July 12, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41

ஆறாவது நாள்
திண்ணனார்
வேட்டையாடி
ஊனமுது, நீர், பூ
எடுத்துக் கொண்டு
திருக்காளத்தியப்பரிடம்
வந்தார்.

காளத்தியப்பர்
திண்ணனாருடைய
பக்தியை முனிவருக்குக்
காட்டும் பொருட்டு
தனது ஒரு கண்ணில்
இரத்தம் வருமாறு செய்தார்.

இக்காட்சியைக் கண்ட
திண்ணனார் ஐயோ
என்று அலறினார்
மயங்கி கீழே விழுந்தார்
வாயில் கொண்டு வந்த
அபிஷேக நீர் சிந்தியது
கையிலிருந்து ஊனும்
வில்லும் விழுந்தது
தலையிலிருந்த
மலர்கள் சிந்தின.

திண்ணனார் எழுந்தார்
இத்தகைய செயலைச்
செய்தது யார்
விலங்குகள் செய்தனவா
வேறு வேடர்கள்
யாரேனும் செய்தார்களா
என்று வருந்தினார்
என்ன செய்தால் இந்த
இரத்தம் நிற்கும்
என்று யோசித்தார்

அரிய வகை
மூலிகைகளைக் கொண்டு
வந்து கண்ணில் அதனுடைய
சாற்றைப் பிழிந்தார்
இரத்தம் வருவது
நிற்கவில்லை

“””ஊனுக்கு ஊன்
உற்றநோய் தீர்க்கும்”””” என்ற
பழமொழி திண்ணனார்
நினைக்கு வந்தது

என்னுடைய கண்ணை
எடுத்து அப்பினால்
இறைவன் கண்ணுக்கு
மருந்தாகி இரத்தம் நிற்கும்
என்று துணிந்து
அம்பினை எடுத்துத்
தனது வலக்கண்ணை தோண்டி
எடுத்து அப்பினார்
இரத்தம் நின்று விட்டது

அதைக் கண்ட
மகிழ்ச்சியில் திண்ணனார்
தன்னை மறந்து ஆடினார்.
திண்ணனாருடைய
பக்தியை மேலும்
சிவகோசரியாருக்கு
காட்டுவதற்காக இறைவன்
தன்னுடைய மற்றொரு
கண்ணிலும் இரத்தம்
வருமாறு செய்தார்.

இதனைக் கண்ட
திண்ணனார்
இதற்கெல்லாம் நான்
கலங்க மாட்டேன்
எனக்கு மேலும்
ஒரு கண் இருக்கிறது
அதை எடுத்து அப்புவேன்
என்று கண்ணை
பிடுங்கி எடுக்க தயாரானார்.

கண்ணை பிடுங்கி விட்டால்
சிவலிங்கத்தில் இரத்தம்
வழியும் கண்
எங்கே இருக்கிறது
என்று தெரியாது
என்பதற்காக தன்
இடக் காலை
சிவலிங்கத்தின் இரத்தம்
வரும் கண்ணில்
அழுத்தி வைத்து
அம்பினால் இரண்டாவது
கண்ணையும் பிடுங்குவதற்கு
அம்பை கண்ணில்
ஊன்றினார்.

காளத்தியப்பர்
நேரில் தோன்றி
திண்ணனாருடைய
கையைப் பிடித்து
நில்லு கண்ணப்பா
நில்லு கண்ணப்பா
என்று தடுத்து அருளினார்

கண்ணப்பா என்றும்
என் வலப்பக்கம் நிற்பாய்
என்று அருள் புரிந்தார்.

கண்ணப்ப நாயனார்
வெறியுடன்
கடவுளை வணங்கவில்லை
பக்தியுடன் கடவுளை
வணங்கினார்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களுக்கே
அனைத்து உயிர்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
உணர்ந்து கொள்ள முடியும்

அதனால் தான்
கண்ணப்ப நாயனார்
கல்லிலும் கடவுளைக்
கண்டார்.

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணருகின்றாரோ
அவரே பக்தியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தன் கடவுள்
மேல் வைத்திருக்கும்
பக்தியைப் போன்றே
பிற கடவுள்களின் மேலும்
பக்தியை வைத்திருப்பார்
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து
கொள்ள மாட்டார்

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணரவில்லையோ
அவர் தான் வெறியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தான் வணங்கும்
கடவுளே உயர்ந்தது
தான் வணங்கும்
கடவுளே உண்மையானது
என்று சொல்லிக் கொண்டு
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து கொள்வர்

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களால் தான்
இந்த உலகத்தில்
சண்டையும் அமைதி
இன்மையும் ஏற்படுகிறது

பக்தியுடன் கடவுளை
வணங்கினால் மட்டுமே
இந்த உலகத்தில்
அமைதி நிலவும்
சமத்துவ, சமதர்ம
சமுதாயம் மலரும்
என்பதை உணர்ந்து
கடவுளை வெறியுடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பயத்துடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பக்தியுடன் தான்
வணங்க வேண்டும் என்று
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////


No comments:

Post a Comment