May 06, 2019

பரம்பொருள்-பதிவு-12


                       பரம்பொருள்-பதிவு-12

”மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
இயங்குவதற்கும் ;
சக்தியை தொடர்ந்து
பெறுவதற்கும் ;
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன; ”

ஒன்று :
“கும்பாபிஷேகத்தின்
மூலம் கடவுள் சக்தியை
இயங்கச் செய்வது “

இரண்டு :
“மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின்
மூலம் சக்தியை
பெறும்படிச் செய்வது “

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்டு
கடவுளாகவே மாறிவிட்ட
கடவுள் சிலை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றின் மூலம்
கர்ப்பக்கிரகத்தில்
பீடத்தின் மேல்
நிர்மாணம் செய்யப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின்
மூலம் இயங்குவதற்கான
சக்தியைப் பெற்று ;
அதனைத் தொடர்ந்து
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால் செய்யப்படும்
பூஜைகள். அபிஷேகங்கள்
ஆகியவற்றின் மூலமாக
தொடர்ந்து சக்தியை பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
செயலை கோயிலின்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிலைகள் செய்கின்றன ;”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளுக்கு
12 வருடங்களுக்கு
ஒரு முறை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
கடவுள் சிலையை
புதுப்பித்தல் ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
சக்தியை இயங்கச் செய்தல் ;
கடவுள் சிலைக்கு
செய்யப்படும் தொடர்
பூஜை முறைகளால்
சக்தியை பெறச்செய்தல் ;
ஆகிய செயல்களைச்
செய்ய வேண்டும்; “

“அப்படி செய்யவில்லை
என்றால் கடவுள் சிலையின்
மூலம் பெறப்படும்
சக்தியை கோயிலுக்குள்
செலுத்தி கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி
செய்ய முடியாது “

“மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலையை
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றால்
புதுப்பிக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை
கும்பாபிஷேகம்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை ;
அதனைத் தொடர்ந்து
தொடர்ந்தாற் போல்
பூஜைகள். அபிஷேகங்கள்.
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை;”

“ஒரு முறை மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டி விட்டால்
கடவுள் சிலையில்
சக்தியானது காலம் காலமாக
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும்: ”

“கடவுள் சிலையானது
இருக்கும் வரை
சக்தியானது அதில்
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும் ;
காலத்தால் அழியாமல்
அப்படியே இருக்கும் ;”

“ இதிலிருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகளைக்
காட்டிலும் ;
மந்திரத்தைப் பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைகள்
எவ்வளவு வலிமை
வாய்ந்தவை என்பதை
அறிந்து கொள்ளலாம் ;”

“ தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்ட ஆன்மீகத்தில்
உச்ச நிலையும் ;
தனி ஒரு நபராக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
பக்தி மார்க்கத்தில்
உச்ச நிலையும் ;
அடைந்தவர்களால் மட்டுமே
சாத்தியம் எனும் போது
பிராண பிரதிஷ்டை என்பது
எவ்வளவு பெரிய
உயர்ந்த மதிப்புமிக்க
விஷயம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;”

“இந்த உயர்ந்த
மதிப்பு மிக்க விஷயத்தை
வேறு ஒரு விஷயத்திற்கும்
பயன்படுத்துகிறார்கள்
எதற்கு என்று
தெரியுமா………………………………………-?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 06-05-2019
/////////////////////////////////////////////////////



May 05, 2019

பரம்பொருள்-பதிவு-11


                       பரம்பொருள்-பதிவு-11

“மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப் படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக இருந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று  
“கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு தனி
ஒரு நபராக மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்வது என்பது
கடினமான ஒரு விஷயம்
பக்திமார்க்கத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “

"மந்திரத்தைப் பயன்படுத்தி
செய்யப்படும்
பிராண பிரதிஷ்டையில்
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்து
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றும்
செயல் நடைபெறுகிறது ;"

"கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்கு
ஒவ்வொரு உறுப்பிற்கும்
என்று தனித்தனியாக
மந்திரம் உள்ளது ;
அந்த மந்திரத்தைப்
பயன்படுத்தி
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச்
செய்ய வேண்டும் ;
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பையும்
உயிர்ப் பெறச் செய்து
உயிரூட்டுவதற்கு
பெரும்பாலும் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்கிறார்கள்; "

"கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்காக
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யும் போது
பிராண பிரதிஷ்டையானது
முதலில் கடவுள் சிலையின்
கால் பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஆரம்பிக்க வேண்டும் ;
கடவுள் சிலையின் கால்
பாதங்களில் உள்ள
விரல்களில் இருந்து
ஒவ்வொரு உறுப்பாக
உயிர்ப்பிக்கச் செய்ய
பிராண பிரதிஷ்டை
மந்திரத்தை சொல்ல
ஆரம்பிக்க வேண்டும். :"

"அவ்வாறு ஒவ்வொரு
உறுப்பிற்கும் ஒவ்வொரு
மந்திரமாக சொல்லிக்
கொண்டே வர
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
அதாவது கடவுள்
சிலையில் செதுக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்று
உயிரோட்டம் உள்ள
ஒன்றாக மாறிக்
கொண்டே வரும் ;
கால் விரல்கள், கால்.
தொடை, இடுப்பு, கை
கழுத்து,தலை என்று
ஒவ்பொரு உறுப்பையும்
உயிர்ப்பெறச் செய்வதற்குரிய
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டையை
தொடர்ந்து செய்து
கொண்டே வர
கடவுள் சிலையின்
ஒவ்வொரு உறுப்பும்
உயிர்ப்பெற்றுக்
கொண்டே வரும் ;
கடவுள் சிலையின்
அனைத்து உறுப்புகளும்
உயிர்ப்பெற்ற பின்
இறுதியில் கடவுள்
சிலை கடவுளாகவே
மாறி விடுகிறது;"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

இரண்டு
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
எப்படி உயிரூட்டினாரோ
அதே முறையைப்
பின்பற்றியே
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள் சிலைக்கு
உயிரூட்டி கடவுள்
சிலையை கடவுளாகவே
மாற்றி விடுகிறார்கள்"

"ஆமாம் கல் கடவுளாக
மாறி விட்டது"

"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதைக்
காட்டிலும் ;
ஒருவர் தனியாக
இருந்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவது
கடினமான செயல்
என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும் "

"மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட
கடவுள் சிலைக்கும் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யப்பட்டு
உயிரூட்டப்பட்ட கடவுள்
சிலைக்கும் ;
என்ன வேறுபாடு
என்று தெரியுமா………………..?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  05-05-2019
/////////////////////////////////////////////////////


May 04, 2019

பரம்பொருள்-பதிவு-10


                       பரம்பொருள்-பதிவு-10

“மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று :
“தனி ஒரு நபராக
மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு
ஆன்மீகத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “


“ஆன்மீகத்தின் உச்ச
நிலையைத் தொட்ட
ஒருவர் மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்,  
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு முன்னால்
கடவுள் சிலையை
மனக்கண்ணில்
கொண்டு வந்து
தனது வசதிக்கேற்றபடி
கடவுள் சிலையை
முதலில் நான்கு கூறுகளாக
பிரித்துக் கொள்வார் “


“ஒவ்வொரு கூறிலும்
சக்தியைச் செலுத்திக்
கொண்டே செல்வார் ;
ஒவ்வொரு கூறும்
சக்தியால் முழுமையாக
நிரம்பிக் கொண்டே
வரும்; - கடவுள் சிலை
முழுவதும் சக்தியால்
நிரப்பப்பட்ட நேரத்தில்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல் கடவுளாக
மாறி விடுகிறது”.

இரண்டு ;
“கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டுவதற்காக
கடவுள் சிலையைச்
சுற்றிலும் நான்கு நபர்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்,
ஒரு குறிப்பிட்ட திசையில்,
ஒன்றாக அமர்ந்து
கொள்வார்கள் - நான்கு
நபர்களையும் ஒன்றாக
இணைக்கும் வகையில்
நான்கு நபர்களும் சேர்ந்து
முதலில் சக்தி வாய்ந்த
சக்தி களத்தை
உருவாக்கிக் கொள்வார்கள்;”

“கடவுள் சிலையானது
நான்கு கூறுகளாகப்
பிரிக்கப்படும் ;
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு
கூறிலும் சக்தியை
நிறுவ வேண்டும் ;
ஒவ்வொரு கூறையும்
குறிப்பிட்ட முறையின்
மூலம் - குறிப்பிட்ட
சக்தியின் மூலம்
சக்தியை நிரப்ப வேண்டும். ;”

“ஒருவர் தலைவராக
இருந்து அந்த குழுவில்
இருக்கும் மற்ற மூன்று
நபர்களையும் வழிநடத்திச்
செல்வதோடு மட்டுமில்லாமல்
மூன்று நபர்களுடன்
இணைந்து சக்தியை
கடவுள் சிலையில்
நிரப்புவதற்கான செயலில்
ஈடுபடுவார்.”

“பிராண பிரதிஷ்டை
செய்யும் நால்வரும்
தவத்தை தொடர்ந்து
செய்து கொண்டே
தவத்தின் உச்ச
நிலைக்குச் செல்வார்கள்;
அத்தகைய உச்ச நிலைக்கு
சென்று விட்ட பிறகு
ஒவ்வொருவரும்
தங்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட கூறில்
சக்தியை செலுத்துவார்கள்;
அவ்வாறு சக்தியை
செலுத்திக் கொணடிருக்கும்
போது ஒருவர்
உயர்ந்த நிலைக்கு
சென்று சமாதி (அல்லது)
மகா சமாதி அடைந்து
விட்டால் தலைவராக
இருப்பவர் சமாதி
அடைந்தவருடைய
பணியையும் சேர்த்து
செய்ய வேண்டிய
மிகப்பெரிய பொறுப்பையும்
ஏற்க வேண்டி வரும்;”

“பிராண பிரதிஷ்டையை
நிறுத்தாமல் நான்கு பேர்
செய்ய வேண்டிய பணியை
மூன்று நபர்கள் மட்டுமே
தனியாக இருந்து
செய்து முடிப்பார்கள்;”

“கடவுள் சிலையின்
நான்கு கூறிலும்
சக்தியானது முழுவதுமாக
நிரம்பியவுடன்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல்
கடவுளாக மாறி விட்டது”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகளைக் காட்டிலும்  ;
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகள் மிகவும்
சக்தி வாய்ந்தவை ;
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்; “

“மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
எவ்வாறு
செய்யப்படுகிறது
என்பது தெரியுமா……………?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-05-2019
/////////////////////////////////////////////////////