April 15, 2020

பரம்பொருள்-பதிவு-201


              ஜபம்-பதிவு-449
            (பரம்பொருள்-201)

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
நீ செய்த
இந்தத் தியாகம்
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவராலும்
போற்றப்படப்
போகிறது “
    
“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய
புகழ் அழியாமல்
நிலைத்து
நிற்கப்
போகிறது “

“இந்த உலகமே
உன்னை
தெய்வமாக
நினைத்து
வழிபடக் கூடிய
நிலை உருவாகப்
போகிறது “

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னை
நினைத்து
வழிபடக் கூடியவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள் “

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய
இறப்புக்காக
கண்ணீர்
சிந்தக் கூடிய
இலட்சக்கணக்கான
மக்கள் இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள் “

“காளிதேவி
பஞ்ச
பாண்டவர்களை
நோக்கி
திரும்பினாள் “

“அர்ஜுனா !
நீ பெற்றெடுத்த
மகன் என்றும்
பாராமல்
உலக மக்களின்
நன்மைக்காக
உன்னுடைய
மகனையே
எனக்கு
களப்பலியாகக்
கொடுத்திருக்கும்
உன்னுடைய
செயல்
என்னை
பிரமிக்க
வைக்கிறது “

“பஞ்ச
பாண்டவர்களாகிய
நீங்கள்
அனைவரும் 
ஒன்றாகச் சேர்ந்து ;
அனைவருடைய
ஒப்புதலையும்
பெற்று ;
அனைவரும்
ஒன்றாக
இணைந்து ;
அரவானை
களப்பலியாகக்
கொடுத்த செயல்
என் மனதை
நெகிழச்
செய்கிறது ; “

“இந்த உலகமே
இரண்டு
அணிகளாக
பிரிந்து
எதிர் எதிராக நின்று
போரிடுவதற்காகக்
காத்துக்
கொண்டிருக்கும்
குருஷேத்திரப்
போரில்
பாண்டவர்களாகிய
நீங்களே
வெற்றி
பெறுவீர்கள் “

“இந்த உலகம்
முழுவதையும்
ஒரு குடையின்
கீழ் வைத்து
அரசாண்டு
மக்களை
காக்கக் கூடிய
மிகப்பெரும்
பொறுப்பைக்
கொண்ட
மாபெரும்
அரசர்களாக
பஞ்ச
பாண்டவர்களாகிய
நீங்கள் ஐவரும்
திகழ்ந்து இந்த
உலகத்தையே
அரசாள்வீர்கள் “

“என்ற வரங்களை
உங்களுக்கு
அளிக்கிறேன் என்று
காளிதேவி
வாழ்த்தினாள் “

“நின்ற நிலையில்
வணங்கிக்
கொண்டிருந்த
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
காளிதேவியின்
காலில்
விழுந்து
வணங்கினர் “

“காளிதேவி
அனைவரையும்
ஆசிர்வதித்தாள் “

“கிருஷ்ணன்
இரண்டு
கைகளாலும்
காளியை
வணங்கினார் “

“காளிதேவி
கிருஷ்ணனைப்
பார்த்து
சிரித்து விட்டு
மறைந்து
விட்டாள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////



No comments:

Post a Comment