August 08, 2019

பரம்பொருள்-பதிவு-52


                 பரம்பொருள்-பதிவு-52

" இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
தாம் வாழ்ந்த காலத்தில்
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் குடி
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
மாதந்தோறும்
மக்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும்
பல்வேறு விதமான
விழாக்களை
மாதம் வாரியாக
புரட்டாசி; ஐப்பசி;
கார்த்திகை; மார்கழி;
தை; மாசி; பங்குனி;
சித்திரை; வைகாசி;
ஆனி; ஆடி; ஆவணி;
என்று வரிசைப்படுத்தி
திருஞான சம்பந்தர்
பத்து பதிகங்கள்
பாடினார் "

"திருஞான சம்பந்தர் முதல்
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உருவம் பெற்றாள் ;
எட்டாவது பாடல் பாடியதும்
பன்னிரண்டு ஆண்டுகள்
வளர்ந்த அளவினை எய்தினாள் ;
கும்பாபிஷேகத்தை காணாமல்
போனாயோ? பூம்பாவை என்று
திருஞான சம்பந்தர் பத்தாவது
பதிகத்தை பாடி முடித்தபின்
பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள்;"

" 7 வயது பெண்ணாக
இறந்த பூம்பாவை
12 வயது நிரம்பிய அழகு
பதுமையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ; "

" உயிரற்று எலும்பும்,
சாம்பலுமாக இருந்த பூம்பாவை
உயிர்ப்பெற்று எலும்பும்,
சதையும் கொண்ட
பெண்ணாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" ஊர்வசி ; ரம்பை ;மேனகை ;
திலோத்தம்மை ;போன்ற
தேவ மாதர்களே கண்டு
பொறாமைப்படும் படியான
அழகுடன் அழகு
தேவதையாக பூம்பாவை
உயிர் பெற்று வந்தாள் ;"

" பூம்பாவையைக் கண்ட
பிரம்மா தான் படைத்த
படைப்புகளிலேயே அற்புதமான
படைப்பு பூம்பாவையின் படைப்பு
என்று பூம்பாவையைப் பார்த்து
பிரம்மாவே ஆச்சரியப்படும்
வகையில் பூம்பாவை உயிர்
பெற்று வந்தாள் ;"

"திருஞான சம்பந்தர் இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய அதிசய காட்சியைக்
கண்டு அனைவரும் பிரமித்து
நின்றார்கள் ; இறைவனின்
அருளாசியுடன்
திருஞான சம்பந்தர்
நிகழ்த்திய இந்த அற்புத
செயலைக் கண்டு தேவர்கள்
பூமாரி பொழிந்தார்கள் ;
ஹர ஹர மகாதேவா என்று
மக்கள் உணர்ச்சி மேலிட்டால்
எழுப்பிய ஒலி அந்த
இடத்தையே அதிரச் செய்தது ;

" இறந்தவர்களை
எழுப்பும் சக்தி
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்திற்கு கிடையாது ;
சிவபெருமானை வழிபடும்
சைவமதத்தை சார்ந்தவர்கள்
இறந்தவர்களை எழுப்பியதாக
சரித்திரம் கிடையாது ;
என்று காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக பேசிய பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ; "

"இறந்தவர்களை எழுப்பும்
சக்தி எங்கள் மதத்திற்கே
மட்டுமே உண்டு !
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
எங்கள் மதத்தில்
மட்டுமே உள்ளனர் ;
இறந்தவர்களை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
வேறு எந்த மதத்திலும்
கிடையாது என்று
வீண் பெருமை பேசிக்
கொண்டு திரிந்த பிற
மதத்தைச் சேர்ந்தவர்கள் ; "

"நாங்கள் பின்பற்றும்
மதமே உண்மையான மதம் ;
நாங்கள் வணங்கும் தெய்வமே
உண்மையான தெய்வம் ;
நாங்கள் வணங்கும்
தெய்வத்தைத் தவிர உலகத்தில்
வேறு எந்த ஒரு தெய்வமும்
உண்மையான தெய்வம் இல்லை ;
என்று உண்மை அறியாமல்
பேசித் திரிந்து கொண்டிருந்த
பிற மதத்தைச் சார்ந்தவர்கள்  ;"

" எங்களுடைய தெய்வமே
மக்களுடைய பாவங்களை
ஏற்றுக் கொண்டு மக்களை
துன்பங்களிலிருந்து விடுதலை
செய்து நன்மைகளை வழங்க
வந்த தெய்வம் ;
எங்களுடைய தெய்வம்
மட்டுமே மக்களைக்
காப்பாற்றக்கூடிய ஒரே
தெய்வம் என்று பிழைப்புக்காக
பொய் பேசிக் கொண்டு
போலி நாடகம் நடத்திக்
கொண்டிருந்த பிற
மதத்தைச் சார்ந்தவர்கள் ;"

" திருஞான சம்பந்தர்
பூம்பாவையை உயிரோடு
எழுப்பிய காட்சியைக் கண்டு
மிரண்டு போய் என்ன
செய்வது என்று தெரியாமல்
ஓடிபோய் ஒளிந்து கொண்டனர்
பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ; “

" 7 வயதுடைய
பெண்ணாக இறந்து ;
12 வயதுடைய பெண்ணாக
உயிர்ப்பெற்று ; அழகு
பதுமையாக நடந்து
வந்த பூம்பாவை
16 வயது நிரம்பிய
திருஞானசம்பந்தரின்
பொற்பாதங்களில் விழுந்து
வணங்கினாள் ;

"சிவநேசர் தனது மனைவியுடன்
திருஞான சம்பந்தரின் கால்களில்
வீழ்ந்து வணங்கினார்"

" அங்குக் கூடியிருந்த மக்கள்
அனைவரும் இறைவனின்
திருவருளை நினைத்து மண்மீது
வீழ்ந்து திருஞான சம்பந்தரை
வணங்கினார்கள் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-08-2019
//////////////////////////////////////////////////////////



August 05, 2019

பரம்பொருள்-பதிவு-51


               பரம்பொருள்-பதிவு-51

பதிகம் – 6
"மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆனேறு
ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“அழகிய மடல்களைக்
கொண்ட தென்னை
மரங்கள் நிறைந்த
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
மாசி மாதத்தில்
பவுர்ணமியோடு கூடிய
மகம் நட்சத்திரம் வரும்
மாசி மகமான புண்ணிய
நாளில் பக்தர்கள் கடலில்
நீராடி சிவபெருமானை
வழிபட்டு கொண்டாடும்
மாசி கடலாட்டு விழாவில்
வலிமை பொருந்திய
காளையின் மேல்
சிவபெருமான் பவனி வந்து
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
அற்புதக் காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 7
" மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழா பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“திருவருள் எழுச்சியை
விளைவிக்கும் திருக்கோயில்
விழாக்கள் இடைவிடாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
வீதிகளைக் கொண்ட
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
பங்குனி மாதத்தில்
உத்திர நட்சத்திரத்தில்
பவுர்ணமி வரும்
பங்குனி உத்திரம்
புண்ணிய நன்னாளில் பக்தர்கள்
பக்தி பரவசம் மேலிட்டு
ஆரவார ஒலியை  எழுப்பி
பக்தர்களால் கொண்டாடப்படும்
பல்வேறு விழாக்களை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 8
"தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“வீரமும் கோபமும் ஒருங்கே
கொண்ட இராவணனுடைய
தோள்களை நெரித்தவனும்
அழகிய திருவடிகளைக்
கொண்டு மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருப்பவனுமாகிய
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
பண்ணோடு பாடக்கூடிய
சப்தரிஷிகள்,தேவர்கள்,
அரம்பையர்கள், அசுரர்கள்,
தானவர்கள், தைத்தியர்கள்,
நாகர்கள், கருடர்கள்,
கிண்ணரர்கள், கிம்புருசர்கள்,,
யட்சகர்கள், வித்தியாதரர்கள்,
அரக்கர்கள், கந்தர்வர்கள்,
சித்தர்கள், சாரணர்கள்,
பூதகணங்கள், பிசாசர்கள்
ஆகிய பதினெட்டு கணத்தினரும்
வணங்கும் சித்திரை அட்டமியில்
கொண்டாடப்படும் விழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை  என்கிறார் “

பதிகம் – 9
" நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
அழகிய தாமரை மலர் மேல்
உறையும் நான்முகனும்,
நாராயணணும் தரிசிக்க
முடியாத சிவபெருமானுடைய
அடி முடிகளை அனைவரும்
தரிசிக்கும் வகையில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
வைகாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 10
" உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“உடை அணியாமல் வாழும்
சமணர்கள், உடையைப்
போர்த்திக் கொண்டு
வாழும் கரிய சாக்கியர்கள்
தம் வாய்க்கு வந்ததை
எல்லாம் பேசிக் கொண்டு
திரியும் இந்த மண்ணுலகில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
ஆனி, ஆடி, ஆவணி
ஆகிய மாதங்களில்
சிவபெருமானுக்கு
ஆயிரமாயிரம் ஆதிசைவப்
பெருமக்கள் வந்து ஞானாக்கினி
வளர்த்துச் செய்யப்போகின்ற
கும்பாபிஷேகத்தை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  04-08-2019
//////////////////////////////////////////////////////////




August 04, 2019

HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019


               HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019

அன்பிற்கினியவர்களே,


“”””உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு””””

நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நாம் நண்பனுக்கு
செய்யும் உதவியை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : பிறர் துன்பம்
        போல் கருதி
        உதவி செய்வது

இரண்டு :நம்முடைய
         துன்பம் போல்
         கருதி உதவி
         செய்வது



நாம் அலுவலகத்தில்
வேலை செய்து
கொண்டு இருக்கிறோம்
நம் உறவினர்
ஒருவருக்கு மிகவும்
உடல் நிலை
சரியில்லை
அவரை மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறோம்
என்று நமக்கு
போன் வருகிறது
நாம் சரி
நான் வந்து பார்க்கிறேன்
என்று சொல்லி விட்டு
மிகவும் பொறுமையாக
வேகமாக இல்லாமல்
நிதானமாக வேலை
எல்லாம் முடித்து
விட்டு பொறுமையாக
இரவு சென்று
மருத்துவமனையில்
சேர்த்திருக்கும்
நமது உறவினரை
பார்த்து விட்டு
துன்பத்தை நீக்குவதற்கு
தேவையான நடவடிக்கைகளை
எடுத்து துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப் போல
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
நிதானமாகவும்
பொறுமையாகவும்
அலட்சியமாகவும் இருந்து
ஈடுபாடு இல்லாமல்
இருந்து நண்பனுக்கு
வரும் துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு நண்பனுடைய
துன்பத்தை நீக்குவது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்.

நமக்கு உடல்நிலை
சரியில்லை
என்று மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்கள்
நமக்கு நோய்
வந்து விட்டதே
இதை எப்படி போக்குவது
பணம் எப்படி திரட்டுவது
உதவிக்கு ஆட்களை
எப்படி அழைப்பது
அலுவலகத்திற்கு
விடுப்பு எப்படி எடுப்பது
என்று நமக்கு துன்பம்
வரும் போது நாம்
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாக இருந்து
முழு ஈடுபாட்டுடன்
இருந்து பல்வேறு
செயல்களைச்செய்து
நமக்கு வந்த துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப்போல்
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
அந்த துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழுஈடுபாட்டுடன்
இருந்து
செயல்களைச் செய்து
நண்பனுக்கு வரும்
துன்பத்தை நீக்குவது
நம்முடைய துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்

நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வதற்கு மனம்
இருந்தால் போதும்
ஆனால்
நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
நம்முடைய துன்பம்
போல் கருதி
உதவி செய்வதற்கு
அன்பும், கருணையும்
வேண்டும்

அன்பும், கருணையும்
யாருடைய உள்ளத்தில்
இருக்கிறதோ
அவரால் மட்டுமே
நண்பன் துன்பப்படும்போது
தன் துன்பம் போல் கருதி
உதவி செய்ய முடியும்

நாம் நான்கு நண்பர்களுடன்
பேசிக் கொண்டு
இருக்கிறோம்
அப்பொழுது
நம் உடலிலிருந்து உடை
நழுவினால் எப்படி கை
உடனே சென்று
அதை பிடித்து
நம்முடைய மானத்தை
காப்பாற்ற முயற்சி
செய்கிறதோ
அதைப்போல நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நமக்கு ஒரு துன்பம்
வரும் போது எப்படி
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும்
முழுஈடுபாட்டுன்
செயல்களைச் செய்து
அதை நீக்குவதற்கு
தேவையானநடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்கினோமோ
அதைப்போல
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
துன்பப்படுகிறான்
என்பதை கேள்விப்
படும்போது
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழு ஈடுபாட்டுடன்
செயல்களைச் செய்து
துன்பத்தை நீக்குவதற்கான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்க வேண்டும்
என்பதைத் தான்

“”””உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு”””””

என்ற திருக்குறள்
மூலம் திருவள்ளுவர்
விளக்குகிறார்.
  
----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்
-----------04-08-2019
///////////////////////////////////////////////////////////