August 25, 2018

திருக்குறள்-பதிவு-6



                       திருக்குறள்-பதிவு-6

ஔவையார் நேரில்
திருவள்ளுவரைச் சந்தித்து
திருவள்ளுவரிடம்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தாங்கள் பாடிய திருக்குறளை
அரங்கேற்றம் செய்கிறார்கள்
என்று கேள்விப்பட்டு
ஓடோடி வந்தேன்
திருக்குறள் சங்கத்தில்
அரங்கேற்றம் ஆகிவிட்டதா
என்று ஔவையார்
திருவள்ளுவரை
நோக்கி கேட்டார்

மதுரை தமிழ்ச் சங்கத்தில்
தான் இயற்றிய
திருக்குறள் நூல்
அரங்கேற்றப்படவில்லை
என்று திருவள்ளுவர்
ஔவையாரிடம் கூறினார்

அதற்கு ஔவையார்
திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில்
அரங்கேற்றப்படவில்லை
என்றால் அது திருக்குறள்
என்ற நூலுக்கு இழுக்கல்ல
அது தமிழுக்கே இழுக்கு
வாருங்கள் நாம் இருவரும்
ஒன்றாகச் சென்று
பாண்டிய மன்னனை சந்தித்து
மதுரை தமிழ்ச்சங்கத்தை
கூட்டி திருக்குறளை
எப்படியும் அரங்கேற்றம்
செய்யலாம் வாருங்கள்
என்று அழைத்தார்

அதற்கு திருவள்ளுவர்
சொல்லிய வார்த்தை
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது
திருவள்ளுவர் சொல்கிறார்

“””ஔவையே
திருக்குறளை நான்
எப்போது எழுதி முடித்து
இச்சமுதாயத்திற்கு
எப்போது அளித்தேனோ
அப்போதே என்னுடைய
கடமையை நான் செய்து
முடித்து விட்டேன்
திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்தச் சமுதாயத்தைச்
சார்ந்தது
அதற்காக நான் ஏன்
பதற வேண்டும் என்று
திருவள்ளுவர்
சொல்லிய சொல்லில்
பல அர்த்தங்கள்
மறைந்து உள்ளன”””””

என் மூலம்
இச் சமுதாயத்திற்கு
என்ன வழங்கப்பட
வேண்டுமோ
அது என் மூலமாக
வழங்கப்பட்டு விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச் சமுதாயத்தைப்
பொறுத்தது
நான் அதைப் பற்றி
கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை
என்னுடைய படைப்பு
உயர்ந்த படைப்பு என்று
உணர்ந்து தகுதி
வாய்ந்தவர் வரும் பட்சத்தில்
என்னுடைய படைப்பு
அவருக்கு கிடைக்கும்
உயர்ந்த படைப்பைத்
தேடி வரும்
நாட்டம் உள்ளவர்களுக்கு
நான் இயற்றிய
திருக்குறள் கிடைக்கும்

உலகின் எந்த
கோடியில் இருந்தாலும்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்பை
தேடுபவர்களுக்கு
உயர்ந்த படைப்பு
கிடைத்தே ஆக வேண்டும்
என்பது தான் திருவள்ளுவர்
சொன்னதற்கு அர்த்தம்

உயர்ந்த படைப்புகளைப்
படைப்பவர்கள்
உயர்ந்த படைப்புகளைப்
படைத்து
உயர்ந்த படைப்புகளை
இச்சமுதாயத்திற்காக
அளித்து விடுவார்கள்
இச்சமுதாயம்
ஏற்றுக் கொள்கிறதா
ஏற்றுக் கொள்ளவில்லையா
எனபதைப் பற்றி
அவர்கள் கவலைப்பட
மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகளை
ஏற்றுக் கொள்ளும்
தகுதி உடையவர்கள்
அதை தேடி வருவார்கள்
அதை ஏற்றுக் கொள்வார்கள்
யாருக்கு உயர்ந்த
படைப்புகள் கிடைக்க
வேண்டுமோ அவர்களுக்கு
கண்டிப்பாக கிடைக்கும்

உயர்ந்த படைப்புகளில்
உள்ள ரகசியங்கள்
நமக்கு புரிய வேண்டுமானால்
நாம் அந்த உயர்ந்த படைப்பின்
உயர்ந்த நிலைக்கு
செல்ல வேண்டும்

உயர்ந்த படைப்புகளை
படைப்பவர்கள்
தங்களால்
படைக்கப்பட்ட உயர்ந்த
படைப்புகளை
தங்கள் படைப்பு என்று
விளம்பரப்படுத்திக் கொண்டு
புகழைத் தேடியும்
பணத்தைத் தேடியும்
ஓட மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகள்
உயர்ந்தவர்களால்
படைக்கப்படும்போது
உயர்ந்த படைப்புகளை
இவை உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள் என்று
புரிந்து கொண்டால்
உயர்ந்த படைப்புகள்
பயனைத் தரும்
உயர்ந்த படைப்புகளை
உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள்
என்பதை புரிந்து
கொள்ளாமல்
உயர்ந்த படைப்புகளை
இழிவு படுத்தினால்
இழப்பு படைத்தவருக்கும்
படைக்கப்பட்டதற்கும்
இல்லை
சமுதாயத்திற்கு தான் இழப்பு
உயர்ந்த படைப்புகளை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
படைத்தவர்களை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
அனைவரும் ஏற்றுக் கொண்டு
பின்பற்ற முன்வர
வேண்டும் அப்போது தான்
உயர்ந்த படைப்புகள்
படைக்கப்பட்டதின்
நோக்கம் நிறைவேறும்
உயர்ந்த படைப்புகள்
அனைவருக்கும் பயன்பட்டு
நன்மை தரும்

அதனால் தான் திருவள்ளுவர்
நூலைப் பாடியதோடு
என் கடமை முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தைப்
பொறுத்தது என்றார்

---------  இன்னும் வரும்
---------  25-08-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment