November 13, 2019

கடிதம்


அன்பிற்கினியவர்களே!

“19-10-2011-ஆம் தேதி முதல்
kbalagangadharan.blogspot.com
என்ற BLOGSPOT-முகவரியில்
“பாலாவின்
பார்வையில் சித்தர்கள்”
என்ற தலைப்பில் நான்
எழுதத் தொடங்கினேன்!”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைகளுக்கு
விளக்கங்கள்!”

“அகஸ்தியர், போகர்,
சிவவாக்கியர் என்று
பெரும்பாலான சித்தர்கள்
எழுதிய கடினமாக
பாடல்களுக்கு விளக்கங்கள்!”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும் 
ஒப்பீடு செய்து ஆய்வுக்
கட்டுரைகளுடன்
கூடிய விளக்கங்கள்!”

“பல்வேறு வகையான
தமிழ் இலக்கியங்களில்
உள்ள பலதரப்பட்ட
பாடல்களுக்கு விளக்கங்கள்!“

“திருவள்ளுவர் எழுதிய
திருக்குறளுக்கு விளக்கங்கள்!

“பழமொழிகளை மாற்றாமல்
அதற்குரிய விளக்கங்கள்!”

“வாழ்த்து மடல்!
கவிதைகள்!
வரலாற்றுக் கட்டுரைகள்!
அறிவியல் கட்டுரைகள்!
என்று பல்வேறு விதமான
கட்டுரைகள் என
இன்று வரை 476-க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை
எழுதி இருக்கிறேன்
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்!”

“பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
BLOGSPOT-லும்,

Bala Gangadharan-என்ற
பெயரைக் கொண்ட
FACE BOOK-லும்,

பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
FACE BOOK-லும்,

தொடர்ந்து கட்டுரைகள்
எழுதி வருகிறேன்”

“ஒரு வருடத்திற்கு முன்பு
WHATS APP-ல் ஜபம் என்ற
தலைப்பில் பல்வேறு
கட்டுரைகள் எழுதி
வருகிறேன்!”

“உலகத்தில் நடந்தவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
எழுதப்பட்டவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
அதனுடைய
மையக் கருத்தையும்
கதையையும் மட்டுமே
எடுத்துக் கொண்டு
கதை,திரைக்கதை,வசனம்,
என்னுடைய சொந்த
அறிவைப் பயன்படுத்தி
தமிழ்மொழியில் எழுதிக்
கொண்டு வருகிறேன்
என்பதை அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“உலகம் முழுவதும்
இருக்கும் என்னுடைய
ரசிகர்கள் என்மேல்
அன்பு கொண்டவர்கள்
என பல்வேறு தரப்பினரும்
ஒன்றாக இணைந்து
என்னுடைய கட்டுரைகளை
ஒவ்வொரு கால கட்டத்திலும்
புத்தகமாக கொண்டுவர
முயற்சி செய்தோம்”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைக்குரிய
விளக்கங்களை புத்தகமாக
கொண்டு வர முயற்சி
செய்தோம் முடியவில்லை”

“சித்தர்கள் எழுதிய
பாடல்களுக்கு நான்
எழுதிய விளக்கங்கள்
அடங்கியவைகளை
புத்தகமாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும்
ஒப்பிட்டு நான் எழுதிய
ஆய்வுக் கட்டுரையை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“நான் எழுதிய பல்வேறு
கட்டுரைகளை ஒன்றிணைத்து
கட்டுரைகளாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“ஆனால் தற்போது
BLOGSPOT-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
FACEBOOK-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
WHATSAPP-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
ஆகிய அனைத்தையும்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான அனைத்து
ஆயத்த வேலைகளையும்
தொடங்கி செய்து
கொண்டு இருக்கிறோம்”

“இதற்காக உலகம்
முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்
என்மேல் அன்பு
கொண்டவர்கள் ஆகிய
அனைவரும் ஒன்றாக
இணைந்து பொருளுதவி
மற்றும் பல்வேறு
உதவிகளை தங்களால்
இயன்ற அளவு
செய்து வருகிறார்கள்”

“நான் எழுதிய கட்டுரைகளை
எப்படி எந்த வடிவில்
புத்தகமாக கொண்டு
வருவது என்பதைப் பற்றியும்
எத்தகைய புத்தகங்களாக
பதிப்பு செய்வது
என்பதைப் பற்றியும்
எத்தகைய வடிவத்தில்
கொண்டு வருவது
என்பதைப் பற்றியும்
கட்டுரைகளை எந்த
தலைப்பின் கீழ்
தனித்தனியாக பிரித்து
வெளியிடுவது என்பதைப்
பற்றியும் கடினமாக அலுவல்
பணிகளுக்கிடையேயும்
கஷ்டமான குடும்ப
சூழ்நிலைகளுக்கிடையேயும்
என்னுடைய கட்டுரைகளை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்து
அனைவரும் உழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்”

“இறைவனின் அருளாலும்
சித்தர்களின் ஆசியினாலும்
அன்புள்ளம் கொண்டவர்களின்
வழிகாட்டுதலினாலும்
உயிரனைய உறவுகளின்
உழைப்பாலும் -என்னுடைய
கட்டுரைகள் அனைத்தும்
2020 ஆம் ஆண்டு
ஒவ்வொன்றாக
புத்தகமாக வெளிவரும்
என்பதைத் தெரிவித்துக்
கொள்வதில் நான்
மிகுந்த மகிழ்சசி
அடைகிறேன்!”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------13-11-2019
//////////////////////////////////////////////





November 11, 2019

பரம்பொருள்-பதிவு-82


             பரம்பொருள்-பதிவு-82

“மாவீரனாகிய
அர்ஜுனன்
போகும் போது
உயர் எண்ணம்
கொண்ட
மகாத்மாக்களும் ;
வேதங்களில்
கரை கண்ட
உத்தமர்களும் ;
வேதங்களையும்,
வேதாங்கங்களையும்
அறிந்த அறிவில்
சிறந்தோர்களும் ;
ஆத்ம ஞானம்
உள்ளவர்களும் ;
பிசைஷ
எடுப்பவர்களாகிய
பிரம்மச்சாரிகளும் ;
கடவுள் மேல்
உண்மையான பக்தி
செலுத்துபவர்களும் ;
புராணங்கள்
சொல்லும்
ஸூதர்களும் ;
பிரபஞ்ச
ரகசியங்களை
எளிமையான
கதைகளின்
மூலமாக
சொல்லுகிறவர்களும் ;
காட்டில்
வசிக்கின்ற
சந்நியாசிகளும் ;
சிறந்த
இதிகாசங்களை
அனைவரும்
உணரும் வண்ணம்
இனிமையாகப்
படித்து
காட்டுகிறவர்களும் ;
பிறர் மனம்
மகிழும்படி இனிய
கதைகளைச்
சொல்லுகிறவர்களும் ;
பல்வேறு
வகையான
தனித்திறமை
கொண்டவர்களும் ;
என அநேகம் பேர்
சூழப்பட்டவனாக
அர்ஜுனன்
தேவர்களால்
சூழப்பட்ட
இந்திரனைப் போல
நடந்து சென்றான்”.

“அழகியவைகளையும்;  
புதியவைகளையும் ;
வனங்களையும் ;
தடாகங்களையும் ;
நதிகளையும் ;
கடலையும் ;
தேசங்களையும் ;
புண்ணிய
தீர்த்தங்களையும் ;
கண்டான்
அர்ஜுனன் ;
கங்கை
உற்பத்தியாகும்
இடமான
கங்கோத்பத்தியை
அடைந்து
அங்கே தங்கினான்;”

“அர்ஜுனனும்
பிராமணர்களும்
அங்கே தங்கியிருந்த
போது - அந்தப்
பிராம்மணர்களில்
பலர்
அக்கினிஹோத்திரங்களைச்
செய்ய
ஆரம்பித்தனர் ;”

“வித்வான்களாலும் ;
நியமம்
தவறாதவர்களாலும்;
சன்மார்க்கத்தில்
இருக்கக்கூடிய
மகாத்மாக்களாலும் ;
கங்கைக்
கரையில்
அக்கினிகளை
உண்டாக்கியபோது
எழுந்த
பிரகாசமும் ;
ஹோமமும் ,
புஷ்பார்ச்சனையும் ,
செய்யப்பட்டபோது
உண்டான
தெய்வீகமும்;
அந்த கங்கை
உற்பத்தியாகும்
இடத்தை அழகாக
மாற்றியது ;”   
       
“அர்ஜுனன்
குளிப்பதற்காக
கங்கையில்
இறங்கினான்,
அங்கே குளித்து
பிதிர்தர்ப்
பணமுஞ்செய்து
அக்கினி
ஹோத்திரம்
செய்வதற்காக
நீரிலிருந்து
கரையேற
நினைக்கும்போது
ஒரு பெண்
அர்ஜுனனைத்
தன் மாய
சக்தியால்
நதியின்
அடித்தளத்திற்கு
இழுத்துச்
சென்றாள்”

“அந்தப்
பெண் தான்”

“அந்தப்
பெண்ணின்
பெயர் தான்……………..?”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------11-11-2019
//////////////////////////////////////////

November 10, 2019

பரம்பொருள்-பதிவு-81


             பரம்பொருள்-பதிவு-81

தர்மர் :
“சட்டத்தை
உருவாக்கிய
எத்தனையோ பேர்
காலத்திற்கு
ஏற்றபடியும் ;
நடைபெற்ற
சூழ்நிலையின்
அவசியத்திற்கு
ஏற்றபடியும் ;
சட்டத்தில்
திருத்தங்கள் செய்து
கொள்வதில்லையா ?
நாமும் காலத்தை
கருத்தில் கொண்டும் ;
நடைபெற்ற
சூழ்நிலையின்
அவசியத்தை
கருத்தில் கொண்டும்;
நாம் வகுத்துக்
கொண்ட சட்டத்தில்
ஏன் திருத்தங்கள்
செய்யக்கூடாது.”

அர்ஜுனன்:
“சட்டத்தை
யாரால் பின்பற்ற
முடியவில்லையோ ?
அவர்கள் தான்
சட்டத்தை
திருத்துவார்கள் ;
சட்டம் தன்னை
பாதிக்கிறது என்று
தெரிந்தவுடன்
தனக்கு தேவைப்படும்
விதத்தில் சட்டத்தை
திருத்துவார்கள் ;
தன்னுடைய
கொள்கைகளை
பிறர் மேல்
திணிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள்;
தனக்கும் தன்னைச்
சுற்றியுள்ளவர்களுக்கும்
நன்மைகள் ஏற்பட
வேண்டும் என்ற
காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள் ;
எந்தவிதமான
குற்றத்திற்குரிய
தண்டனையையும் தான்
அனுபவிக்கக்கூடாது
என்ற காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள் ;
நாமும் அப்படியே
செய்தால் நமக்கும்
மற்றவர்களுக்கும்
என்ன வேறுபாடு
இருக்கிறது?”
       
“சட்டத்தை மதிக்காமல்
நமக்கு ஏற்றபடி
சட்டத்தை
திருத்திக் கொணடால்
நாளைய வரலாறு
நம்மைப் பார்த்து
எள்ளி நகையாடாதா?
மக்கள் நம்மை
தவறாக நினைக்க
மாட்டார்களா ?
உண்மையைப் பின்பற்றி
வாழ்ந்து கொண்டிருக்கும்
நம்மைப் பார்த்து
வரலாறு சிரிக்காதா?”

“இத்தகைய ஒரு
இழிநிலை நமக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும் என்றால்
நமக்கு நாமே
ஏற்படுத்திக் கொண்ட
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
கண்டிப்பாக
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லத்
தான் வேண்டும் ;
சட்டத்திற்கு முன்
அனைவரும் சமம்
என்பதை இந்த உலகம்
உணர வேண்டும்
என்றால் நான்
12 மாதங்கள்
கண்டிப்பாக
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லத்
தான் வேண்டும் ;
எனக்கு ஆசி
கூறி வழியனுப்பி
வையுங்கள்”

தர்மர் :
“அர்ஜுனா
தர்மத்தின் காவலனாக
என்னை இந்த
உலகம் ஏற்றுக்
கொண்டிருக்கும்
என்னிடமே நீ
தர்மத்தைப் பற்றி
உரைப்பதைக்
கேட்கும் போது
தர்மரின் தம்பி
அர்ஜுனனும்
ஒரு தர்மவான்
என்பதை எனக்கு
உணர்த்தி விட்டாய் ;
இதற்கு மேல்
நான் உன்னைத்
தடுக்கப் போவதில்லை ;
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்ல
அனுமதிக்கிறேன்”

அர்ஜுனன்:
“என்னை ஆசிர்வதித்து
வழியனுப்பி
வையுங்கள் அண்ணா!”

தர்மர் :
“என்னுடைய ஆசி
உனக்கு
என்றுமே உண்டு!
நீ வரும்
வழி நோக்கி - நான்
விழி வைத்து
காத்துக்
கொண்டிருப்பேன்
சென்று வா!”

என்று தர்மர்
தன்னுடைய தம்பி
அர்ஜுனனை வாழ்த்தி
வழியனுப்பி வைத்தார்;
அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டு
அர்ஜுனன்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
செல்லத் தயாரானான்;”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------10-11-2019
//////////////////////////////////////////

November 08, 2019

பரம்பொருள்-பதிவு-80


            பரம்பொருள்-பதிவு-80

அர்ஜுனன்:
"அண்ணா நாம் நமக்குள்
வகுத்துக் கொண்ட
விதிமுறைகளின் படி;
மேற்கொண்ட
ஒப்பந்தங்களின்படி ;
செய்து கொண்ட
சத்தியத்தின்படி ;
பின்பற்றப்பட வேண்டிய
சட்டங்களின் படி;
நான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்ல
முடிவு எடுத்து விட்டேன்;
என்னை ஆசிர்வதித்து
எனக்கு விடை கொடுத்து
வழியனுப்பி வையுங்கள்;”

தர்மர் :
"அர்ஜுனா! நீ என்ன
தவறா இழைத்து
விட்டாய்? - உன்
கடமையைத்
தானே செய்தாய்!
நீதியை நிலை நாட்ட
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஆயுதங்களை
எடுப்பதற்காக
ஆயுத சாலைக்குள்
வந்தாய் இது
எப்படி குற்றமாகும்?
இந்த நிகழ்வில்
சம்பந்தப்பட்டிருக்கும்
நானே நீ செய்தது
தவறு என்று
சொல்லவில்லை
அப்படி இருக்கும் போது
நீ ஏன் வனவாசம்
போக வேண்டும்."

அர்ஜுனன்:
"சட்டத்தை வகுத்தக்
கொண்ட நாமே
சட்டத்தை மீறலாமா?
அண்ணா"

தர்மர் :
"தவறு இழைத்தவர்களைத்
தான் தண்டிக்க
வேண்டும் என்று சட்டம்
சொல்கிறதே தவிர - தவறு
இழைக்காதவர்களை அல்ல
அப்படியிருக்கும் போது
தவறு இழைக்காத உன்னை
நான் எவ்வாறு
தண்டிக்க முடியும்”

அர்ஜுனன்:
"நான் தவறு இழைத்தவன்
அதனால் தான் எனக்கு
தண்டனை
அளியுங்கள் என்கிறேன்"

தர்மர்:
“நிகழ்வுடன்
சம்பந்தப்பட்டவன்
நான் தான்;
நீ தவறு இழைத்தாய்
என்று நான் தான்
சொல்ல வேண்டும்,
நான் தான் அவ்வாறு
சொல்லவேயில்லையே
அப்படி இருக்கும் போது
நீ எவ்வாறு தவறு
இழைத்தவன் ஆவாய்”

அர்ஜுனன்:
“நீங்கள் சொல்ல
மாட்டீர்கள் என்று
எனக்குத் தெரியும் ;
என் மேல் உள்ள
அளவு கடந்த பாசத்தால்
எனக்கு தண்டனை
அளிக்க மாட்டீர்கள்
என்று எனக்கு தெரியும்;
நான் செய்த செயலை
நியாயப்படுத்துவீர்கள்
என்று எனக்கு தெரியும்;”

தர்மர் :
“சட்டம் என்பது நாம்
வகுத்துக் கொண்டது தானே !
நமக்கு தேவைப்படும் போது
அதில் திருத்தங்கள் செய்து
கொள்வதில் தவறு
ஒன்றும் இல்லையே!
காலத்திற்கு ஏற்றாற்போல்
நாம் ஏன் அதில்
சில மாற்றங்களைச்
செய்து கொள்ளக் கூடாது”

அர்ஜுனன்:
“சட்டத்தை உருவாக்கிய
நாமே நமக்கு பாதகமாக
இருக்கிறது என்ற
காரணத்திற்காக  
சட்டத்தை மாற்றலாமா?
சட்டத்தை பின்பற்ற
முடியவில்லை என்ற
காரணத்திற்காக
சட்டத்தை திருத்தலாமா ?
நாம் உருவாக்கிய
சட்டமே நம்மை
பாதிக்கிறது என்ற
காரணத்திற்காக
சட்டத்தில்
திருத்தங்களைச்
செய்யலாமா?”

“நம்முடைய குடும்பம்
எந்தவிதமான பிரச்சினையும்
இல்லாமல் சுமூகமாக
நடக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
நமக்கு நாமே உருவாக்கிக்
கொண்ட சட்டத்தை நாமே
மதித்து பின்பற்றவில்லை
என்றால் - நாட்டிற்காக
மக்களுக்காக உருவாக்கப்பட்ட
சட்டத்தை மக்கள்
எவ்வாறு பின்பற்றுவார்கள்”

“முன்னுதாரணமாக இருக்க
வேண்டிய நாமே சட்டத்தை
மதித்து பின்பற்றவில்லை
என்றால் - சட்டத்தை மீறி
மக்கள் தவறு செய்யும்
போது மக்களை
கேள்விகள் கேட்கவும்
மக்களை தண்டிக்கவும்
நம்மால் எவ்வாறு முடியும்”

“சட்டம் என்பது
அனைவருக்கும்
பொதுவானதாக
இருக்க வேண்டும் ;
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
என்ற வேறுபாடு
இருக்கக் கூடாது ;
பணக்காரர் ஏழை
என்ற பாகுபாடு
இருக்கக் கூடாது ;
இல்லை என்றால்
ஆளும் வர்க்கமும்
அதிகார வர்க்கமும்
முதலாளி வர்க்கமும்
சட்டத்தை தங்களுக்கு
ஏற்றாற் போல்
வளைத்துக் கொள்ளக்கூடிய
நிலை ஏற்படும் ;
இத்தகைய ஒரு
தவறான நிலை,
வருத்தப்படக்கூடிய நிலை
நாளை நம்முடைய
நாட்டில் ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்றால் கண்டிப்பாக
நான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக வனவாசம்
போய்த்தான் ஆக வேண்டும்”

தர்மர் :
“சட்டத்தை…………………………?”
.       
-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------08-11-2019
//////////////////////////////////////////