May 31, 2020

திருக்குறள்-குணனும்-பதிவு-1


                  பதிவு-1

                   “குணனும் குடிமையும்
                    குற்றமும் குன்றா
                    இனனும் அறிந்துயாக்க நட்பு”

                                 -------திருக்குறள்
                             --------திருவள்ளுவர்

“நமக்கு துன்பம் வரும்
போது அதை இரண்டே
இரண்டு குணம்
கொண்டவர்களிடம் தான்
சொல்ல முடியும் “

ஒன்று :
சுயநலத்துடன் வாழ்பவர்கள்

இரண்டு :
பொது நலத்துடன்
வாழ்பவர்கள்

“தன்னுடைய நலத்திற்காகவும்
தன்னுடைய குடும்பத்தின்
நலத்திற்காகவும்
வாழ்பவர்கள்
சுயநலத்துடன்
வாழ்பவர்கள் “

“தான் தனது குடும்ப
நலம் மட்டுமின்றி
பிறருடைய நலத்திற்காகவும்
வாழ்பவர்கள்
பொது நலத்துடன்
வாழ்பவர்கள் “

“தன்னுடைய கணவன்
தன்னுடைய மனைவி
தன்னுடைய குழந்தைகள்
என்று ஒரு எல்லை
வகுத்துக் கொண்டு
தங்களுடைய
குடும்ப நலனுக்காக
மட்டுமே வாழ்பவர்கள்
சுயநலத்துடன் வாழ்பவர்கள் “

“தன்னுடைய குடும்பம்
என்று ஒரு எல்லை
வகுத்துக் கொண்டு
வாழாமல் - இந்த
பிரபஞ்சத்தில் உள்ள
அனைவருடைய
குடும்பத்திற்காகவும்
வாழ்பவர்கள்
பொதுநலத்துடன்
வாழ்பவர்கள் “

“தன்னுடைய கணவனுக்கோ
தன்னுடைய மனைவிக்கோ
தன்னுடைய
குழந்தைகளுக்கோ துன்பம்
ஏற்பட்டால் மட்டும்
துடிப்பவர்கள் - அந்த
துன்பத்தை மட்டுமே
துன்பம் என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்கள் “

“மற்றவர்களுடைய
துன்பங்களை ஒரு
துன்பமாகவே நினைத்துப்
பார்க்காதவர்கள் “

“பிறருடைய துன்பங்களைக்
கண்டு கலங்காதவர்கள் “

“தன்னுடைய குடும்பம்
மட்டுமே சந்தோஷமாக
இருக்க வேண்டும்
என்பதற்காக செயல்களைச்
செய்து கொண்டிருப்பவர்கள் “

“தன்னுடைய குடும்பத்தை
வாழ வைக்க வேண்டும்
என்பதற்காக-பிறருடைய
குடும்பத்தை அழிக்கவும்
தயங்காதவர்கள் “

“பிறருடைய குடும்பத்தை
அழித்தாவது தன்னுடைய
குடும்பத்தை வாழ
வைக்க வேண்டும் என்று
நினைப்பவர்கள் “

“பிறர் துன்பப்படும் போது
அதைக் கண்டு சிரிப்பவர்கள்
ஓடி வந்து உதவி
செய்யாதவர்கள் ;
உதவி செய்ய
வருபவர்களையும்
உதவி செய்ய
விடாமல் தடுப்பவர்கள் ; “

“இவர்கள் தான்
சுயநலத்துடன்
வாழ்பவர்கள் “

“பொது நலத்துடன்
வாழ்பவர்கள்- மூன்று
செயல்களைச் செய்வார்கள்

ஒன்று :
துன்பத்தில் இருப்பவருக்கு
ஆறுதல் சொல்வார்கள்

இரண்டு :
துன்பத்தில் இருப்பவருக்கு
ஓடி வந்து உதவி செய்வார்கள்

மூன்று :
துன்பத்தில் இருப்பவருடைய
துன்பத்தில் பங்கேற்பார்கள்

இத்தகைய மூன்று
உயர்ந்த குணங்களைக்
கொண்டவர்கள் தான்
பொதுநலத்துடன் வாழ்பவர்கள்

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------31-05-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment