January 07, 2020

பரம்பொருள்-பதிவு-112


           பரம்பொருள்-பதிவு-112

அரவான் :
“உதவியில்
உதவி செய்தவருக்கும் ;
உதவி பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு
என்ற ஒன்று எப்போதும்
இருந்து கொண்டே இருக்கும் ;
ஆனால் யாசகத்தில்
யாசகம் அளித்தவருக்கும் ;
யாசகம் பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருக்காது ;”

துரியோதனன் :
“நீ சொல்வது எனக்கு
புரியவில்லை மகனே !”

அரவான் :
“உதவி கேட்டு
வந்தவருக்கு
நாம் உதவி செய்து
விட்டோம் என்றால்,
என்றாவது ஒரு நாள்
நமக்கு உதவி
தேவைப்படும்போது
உதவி பெற்றவரிடம்
உதவி கேட்கத்
தோன்றும் - அவர் உதவி
செய்யவில்லை எனில்
உதவி பெற்றவரைப்
பார்த்து - அவர் கஷ்டத்தில்
இருக்கும் போது - நாம்
எப்படி உதவி செய்தோம்
நன்றி மறந்து விட்டான்
நன்றி கெட்டவன் என்று
திட்டுவோம் அவரிடம்
கோபம் கொள்வோம்
பகை உணர்வு ஏற்படக்கூட
வாய்ப்புண்டு - இது
உதவி செய்தவர் நிலை ;”

“அதைப்போல  
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணம் - அவர்
மனதில் இருந்து
கொண்டே இருக்கும் ;
உதவி செய்வதற்கான
காலத்தை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டே இருப்பார்.
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும் வரை
உதவி செய்தவரையும்
அவர் செய்த
உதவியையும் நினைத்துக்
கொண்டே இருப்பார் ;”

“அதாவது உதவியில்
உதவி செய்தவருக்கும் 
உதவி பெற்றவருக்கும்
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருந்து
கொண்டே இருக்கும் “

“ஆனால் யாசகத்தில்
யாசகம் என்று
கேட்டு வந்தவருக்கு
யாசகம் அளிப்பவர்
அவர் கேட்கும் யாசகத்தை
அளித்து விட்டால்
யாசகம் அளித்தவர்- எந்த
காலத்திலும் தனக்கு
என்ன நேர்ந்தாலும்
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவரிடம்
எதையும் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்க
மாட்டார் - தான் யாருக்கு
யாசகம் அளித்தோம்
என்பதையும் - என்ன
யாசகம் அளித்தோம்
என்பதையும்
மறந்து விடுவார் “

“யாசகம் பெற்றவரும்
தான் யாரிடம்
யாசகம் பெற்றோமோ
அவரையும் - அவரிடம்
பெற்ற யாசகத்தையும்
மறந்து விடுவார் “

“அதாவது
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவர்
ஆகிய இருவருக்கும்
இடையே எந்தவிதமான
தொடர்பும் இருக்காது “

“அதனால் தான் கேட்டேன்
பெரிய தந்தையே !
நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்திருப்பது
உதவியையா அல்லது
யாசகத்தையா என்று ?”

துரியோதனன் :
(அரவானின் அற்புதமான
அறிவுத் திறனைக்
கண்டு மலைத்துப் போன
துரியோதனன் வியந்து
போய் நின்றான் )

“அரவான் உன்னுடைய
வீரத்தைக் கேள்விப்பட்டு
மலைத்து நின்றேன் ;
நேரில் உன்னை சந்தித்த
போது உன்னுடைய
பணிவைக் கண்டு
ஆச்சரியப்பட்டு நின்றேன் ;
இப்போது உன்னுடைய
அறிவைக் கண்டு
வியந்து நிற்கிறேன் ;”

“வேறு யாருடனும்
ஒப்பிட முடியாத
தனிச்சிறப்பு பெற்றவனாக
இருக்கிறாய் மகனே ! “

“நீ செய்யக்கூடிய
செயலுக்கு இணையாக
என்னால் எதுவுமே
செய்ய முடியாது “

“உதவி செய்ய வேண்டுமா
யாசகம் தர வேண்டுமா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை அதைத்
தருபவருக்குத் தான்
இருக்கிறது ; - அதனால்
நான் உன்னிடம் கேட்டுப்
பெற வந்ததை உதவியாக
செய் என்றோ அல்லது
யாசகமாக தா என்றோ
நான் உன்னிடம்
கேட்க முடியாது ?
நீ தான் முடிவு
செய்ய வேண்டும் “

அரவான் :
“நான் ஒருவருக்கு
ஒன்றைக் கொடுத்து
விட்டால்
யாருக்கு கொடுத்தேன் ;
எப்போது கொடுத்தேன் ;
என்ன கொடுத்தேன் ;
என்ன காரணத்திற்காக
கொடுத்தேன் ; என்பதை
எல்லாம் எப்போதும்
என்னுடைய நினைவில்
வைத்துக் கொள்வதே
இல்லை ;”

“நான் யாருக்கு என்ன
கொடுத்தாலும்
அதை யாசகமாகக்
கொடுத்துத் தான்
எனக்குப் பழக்கம் ;”

“நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்ததை
நான் உங்களுக்கு
யாசகமாகவே தர
முடிவு செய்து விட்டேன் ;”

“சொல்லுங்கள் தந்தையே !
சொல்லுங்கள் என்னிடமிருந்து
யாசகமாக நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள் என்று
சொல்லுங்கள்……………………………? “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 07-01-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment