May 29, 2020

500- வது பதிவு !


                       500- வது பதிவு !

அன்பிற்கினியவர்களே

“29-05-2020-ம் தேதி
வெள்ளிக் கிழமை
அன்று
ஜபம் தன்னுடைய
500-வது பதிவை
தொட்டிருக்கிறது “

“என்னுடைய
வாழ்க்கையின்
இரண்டு
கண்களாக
என்றும்
திகழ்ந்து
கொண்டிருக்கும்
என்னுடைய
தாய் திருமதி
K.சொர்ணம்
காசிநாதன்
மற்றும்
என்னுடைய
மனைவி
திருமதி.
P.பிரதீபா
பாலகங்காதரன்
ஆகிய
இருவரும் தான்
இதற்கு
மூலக் காரணமும்
முதற் காரணமும்
முழுக் காரணமும்
அடிப்படைக்
காரணமும்
ஆவர் “

“என்னுடைய
உயிரில்
உயிர்த்து
இயக்கத்தில்
பரிணமித்து
சிந்தனையில்
துளிர்த்து
என்றும்
என்னுடன்
பிணைந்து
இருக்கும்

என்னுடைய
சகோதரர்களான
திரு,K.தில்லைராஜ்
திரு.K.தர்மேந்திரராஜ்
ஆகியோரின்
பாசக் கரம் ;

சீடர்களின்
உதவிக் கரம் ;

உறவினர்களின்
உறவுக் கரம் ;

நண்பர்களின்
நட்புக் கரம் ;

சுற்றத்தார்களின்
ஆதரவுக் கரம் ;

சித்தர்களின்
ஞானக் கரம் ;

இறைவனின்
அருட் கரம் ;

ஆகிய
அனைவருடைய
அன்புக் கரங்களே
என்னுடைய
இந்த
வெற்றிக்குக்
காரணம் “

“இவர்கள்
அனைவரையும்
வணங்கி
என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

“என்னுடைய
உயிர்த்தன்மை
இறை நிலையுடன்
இரண்டறக் கலந்து
அதுவாகவே
மாறும் வரை
என்னுடைய
கலைப்பணி
தொடரும்
ஜபம் இன்னும் வரும்
என்பதைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

நன்றி !

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////













அறிய வேண்டியவை-பதிவு-8


               500-வது பதிவு !

               ஜபம்-பதிவு-500
          (அறிய வேண்டியவை-8)

“திரௌபதியின்
சேலையை
துச்சாதனன்
உருவும் போது
திரௌபதி தன்னுடைய
மானத்தைக்
காக்க வேண்டும்
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
திரெளபதி
கிருஷ்ணனை
அழைத்தபோது
கிருஷ்ணன் வந்து
சேலையைக் கொடுத்து
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது
அனைவருக்கும்
தெரியும் ; 
ஆனால்
கிருஷ்ணன்
எப்போது வந்தார் ;
எப்போது சேலை
கொடுத்து உதவினார் ;
எப்போது
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது எத்தனை
பேருக்கு தெரியும் ;”

“துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
மற்றொரு கையை
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போதும்
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை ;”

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள்   ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் ;
சேலை தந்தார் ;
திரௌபதியின்
மானத்தைக் காத்தார் ; “

“அதாவது  
தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
காப்பாற்றிக்
கொள்ள  முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
ஒரு கையால்
காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னால்
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்றிக்
கொள்ள முடியாது
மனித சக்திக்கு
அப்பாற்பட்ட
கடவுள் சக்தியால்
மட்டுமே
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்ற முடியும்
என்று உணர்ந்து
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்த போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் “

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் வரமாட்டார் ;

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியாது
கடவுளால் மட்டுமே
அந்தச் செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் போது
தான் கடவுள்
வருவார் என்பதே
இந்த கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////

May 27, 2020

அறிய வேண்டியவை-பதிவு-7


                ஜபம்-பதிவு-499
           (அறிய வேண்டியவை-7)

கிருஷ்ணன் :
“தர்மர் என்ற சொல்
உடம்பு கிடையாது ;
அது வெறும்
வார்த்தை மட்டுமே ;
உன்னுடைய அண்ணன்
மனது வருத்தப்படும் படி
ஏதேனும் வார்த்தையால்
அவரை நீ திட்டினால்
உன்னுடைய அண்ணனான
தர்மரைக் கொன்றதாக
அர்த்தம் - உன்னுடைய
சபதமும் நிறைவேறும் ;
நீயும் சபதத்தை மீறியவன்
ஆக மாட்டாய் - உனக்கும்
பாவம் வந்து சேராது “

“கிருஷ்ணனுடைய
சொல்லைக் கேட்ட
அர்ஜுனன் - தன்னுடைய
வாளைக் கீழே
போட்டான் தர்மருடைய
மனம் வருத்தப்படும்படி
திட்டத் தொடங்கினான் “

அர்ஜுனன் :
“அண்ணா ! நீ எந்தப்
போருக்குப் போனாய் ;
உனக்கு என்ன
ஆற்றல் உண்டு ; “

(இந்த இரண்டு
வார்த்தைகளை மட்டுமே
சொன்னான் அர்ஜுனன்

நீங்கள் என்று
பன்மையில் மரியாதையாகச்
சொல்லாமல் - நீ என்று
ஒருமையில் மரியாதைக்
குறைவாகச் சொன்னான்

உங்களுக்கு என்று
பன்மையில் மரியாதையாகச்
சொல்லாமல் - உனக்கு என்று
ஒருமையில் மரியாதைக்
குறைவாகச் சொன்னான்

மரியாதையாக
அண்ணனிடம் பேசாமல்
மரியாதையற்று பேசினான்

இவ்வாறு மரியாதையற்று
பேசி முடித்த பின்
அர்ஜுனன் தன்னுடைய
வாளை எடுத்து
தன்னுடைய கழுத்தில்
வைத்தான் தற்கொலை
செய்து கொள்ள முயன்றான்)

இக்காட்சியைக் கண்ட
கிருஷ்ணன் அர்ஜுனனைத்
தடுக்க ஓடினார் )

கிருஷ்ணன் :
“என்ன அர்ஜுனா !
எத்தகைய காரியத்தை
செய்யத் துணிந்தாய் ;
உனக்கு என்ன புத்தி
பேதலித்து விட்டதா ?
சிந்தை தடுமாறி விட்டதா?
மனம் குழம்பி விட்டதா?
எதற்காக உன்னை
நீயே கொலை செய்து
கொள்ள முயல்கிறாய்
எதற்காக தற்கொலை
செய்து கொள்ள துடிக்கிறாய்”

அர்ஜுனன் :
“என்னுடைய அண்ணன்
எனக்கு கடவுள் மாதிரி ;
தந்தையினும் மேலானவர் ;
அமைதியின் சொரூபம் ;  
தர்மத்தின் வடிவம் ;
அத்தகையவரை
“நீ ! உனக்கு ! “ என்ற
மரியாதைக் குறைவான
வார்த்தையால் பேசி
திட்டி விட்டேன் ;
என்னுடைய இதயமே
வெடித்து விடும்
போல இருக்கிறது ;
நான் இந்த உலகத்தில்
உயிர் வாழ தகுதியற்றவன் ;
என்னை விடு பரந்தாமா
நான் தற்கொலை செய்து
கொள்ளப் போகிறேன் “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா! நில் ! நான்
சொல்வதைக் கேள் ;
நீ தற்கொலை செய்து
கொள்வதால் பிரச்சினைகள்
அனைத்தும் தீர்ந்து விடுமா? “

“எவன் ஒருவன்
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்கிறானோ
அவன் தன்னைத் தானே
தற்கொலை செய்து
கொண்டவனாகிறான் ;
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்வது
தற்கொலை செய்து
கொள்வதற்குச் சமம் ; “

“உன்னை நீயே புகழ்ந்து
கொள் - உன்னை நீயே
புகழ்ந்து கொண்டால்
உன்னையே நீ தற்கொலை
செய்து கொண்டவனாகிறாய்”

(அர்ஜுனன் வாளை கீழே
எறிந்து விட்டு தன்னைத்
தானே புகழ்ந்து
கொள்ளத் தொடங்கினான்)

அர்ஜுனன் :
“இந்த உலகத்திலேயே
வீரத்திற்கு ஒரே
எடுத்துக் காட்டாய்
இருப்பவன் நான்
ஒருவன் மட்டுமே ;
எனக்கு இணையாக
வில்லைப் பயன்படுத்தக்
கூடியவர்கள் இந்த
உலகத்தில்
யாருமே இல்லை; -போரில்
என்னை யாராலும்
வீழ்த்த முடியாது ;
பாசுபதாத்திரம்
பெற்றவன் நான் ;”

(என்று சொல்லி விட்டு
அர்ஜுனன் வெட்கத்தால்
தலை குனிந்தான் - தர்மரை
கண்களால் வணங்கினான் ;
கண்ணீரால் தர்மருடைய
பாதங்களைக் கழுவினான் ;
தர்மர் அவனுக்கு கண்களால்
ஆறுதல் சொன்னார் ;

பிறகு அர்ஜுனன்
போர்க்களம் சென்று
கர்ணனைக் கொன்றான் ; “

இந்தக் கதையில்
அறிய வேண்டிய
உண்மை என்னவென்றால்
பெரியவர்களை
நீ என்றும்
உனக்கு என்றும்
ஒருமையில்
மரியாதைக் குறைவாக
அழைப்பது பாவம் என்பதும் ;
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்வது
தற்கொலை செய்து
கொள்வதற்கு சமம்
என்பதும் விளங்கும் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 27-05-2020
//////////////////////////////////////////