April 15, 2020

பரம்பொருள்-பதிவு-200


              ஜபம்-பதிவு-448
            (பரம்பொருள்-200)

“அந்த இடமே
பலத்த சத்தத்தால்
அதிரும் வகையில்
காற்றில்
பரந்த கூந்தலை
தலையில் தாங்கி ;
கருமையான
நிறத்தை
உடலில் தாங்கி ;
ஆவேசத்தை
முகத்தில் தாங்கி ;
கோபக்கனலை
விழிகளில் தாங்கி ;
அச்சமூட்டும்
புருவங்களைத் தாங்கி ;
நெற்றியில்
நெற்றிச்
சுட்டியைத் தாங்கி ;
காதில்
கம்மலைத் தாங்கி ;
மூக்கில்
மூக்குத்தியைத் தாங்கி ;
சிவப்பை
நாக்கில் தாங்கி ;
மண்டை ஓடுகளை
கழுத்தில் தாங்கி ;
காலில்
கொலுசுகளைத் தாங்கி ;
கையில்
வாளைத் தாங்கி ;
அரவானுக்கு
அருளை வாரி
வழங்குவதற்காக
காளிதேவி
ஆவேசமாக
அரவான் முன்னால்
வந்து நின்றாள் ; ‘

“காளிதேவியின்
முகத்தில்
இருந்த இரத்தம்
அரவானுடைய
இரத்தம் என்று
தெள்ளத்
தெளிவாகத்
தெரிந்தது  

“காளிதேவியின்
நாக்கில்
இருந்து
வழிந்த
அரவானுடைய
இரத்தம்
காளிதேவியின்
உடலை
இரத்தத்தால்
நனைத்துக்
கொண்டிருந்தது  

“காளிதேவியின்
வாயைச்
சுற்றிலும்
இருந்த
இரத்தத் துளிகள்
காளிதேவி
அரவானுடைய
இரத்தத்தை
குடித்ததற்கான
அடையாளமாக
இருந்து கொண்டு
இருந்தது “ 

“ஆவேசத்தை
வெளிப்படுத்திக்
கொண்டு
நேரில் தோன்றிய
காளி ;
அச்சத்தை
ஊட்டும் வகையில்
நேரில் தோன்றிய
காளி  ;
பயத்தை ஏற்படுத்தும்
வகையில்
நேரில் தோன்றிய
காளி ;
பஞ்ச
பாண்டவர்களையும்
கிருஷ்ணனையும்
பார்த்து விட்டு
கொஞ்சம்
கொஞ்சமாக
அமைதி
நிலைக்கு
திரும்பினாள் ; “

“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
காளிதேவியை
இரு கரங்களையும்
ஒன்றாகக் குவித்து
வணங்கிய
வண்ணம் நின்று
கொண்டிருந்தனர்  

“அமைதி நிலைக்கு
திரும்பிய காளி
அரவானை நோக்கி
பேசத் தொடங்கினாள் “

“மகனே !
அரவான்
நீ செய்த
செயலால்
என்னுடைய தாகம்
தணிந்தது ;
யாராலும் எளிதில்
குளிர்விக்க முடியாத
என்னுடைய
உள்ளம் உன்னால்
குளிர்ந்தது ;
காலம் காலமாக
வறண்டு கிடந்த
என்னுடைய
மனம்
மகிழ்ந்தது ; “

“யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய
தியாகத்தைச்
செய்து இருக்கிறாய் “

“தன்னலம்
கருதாது
பொதுநலத்திற்காக
உன்னையே
களப்பலியாகத்
தந்திருக்கிறாய் “

“உன்னையே
இந்த உலகத்தின்
நன்மைக்காக
ஒப்படைத்திருக்கிறாய் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment