December 21, 2011

போகர் -7000- சாயா தரிசனம்-செய்யும் முறை- பதிவு-5




போகர் -7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -5

“”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:

பாடல் -1
சாயா தரிசனத்தின் வரலாற்றையும் , சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் சக்திகளையும் , பலன்களையும் தன் பாடல்களின் மூலம் விளக்கிய போகர் ,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் எவை என்பதைப் பற்றியும் ,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை விஷயங்கள் எவை என்பதைப் பற்றியும்,  
போகர்  சொல்லியவற்றை பின்வரும் பாடல்களில் பார்ப்போம்

      
     “”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு
                                 வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
                துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                                 துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்
               சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண
               பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                 பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
                                                                                        ------போகர் ---- 7000-----


“”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு””””
என்னுடைய சீடனாகிய புலிப்பாணியே  நான் சொல்ல வருவனவற்றை பொறுமையுடனும் , நிதானமாகவும் கேட்பாயாக என்று,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றி போகர்  தன் சீடனாகிய புலிப்பாணியிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் .




               “”””””வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
        துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                        துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்”””””
போகர்  ஆகாய தரிசனம் என்று குறிப்பிடுவது சாயா தரிசனத்தைத்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

சாயா தரிசனத்தை , ஆகாய தரிசனம் என்று போகர்  குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என்பதை பின்வரும் பாடல்களின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் .
சாயா தரிசனத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு விதமான நன்மைகளை தனக்குள் அடக்கியதும் ,
                            அதிசயங்களையும்,
                           ரகசியங்களையும் ,
                          சித்துவேலைகளையும்
தன்னுள் கொண்டதுமான சாயா தரிசனத்தை செய்வதற்கு
எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்,
எந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் ,
எந்த சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ,
சொல்கிறேன் கேட்டுக் கொள்வாயாக என்று போகர்  தன் சீடனான புலிப்பாணியிடம் கூறுகிறார் .


வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்குரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்று பொருள் .

துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் நன்மை எது? தீமை எது? என்பதையும் நாம் வாழும் காலத்தில்
நல்லது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
கெட்டது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
ஆராய்ந்து அறிவதற்கும்,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்கு உரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்றும் பொருள் .


இத்தகைய சிறப்பு வாய்ந்த ரகசியங்களை தன்னுள் கொணடுள்ள பயிற்சியான தவமான சாயா தரிசனத்தை செய்வதற்கு உரிய முறைகள் எவையென்று கூறுகிறேன் கேட்பாயாக என்கிறார்  போகர். 
               


சாயா தரிசனம் பயிற்சி முறை ஆரம்பம்:

                “””””சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                         சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்வதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.     
சாயா தரிசனம் செய்வதற்கு தேர்ந்து எடுத்த இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவர்  நிற்கும் பூமிக்குரிய இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்க வேண்டும் என்கிறார்  போகர்.




            “””””பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                       பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே””””
சூரியன் காலையில் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது சாயா தரிசனம் செய்பவர்  மேற்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும் .
மேற்கு திசையில் தன்னுடைய முகம் இருக்கும் படி அதாவது மேற்கு திசையை நோக்கியபடி நின்று கொள்ள வேண்டும் .

மேற்கு திசையில் தன்னுடைய முகத்தைக் காட்டிக் கொண்டும் ,
கிழக்கு திசையில் அதாவது சூரியன் இருக்கும் திசையில் முதுகை காட்டிக் கொண்டும் ,
இருக்கும் படி நின்று கொள்ள வேண்டும் .

               

                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”

No comments:

Post a Comment