April 09, 2020

பரம்பொருள்-பதிவு-183


              ஜபம்-பதிவு-431
            (பரம்பொருள்-183)

“பீமனின் கைகளில்
இருந்த வாள்
நடுங்கத் தொடங்கியது ;
பயம் என்றால்
என்னவென்று தெரியாத
பீமனின் கரங்கள்
அவனையும் அறியாமல்
ஆடத் தொடங்கியது ;
பீமனுடைய உள்ளம்
தடுமாறத் தொடங்கியது ;
உள்ளத்தில் கவலை
பீறிட்டு எழுந்து
ஓடத் தொடங்கியது ;
இனம் புரியாத
கவலை சிந்தனை
முழுவதையும்
ஆக்ரமிக்கத் தொடங்கியது ;
வியர்வை பீமனின்
உடல் முழுவதும்
கொட்டத் தொடங்கியது ; “

“பீமன்
தன்னுடைய உள்ளம்
கலக்கமடைந்து
கொண்டிருப்பதைக்
கண்டான் ;
எடுத்த வாளை
அப்படியே இறக்கத்
தொடங்கினான் ;
என்னால் முடியவில்லை
என்று சொல்லிக் கொண்டே
எடுத்த வாளை
காளி தேவியின்
பாதங்களில் வைக்கத்
தொடங்கினான் ; “ 

“இதனைக் கண்ட
கிருஷ்ணன் பேசத்
தொடங்கினார் “

கிருஷ்ணன் :
“பீமா ! ஏன் எடுத்த
வாளை வைத்து விட்டாய் ;
ஏன் அரவான் தலையை
வெட்டவில்லை ;

தைரியசாலியாக இருக்கும்
நீ எப்போது முதல்
கோழையாக மாறினாய் ? “

பீமன் :
“நாளை இந்த உலகம்
என்னை கோழை என்று
சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத் தான்
நான் அரவானுடைய
தலையை வெட்ட வில்லை “

கிருஷ்ணன் :
“உலகம் ஏன் உன்னை
கோழை என்று
சொல்லப் போகிறது ? “

பீமன் :
“என்னை எதிரியாக
நினைத்து எனக்கு எதிரே
யார் ஆயுதம் ஏந்தி
நின்றாலும்
அவர்களுடைய
தலையை கிள்ளி
எறிந்து விடுவேன்  ;
ஆனால் அரவான் என்
முன்னால் ஆயுதம்
எதுவும் இல்லாமல்
அல்லவா நிற்கிறான் “

“ஆயுதம் இல்லாமல்
இருக்கும் அரவானுடைய
தலையை நான் வெட்டினால்
நாளை இந்த உலகம்
என்னை கோழை
என்று சொல்லாதா ? “

“நிராயுதபாணியாக
இருந்த அரவானின்
தலையை வெட்டியது
இவன் தான்  ;
இவன் ஒரு கோழை
என்று நாளை இந்த உலகம்
என்னை வசை பாடாதா ? “

“அது மட்டுமல்ல
அரவானின் பார்வை
என்னுடைய தைரியத்தை
பலமிழக்கச் செய்கிறது “

“ஆயுதம் இல்லாமல்
நிராயுதபாணியாக
இருக்கும் என்னுடைய
தலையை வெட்டுவதற்கு
உங்களுக்கு எப்படி
மனது வந்தது ;
இது தான் உங்களுடைய
வீரமா ? - என்று என்னை
கேள்வி கேட்பது போல
இருக்கிறது அரவான்
என்னைப் பார்த்த பார்வை “

“இந்த பாலகனுடைய
தலையை வெட்டுவதில் தான்
உங்களுடைய வீரம்
அடங்கி இருக்கிறதா என்று
என்னை கேலி செய்வது
போல் இருக்கிறது - அரவான்
என்னைப் பார்த்த பார்வை  

“அதனால் தான்
ஆயுதம் ஏதும் இல்லாமல்
நிராயுதபாணியாக
இருக்கும் அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியவில்லை ;

கிருஷ்ணன்  :
“போரில் நிராயுதபாணியாக
நின்று கொண்டு இருப்பவரை
கொல்வது யுத்த தர்மத்திற்கு
எதிராக இருக்கலாம் ஆனால்
இது போர் கிடையாதே
களப்பலி தானே  

பீமன்  :
“இரண்டும் ஒன்று தான் “

“போர் என்றாலும்
களப்பலி என்றாலும்
அதனுடைய முடிவு
எதிரே இருப்பவருடைய
உயிரை எடுப்பது தானே  

“அதனால் தான்
நான் சொல்கிறேன்
நிராயுதபாணியாக
இருக்கக் கூடிய
அரவானுடைய தலையை
என்னால் வெட்ட
முடியாது என்று “

கிருஷ்ணன்  :
“அரவானுடைய தலையை
வெட்ட முடியாது என்றால்
வெட்ட முடியாது என்று
சொல்லி விட்டுப் போ !
அதை விடுத்து ஏன்
இப்படி சுற்றி வளைத்து
பேசிக் கொண்டிருக்கிறாய் “

(“பீமன் அமைதியாக
நின்று கொண்டிருக்கிறான் “)

கிருஷ்ணன்  
“அர்ஜுனா  !
அடுத்து நீ தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-04-2020
//////////////////////////////////////////


April 08, 2020

பரம்பொருள்-பதிவு-182


             ஜபம்-பதிவு-430
           (பரம்பொருள்-182)

கிருஷ்ணன்  :
“பீமா !
அரவானுடைய
தலையை
வெட்ட முடியாது
என்று தர்மர்
சொல்லி விட்ட
காரணத்தினால்
அந்த கடமையை
நிறைவேற்ற
வேண்டிய மிகப்
பெரிய பொறுப்பு
பஞ்ச பாண்டவர்களில்
இரண்டாவதாக
இருக்கும் உன்னிடம்
ஒப்படைக்கப்
பட்டிருக்கிறது “  

“உன்னிடம்
ஒப்படைக்கப்
பட்டிருக்கும் கடமையின்
தன்மையை உணர்ந்து
அந்தக் கடமையை
திறம்படச் செய்வாய்
என்று எதிர்பார்க்கிறேன்  ;
உன்னுடைய
கடமையிலிருந்து
நீ தவற மாட்டாய்
என்று நினைக்கிறேன் ;”

“பஞ்ச
பாண்டவர்களில்
நீ தான்
தைரியசாலியா
இருப்பவன் ;
ஒரு விஷயத்தில்
உண்மை இருக்கிறது
என்பதை உணர்ந்து
விட்டால்
எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
அந்த விஷயத்திற்காக
குரல் கொடுக்கக்
கூடியவனாக
இருப்பவன் ;
சிக்கலாக
இருக்கக் கூடிய
எந்த ஒரு
விஷயத்தையும்
கவலைப் படாமல்
துணிந்து செய்யக்
கூடியவனாக இருப்பவன் ;”

“இத்தகைய சிறப்பு
வாய்ந்த பல்வேறு
உயர்ந்த தன்மைகளைக்
கொண்டவனாக - நீ
இருப்பதால்
உன்னால் கண்டிப்பாக
அரவானுடைய
தலையை
வெட்ட முடியும் ;
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
தயாராக இருக்கிறாயா ?
பீமா - நீ இன்னும்
தயாராகவில்லையென்றால்
உன்னை தயார்
படுத்திக் கொள்”

“அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
நீ தயாராகி விட்டால்
காளி தேவியின்
அருகில் சென்று
காளி தேவியின்
முன்னால்
காளி தேவியின்
கால்களுக்கு
அடியில் வைக்கப்பட்டு
இருக்கும் அந்த
வாளை போய் எடு”

( பீமன் காளி தேவி
சிலையின் முன்னால்
போய் நிற்கிறான் ;
தான் தயார்
என்பதை
அனைவருக்கும்
தெரிவிக்கும் வகையில்
காளிதேவியின்
கால்களில் இருக்கும்
வாளை
எடுத்தான் பீமன் )

“பீமா! காளிதேவியை
மனதில் நினைத்து
பாண்டவர்கள்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்று
கூறிக்கொண்டே
அரவான்
தலையை வெட்டு “

“அரவானுடைய
தலையை வெட்டு
பீமா வெட்டு “

(பீமன் வாளை
எடுத்துக் கொண்டு
கண்களை மூடிக்
கொண்டு கடவுளை
தியானிக்கிறான் ;
மனதிற்குள்
மந்திரங்களைச்
சொல்லிக் கொண்டு
இருக்கிறான் ;
அவன் மந்திரம்
சொல்கிறான்
என்பதற்கு
ஆதாரமாக
அவனுடைய
உதடுகள் மட்டும்
அசைந்து
கொண்டிருந்தது ;”

“பீமன்
கண்ணைத் திறந்தான்  ;
வாளை எடுத்தான் ;
அரவான்
அருகில் சென்றான்
தரையில் முட்டி
போட்டுக் கொண்டு
இருந்த அரவான்
தன் அருகில்
வாளை வைத்துக்
கொண்டு நின்று
கொண்டிருந்த
பீமனை பார்த்தான்

தன்னுடைய இரு
கைகளாலும்
பீமனை வணங்கினான்
அரவான்
இருவருடைய
கண்களும் நேருக்கு
நேராக சந்தித்தன “

“தான் களப்பலிக்கு
தயாராக இருக்கிறேன்
என்னுடைய
தலையை வெட்டுங்கள்
என்று ஒப்புதல்
அளித்தது போல
அரவான் தன்னுடைய
தலையை குனிந்தான் “

“இவ்வளவு நேரம்
தைரியமாக
இருந்த பீமன்
அரவானின் கண்களை
நேருக்கு நேராக
சந்தித்த பிறகு
தடுமாறத்
தொடங்கினான்” )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 08-04-2020
//////////////////////////////////////////



April 07, 2020

பரம்பொருள்-பதிவு-181


              ஜபம்-பதிவு-429
             (பரம்பொருள்-181)

“அரவான்
உறவு முறைக்குள்
இருக்கிறான்  ;
உறவினனாக
இருக்கிறான் ;
என்பதற்காக
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியவில்லை
என்று
சொல்லும் - நீ
நாளை
நடக்கப் போகும்
குருஷேத்திரப்
போரில்
உன்னை
எதிர்த்து
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
எப்படி
கொல்லப்
போகிறாய் ? “

“அவர்கள்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ? “

“எனக்கு
எதிராக நின்று
கொண்டிருப்பவர்கள்
என்னுடைய
உறவினர்கள்
ஆகவே
அவர்களை
நான் கொல்ல
மாட்டேன்
என்று
சொல்வாயா “

“இங்கேயே
அரவான்
எனக்கு உறவாக
இருக்கிறான் ;
ஆகவே
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியாது - என்று
சொல்லும் நீ
எப்படி
நாளை
நடக்கப் போகும்
போரில்
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
கொல்லப்
போகிறாய் ? “

தர்மர் :
“உறவினர்களாக
இருப்பவர்கள்
நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
எனக்கு
எதிராக
நிற்கும் போது
உறவினர்களாக
நின்றால் தான்
நான் தயக்கம்
காட்ட
வேண்டும்  

“ஆனால்
அவர்கள்
அனைவரும் என்
முன்னால்
உறவினர்களாக
நிற்கப்போவதில்லையே
எதிரிகளாகத்
தானே நிற்கப்
போகிறார்கள் “

“எதிரிகளாக
நிற்கப்
போகிறவர்களை
கொல்வதில்
எனக்கு
எந்தவிதமான
தயக்கமும்
இல்லை  

“ஆனால்
இங்கேயோ
அரவான் என்
முன்னால்
எதிரியாக
நிற்கவில்லையே
உறவாகத் தானே
நிற்கிறான் “

“உறவாக 
நிற்பவனுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட
முடியும் “

“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் “

“அதனால்
தான் நான்
சொல்கிறேன்
அரவான்
தலையை
என்னால்
வெட்ட
முடியாது என்று  

(என்று
சொல்லி
விட்டு
அமைதியாக
நின்று
கொண்டிருந்தார்
தர்மர்)

கிருஷ்ணன் :
“பீமா…………………………………?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-180


              ஜபம்-பதிவு-428
            (பரம்பொருள்-180)

 (கிருஷ்ணன்
தர்மரை
அழைத்து
தர்மரிடம்
பேசினார்)

கிருஷ்ணன் :
“தர்மா ! நீ
அனைத்தும்
அறிந்தவன்  ;
உண்மையை
உணர்ந்தவன் ;
தர்மத்தை
கடைபிடிப்பவன் ;
பஞ்ச
பாண்டவர்களில்
பெரியவன்  ;
அதனால் தான்
அரவானுடைய
தலையை
வெட்டும்
மிகப்பெரிய
பொறுப்பை
உன்னிடம்
ஒப்படைத்திருக்கிறேன் “

“நீ தான்
அரவான்
தலையை
வெட்ட
வேண்டும் “

“வாளை
எடுத்துக் கொள்
தர்மா !
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு “

(தர்மர் வாளை
எடுக்கிறார் ;
அரவானைப்
பார்க்கிறார் ;
சிறிது நேரம்
நிற்கிறார் ;
கொஞ்ச நேரம்
யோசிக்கிறார் ;
வாளை
காளி தேவியின்
சிலையின்
முன்னால்
அப்படியே
வைத்து விட்டு
பின்னால்
அப்படியே
நடந்து வந்து
பழைய
இடத்திலேயே
நின்று
கொள்கிறார்)

தர்மர் :
“என்னால்
அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லை
வெட்டவும்
முடியாது”

கிருஷ்ணன் :
“அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லையா ?
அல்லது
வெட்ட
முடியாதா ? “

தர்மர் :
“வெட்ட
முடியவில்லை
என்ற
காரணத்தினால்
தான்
வெட்ட
முடியாது
என்றேன் “

கிருஷ்ணன் :
“அதைத் தான்
ஏன் என்று
கேட்கிறேன் “

தர்மர் :
“அரவான்
பச்சிளம்
பாலகனாக
இருக்கிறான்
அது
மட்டுமல்ல
அரவான்
உறவு
முறைக்குள்
இருக்கிறான் ;
உறவாகவே
இருக்கிறான் ; “

“உறவாக
இருக்கக்கூடிய
அரவானுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட முடியும்”

“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் ;
அதனால் தான்
அரவானை
என்னால்
வெட்ட
முடியாது
என்றேன் ; “

கிருஷ்ணன் :
“நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
உனக்கு
எதிராக நின்று
போர் செய்யப்
போகிறவர்கள்
யார் என்று
நினைத்தாய்  ? “

“எதிரிகள்
என்று
நினைத்தாயா
எதிரிகள்
இல்லையே !”

“அவர்கள்
அனைவரும்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ! “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////