May 29, 2020

500- வது பதிவு !


                       500- வது பதிவு !

அன்பிற்கினியவர்களே

“29-05-2020-ம் தேதி
வெள்ளிக் கிழமை
அன்று
ஜபம் தன்னுடைய
500-வது பதிவை
தொட்டிருக்கிறது “

“என்னுடைய
வாழ்க்கையின்
இரண்டு
கண்களாக
என்றும்
திகழ்ந்து
கொண்டிருக்கும்
என்னுடைய
தாய் திருமதி
K.சொர்ணம்
காசிநாதன்
மற்றும்
என்னுடைய
மனைவி
திருமதி.
P.பிரதீபா
பாலகங்காதரன்
ஆகிய
இருவரும் தான்
இதற்கு
மூலக் காரணமும்
முதற் காரணமும்
முழுக் காரணமும்
அடிப்படைக்
காரணமும்
ஆவர் “

“என்னுடைய
உயிரில்
உயிர்த்து
இயக்கத்தில்
பரிணமித்து
சிந்தனையில்
துளிர்த்து
என்றும்
என்னுடன்
பிணைந்து
இருக்கும்

என்னுடைய
சகோதரர்களான
திரு,K.தில்லைராஜ்
திரு.K.தர்மேந்திரராஜ்
ஆகியோரின்
பாசக் கரம் ;

சீடர்களின்
உதவிக் கரம் ;

உறவினர்களின்
உறவுக் கரம் ;

நண்பர்களின்
நட்புக் கரம் ;

சுற்றத்தார்களின்
ஆதரவுக் கரம் ;

சித்தர்களின்
ஞானக் கரம் ;

இறைவனின்
அருட் கரம் ;

ஆகிய
அனைவருடைய
அன்புக் கரங்களே
என்னுடைய
இந்த
வெற்றிக்குக்
காரணம் “

“இவர்கள்
அனைவரையும்
வணங்கி
என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

“என்னுடைய
உயிர்த்தன்மை
இறை நிலையுடன்
இரண்டறக் கலந்து
அதுவாகவே
மாறும் வரை
என்னுடைய
கலைப்பணி
தொடரும்
ஜபம் இன்னும் வரும்
என்பதைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

நன்றி !

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////













No comments:

Post a Comment