December 21, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- பலன்கள்- பதிவு-4




              போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு -4

“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பாடல் - 5

          “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                             அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
               குன்றான மலைதனிலே இருக்கலாகும்
                            குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
              வென்றிடவே தேவாதி ரிடிகள்தம்மை
                           விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
                                                                             --------போகர் --7000---------
    “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                          அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
           குன்றான மலைதனிலே இருக்கலாகும்”””””
சாயா தரிசனத்தை அனுதினமும் தொடர்ந்து விடாமல் செய்து , சாயா தரிசனத்தைக் கண்டவர்கள் , சாயா தரிசனத்தைச் செய்தவர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்று படிப்படியாக ஆன்மீக உலகில் உயர்வார்கள் .
ஆன்மீக உலகில் ஒருவர்  உயர்ந்து கொண்டே வர அவருடைய உறவு முறைகள் பந்தங்கள் அறுந்து கொண்டே போகும் .
உறவு முறைகள் ஒவ்வொன்றாக அறுந்து கொண்டே வரும் , இறுதியாக யாரும் துணைக்கு கூட இல்லாமல் தனியாக இருக்கக் கூடிய நிலை கூட வரும் .
எல்லாவற்றையும் இழந்த நிலையில் , எல்லா பந்தங்களும் அறுந்த நிலையில் ,
மனது தெளிவு பெறும் ,
அறிவு விளக்கம் பெறும் ,
ஞானம் உதிக்கத் துவங்கும் .


இந்த உலகத்தில் உள்ள சாதாரண மனிதர்களுடன் இணைந்து இருக்க மாட்டார்கள் . 
இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலகி , உறவு முறைகளிலிருந்து விலகி , பந்தங்களை அறுத்து விட்டு தனியாக தனித்து வாழ்வதற்காக மனிதர்கள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று விடுவார்கள் .


அதனால் அவர்கள் மலைகளிலும் , குகைகளிலும் , தனித்து வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள் .
சித்தர்  என்ற நிலை அவர்களுக்குள் உருவாகி படிப்படியாக பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் .
தன்னுள் ஏற்படக் கூடிய மாற்றங்களை உணரத் தொடங்குவார்கள் .
ஞான விளக்கம் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரிவார்கள் .


இவ்வாறாக எல்லாவற்றையும் இழந்து உண்மையான சித்தர்களாக இருப்பவர்களை , இந்த உலகத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள் .
உண்மையான சித்தர்  என்றால் யார் ?  அவர்  எப்படி இருப்பார்  என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் இந்த உலகத்தில் உள்ளவர்கள் இல்லை .


எல்லாவற்றையும் இழந்த நிலையில் தான் ஞானம் கிடைக்கும் என்பதையும், சித்தராக முடியும் என்பதையும்,  யார்  ஒருவர்  உணர்ந்து கொள்கிறாரோ அவரே ஞானம் அடையத் தகுதி உடையவர்.
அவரால் மட்டுமே ஞானம் அடைய முடியும் . 


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு ஞானம் அடைவது என்பது கடினமான காரியம் .
ஆனால் உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைய உலகில் பிறந்த அனைத்து மனிதர்களாலும் முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டார்கள் .
சூட்சும ரகசியங்களை மறைத்து விட்டார்கள் .
இதற்கு முக்கியமான காரணமாக கீழ்க்கண்டவை சொல்லப்படுகிறது
1 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமைப்படுத்தும் குணம்.
2 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமையாக இருந்து பழக்கப்பட்டுப் போன மனம் .
3 ஞானம் அடையக் கூடிய வழிகளை அறிய ஆவல் உள்ளவர்களை இந்த உலகம் அறிய விடுவதில்லை .
4 ஞானம் அடைந்தவர்களை இந்த உலகம் சொல்ல விடுவதில்லை .
5 ஞானம் அடைந்து சொல்ல வந்தவர்களை இந்த உலகம் மதிப்பதில்லை அவமானப் படுத்துகிறது .
6 ஒரு சில உண்மை ஞானிகளை கொன்று விடுகிறது .
7 இவை எல்லாவற்றையும் மீறி சொல்ல வந்தவர்களின் கருத்துக்களை மதிக்காமல் அவர்களை அவமானப் படுத்தியதால் தான் அடைந்த ஞானத்தை பாடல்களில் மறைபொருளாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டார்கள் .


மேற்கண்டவை தான் உலகியலில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டதற்கான காரணங்கள் ஆகும்


மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் தான் சாயா தரிசனம் செய்பவர்கள் இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு சித்தனைப் போல் குகைதனிலே , குகைகளிலே வாழக் கூடிய ஒரு நிலையை உண்டாக்கி விடுகிறது என்று போகர்  கூறுகிறார் .


     

      ”””””””குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
      வென்றிடவே தேவாதி  ரிடிகள்தம்மை
                     விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
விண்ணுலகம்
விண் என்றால் உயிர் . உயிரை உணர்ந்தவர்கள் விண்ணவர்கள் எனப்படுவர்.
இந்த உடலுக்குள் எப்படி அந்த விண் உயிராக இருக்கிறது . இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த விண் எப்படி ஆற்றலாக இருக்கிறது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் விண்ணவர்கள்.
அந்த விண்ணவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் .
அதாவது உயிரை உணர்ந்தவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் எனப்படும்.


சாயா தரிசனம் தொடர்ந்து விடாமல் செய்து சித்தர்  என்ற ஒரு உயர்ந்த நிலையை அடைந்தால்    தேவர்களும் , ரிஷிகளும் வசிக்கும், இருக்கும் இடமாகிய விண்ணுலகில் அவர்களை காண்பதற்கும் ,
அவர்கள் சாயா தரிசனம் செய்து சித்தர்  என்ற உயரிய நிலையை அடைந்தவர்களை காண்பதற்கும் உரிய ஓர்  உயரிய இடம் சாயா தரிசனம் செய்தவருக்கு கிடைக்கும் என்கிறார்  போகர்.

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                             போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

No comments:

Post a Comment