August 26, 2018

திருக்குறள்-பதிவு-7


                        திருக்குறள்-பதிவு-7

உலகத்தில் படைக்கப்படும்
படைப்புகள் அனைத்தையும்
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : எழுத்து மூலம்
        படைக்கப்படும்
        படைப்புகள்

இரண்டு :சொல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

மூன்று : செயல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

எழுத்து மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கதை, கவிதை, கட்டுரை
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

சொல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
பாடுவது, பேசுவது
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

செயல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கட்டிடம் கட்டுதல்,
சிற்பம் செதுக்குதல்
மற்றும் அனைத்தையும்
இந்தப் பிரிவில்
குறிப்பிடலாம்

எழுத்து, சொல்
செயல் மூலம்
படைப்புகள்
படைக்கப்பட்டாலும்,
படைக்கப்பட்ட
படைப்புகள் அனைத்தும்,
இரண்டு நிலைகளைத்
தன்னுள் கொண்டு
இருக்கும்

ஒன்று : உயிருள்ள படைப்பு
இரண்டு:  உயிரற்ற படைப்பு

உயிருள்ள படைப்பு
என்பது
காலத்தால்
அழியாத படைப்பு

உயிரற்ற படைப்பு
என்பது
காலத்தால் அழியும்
படைப்பு

காலத்தால் அழியாத
உயிருள்ள படைப்புக்கு
திருக்குறள்,
பகவத் கீதை,
இராமாயணம்,
மகாபாரதம்
ஆகியவற்றைக்
குறிப்பிடலாம்

எந்த படைப்பு
காலத்தால் அழியாமல்
மக்களால்
காலம் காலமாக
நினைக்கப்பட்டு
பேசப்பட்டு
பின்பற்றப்பட்டு
வருகிறதோ
அது தான்
காலத்தால்
அழியாத படைப்பு;
உயிருள்ள படைப்பு;

எந்த படைப்பு
காலத்தால் அழிந்து
மக்களால்
நினைக்கப்படாமல்,
பேசப்படாமல்,
பின்பற்றப்படாமல்,
இருக்கிறதோ
அது தான்
காலத்தால்
அழியும் படைப்பு;
உயிரற்ற படைப்புl;

திருக்குறள் காலத்தால்
அழியாத
உயிருள்ள படைப்பு
இத்தகைய உயர்ந்த
சிறப்பைப் பெற்றது
திருக்குறள்

திருக்குறளை
எழுதி முடித்ததோடு
என் கடமை
முடிந்து விட்டது
இனி திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தை
சார்ந்தது என்று சொன்ன
திருவள்ளுவரை நோக்கி
ஒளவையார்
சொன்னார்

நாம் நமக்காக
செல்லவில்லை
தமிழுக்காக செல்கிறோம்
புலவர்கள் மறுத்தாலும்
அல்லது
பாண்டியனே தடுத்தாலும்
உலகில் உள்ள
அனைத்து மக்களும்
மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனாக வாழ்வதற்கு
தேவையான அனைத்து
கருத்துக்களையும்
தன்னுள் கொண்ட
திருக்குறள்
மக்கள் கையில்
சேர வேண்டும்
மக்களுக்காக பாடப்பட்ட
திருக்குறள்
மக்களுக்கு
கிடைக்க வேண்டும்
அதற்காக
எப்பாடு பட்டேனும்
திருக்குறளை அரங்கேற்றம்
செய்ய வேண்டியது
என்னுடைய பொறுப்பு
தாங்கள் தயவு செய்து
என்னுடன் வாருங்கள்
என்று திருவள்ளுவரை
அழைத்துக் கொண்டு
பாண்டிய மன்னனை
காணச் சென்றார்
ஔவையார்

ஔவையார்
பாண்டிய மன்னனை
பார்க்க வந்திருக்கிறார்
என்று தெரிந்தும்
ஔவையாரை
பாண்டிய மன்னனின்
அமைச்சர் தடுத்தார்
அமைச்சரின்
தடைகளைத் தகர்த்து
ஔவையார்
கடந்து சென்றார்
ஔவையார் இறுதியில்
பாண்டிய மன்னனைக்
கண்டார்

ஔவையார்
பாண்டிய மன்னனிடம்.
திருவள்ளுவரின்
அரிய நூலான
திருக்குறளை
சங்கத்தில்
கேட்காமலேயே மறுத்து
விட்டார்களாம்
மீண்டும்
சங்கத்தை கூட்டி
நூலைக் கேட்க
வேண்டும் என்றார்

ஔவையாரின்
வேண்டுகோளுக்கிணங்க
தமிழ்ச்சங்கம்
மதுரையில்
திருவள்ளுவரின்
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்வதற்கு
பாண்டிய மன்னனால்
கூட்டப்பட்டது

--------  இன்னும் வரும்
---------  26-08-2018
/////////////////////////////////////////////////


No comments:

Post a Comment