October 14, 2021

பதிவு-3-புத்தேள்- திருக்குறள்-

 பதிவு-3-புத்தேள்

திருக்குறள்-

 

ஹிட்லர்

உயிரோடு

இருந்த போதும்

நம்பிக்கையை

காப்பாற்றியவர்

ஹிட்லர்

இறந்த பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றியவராக

இருந்தவர் தான்

தனக்காக வாழாமல்

ஹிட்லருக்காகவே

வாழ்ந்தவர் தான்

அவர் தான்

கோயபெல்ஸ்

 

கோயபெல்ஸ்

1897 அக்டோபர் 29–ல்

ஜெர்மனியின்

RHEYDT என்ற

நகரில் பிறந்தார்

பெற்றோர்

இட்ட பெயர்

பால் ஜோசப்

கோயபெல்ஸ்

 

அவரது

இளமைப்பருவம்

வலிகளும்,

வேதனைகளும்

நிரம்பியது.

பிறந்த சில

காலத்திலேயே

நிமோனியாவின்

பாதிப்பால்

அவதிப்பட்டார்

அவர் உயிர்

பிழைத்தது

பெரிய விஷயம்.

மறு பிறப்பு என்று

கூட சொல்லலாம்.

 

நான்காவது வயதில்

கடும் காய்ச்சல்

OSTEOMYELITIS

என்ற நோய்

தாக்கியதில் படுத்த

படுக்கையானார்

 

கால் எலும்புகளில்

பாதிப்பு

நடக்க முடியாமல்

படுத்த

படுக்கையாகவே

இருந்தார்

அதற்காக செய்த

ஆபரேஷனும்

தோல்வி அடைந்தது.

 

இடது காலை விட

வலது கால்

சிறியதாகிப் போனது.

ஊன்று கோல்

பயன்படுத்தக்

கூடிய நிலைக்கு

ஆளானார்

கோயபெல்ஸ்.

 

கோயபெல்ஸ் தன்

பள்ளி நாட்களில்

அதிகம் சந்தித்தது

அவமானங்களையும்,

ஏளனங்களையும்,

மட்டுமே.

சக மாணவர்கள்

அவரை ஒரு

மனிதராகவே

மதிக்கவில்லை.

 

கிண்டல்

பரிகாசம் என்று

அவரை

ஏளனம் செய்தனர்.

 

கோயபெல்ஸ்

திக்கி திக்கி

பேசக்கூடியவர்.

உன்னால் ஒரு

போதும் சிறந்த

பேச்சாளராக வர

முடியாது என்பது

பள்ளியின்

முதல்வர்

கோயபெல்ஸை

பார்த்துச் சொன்னது

 

முதல் உலகப் போர்

சமயத்தில்

ஜெர்மானிய

ராணுவத்தில்

தன்னை இணைத்துக்

கொள்ள விரும்பினார்

கோயபெல்ஸ்

அவரது உடல்

தகுதியைக்

காரணம் காட்டி

நிராகரித்தார்கள்

 

இத்தகைய

கோயபெல்ஸ் தான்

ஹிட்லரின்

நம்பிக்கைக்கு

உரியவராக இருந்தவர் ;

நம்பிக்கைக்கு

எடுத்துக் காட்டாய்

திகழ்ந்தவர் ;

நம்பிக்கைக்கு

உதாரணமாக

இருந்தவர் ;

என்று

வரலாற்றால்

அடையாளம்

காட்டப்பட்டவர்.

 

ஹிட்லர்

இந்த உலகத்தில்

இருந்த போதும் ;

ஹிட்லர்

இந்த உலகத்தில்

வாழ்ந்த போதும் ;

ஹிட்லர்

உயிரை விட்டு

இந்த உலகத்தை

விட்டு

சென்ற போதும் ;

அவருக்காகவே

வாழ்ந்தவர்.

 

ஹிட்லரின் மூளை ;

ஹிட்லரின் வலக்கரம் ;

ஹிட்லரின்

நம்பிக்கைக்குரியவர் ;

என்று

அழைக்கப் பட்டவர்.

 

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

பதிவு-2-புத்தேள் -திருக்குறள்

 

பதிவு-2-புத்தேள்

திருக்குறள்-

 

முதல் நபர்

மீது

நம்பிக்கை

வைத்து

இரண்டாம் நபர்

இணைந்து

இருக்கும் போது

முதல் நபர்

உயிரோடு

இருக்கும் போது

மட்டும் அவருக்கு

நம்பிக்கை

உடையவராக

இருந்து விட்டு

முதல் நபர்

இறந்த பிறகு

இரண்டாம் நபர்

முதல் நபருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராக

இல்லாமல்

இருந்தால்

இரண்டாம் நபர்

முதல் நபர்

உயிரோடு

இருக்கும் போது

ஏதோ ஒரு

காரணத்திற்காக

முதல் நபருடன்

இணைந்து

இருந்தார்

என்று பொருள்

 

ஆதாயத்திற்காக

முதல் நபருடன்

இரண்டாம் நபர்

இணைந்து

இருந்தவர்

என்று பொருள்

 

சுய நலத்திற்காக

முதல் நபருடன்

இரண்டாம் நபர்

இணைந்து

இருந்தார்

என்று பொருள்

 

பணம் பதவி

அதிகாரம்

ஏதோ ஒன்றிற்காக

முதல் நபருடன்

இரண்டாம் நபர்

இணைந்து

இருந்தார்

என்று பொருள்

 

முதல் நபர்

மீது

நம்பிக்கை வைத்து

இரண்டாம்

நபர்

இணைந்து

இருக்கும் போது

முதல் நபர்

உயிரோடு

இருக்கும்

போது மட்டும்

அல்லாமல்

முதல் நபர்

இறந்த பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராக

இரண்டாம் நபர்

இருந்தால்

முதல் நபரிடம்

இரண்டாம் நபர்

உண்மையாக

இருந்தார்

என்று பொருள்

 

எந்த ஒரு

ஆதாயத்திற்காகவும்

இரண்டாம் நபர்

முதல் நபருடன்

இணைந்து

இருக்கவில்லை

என்று பொருள்

 

பணம் பதவி

அதிகாரம்

ஆகியவற்றிற்றாக

இரண்டாம் நபர்

முதல் நபருடன்

ஒன்றாக

இருக்கவில்லை

என்று பொருள்

 

ஒருவர் நம்மீது

வைத்திருக்கும்

நம்பிக்கையை

அவர் உயிரோடு

இருக்கும் போதும்

காப்பாற்ற வேண்டும்

அவர் இறந்த

பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராகவும்

நாம்

இருக்க வேண்டும்

 

ஒருவர் நம்மீது

நம்பிக்கை

வைத்து

நம்முடன்

இணைந்து

இருக்கும்

போது

அந்த நபர்

உயிரோடு

இருக்கும் போது

மட்டும்

அல்லாமல்

அந்த நபர்

இறந்த பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராக

நாம் இருந்தால்

மட்டுமே

அவ்வாறு

வாழும் நாம்

நமக்காக வாழாமல்

பிறருக்காகவே

வாழ்கிறவர்

என்று பொருள்

 

தனக்காக

வாழ்பவர்கள்

இந்த உலகத்தில்

அதிக

எண்ணிக்கையில்

இருக்கின்றனர்

ஆனால்

பிறருக்காக

வாழ்பவர்கள்

இந்த உலகத்தில்

விரல் விட்டு

எண்ணக்கூடிய

நிலையிலேயே

இருக்கின்றனர்

 

குறைவான

எண்ணிக்கையிலேயே

இருக்கின்றனர்

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

பதிவு-1-புத்தேள்- திருக்குறள்-

 

பதிவு-1-புத்தேள்

திருக்குறள்-

 

“””புத்தேள்

உலகத்தும்

ஈண்டும்

பெறல்அரிதே

ஒப்புரவின்

நல்ல பிற”””

 

-------------திருக்குறள்

-------------திருவள்ளுவர்

 

“இந்த உலகத்திலும்,

வேறு எந்த

உலகத்திலும்

பிறருக்காகவே

வாழ்வதைப் போன்ற

செயலை விட

உயர்ந்த செயல்

வேறு ஒன்றும்

கிடையாது.”

என்பது தான்

இந்தத்

திருக்குறளுக்கு

சொல்லப்படும்

கருத்து

 

இதனைக்

கீழ்க்கண்டவாறு

பார்ப்போம்

 

இருவர் ஒன்றாக

இணைந்து இருந்தால்

அவர்கள்

நம்பிக்கையினால்

இணைக்கப்

பட்டிருக்கிறார்கள்

என்று பொருள்.

 

நம்பிக்கையில்

மாற்றம் என்பது

ஏற்படும் போது

இருவரிடையே

பிரிவு என்பது

ஏற்படுகிறது.

 

 

பிரிவை இரண்டு

நிலைகளில்

பிரித்து விடலாம்

 

ஒன்று :

இடைக்காலப் பிரிவு

 

இரண்டு :

நிரந்தரப் பிரிவு

 

இருவரிடையே

இருந்த நம்பிக்கை

குறையும் போது

இடைக்காலப் பிரிவு

என்பது ஏற்படுகிறது.

 

இருவரிடையே

இருந்த நம்பிக்கை

இறக்கும் போது

நிரந்தரப் பிரிவு

என்பது ஏற்படுகிறது

 

நம்பிக்கை

குறைவினால்

ஏற்படும்

விரோதத்தால்

ஒன்றாக இருந்த

இருவர்

விரோதிகளாகி

விடுகின்றனர்

 

நம்பிக்கை

குறைவினால்

ஏற்படக்கூடிய

இடைக்காலப் பிரிவு

நிரந்தரமானது அல்ல

தற்காலிகமானது தான்

 

இருவரிடையே

இருக்கும்

நம்பிக்கை

குறைவு நீங்கும்

போது பிரிந்தவர்

மீண்டும்

ஒன்று சேருவர்

 

ஆனால்

நிரந்தரப்பிரிவு

என்பது

நிரந்தரமானது

 

நம்பிக்கை

என்பது

இறக்கும் போது

மட்டுமே

நிரந்தரப்பிரிவு

ஏற்படுகிறது.

 

நிரந்தரப் பிரிவின்

மூலம் பிரிந்தவர்

மீண்டும் சேருவது

என்பது

இயலாத காரியம்

 

நிரந்தரப் பிரிவின்

மூலம் பிரிந்தவர்கள்

மீண்டும்

சேருவார்கள்

என்று சொல்ல

முடியாது

 

இருவருக்கிடையே

பிரிவு என்பது

ஏற்படாமல்

இருக்க வேண்டும்

என்றால்

ஒருவர் மீது

ஒருவர்

வைத்துள்ள

நம்பிக்கையில்

நம்பிக்கைக்

குறைவோ

அல்லது

நம்பிக்கையில்

இறப்போ

ஏற்படக் கூடாது

 

இருவர்

ஒருவரோடு

ஒருவராக

இணைந்து

இருந்தால்

அவர்கள்

நம்பிக்கையினால்

இணைக்கப்

பட்டிருக்கிறார்கள்

என்று பொருள்

 

முதல் நபர்

மீது

நம்பிக்கை

வைத்து

இரண்டாம் நபர்

முதல் நபருடன்

இணைந்து

இருக்கும் போது

முதல் நபர்

உயிரோடு

இருக்கும்

போது மட்டும்

இரண்டாம் நபர்

நம்பிக்கைக்கு

உரியவராக

இருந்தால்

போதாது

 

முதல் நபர்

இறந்த பிறகும் கூட

முதல் நபருடைய

நம்பிக்கையைக்

காப்பாற்றுபவராக

இரண்டாம் நபர்

இருக்க வேண்டும்

 

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

September 30, 2021

பதிவு-7-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-7-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

இரட்டை

வாக்குரிமையின்

நிகழ்வை

அம்பேத்கர்

தனி

ஒருவராக

நின்று

 

பொறுமை,

 

நிதானம்,

 

தொலைநோக்கு

பார்வை,

 

அனைத்தையும்

சமாளிக்கும்

திறன்,

 

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை

 

ஆகியவற்றைக்

கொண்டு

கையாண்டார்.

அம்பேத்கர்

 

தலைவருக்குரிய

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்று

சிறந்த

தலைவராக

அம்பேத்கர்

இருந்தார்

என்பதை

இந்த நிகழ்வின்

மூலம்

தெரிந்து

கொள்ளலாம்.

 

பல்வேறு

திறமைகள்

படைத்த

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இல்லை

என்றால்

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியாது

 

ஆனால்,

திறமைகள்

எதுவும்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்கள்

இருந்தாலும்

அவர்களை

வழிநடத்திச்

செல்லும்

தலைவர்

தலைவருக்கென்று

உள்ள

தனிப்பட்ட

ஐந்து

தகுதிகளைப்

பெற்றவராக

இருந்தால்

திறமைகள்

இல்லாத

இலட்சக்கணக்கான

தொண்டர்களை

வைத்துக்

கொண்டிருந்தாலும்

அந்த

தலைவரால்

எந்த ஒரு

செயலிலும்

வெற்றி பெற

முடியும்

 

என்பதைத்

தான்

திருவள்ளுவர்

 

“நிலைமக்கள்

சால

உடைத்தெனினும்

தானை

தலைமக்கள்

இல்வழி இல்”

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்,

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////