February 03, 2020

பரம்பொருள்-பதிவு-123


                 பரம்பொருள்-பதிவு-123

கிருஷ்ணன் :
"உன்னுடைய ஒப்புதலை
மட்டும் வைத்துக் கொண்டு
உன்னை களப்பலி
கொடுப்பதற்கு
களப்பலியை என்ன
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான்?"

"களப்பலி எவ்வளவு
உயர்ந்த விஷயம் என்பது
உனக்குத் தெரியுமா ?"

"எப்படி வேண்டுமானாலும்
பலி கொடுக்கலாம்
என்பதற்கு இது ஒன்றும்
சாதாரணமான
பலி அல்ல களப்பலி "

"களப்பலி என்றால்
என்ன என்பதையும் ;
அதனுடைய முழு
விவரங்கள் எவைகள்
என்பதையும் ;
அறிந்தவர்கள் யாருமே
களப்பலியை சாதாரணமான
விஷயமாக எடுத்துக்
கொள்ள மாட்டார்கள் ;
அவர்களுக்கு மட்டுமே
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது தெரியும் "

“போரில் வெற்றி
பெற வேண்டும் என்பதற்காக
போர் தொடங்குவதற்கு
முன் செய்யப்படும்
சடங்கிற்குப் பெயர்
தான் களப்பலி “

"போரில் வெற்றி பெறவே
முடியாது என்ற நிலையில்
இருப்பவர்களும் - போர்
தொடங்குவதற்கு முன்னர்
களப்பலி கொடுத்தால்
வெற்றி பெற முடியும்
என்ற சிறப்பைக் கொண்டது
தான் களப்பலி “

“களப்பலி கொடுப்பதற்கு
என்றே சில விதிமுறைகள்
இருக்கிறது - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றித்  தான் களப்பலி
கொடுக்க வேண்டும் - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றாமல் களப்பலி
கொடுக்கவும் கூடாது ;
களப்பலி கொடுத்தாலும்
எந்தவிதமான
பயனும் கிடைக்காது ; “

“யாராலும் மதிப்பிட
முடியாத இத்தகைய
மதிப்பு வாய்ந்த
களப்பலியைப் பற்றி - நீ
அறிந்து இருந்தாலும்
நான் சொல்லப்போகும்
சில விஷயங்களையும்
மனதில் நிறுத்திப்
பார்த்தாயானால்
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது உனக்குத் தெரியும் “

“கேள் அரவான் கேள் “

“களப்பலி என்றால்
என்ன என்று - நான்
சொல்லப் போவதை
நன்றாகக் கேள் “

“களப்பலியுடன் நீ
சம்பந்தப்பட்டவன் என்பதால்
களப்பலி என்றால்
என்ன என்பதை
நான் உனக்கு விளக்கி
சொல்கிறேன் கேள் “

“போரில் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
போருக்கு முன்னால்
களப்பலி கொடுப்பதற்கு
உரிய நாளை சோதிடத்தை
சரியான முறையில்
கணிப்பவர் மூலம்
தேர்ந்தெடுக்க வேண்டும் “

“களப்பலியாகக் கூடிய நபர்
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பதை முதலில்
தெரிந்து கொள்ள வேண்டும்.”

“களப்பலியாகப் போகிறவர்  
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பது ஏற்கனவே
உனக்குத் தெரியும் ;
இருந்தாலும் நான்
சொல்கிறேன் கேள்.
32 லட்சணங்கள்
கொண்டவராகவும் ;
எதிர் ரோமம்
படைத்தவராகவும் ;
இருப்பவரைத் தான்
களப்பலியாகக் கொடுப்பதற்குத்
தேர்ந்தெடுக்க வேண்டும் ;”

“தேர்ந்தெடுக்கப் பட்ட
களப்பலியாகப்
போகிறவரின் ஒப்புதலைப்
பெற வேண்டும் ;
களப்பலியாகப் போகிறவரின்
ஒப்புதலைப் பெற்றால்
மட்டும் போதாது ;
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்கள் ஆகியோரின்
அனுமதியையும்
பெற்ற பின்பு தான்
களப்பலியாகப் போகிறவரை
களப்பலியாகக் கொடுக்கலாம்
என்ற முடிவை
எடுக்க வேண்டும் ”

“களப்பலி கொடுக்கக்
கூடிய நாளன்று
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில்
யாரேனும் ஒருவர்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்டி
அந்த தலையை காளி
தேவிக்கு படைக்க வேண்டும்”

“தாய் , தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில் யாரும்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்ட
முன்வரவில்லை என்றால்
களப்பலியாகப் போகிறவரே
தன் தலையை தானே
வெட்டி காளி தேவிக்கு
படைக்க வேண்டும் “

“இவைகள் அனைத்தையும்
முறைப்படி செய்தால்
காளிதேவி நேரில் தோன்றி
போரில் வெற்றி பெறுவதற்கான
வரத்தை அளிப்பாள்”

இது தான் களப்பலி”

“இப்போது புரிகிறதா
அரவான் - நான் ஏன்
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டும் - என்று
கூறினேன் என்று “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 03-02-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment