January 15, 2023

ஜபம்-பதிவு-917- மரணமற்ற அஸ்வத்தாமன்-49 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-917-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-49

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

நீங்கள் குருவாக

நடந்து கொண்டிருந்தால்

நானும் குருதேவர்

என்று அழைத்திருப்பேன்

ஆனால் நீங்கள் ஒரு

குருவாக நடந்து

கொள்ளவில்லையே

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

 

அஸ்வத்தாமன் :

ஏகலைவன்

விஷயத்தில்

நீங்கள் நடந்து

கொண்ட விஷயத்தை

வைத்துத் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

அவன்

என்னுடைய

சீடன்

கிடையாதே

 

அஸ்வத்தாமன் :

சீடன்

இல்லை என்றால்

எதற்காக

குருதட்சணை

என்ற பெயரில்

அவனுடைய

கட்டை விரலை

கேட்டு

வாங்கினீர்கள்

 

துரோணர் :

அவன் முறைப்படி

என்னை குருவாக

ஏற்றுக் கொண்டு

கல்வி கற்கவில்லை

 

என்னுடைய சிலையை

வைத்துக் கொண்டு

குருவாக நினைத்துக்

கொண்டு கல்வி

கற்றான் என்னுடைய

அனுமதி இல்லாமல்

என்னை குருவாக

நினைத்து கல்வி

கற்றது தவறு

 

அவன் செய்த

செயல் தவறு

என்ற

காரணத்தினால்

தான்

அவனுடைய

கட்டை விரலை

வெட்டி

வாங்கினேன்

 

அஸ்வத்தாமன் :

கர்ணன்

தேரோட்டியின்

மகன் அவன்

சமுதாயத்தால்

தள்ளி

வைக்கப்பட்டவன்

ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

தாழ்த்தப்பட்டவன் என்ற

காரணத்தைச் சொல்லி

கர்ணனுக்கு நீங்கள்

கல்வி கற்றுத்

தரவில்லை

அவனை ஒதுக்கி

விட்டீர்கள்

 

கர்ணனுக்கு

என்ன

காரணத்தைச்

சொல்லி

அவனுக்குக்

கல்வி கற்றுத்

தரவில்லையோ

அதே

காரணத்தைச்

சொல்லித் தான்

ஏகலைவனுக்கும்

நீங்கள் கல்வி

கற்றுத் தர

மறுத்து

விட்டீர்கள்  

 

அதனால் உங்களிடம்

தன்னால் நேரடியாகக்

கல்வி கற்றுக்

கொள்ள முடியாது

என்று ஏகலைவன்

நினைத்த காரணத்தினால்

உங்களை குருவாக

நினைத்து

உங்கள் சிலையை

தானே உருவாக்கினான்

 

உங்கள் சிலையை

குருவாக நினைத்து

அனைத்து

கலைகளையும்

தானே கற்றுக்

கொண்டான்

 

குருவிடம் நேரடியாக

கற்றுக் கொள்ளாமல்

குருவாக உங்களை

நினைத்து மறைவாக

கற்றுக் கொண்டான்

மறைவாக கற்றுக்

கொள்வது என்பது

எவ்வளவு கடினம்

அதையும் அவன்

திறம்படச் செய்தான்

வில்போர் செய்வதில்

திறமைசாலி ஆனான்

 

ஆனால்

அவனுடைய

திறமையை

மதிக்காமல்

அவனுடைய

திறமைக்கு

கிடைக்க

வேண்டிய

அங்கீகாரத்தை

கிடைக்க விடாமல்

இந்த உலகம்

அவனுடைய

திறமையை

பார்க்க விடாமல்

உலகத்திலேயே

சிறந்த

வில்லாளியாக

ஆகி இருக்க

வேண்டிய

ஏகலைவனின்

கட்டை விரலை

குருதட்சணை

என்ற பெயரில்

வெட்டி வாங்கி

அவனுடைய

வாழ்க்கையை

அழித்து

விட்டீர்கள்

 

துரியோதனன்

சொன்னது சரிதான்

அவன் சொன்னது

உண்மை தான்

அவன் சொன்னது

நியாயம் தான்

 

நான் துரியோதனன்

சொன்னதை

சரி என்கிறேன்

நான் துரியோதனன்

கேட்ட நியாயத்தின்

பின்னால் நிற்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-916- மரணமற்ற அஸ்வத்தாமன்-48 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-916-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-48

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

குரு தேவர்

என்னிடம் கேட்ட

கேள்விக்கு

நான் பதில்

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

குருதேவர்

தவறாக

நினைப்பார்

என்று நான்

எதையும்

மறைத்து

பேசவில்லையே

 

என் மனதில்

உள்ளதைத் தானே

சொல்லிக்  கொண்டு

இருக்கிறேன்

 

நான் என்ன

விரும்புகிறேனோ

அதைத் தானே

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

 

நான் எதை

செயல்படுத்த

நினைக்கிறேனோ

அதைத் தானே

சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

உண்மையைத்

தானே சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

உள்ளதை

உள்ளபடியே

தானே சொல்லிக்

கொண்டு

இருக்கிறேன்

 

எந்த ஒன்றையும்

நான் மறைத்து

பேசவில்லையே

நல்லவன் போல்

நடிக்கவில்லையே

நல்லவன் போல்

நடிக்க வேண்டிய

அவசியமும்

எனக்கு இல்லையே

 

இந்தத் துரியோதனன்

மனதில் என்ன

நினைக்கிறேனோ

அதைச் சொல்வான்

எது சரியானது என்று

நினைக்கிறானோ

அதை

செயல்படுத்துவான்

 

அர்ஜுனா

நீ நல்லவனாக

நடிக்காதே

நல்லவனாக

மாறுவதற்கு

முயற்சி

செய்

 

அதை விடுத்து

தேவையற்ற

வார்த்தைகளைப்

பேசிக்

கொண்டிருக்காதே

 

நீ பெயர்

வாங்க வேண்டும்

என்பதற்காக

பிறரை

ஏளனமாகப் பேசாதே

 

நீ வீரனாக ஆக

வேண்டும் என்றால்

அதற்குரிய

வேலைகளைச்

செய்

அதனை விடுத்து

தவறான

செயல்களைச்

செய்யாதே

 

துரோணர் :

அர்ஜுனன்

உலகத்திலேயே

சிறந்த வில்லாளி

ஆகி விட்டான்

இனி தான்

ஆக வேண்டும்

என்ற அவசியம்

அவனுக்கு இல்லை

 

துரியோதனன் :

ஆகவில்லை
ஆக்கப்பட்டான்

 

துரோணர் :

ஆக்கப்பட்டானா

 

துரியோதனன் :

ஆமாம்

ஆக்கப்பட்டான்

 

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப் போரில்

அர்ஜுனனை விட

சிறந்தவர்கள்

இந்த பூமியில்

நிறைய பேர்கள்
இருக்கின்றனர்

 

அதில் ஒருவனாக

விளங்கிய

ஏகலைவனின்

கட்டைவிரலை

குருதட்சணை

என்ற பெயரில்

நீங்கள்

வெட்டி வாங்கி

உலகத்திலேயே

சிறந்த வில்லாளியாக

ஆகி இருக்க

வேண்டியவனுடைய

வாழ்க்கையை அழித்து

அவனுடைய திறமை

இந்த உலகத்திற்கு

தெரியாமல்

செய்து விட்டீர்கள்

 

துரோணர் :

தேவையில்லாதவைகளைப்

பற்றிப் பேசாதே

துரியோதனா

 

அர்ஜுனன் :

துரியோதனன்

பேசும்

அனைத்துமே

தேவையில்லாதது

தான்

 

அஸ்வத்தாமன் :

துரியோதனன்

தேவையுள்ளதைத்

தான் பேசுகிறான்

தந்தையே !

 

துரோணர் :

வகுப்பறையில்

தந்தை என்று

கூப்பிடக் கூடாது

குருதேவர் என்று

தான் சொல்ல

வேண்டும் என்று

நான் சொல்லி

இருக்கிறேன்

அல்லவா

 

தந்தை என்று

என்னை ஏன்

அழைக்கிறாய்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-915- மரணமற்ற அஸ்வத்தாமன்-47 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-915-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-47

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

போர் செய்யும்

இருவரும்

வெவ்வேறு

இடத்தில்

தனித்தனியாக

இடைவெளி விட்டு

நின்று கொண்டு

ஒருவர் ஒரு

அஸ்திரத்தை

விடும் போது

அது எந்த அஸ்திரம்

என்பதையும்

அதற்கு

எதிர் அஸ்திரம்

எது என்பதையும்

சிந்தித்துப் பார்த்து

எதிர் அஸ்திரத்தை

விடுவது என்பது

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறாமல்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறுவதால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான போர்

கிடையாது

 

கதாயுதப்போர்

செய்வதற்கு

உடல் வலிமை

மன வலிமை

பார்வைத் திறன்

கவனிக்கும் திறன்

ஆகிய நான்கும்

கண்டிப்பாக

இருக்க வேண்டும்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

உடல் வலிமையும்

மன வலிமையும்

தேவையில்லை

பார்வைத்திறனும்

கவனிக்கும்

திறனும்

இருந்தால்

போதும்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

உடல் வலிமை

மன வலிமை

பார்க்கும் திறன்

கவனிக்கும் திறன்

ஆகியவை

கண்டிப்பாக

தேவைப்படும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

கதாயுதப் போரில்

நான் சிறந்தவனாக

இருப்பதையே

விரும்புகிறேன்

 

கதாயுதப் போரில் 

உலகத்திலேயே

சிறந்த வீரனாக

ஆகவே நான்

ஆசைப்படுகிறேன்

 

அர்ஜுனன்:

துரியோதனா

அப்படி என்றால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

சிறந்தவர்களாகக்

கருதப்படும்

குருதேவர்

துரோணரையும்

தாத்தா

பீஷ்மரையும்

நீ வீரர்கள்

இல்லை

என்கிறாயா

 

துரியோதனன் :

அர்ஜுனா

எப்போதும்

தப்பாகத் தான்

சிந்திப்பாயா

நல்லவிதமாக

சிந்திக்கவே

மாட்டாயா

 

நல்லதையே

நினைக்க

வேண்டும்

நல்லதையே

சொல்ல

வேண்டும்

என்ற எண்ணம்

உனக்கு

ஏற்படவே

ஏற்படாதா

 

எப்போதும்

உன்னுடைய

குள்ள நரி

புத்தியைத்

தான்

வெளிப்படுத்துவாயா

 

எனக்கும்

குரு தேவருக்கும்

இடையே

மன வேறுபாட்டை

உருவாக்காதே

எங்களுக்குள்

பிரிவை

ஏற்படுத்த

நினைக்காதே

 

இருவருக்கிடையே

சண்டையை

உண்டாக்கி

நல்ல பெயர்

வாங்க வேண்டும்

என்ற கேடு

கெட்ட புத்தி

உனக்கு ஏன்

இருக்கிறது

 

நீ நல்லவனாக

இருக்க வேண்டும்

என்றால்

நல்லவன் என்று

பெயர் எடுக்க

வேண்டும் என்றால்

அதற்குரிய

செயல்களைச் செய்

இருவருக்கிடையே

பகையை ஏற்படுத்தி

நல்லவன் என்று

பெயர் எடுக்க

நினைக்காதே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-914- மரணமற்ற அஸ்வத்தாமன்-46 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-914-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-46

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :

விருப்பம் இல்லை

என்று நான்

சொல்ல வரவில்லை

குருநாதா

 

வில்லைப் பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்க்கலையை

கற்றுக் கொள்கிறேன்

 

ஆனால்

கதாயுதத்தில்

மட்டும்

திறமைசாலியாக

இருக்கவே

விரும்புகிறேன்

என்று தான்

நான் சொல்ல

வருகிறேன்

 

துரோணர் :

ஏன் அவ்வாறு

சொல்கிறாய்

துரியோதனா

ஏன் உனக்கு

கதாயுதம்

பிடித்திருக்கிறது

 

அந்தக்

காரணங்களை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

சொல்

துரியோதனா

 

கதாயுதம்

ஏன் உனக்குப்

பிடித்திருக்கிறது

என்பதற்கான

காரணத்தை

இங்குள்ளவர்கள்

அனைவரும்

தெரிந்து

கொள்ளட்டும்

 

அனைவரும்

தெரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு செயலும்

கடினமானது தான்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

தனித்தனியாக

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

எந்த ஒரு

செயலும்

கடினமானது

கிடையாது

 

துரோணர் :

கதாயுதத்தைப்

பற்றி சொல்லாமல்

வேறு ஏதோ

ஒன்றைப் பற்றிச்

சொல்கிறாய்

 

துரியோதனன் :

கதாயுதத்தைப்

பற்றித் தான்

சொல்கிறேன்

 

துரோணர் :

புரியும்

படிச் சொல்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படிச்

சொல்

 

துரியோதனன் :

சொல்கிறேன்

அனைவரும்

புரிந்து

கொள்ளும்படியே

சொல்கிறேன்

 

கதாயுதப் போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும் போர்

அதனால்

கதாயுதப் போர்

கடினமானப் போர்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்

போர்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறும்

போர்

அதனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான

போர்

கிடையாது

 

கதாயுதப் போர்

களத்தில் இறங்கி

நேருக்கு நேராக

நின்று

ஒருவருக்கொருவர்

உடலைத் தாக்கிக்

கொண்டு போர்

செய்யும் போது

எதிரி உடலில்

எப்படி அடிப்பான்

எந்த இடத்தில்

அடிப்பான்

எவ்வளவு வேகத்தில்

அடிப்பான்

என்பதைச் சிந்தித்து
அதைத் தடுத்து

திருப்பி எப்படி

அடிக்க வேண்டுமோ

எந்த இடத்தில்

அடிக்க வேண்டுமோ

எந்த வேகத்தில்

அடிக்க வேண்டுமோ

என்பதை முடிவு செய்து

திருப்பி அடிக்கும்

செயலை

கதாயுதப்

போரில்

செய்வதால்

சிந்திப்பதும்

செயல்படுவதும்

கதாயுதப்போரில்

ஒரே சமயத்தில்

நடைபெறுவதால்

கதாயுதப்போர்

கடினமானப் போர்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////