறமாக உணர்வது
பிரார்த்தனை என்பது
மனதை விரித்து
இறைவனை வெளிப்புறமாக
உணர்வது ஆகும்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  14-04-2019
/////////////////////////////////////////////////////

April 12, 2019

திருக்குறள்-பதிவு-135-சுபம்


                   திருக்குறள்-பதிவு-135-சுபம்

“கலிலியோ இறந்து
350 ஆண்டுகளுக்குப்
பிறகு கலிலியோவைப்
பற்றிய விசாரணை
1990-ஆம் ஆண்டு நடந்தது.
இந்த விசாரணையின்
இறுதியில்-பவுல் இரண்டாம்
ஜான் போப் 1992-ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம்
31-ம் தேதி கலிலியோவிற்கு
எதிராக நடத்தப்பட்ட
அனைத்து செயல்களுக்காகவும்
வருத்தம் தெரிவித்ததோடு
மட்டுமல்லாமல் மன்னிப்பும்
கேட்டுக்கொண்டார்”

“சூரிய மையக் கோட்பாடு
கண்டுபிடிக்கப்பட்ட
வரலாறு என்பது
பலபேர் தங்களுடைய
வாழ்க்கையை இழந்ததால்
கட்டப்பட்ட வரலாறு ;
பலபேருடைய இறப்பின் மேல்
கட்டப்பட்ட வரலாறு ;
அனைவரும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய
வரலாறு ;”

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாட்டை வெளியிட்டார்
டாலமி "

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்தே - பூமி சுற்றி
வருகிறது என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
தனது ஆய்வுகளின் மூலம்
கணக்கீடுகளாலும்,
குறியீடுகளாலும்
வெளியிட்டார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்"

"டாலமி சொன்ன
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு
தவறானது என்றும்
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய
மையக் கோட்பாடே
சரியானது என்றும்
தனது தத்துவங்களின்
மூலமும்
ஆராய்ச்சிகளின் மூலமும்
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ"

"பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்று டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறானது என்றும் ;
சூரியனை மையமாக
வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாடே
சரியானது என்றும் ;
வார்த்தைகளால் மட்டும்
சொல்லாமல் தனது
தொலை நோக்கியின் மூலம்
நிரூபித்துக் காட்டினார்
கலிலியோ"

" நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் ;
ஜியார்டானோ புருனோ ;
கலிலியோ ;
ஆகியோர்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது - என்ற சூரிய
மையக் கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்களுடைய உயிரையே
கொடுத்தவர்கள் "

" உலக வரலாற்றை
எடுத்துக் கொண்டால்
தான் என்றும் ;
தனது என்றும் ;
தனது குடும்பம் என்றும் ;
தனது சந்ததி என்றும் ;
சுயநலத்துடன் வாழாமல் 
சமுதாய நலன் ;
பொது மக்கள் நலன் ;
பிறர் நலன் ; ஆகியவற்றை
கருத்தில் கொண்டு
பிறருக்காகவே வாழ்ந்தவர்கள்
உண்மையை நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே
கொடுத்திருக்கின்றார்கள்
என்பது தெரியவரும் "

" பல்வேறு அறிஞர்கள் ;
பல்வேறு காலகட்டங்களில் ;
ஆராய்ச்சி செய்து ;
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றவில்லை ;
சூரியனை மையமாக
வைத்துத் தான் பூமி
சுற்றி வருகிறது என்று
தங்கள் ஆராய்ச்சியின்
மூலமாக கண்டுபிடித்து
நிரூபித்தனர் "

" இதன் காரணமாக
இன்று நாம் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற உண்மையை
தெரிந்து கொண்டிருக்கிறோம் "

"சூரினை மையமாக வைத்து
பூமி சுற்றி
வருகிறது என்ற
சூரிய மையக் கோட்பாட்டை
புத்தகத்தில் படிக்கும்போதோ
(அல்லது)
பிறர் சொல்லக்
கேட்கும் போதோ
சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை
நிரூபிப்பதற்காக
தங்கள் உயிரையே கொடுத்த
நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
ஜியார்டானோ புருனோ
கலிலியோ
ஆகியோரின் இரத்தம்
தோய்ந்த வாழ்க்கை அந்த
கோட்பாட்டின் பின்னால்
இருக்கிறது என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்"

---------- திருக்குறள் (சுபம்)

---------  இன்னும் வரும்


----------  K.பாலகங்காதரன்
---------  12-04-2019
/////////////////////////////////////////////////////

April 11, 2019

திருக்குறள்-பதிவு-134


                      திருக்குறள்-பதிவு-134

“தசுக்கனியி பேரரசரான
இரண்டாம் பெர்டினாண்டோ
இவரது தந்தையும்
முன்னோரும் அடக்கம்
செய்யட்டுள்ள
சாந்தோ குரோசில்
உள்ள பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்து
ஒரு சலவைக்கல்
நினைவுச் சின்னமும்
எழுப்பிட விரும்பி
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிடம் அனுமதி
கேட்டபோது ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ
என்ற காரணத்தினால்
எட்டாம் உர்பன் போப்பும்,
பேராயர் பிரான்செசுகோ
பார்பெரினியும் அனுமதி
அளிக்க மறுத்து விட்டனர் “

“டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன் சுற்றி
வருகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
தவறானது
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்று
சொன்னதுடன் நிற்காமல்
அதனை கலிலியோ
தன்னுடைய
தொலைநோக்கியின்
மூலம் நிரூபித்துக்
காட்டினார் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லி
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“பைபிளில் சொல்லப்பட்டுள்ள
ஆண்டவரின்
வார்த்தைகளுக்கு எதிராக
கலிலியோ தான் சொன்ன
கருத்துக்களை தவறு
என்று சொல்லி
மன்னிப்பு கேட்டுக்
கொண்டால் அவரை
விட்டு விடுகிறோம்
என்று எவ்வளவு
எடுத்துச் சொல்லியும்
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

 “கலிலியோவிற்கு
அவருடைய அன்றாடக்
கடமைகளை
நிறைவேற்றுவதற்குத்
தேவையான பொருட்களை
கூட வழங்காமல் ;
தேவையான மருத்துவ
உதவிகள் தனக்கு
வேண்டும் என்று கேட்டும் ;
தேவைப்படும் மருத்துவ
உதவிகளை தேவைப்படும்
காலத்தில் வழங்காமல்
பல்வேறு ரூபங்களில்
கலிலியோவை- வீட்டுச்
சிறையில் வைத்து
சித்திரவதை செய்த போதும் ;
தான் கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டது
தவறு என்று
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”


“தன்னுடைய
அன்பு மகள் இறந்து
கலிலியோ மீளாத் துயரில்
வீழ்ந்த போதும் ;
தன்னுடைய கண்களை
இழந்து வாழ்க்கையை
ஒட்டுவதற்கு கஷ்டப்
பட்ட போதும் ;
தன்னுடைய ஆராய்ச்சியை
நிறுத்திக் கொள்ளாமல்
தொடர்ந்து செய்து
கொண்டிருந்த போதும் ;
கணக்கிலடங்கா துயரங்கள்
தன்னை தாக்கிய போதும் ;
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
கிறிஸ்தவர்கள் ஆக
மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களும்
கலிலியோவிற்கு
எதிரியாகி எதிராக
நின்ற போதும் ;
பல்வேறு விதமான
கஷ்டங்களை கலிலியோ
சாகும் வரை
அனுபவித்த போதும் ;
சாகும் வரை
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“தன்னடைய உயிரை
காப்பாற்றிக்
கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்காத கலிலியோவை
சாந்தா குரோசில் உள்ள
பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்ய அனுமதி
கேட்டபோது- கலிலியோ
கிறிஸ்தவ மதத்திற்கும்
கிறிஸ்தவர்களுக்கும் 
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காகவும் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ என்ற
காரணத்திற்காகவும் ;
அனுமதி மறுக்கப்பட்டது”

“பாசிலிக்காவின்
தென்வளாகத்துக்கு
அருகில் அமைந்த
நோவிசெசு கல்லறைத்
தோட்டத்திற்கு அண்மையில்
ஒரு சிறிய அறையில்
கலிலியோவை அடக்கம்
செய்ய அனுமதி
வழங்கப்பட்டு அந்த
இடத்தில் கலிலியோ
அடக்கம் செய்யப்பட்டார்”

“ வரலாற்றையே மாற்றி
அமைத்த சூரிய
மையக் கோட்பாட்டை
கண்டுபிடித்த
கலிலியோவின் இறப்பிற்கு
பின்னும் மதம்
மதவெறியுடன் நடந்து
கொண்டது வெட்கப்பட
வேண்டிய விஷயம் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-04-2019
/////////////////////////////////////////////////////