November 14, 2020

அறிய வேண்டியவை-160

 

ஜபம்-பதிவு-652

(அறிய வேண்டியவை-160)

 

துரியோதனன் :

“நாளை

நடைபெறப்போகும்

பகடை ஆட்டத்தின்

மூலம் இந்த

நால்வரும்

நம்முடன் தான்

இருப்பார்கள்

என்பதை எப்படி

சொல்ல முடியும்

மாமா அவர்களே!

 

சகுனி :

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டு

தான் இவர்கள்

நால்வரும் நம்முடன்

இருப்பார்களா

இல்லையா என்பதை

தீர்மானிக்கப்

போகிறது மருமகனே”

 

துரியோதனன் :

“அதைத் தான்

எப்படி என்று

கேட்கிறேன்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டும்

அதைத் தொடர்ந்து

நடைபெறப்போகும்

பல்வேறு நிகழ்விலும்

இவர்கள் நால்வர்

இருந்தும் இவர்களால்

ஒன்றும் செய்ய

முடியாமல் இருந்தாலும்

அவைக்குள் இருந்தும்

இவர்கள் நால்வரால்

ஒன்றும் செய்ய

முடியாமல் இருந்தாலும்

அவையை விட்டு

வெளியே செல்ல

முடியாமல்

அவைக்கு உள்ளேயே

இருந்தாலும்

இவர்கள் நால்வரும்

நம்மை விட்டு

பிரிய மாட்டார்கள்

என்று அர்த்தம்

என் அன்பு

மருமகனே !”

 

“நான் சொன்னபடி

இந்த விஷயம்

மட்டும்

நடந்து விட்டால்

இவர்கள் நால்வரும்

நம்முடன் தான்

இருப்பார்கள்

நமக்கு ஆதரவாகத்

தான் இருப்பார்கள்

நமக்காகத் தான்

போரிடுவார்கள்

நம்முடன் இணைந்து

பாண்டவர்களுக்கு

எதிராகத் தான்

போரிடுவார்கள் “

 

“இதில் சிறிதும்

சந்தேகம் இல்லை

என் அன்பு மருமகனே”

 

கர்ணன் :

“நீங்கள் சொன்ன

விஷயம் நடப்பதற்கும்

இந்த நால்வரும்

நம்முடன் இருப்பதற்கும்

என்ன ஒற்றுமை

இருக்கிறது என்று

எனக்குத்

தெரியவில்லை”

 

துரியோதனன் :

“எனக்கும் புரியவில்லை

மாமா அவர்களே!”

 

சகுனி :

“பீஷ்மர்

பாண்டவர்களிடம்

அன்பு கொண்டவர்.

பாண்டவர்களின்

நலனில்

அக்கறை கொண்டவர்

பாண்டவர்களின்

வாழ்வாதாரத்திற்காக

பாடுபடுபவர்

அத்தகையவரின்

முன்னிலையில்

அத்தகையவரின்

கண் எதிரில்

பாண்டவர்களுக்கு

எதிராக ஒரு விஷயம்

நடக்கும் போது

அதை தடுக்க

முடியாமல்

பீஷ்மர் இருப்பார்

என்றால்

பாண்டவர்களுக்கு

எதிராக நடக்கக்கூடிய

விஷயத்திற்கு எதிராக

அவரால் ஒன்றும்

செய்ய முடியாமல்

இருப்பார் என்றால்

அவையை விட்டு

வெளியே செல்ல

முடியாமல்

அவைக்கு உள்ளேயே

அமர்ந்திருப்பார் என்றால்

நாளை போர் என்ற

ஒன்று ஏற்பட்டால்

அவர் நம்

பக்கம் இருப்பார்

நமக்காகத் தான்

போர் புரிவார்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-159

 

ஜபம்-பதிவு-651

(அறிய வேண்டியவை-159)

 

சகுனி :

“உள்ளே ஒன்றை

வைத்துக் கொண்டு

வெளியே ஒன்றை

பேசிக் கொண்டு

நம்மிடம் உறவு

வைத்துக் கொண்டு 

நல்லவர்கள் போல்

நடித்துக் கொண்டு

நமக்காக

வாழ்பவர்கள் போல்

செயல்களைச்

செய்து கொண்டு

நம்மேல் அக்கறை

இருப்பது போல்

காட்டிக் கொண்டு

நம்மிடம்

உண்மையான

நட்பு வைத்திருப்பது

போல் அன்பு

செலுத்திக் கொண்டு

இருப்பவர்களிடம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்”

 

“ஏனென்றால்

இவர்கள் இரட்டை

வாழ்க்கை வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

எந்த நேரத்திலும்

மாறக்கூடியவர்கள்

எந்த நேரத்திலும்

நம்மை விட்டு

செல்லக் கூடியவர்கள்

நமக்கு பிரச்சினை

ஏற்படும் போது

அவர்களுக்கு

அந்த பிரச்சினை

ஏற்பட்டு விடக்கூடாது

என்று நம்மை விட்டு

ஓடி விடக்

கூடியவர்கள்

இத்தகையவர்கள்

தாங்கள்

வாழ்வதற்காக

நம்மையே காட்டிக்

கொடுக்கவும் தயங்க

மாட்டார்கள்”

 

“இத்தகைய

இரட்டை வாழ்க்கை

வாழும் இந்த

நால்வரிடமும் நாம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும் “

 

துரியோதனன் :

“என்ன செய்ய

வேண்டும் என்று

சொல்ல வருகிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“இந்த நால்வரும்

நம்மை விட்டு

பிரிந்து செல்லாமல்

பார்த்துக்

கொள்ள வேண்டும்

இந்த நால்வரும்

கௌரவர்களுக்கு

ஆதரவாக

இருக்க வேண்டும்”

 

“நாளை போர் என்ற

ஒன்று ஏற்பட்டால்

இந்த நால்வரும்

கௌரவர்கள் பக்கம்

நின்று தான்

போரிட வேண்டும்

பாண்டவர்கள்

பக்கம் சென்று

போரிடக் கூடாது”

 

“அவர்கள் நால்வரும்

நமக்கு ஆதரவாக

இருக்கவேண்டும்

நமக்கு ஆதரவாக

போரிட வேண்டும்

எக்காரணத்தைக்

கொண்டும் அவர்கள்

பாண்டவர்கள் பக்கம்

சென்று விடக்கூடாது

இவர்கள் நால்வரும்

நம்முடன் தான்

இருக்க வேண்டும்

என்பதற்காக

ஏற்பாடுகளைச்

செய்து இருக்கிறேன்”

 

துரியோதனன் :

“என்ன ஏற்பாடு

செய்து இருக்கிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“பகடை விளையாட்டு”

 

கர்ணன் :

“பகடை விளையாட்டு

என்று சொல்லாதீர்கள்

சூதாட்டம்

என்று சொல்லுங்கள்

அது தான்

பொருத்தமாக இருக்கும்”

 

சகுனி :

“இல்லை கர்ணா

பகடை விளையாட்டு”

 

கர்ணன் :

“சூதாட்டத்தை இப்படியும்

உங்கள் மொழியில்

சொல்லலாம்

போல் இருக்கிறது”

 

துரியோதனன் :

“கர்ணா

சிறிது நேரம்

அமைதியாக

இரு”

 

(கர்ணண்

அமைதியாக

நின்றான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-158

 

ஜபம்-பதிவு-650

(அறிய வேண்டியவை-158)

 

சகுனி :

“பீஷ்மர்

துரோணர்

விதுரர்

கிருபர்

ஆகிய நால்வரும்

அஸ்தினாபுரத்தை

காத்துக்

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம்

நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள்

நால்வரும் தான்

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

பாதுகாக்கும்

பாதுகாவலர்கள்

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள்

நால்வரும் தான்

அஸ்தினாபுரத்தை

பாதுகாத்துக்

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது “

 

“இவர்கள்

நால்வரும் இல்லை

என்றால்

அஸ்தினாபுரத்தை

யாராலும்

காப்பாற்ற முடியாது

என்று இந்த

சமுதாயம் நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“இவர்கள் நால்வரும்

அஸ்தினாபுரத்தை

காப்பதற்காகவே

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

என்று இந்த

சமுதாயம்

நினைத்துக்

கொண்டிருக்கிறது”

 

“ஆனால் இவர்கள்

நால்வரும்

உண்மையில்

அஸ்தினாபுரத்தை

காப்பாற்றுவதற்காகவே

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

இல்லை.”

 

“இவர்கள்

நால்வரும் வெளியில்

அஸ்தினாபுரத்தை

காப்பாற்றுவதாக

நடித்துக்

கொண்டிருப்பவர்கள்

ஆனால் உள்ளுக்குள்

பாண்டவர்களை

காக்க வேண்டும்

என்பதற்காக வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள் “

 

“அதாவது

இவர்கள் நால்வரும்

உண்மையான

வாழ்க்கையை

வாழ்வதாக இந்த

சமுதாயத்தை நம்ப

வைத்துக் கொண்டு

போலியான

வாழ்க்கையை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“அதாவது

இவர்கள் நால்வரும்

இரட்டை வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்

வெளியில் வேறொரு

வாழ்க்கையும்

உள்ளுக்குள் வேறொரு

வாழ்க்கையும் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்”

 

“எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழாமல் வாழ்வதற்கு

தைரியம் இல்லாமல்

போலியாக வாழ்க்கையை

ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்”

 

“இவர்கள் நால்வரும்

உண்மையான

வாழ்க்கை

வாழ முடியாமல்

போலியான வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்”

 

“இந்த சமுதாயத்திற்கு

பயந்து தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக் கொண்டு

வாழ்பவர்கள்”

 

“தன்னுடைய

உணர்வுகளை

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வெளிப்படுத்தி வாழ

முடியாதவர்கள்”

 

“இத்தகைய போலியான

வாழ்க்கை வாழ்ந்து

கொண்டிருக்கும்

இவர்கள்

நால்வரிடமும் நாம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

மருமகனே ! “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-6

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-6

 

“யார் ஒருவர்

உணர்ந்து

வைத்திருக்கிறாரோ

அவர் தான்

கடவுளுக்கு

ஒப்பானவர்

கடவுளுக்கு சமமாக

மதிக்கப்பட

வேண்டியவர்

கடவுளாகவே

துதிக்கப்பட

வேண்டியவர்

ஏனென்றால்

அவர் அகத்திற்குள்

உள்ள அறிவாக

இருக்கும் கடவுளை

உணர்ந்து

கடவுளாகவே

மாறியவர்

அகத்திற்குள்

கடவுள் அறிவாக

இருக்கிறார்

அந்த கடவுளே

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

அறிவாக இருக்கிறது

அகத்திற்குள்

ஜீவாத்மாவாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

உணர்ந்தவர்

கடவுளாகவே

மதிக்கப்பட

வேண்டியவர் “

 

“ஐயப் படாஅது

என்றால்

சந்தேகத்திற்கு

சிறிதும் இடம்

இல்லாமல்

என்று பொருள்”

 

“அகத்தது

உணர்வானை

என்றால்

அகத்திற்குள்

கடவுள்

இருக்கிறார்

என்பதை

உணர்ந்தவன்

என்று பொருள்”

 

“தெய்வத்தோ

டொப்பக் கொளல்

என்றால்

அகத்திற்குள்

ஜீவாத்மாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

உணர்ந்து கொண்டு

அகத்திற்குள்

இருக்கும்

கடவுள் எங்கே

இருக்கிறார்,

கடவுளை

அடையக்கூடிய

வழி எது,

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்தக் கூடிய

பொருள் எது

என்பதை

உணர்ந்து

இவைகளைக்

கடைபிடித்து  

பின்பற்றி

வழிநடந்து

இறைவனாகவே

மாறியவனை

இறைவனாக மதிக்க

வேண்டும்

என்று பொருள்”

 

“அதாவது

நம்முடைய

உடலில்

அகத்திற்குள்

ஜீவாத்மாக

இருக்கும் கடவுள்

புறத்தில்

பரமாத்மாவாக

இருக்கிறார்

என்பதை

சந்தேகத்திற்கு

இடமின்றி

உணர்ந்து

கொண்டு

அகத்திற்குள்

இருக்கும்

கடவுள் எங்கே

இருக்கிறார்,

கடவுளை

அடையக்கூடிய

வழி எது,

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்தக்

கூடிய

பொருள் எது

என்பதை

உணர்ந்து

இவைகளைக்

கடைபிடித்து  

பின்பற்றி

வழிநடந்து

இறைவனாகவே

மாறியவனை

இறைவனாக மதிக்க

வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

ஐயப் படாஅது

அகத்தது

உணர்வானைத்

தெய்வத்தோ

டொப்ப கொளல்

 

என்ற திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

----------என்றும் அன்புடன்

----------K.பாலகங்காதரன்

-----------11-11-2020

//////////////////////////////////////////