March 04, 2019

திருக்குறள்-பதிவு-118


                    திருக்குறள்-பதிவு-118

ஐந்து :
மைக்கேல் சர்வீட்டஸ்
(1509-1553)
Micheal Servetus(1509-1553)
“ ஸ்பானிய இறையியல்
வல்லுநர் ;மருத்துவர் ;
மற்றும் வரைபட நிபுணர்
(Cartographer) “

“திரித்துவத்தின் பிழைகள்
(Errors of the Trinity)
என்ற புத்தகத்தை
வெளியிட்டார் - அதில்
அவர் திரித்துவத்தில்
நம்பிக்கை கொண்டு
அதனை பின்பற்றுபவர்கள்
அனைவரும் - மூன்று
தெய்வத்தின் மீது
நம்பிக்கை கொண்டு
அதை வணங்குபவர்கள் ;
அதாவது பல்தெய்வ
வழிபாடு கொண்டவர்கள் ; “
என்றார் ;”

“ திரித்துவக் கடவுள்
என்பது மூன்று
தலைகளைக் கொண்ட
ஒரு அசுரன் மற்றும்
கோரமான உருவம்
கொண்ட பிசாசு என்றார்.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும்,
கிறிஸ்தவர்களும்
இந்த புத்தகத்தை எதிர்த்த
காரணத்தினால்
ஸ்பானிய பேரரசர்
சார்லஸ்-V அவர்கள் அந்த
புத்தகத்தை தடை செய்தார் “

“ மைக்கேல் சர்வீட்டஸ்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார் ;
என்ற காரணத்திற்காக
ஜெனிவாவில்
அக்டோர் 27, 1553
(27-10-1553) அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார் ; “

ஆறு :
அனோயோ பாலேரியா
(1500 -1703)
Aonio Paleario (1500 -1703)
“ இத்தாலிய சீர்திருத்தவாதி ;
கிரேக்க மற்றும்
எபிரேயு ஆசிரியர் ; “

“இயேசுவின் இறப்பில்
கிடைத்த நன்மைகள்
(The Benefits of Christ’s
Death) என்ற புத்ககம்
ஒன்றை வெளியிட்டார்

" அவருடைய புத்தகத்தில்
இயேசு கிறிஸ்துவின்
இறப்பு உண்மையில்
யாருக்கெல்லாம்
ஆதாயமாக இருக்கிறது ;"

"இயேசு கிறிஸ்துவின்
இறப்பை வைத்து
தங்கள் பிழைப்பை
ஓட்டிக் கொண்டு
இருப்பவர்கள்
எல்லாம் யார்?"

"இயேசு கிறிஸ்துவின்
இறப்பை மூலதனமாக
வைத்து - பணம் சம்பாதித்து
சுகபோகமாக வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
எல்லாம் யார் என்று
விளக்கமாக எழுதினார் ;"

"இத்தகைய காரணங்களினால்
அவர் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்று
குற்றம் சாட்டப்பட்டு
கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு
தொடர்ந்து சித்திரவதை
செய்யப்பட்டு
இரண்டு வருடங்கள்
கழித்து ரோம் நகரத்தில்
அவர் உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்”

ஏழு :
ஜான் விக்ளிஃப் (1330-1384)
John Wycliffee (1330-1384)
“ஆங்கில தத்துவவாதி ;
இறையியல் வல்லுநர் ;
போதகர் ; “

" இவர் ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தின்
புகழ்பெற்ற தத்துவ மேதை
மற்றும் இறையியல்
பேராசிரியர் "

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்
பட்டிருக்கும் திருப்பலியில்
வழங்கப்பட்டு
உட்கொள்ளப்படும்
அப்பம் (Bread)
இயேசுவின் உடலாகவும்,
மதுரசம் (Wine)
இயேசுவின் இரத்தமாகவும்
மாற்றமடைகிறது என்ற
கோட்பாடு தவறானது
என்றார்.  

“ தனிப்பட்ட ஒப்புதல்
வாக்குமூலம்
இயேசு கிறிஸ்துவால்
கட்டளையிடப்படவில்லை ;
அப்போஸ்தலர்களால்
பயன்படுத்தப்படவில்லை ;
என்றார் ; “

" கிறிஸ்தவர்கள்
பின்பற்றி வரும்
மத நம்பிக்கைகளைப்
பற்றி பல்வேறு விதமான
கேள்விகளை எழுப்பினார் ;
அவர் கேட்ட கேள்விகள்
மக்களிடையே மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தின ; "

 "இத்தகைய தாக்கத்தால்
மிரண்டு போனவர்கள்
அவரை பல்வேறு விதமான
துன்பங்களுக்கு உட்படுத்தி
அவரை இறக்க வைத்தனர் :

" அவர் இறந்த பிறகு
அவருடைய படைப்புகள்
அனைத்தையும்
தடை செய்தனர் ;"

எட்டு :
ஜான் ஹஸ் (1369-1415)
John Hus (1369-1415)
செக் மத சீர்திருத்தவாதி ;

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடை
முறைப்படுத்தி
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மத வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்றார் “

“ விஞ்ஞானத்திற்கு எதிராக
பைபிளில் உள்ள
கருத்துக்களை திருத்தம்
செய்ய வேண்டும் என்றார் “

“ மதகுருமார்கள்
குருக்கள் போப்
ஆகியோருக்கான
ஓழுக்கங்களை முறைப்
படுத்த வேண்டும் என்றார்

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக
ஜுலை 6,1415
(06-07-1415) அன்று
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  04-03-2019
//////////////////////////////////////////////



No comments:

Post a Comment