February 02, 2020

பரம்பொருள்-பதிவு-122


                 பரம்பொருள்-பதிவு-122

அரவான்  :
"யோசித்தால் நல்ல
முடிவை
எடுக்கலாம் அல்லவா?"

கிருஷ்ணன் :
"யோசித்தால் நம்மால்
முடிவைத் தான்
எடுக்க முடியும் "

"அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை நம்மால்
எப்படி தீர்மானம்
செய்ய முடியும் "

"ஒருவருக்கு நல்ல
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - கெட்ட
முடிவாகத் தெரியும் "

"ஒருவருக்கு கெட்ட
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - நல்ல
முடிவாகத் தெரியும் "

"யோசித்து
முடிவு எடுக்கும்
உரிமை மட்டுமே
நம்மிடம் இருக்கிறது
அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை நம்மிடம்
இல்லை - அது
இந்த சமுதாயத்திற்கு
மட்டுமே இருக்கிறது "

அரவான்  :
"அப்படி என்றால்
யோசிக்க வேண்டாம்
என்கிறீர்களா ?"

கிருஷ்ணன்  :
"துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே ;;
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு
என்று நான்
கேட்டிருந்தால்
நீ யோசித்திருக்கலாம் "

"நான் அவ்வாறு
கேட்கவேயில்லையே "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று தானே கேட்டேன் "

"நான் கேட்டதில்
ஏதேனும் தவறு
இருக்கிறதா யோசிக்க
வேண்டும் என்கிறாய் "

அரவான்  :
"பரந்தாமா !
நீங்கள் கேட்டதில்
எந்தவிதமான
தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை "

"நீங்கள் சொல்வது
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குப் படுகிறது "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் - நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாவதன்
மூலம் நான் பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களுக்கு செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆக மாட்டேன் "

"வாக்குத் தவறியவன்
ஆக மாட்டேன் "

"நான் சம்மதிக்கிறேன் "

"நான் களப்பலியாவதற்கு
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக் கேட்டு
வந்தால் அவருக்காக
களப்பலியாகிறேன்  ;
பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
சம்மதிக்கிறேன் ;"

கிருஷ்ணன்  :
"அரவான் ! - நீ
களப்பலியாக
சம்மதித்ததை
ஏற்றுக் கொள்கிறேன் ;
ஆனால்,
உன்னுடைய சம்மதத்தை
மட்டுமே வைத்துக்
கொண்டு உன்னை நான்
களப்பலி கொடுப்பதற்கான
முடிவை எடுக்க முடியாது "

"உன்னுடைய தாய்
தந்தை மற்றும் உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
அனுமதி பெற்ற
பிறகே வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலி
கொடுப்பதற்கான
முடிவை எடுப்பேன் "

"அவர்களுடைய சம்மதம்
பெறாமல் உன்னை
நான் களப்பலி
கொடுக்க மாட்டேன் "

அரவான் :
"ஏன் அனைவரிடமும்
ஒப்புதல் பெற வேண்டும் ;
என்னுடைய அனுமதி
மட்டும் இருந்தால்
போதாதா………………………………..? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 02-02-2020
//////////////////////////////////////////




No comments:

Post a Comment