April 23, 2017

இயேசுகிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு-80-2

       இயேசு கிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(2)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

பரம்பரை அல்லாத தொழில்:

பரம்பரை அல்லாத தொழில் என்ற
ஒன்று  தனியாக இல்லை
பரம்பரைத் தொழிலை செய்யாதவர்கள்
பரம்பரை அல்லாத தொழிலை
செய்கிறார்கள் என்று பொருள்.


பரம்பரை அல்லாத தொழிலை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்

   1.தந்தை செய்த தொழிலில் இலாபம் இல்லாதால்
     மகன் செய்யாமல் இருப்பது

                2.தந்தை செய்த தொழிலில் லாபம் இருந்தாலும்
                   மகனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக
                   தந்தை செய்த தொழிலை மகன் செய்யாமல் இருப்பது

                3. தந்தை ஒரு தொழிலும், மகன் ஒரு தொழிலும்
                    பேரன் ஒரு தொழிலும் என்று வேறுபட்ட
                    தொழில்களைச் செய்வது

பரம்பரை அல்லாத தொழில்
பரம்பரைத் தொழிலை விட
வேறுபாடானது
மாறுபட்ட தன்மைகளைத்
தன்னுள் கொண்டது.
பரம்பரைத் தொழிலை
புரிந்து கொள்ள முடியாதவர்கள்
பரம்பரை அல்லாத தொழிலை
புரிந்து கொள்ள முடியாது

1.தந்தை செய்த தொழிலில்
    இலாபம் இல்லாதால்
    மகன் செய்யாமல் இருப்பது

தந்தை விவசாயம் செய்கிறார்;
கஷ்டப்பட்டு விவசாயம் செய்கிறார்;
கண்ணீர் சிந்தி விவசாயம் செய்கிறார்;
இரத்தத்தை வியர்வையாக்கி
கண்ணீரை உழைப்பாக்கி
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு இன்னல்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு துன்பங்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு அவமானங்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு இழப்புகளுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு சோகங்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு கஷ்டங்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு கடன்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு தூற்றுதல்களுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே
விவசாயம் செய்கிறார்;

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு
விவசாயம் செய்தாலும்,
லாபம் இல்லாததால்,
பலன் இல்லாததால்,
மேன்மேலும் கஷ்டப்பட்டு
வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டம்
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.
சில சமயம் வாழ்வதற்கு முடியவில்லை
என்று தற்கொலைக்கு
முயற்சி செய்கிறார்.
வாழ விருப்பப்படாமல்,
வாழ வழி இல்லாமல்,
வாழ ஒரு வகை இல்லாமல்,
வாழ ஒரு ஊன்றுகோல் இல்லாமல்,
வாழ ஒரு காரணம் இல்லாமல்,
வருத்தப்பட்டு தற்கொலைக்கு
முயற்சி செய்கிறார்.
அவருடன் உழைக்கும் விவசாயிகள்
விவசாயிகளாக இருக்கும்
அவர்களுடைய நண்பர்கள்
விவசாயத்தால்
எந்த பலனும்  கிடைக்கவில்லையே என்றும்
கடன் அதிகம் பெருகி விட்டதே
என்ற கவலையில்
தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அரசாங்கமும் விவசாயிகளுக்கு
எதுவும் செய்வதில்லை.
சினிமா நடிகர்களும் சினிமாவில்
கைத்தட்டல் பெறுவதற்காக
விவசாயத்தை உயர்த்தி பேசுகின்றனர்
அப்புறம் விவசாயத்தை கண்டு
கொள்வதேயில்லை.
படிப்பிலும்,
மேல் படிப்பிலும்,
விவசாயம் இழிவாகத் தான்
வைக்கப்பட்டிருக்கிறது.
எந்தவிதமான உயர்வுகளும்
விவசாயத்திற்கு
கல்வியில் தரப்படவில்லை.
பொறியியலுக்கு கொடுக்கும் மதிப்பை
விவசாயத்திற்கு கொடுப்பதில்லை.
பொறியியலை பாடமாக
எடுத்து படிக்கும் மாணவர்கள்
விவசாயத்தை படிப்பதில்லை.
படிப்பில் விவசாயம்
புறக்கணிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப பிரிவில்
வேலையில் இருப்பவர்களுக்கு,
ஐடி தொழிலில்
வேலையில் இருப்பவர்களுக்கு,
சம்பளம் என்ற பெயரில்
லட்சம் லட்சமாக
பணம் கொட்டி தரப்படுகிறது.
விவசாயத்திற்கும்
உணவு போடும் விவசாயத்திற்கும்
உணவை உற்பத்தி செய்யும்
விவசாயிகளுக்கும் தேவையான
வாழ்வியல் ஆதாரங்கள்
அளிக்கப்படுவதில்லை.
அரசியல்வாதிகள்
விவசாயத்தை முன்னேற்றுவதற்கும்,
விவசாயிகள் வாழ்க்கையை
மேம்படுத்துவதற்கும்,
விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை
முன்னேற்றுவதற்கும்,
விவசாயிகள் வாழ்க்கையில்
அன்றாடம் அனுபவிக்கும்
சோகத்தை குறைப்பதற்கும்,
விவசாயிகள்
கண்ணீலிருந்து சிந்தும்
இரத்தக் கண்ணீரை துடைப்பதற்கும்,
விவசாயிகள் வாழ்க்கையில்
சுழன்றடிக்கும் கடன் சுமையை
நீக்குவதற்கும்,
அதை குறைப்பதற்கான
தேவையான நடவடிக்கையை
எடுப்பதற்கும்,
கடனில்லா வாழ்க்கையை
நடத்துவதற்கும்,
தேவையான
எந்த ஒரு  நடவடிக்கையும் எடுப்பதில்லை.

விவசாயத்தை முன்னேற்றுவதற்கு,
விவசாயம் செய்யும் விவசாயியின்
வாழ்க்கைத்  தரத்தை உயர்த்துவதற்கு,
அரசியல்வாதியும், அரசாங்கமும்
எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அதனைத் தவிர்த்து
சமுதாயமும்,
சமுதாய மக்களும்,
விவசாயத்தை மதிப்பதும் இல்லை.
விவசாயியை வாழ்த்துவதும் இல்லை.
விவசாயத்தையும்
விவசாயியையும் இழிவு படுத்துகிறது
விவசாயத்தையும்,
விவசாயியையும்,
வாழ்த்த விருப்பம்
இல்லையென்றாலும் பரவாயில்லை
இழிவு படுத்தாமல் இருந்தால் நல்லது.
விவசாயத்திற்கு
இச்சமுதாயம் மதிப்பு கொடுத்தால் மட்டுமே
விவசாயியை
இச்சமுதாயம் மதித்தால் மட்டுமே
இச்சமுதாயம் வாழும்
இல்லையேல்
இச்சமுதாயம் பசியால் சாகும்.

நாம் சாப்பிடும்போது
இந்த உணவை எனக்கு அளித்த
என் பசியை போக்கிய
விவசாயியின் குடும்பம்
கடனால் இறக்காமல்
நன்றாக வாழ வேண்டும் என்று
எத்தனை பேர்
இறைவனை வேண்டுகிறோம்.
யாரும் வேண்டுவதில்லை.
இன்று எனக்கு
இந்த  உணவை அளித்த
இறைவா என்றென்றும்
எனக்கு  இந்த உணவை
எனக்குத் தா என்று தான்
அனைவரும் சுயநலத்துடன் வணங்குகிறோம்.

பொதுநலம் இல்லாமல் சுயநலத்துடன்
இச்சமுதாயம் இருப்பதால் தான்
விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது.
இதையெல்லாம் உற்று நோக்கி
ஆராய்ந்து பார்க்கும் மகன்
தனக்கு விவசாயம் தேவையில்லை,
என்று முடிவெடுக்கிறான்.
விவசாயத்தால் ஒரு பயனும் இல்லை,
அதை செய்வதால் ஒரு லாபமும் இல்லை,
லாபம் இல்லாத ஒன்றை செய்வதால்
ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து,
விவசாயம் தேவை இல்லை,
என்பதை உணர்ந்து
வேறு வேலையை தேர்வு செய்கிறான்.

தந்தை செய்த தொழிலில்
இலாபம் இல்லாதால்
மகன் செய்யாமல் இருப்பது.

இது தான் தந்தை செய்த தொழில்
லாபம் இல்லாமையால்
மகன் வேறு வேலையை தேர்ந்தெடுப்பது
பரம்பரை வேலையை விட்டு
பரம்பரை அல்லாத
பரம்பரை அலலாத தொழிலை செய்வது.



2.தந்தை செய்த தொழிலில்
      லாபம் இருந்தாலும்
      மகனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக
      தந்தை செய்த தொழிலை
      மகன் செய்யாமல் இருப்பது

ஒருவர் மளிகை கடை வியாபாரம்
செய்து வருகிறார்;
நல்ல நிலையில் வியாபாரம்
செய்து வருகிறார்;
நல்ல வருமானத்தில் வியாபாரம்
செய்து வருகிறார்;
நல்ல பெயர் எடுத்து வியாபாரம்
செய்து வருகிறார்;
நல்ல இடத்தில் வியாபாரம்
செய்து வருகிறார்;
நல்ல பொருட்களை வியாபாரம்
செய்து வருகிறார்;
லாபம் கிடைக்கும் வகையில் வியாபாரம்
செய்து வருகிறார்;
அதனால் அவர் வாழ்க்கை
நல்ல நிலையில் இருக்கிறது;
வீடு கட்டியிருக்கிறார்;
சுப காரியங்களை
நிகழ்த்தி இருக்கிறார்;
அவர் வாழ்க்கை
நல்ல நிலையில் இருக்கிறது;

அதனால் அந்த வியாபாரம் செய்பவர்
லாபம் கிடைக்கும்;
இந்த மளிகை வியாபாரத்தை
மகன் செய்ய வேண்டும் என்று
ஆசைப்படுகிறார்;
ஆனால், மகனுக்கு அதில் விருப்பம் இல்லை;
கடையில் இருந்து வியாபாரம் செய்ய
விருப்பம் இல்லை;
தந்தை செய்த தொழிலை செய்ய
மகனுக்கு விருப்பம் இல்லை;
அதனால், நான் இந்த தொழிலை
செய்ய மாட்டேன்;
வேறு தொழிலை செய்கிறேன்;
நான் படித்த படிப்புக்கு
வேலை செய்ய பார்க்க போகிறேன்;
என் திறமைக்கு ஏற்ற
வேலையை செய்ய போகிறேன்;
என் அறிவுக்கு ஏற்ற
வேலையை செய்ய போகிறேன்;
என் வாழ்க்கைக்கு தேவையான
வேலையை செய்ய போகிறேன்;
என் மனதிருப்திக்கு உகந்த
வேலையை செய்ய போகிறேன்;
என் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு
தேவையான வேலையை
செய்ய போகிறேன்; - என்று
மகன் தந்தை செய்த வேலையை
செய்ய விருப்பப்படவில்லை.

அதைப் பார்க்கும் மகன்
தந்தை செய்யும்
மளிகை கடை வியாபாரத் தொழிலில்
லாபம் இருந்தாலும்,
அதைப் பின்பற்றுவதில்லை.
அத்தொழிலை விரும்பி ஏற்று செய்ய
விருப்பப்படுவதில்லை.

இந்த மளிகை கடை
வியாபாரத் தொழிலை எல்லாம்
பொறுமையாக இருந்து
செய்யக்கூடிய அளவிற்கு
எனக்கு பொறுமை கிடையாது;
மேலும் எனக்கு இதில் எல்லாம்
நம்பிக்கை கிடையாது;
அறிவியல் எவ்வளவோ முன்னேறி விட்டது;
அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது;
அறிவியல் சிறப்பு நிலை அடைந்து விட்டது;
அறிவியல் உயர்நிலை அடைந்து விட்டது;
சிந்தனை உயர் நிலை அடைந்து விட்டது;
சீர்திருத்தம் ஓங்கி உயர்நிலை
அடைந்து விட்டது;
பகுத்தறிவு பெருகி விட்டது;
புதுமை பிறந்து விட்டது;
பழமை மறைந்து விட்டது;
அறிவு வளர்ந்து விட்டது;
புத்தி உயர்ந்து விட்டது;
என்ற உயர்ந்த நிலையை
சமுதாயம் அடைந்து,
விஞ்ஞானத்தில் உயர்
எல்லைகளைக் கடந்து,
அறிவு வேலை செய்து கொண்டிருக்கும்
இக்காலத்தில் எனக்கு
மளிகை கடை
வியாபாரத் தொழில் தேவையில்லை.

நான் படித்த படிப்புக்கு
நல்ல வேலை இருக்கிறது
வெளிநாட்டில் அழைக்கிறார்கள்.
வெளிநாடு சென்றால்
இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
என்ற நிலை இருக்கும் போது,
நான் ஏன் மளிகை கடை
வியாபாரத் தொழில் செய்ய வேண்டும் என்று,
மளிகை கடை வியாபாரத் தொழிலில்
இலாபம் இருந்தாலும்,
அந்தத் தொழில் தனக்கு வேண்டாம் என்று,
தந்தையின் தொழிலை விட்டு விட்டு,
மகன் வேறு வேலை வேலை தேடி
சென்று செய்வது என்பது,
பரம்பரைத் தொழிலில் லாபம் இருந்தாலும்,
அத் தொழிலை விடுத்து
வேறு வேலையை மகன் செய்வது ஆகும்

தந்தை செய்த மளிகை கடை
தொழிலில்  லாபம் இருந்தாலும்
மகனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக
தந்தை செய்த தொழிலை
மகன் செய்யாமல் இருப்பது

 

   3.தந்தை ஒரு தொழிலும்,
     மகன் ஒரு தொழிலும்
     பேரன் ஒரு தொழிலும்
     என்று வேறுபட்ட
     தொழில்களைச் செய்வது

இது அனைத்திலும் வேறுபட்டது
பரம்பரைத் தொழிலுடன்
சம்பந்தப்பட்டு,
பரம்பரை அல்லாத
தொழிலுடன் வருவது அல்ல,
இது ஒரு தனிப்பட்ட தொழில்.

தாத்தா ஒரு தொழில் செய்வார்;
மகன் வேறு வேலை செய்வார்;
பேரன் வேறு வேலை செய்வார்;
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல்
பரம்பரை பரம்பரையாக
வேறுபட்ட தொழிலை செய்வது,
மாறுபட்ட தொழிலை செய்வது,
பரம்பரை அல்லாத தொழிலில்
இந்த தனிப்பட்ட தொழில்
இரண்டு விதமான தொழிலை
தன்னுள் கொண்டிருக்கும்
         1.அரசாங்க தொழில்
        2.தனியார் தொழில்
அரசாங்க தொழிலும்,
தனியார் தொழிலும்,
எதிர் எதிர் துருவங்களை
உடையது.
இரண்டிலும் வேலை பார்ப்பவர்கள்
ஒருவருக்கொருவர்
விரோதிகளாக இருப்பதும் உண்டு;
ஒருவருக்கொருவர்
விதோதிகளாக கருதுவதும் உண்டு;
பகைமை பாராட்டுவதும் உண்டு;
இரண்டு நெருங்கிய நண்பர்கள்
ஒன்றாக இருந்து
ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைத்து
மற்றவருக்கு கிடைக்கவில்லை
என்ற காரணத்தினால்
விரோதிகளாக ஆன கதை
இச்சமுதாயத்தில் நிறைய உண்டு.
தனியார் துறையில்
வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி
இச் சமுதாயமும்
அரசாங்க வேலை பார்ப்பவர்களை
தவறாகத் தான் நினைக்கிறது;
தவறாகத் தான் எண்ணுகிறது;
தவறான பார்வையுடன் தான் பார்க்கிறது;

அரசாங்க வேலையில் இருப்பவர்கள்
வேலை ஒழுங்காக செய்வது இல்லை;
வேலை செய்யும் நேரத்தில்
வேலை சரியாக செய்வது இல்லை;
புத்தகம் படிப்பது தூங்குவது என்று
பொழுதைக் கழிக்கிறார்கள்;
அரட்டை அடிப்பது
என்று நேரத்தை செலவிடுகிறார்கள்;
அலுவலகத்திற்கு தாமதமாக வருகிறார்கள்;
சீக்கிரமாக வீட்டிற்கு செல்கிறார்கள்;
தாங்கள் செய்யும் வேலைக்கு
லஞ்சம் வாங்குகிறார்கள்;
என்று பல்வேறு விதமான
குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்;
இச் சமுதாயத்தின் கண்களிலும்,
தனியார் துறை  வேலையில்
இருப்பவர்கள் கண்களிலும் படுவது
அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் மீது தான்.

உண்மையாக உழைக்கும் அரசு ஊழியர்களை;
நேர்மையாக இருக்கும் அரசு ஊழியர்களை;
வேலையே உயிர் என்ற இருக்கும்
அரசு ஊழியர்களை;
செய்யும் தொழிலே தெய்வம் என்று
இருக்கும் அரசு ஊழியர்களை;
வீட்டைப் பாராது;
வீட்டை நினைக்காது;
குடும்பத்தை மறந்து;
உறவுகளை மறந்து;
விடுமுறை நாட்களை மறந்து;
இன்பங்களை மறந்து;
பண்டிகைகளைத் துறந்து;
உழைக்கும் அரசு ஊழியர்களை
அவர்கள் பார்ப்பதில்லை,
இச்சமுதாயமும் பார்ப்பதில்லை,

அப்படியே பார்த்தாலும்
பார்த்த மாதிரி கண்டு கொள்வதேயில்லை.

தவறான சில பேர்
சில இடங்களில்
சில அரசுத் துறையில்  இருந்து
பணி செய்கின்ற காரணத்தினால்
அரசுத் துறையே தவறானது என்றும்,
அரசுத் துறையில் பணியாற்றும்
அரசு ஊழியர்கள் தவறானவர்கள் என்றும்,
முத்திரை குத்தி விட்டனர்.
அதனை ஆதரிப்பது போல்
பெரிய திரையும்
அரசாங்க ஊழியர்கள் கெட்டவர்கள்
என்பது போல் சித்தரித்து விட்டது.
பெரிய திரை நிறைய படங்களில்
அரசாங்க ஊழியர்களை
தங்கள் சமர்த்தியத்தால்,
தங்கள் திறமையினால்,
தீயவர்கள் போலவே சித்தரித்து விட்டது.
அதைக் காணும் மக்களும்
அதை உண்மை என்று நம்பி
அரசுத் துறை ஊழியர்கள் மீது
பகைமை பாராட்டுகின்றனர்;
விரோதம் கொள்கின்றனர்;
இதனால் பகைமை
உணர்ச்சி மேலோங்கத் தான்
செய்ததே ஒழிய
குறையவே இல்லை.
உண்மை உணரும்போது பகைமை மாறும்
என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.
ஒரு சில பேர் செய்யும் தவறை
பெரிதாக சுட்டிக் காட்டி
அரசாங்க ஊழியரை இழிவு படுத்துகிறோம்;

பண்டிகை கொண்டாடுகிறோம்;
குடுபத்துடன் பல்வேறு விதமான நிலையில்
பண்டிகை கொண்டாடுகிறோம்;
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,
என்று பல்வேறுபட்ட
பண்டிகைகளை கொண்டாடுகிறோம்;

பொங்கல் 4 நாட்கள்
தொடர்ந்து வருகிறது
நான்கு நாட்களும் மகிழ்ச்சியுடன்
பண்டிகைகளை கொண்டாடுகிறோம்
ஊர்விட்டு ஊர் செல்லுகிறோம்
லோக்கல் பஸ்ஸில் ஊர் சுற்றுகிறோம்
ஊர் கடந்து ஊர் சென்று
பண்டிகை கொண்டாடுகிறோம்
உள்ளூர் பேருந்துகளை மட்டுமல்லாமல்
வெளியூர் பேருந்துகளையும் பயன்படுத்துகிறோம்
நாம் உள்ளூரிலும் வெளியூரிலும் பயணம் செய்ய
உறவினர்களுடன் சுற்றிப் பார்க்க
உறவினர்களுடன் பல்வேறு கேளிக்கை
இடங்களுக்கு செல்ல,
கோயில்களுக்கு செல்ல,
பல்வேறு இடங்களுக்கு செல்ல,
உறவினர்களை பார்க்க செல்ல,
பேருந்துகளை பயன்படுத்துகிறோம்.

ஆனால் அந்த பேருந்துகள்
எப்படி ஓடுகின்றன
யார் அதன் பின்னால்
இருந்து செயல்படுகின்றனர்
என்பதை யாரும்
சிந்தித்து பார்ப்பதேயில்லை.

எத்தனை தொழிலாளர்கள்
தாங்கள் வீட்டிலிருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
குடும்பத்துடன் வீட்டில் இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
குடும்பத்துடன் வீட்டில்
சந்தோஷமாக இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
மனைவி, குழந்தைகளுடன்
வீட்டில் இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
இன்பமாக வீட்டில் இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
சந்தோஷமாக வீட்டில் இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
மகிழ்ச்சியாக வீட்டில் இருந்து
பண்டிகை கொண்டாடாமல்,
மக்களுக்காக
உள்ளூர் பேருந்துகளையும்,
வெளியூர் பேருந்துகளையும்,
ஓட்டுநர், நடத்துனர் மட்டுமின்றி
இலட்சக்கணக்கான ஊழியர்கள்
நேரடியாகவும், மறைமுகமாகவும்,
பின்னாலிருந்து பேருந்துகளை
இயக்குவதற்கான செயல்களை
செய்து வருகின்றனர்.

மக்கள் வீட்டில்
குடும்பத்துடன் சந்தோஷமாக
பண்டிகை கொண்டாட வேண்டும்
என்பதற்காகவும்;
வெளி இடங்களுக்கு சென்று
பண்டிகை நாட்களில் சந்தோஷமாக
இருக்க வேண்டும்
என்பதற்காகவும்;
வெளி இடங்களுக்கு
சுற்றுலா சென்று மகிழ்வதற்காகவும்
பண்டிகை நாட்களில்
உறவினர்கள் வீட்டிற்கு சென்று
சந்தோஷமாக இருக்க வேண்டும்
என்பதற்காகவும்;
இலட்சக்கணக்கான
போக்குவரத்துத் துறை ஊழியர்கள்
பண்டிகை நாட்களில்
பண்டிகை கொண்டாடாமல்
தங்கள் குடுபத்தை விட்டு வந்து
வந்து வேலை செய்கின்றனர்.

இதை யாரும்
நினைத்துக் கூட பார்ப்பதில்லை;
தியாகம் எப்போதும்
மறைக்கப்பட்டுத் தான் இருக்கும்;
அன்பு எப்போதும்
பிறரால் உணரப்படாமல் தான் இருக்கும்;
கருணை எப்போதும்
பிறரால் அறியப்படாமல் தான் இருக்கும்;
மறைந்திருக்கும் உண்மைகளை,
மறைந்திருக்கும் தியாகங்களை,
மறைந்திருக்கும் கருணைகளை,
அறிய முடியாமல்
நாம் இருப்பதால் தான்
நாள் பண்டிகை பார்க்காமல்
வேலை செய்யும்
அரசாங்க ஊழியர்களின்
உயர் குணங்கனை
நாம் புரிந்து கொள்வதில்லை.
இதைப்போல் பல்வேறு
துறையைச் சார்ந்த ஊழியர்கள்
பல்வேறு வேலைகளைச்
செய்து வருகிறார்கள்.
அரசாங்க வேலை என்று
எடுத்துக் கொண்டாலும்
தனியார் வேலை
என்று எடுத்துக் கொண்டாலும்,
எந்த வேலை என்ற எடுத்துக் கொண்டாலும்,
கஷ்டம் எல்லா வேலையிலும் உண்டு
என்று உணர்ந்து கொண்டோமேயானால்
அரசாங்க வேலை பார்ப்பவர்களை
பகைமை பார்க்க மாட்டோம்
எல்லா வேலைகளையும்
சரிசமமாக மதித்தால்
செய்யும் தொழிலே தெய்வம்
என்று மதித்தால்,
எந்த வித பிரச்சினையும் இல்லை,
சண்டை சச்சரவும் இல்லை என்பதை நாம்
உணர்ந்து கொள்வோம்.


தந்தை அரசாங்க ஊழியராக இருக்கிறார்;
மகன் முயன்று பரீட்சை எழுதி பார்க்கிறார்;
கடினமாக படித்து முயன்று பார்க்கிறார்;
பாஸ் பண்ண முடியவில்லை,
கடினமாக உழைத்து
பாஸ் பண்ண பார்க்கிறார்.
முடியவில்லை
பல நிலைகளிலும் இருந்து
முயன்று பார்க்கிறார்
முடியவில்லை.
தன் திறமையை உபயோகித்து
முயற்சி செய்து பார்க்கிறார்
முடியவில்லை.
பாஸ் பண்ண முடியவில்லை

பாஸ் பண்ணி வேலை வாங்கினால்
பரம்பரை வேலை என்று சொல்லலாம்.

அப்பா செய்த தொழில்
மகன் விருப்பப்பட்டு
எவ்வளவோ முயன்றும்
எக்ஸாம் பாஸ் பண்ணமுடியவில்லை.
போட்டி தேர்வில் வெற்றி
பெற முடியவில்லை.
அதனால் மகன் பிரைவேட் வேலைக்கு செல்கிறான்;
அவனுக்கு பிறக்கும் குழந்தை
அதாவது பேரன்
தனியார் வேலை செய்யாமல்
பிஸினஸ் செய்தால்,
அது பரம்பரை அல்லாத தொழில்.

தாத்தா அரசாங்க தொழில்,
மகன் தனியார் தொழில்,
பேரன் பிஸினஸ்,
தொழில் மாறுபாடு வந்து
கொண்டு இருப்பதை,
சற்று உற்று கவனித்தால் தெரியும்.
பரம்பரையில் ஒன்றுக்கொன்று
சம்பந்தம் இல்லாத தொழில்
ஒன்றுக்கொன்று வேறுபட்ட தொழில்
இவ்வாறு
ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும்
ஒன்றுக்கொன்று வேறுபட்டு செய்யும் தொழில்
பரம்பரைத் தொழிலில் ஒன்றுக்கொன்று
வேறுபட்ட தனிப்பட்ட தொழில்.

தந்தை ஒரு தொழிலும்,
மகன் ஒரு தொழிலும்
பேரன் ஒரு தொழிலும்
என்று வேறுபட்ட
தொழில்களைச் செய்வது

---------இதன் தொடர்ச்சி
           இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(3)

------------பார்க்கவும், படிக்கவும்




No comments:

Post a Comment