April 15, 2020

பரம்பொருள்-பதிவு-198


             ஜபம்-பதிவு-446
            (பரம்பொருள்-198)

“அங்கு
நிரம்பியிருந்த
அமைதியை
கிழித்துக் கொண்டு
அரவான் …………………….
என்று குரல்
கொடுத்தார்
கிருஷ்ணன் “

“அந்த இடமே
அரவான் என்ற
வார்த்தையால்
அதிரும் வகையில்
அரவான்……………………
என்று கத்தினார்
கிருஷ்ணன் “

“அரவான் என்ற
குரலைக் கேட்ட
அதே நேரத்தில்
ஆவேசத்துடன்
உடலை சிலிர்த்த
அரவான்
இடது கையால்
தலையில் உள்ள
தலை முடியைப்
பிடித்துக் கொண்டு
வலது கையில்
இருந்த வாளை
எடுத்து
கழுத்தை
ஒரே வீச்சில்
வெட்டினான்
அரவான் “

“தலை
உடலிலிருந்து
தனியாக
பிரிந்தது “

“இடது கையால்
தனது தலையை
உடலிலிருந்து
பிரித்து
எடுத்தான்
அரவான் “

“வெட்டப்பட்ட
தலை இருந்த
அரவானின்
உடலில் இருந்து
இரத்தம்
வானத்தை நோக்கி
பீறிட்டு அடிக்கத்
தொடங்கியது “

“அரவான்
இடது கையில்
பிடித்திருந்த
தலையில் இருந்து
சிந்திய இரத்தம்
பூமியை
நனைக்கத்
தொடங்கியது “

“அரவான்
உடலிலிருந்து
பீறீட்ட இரத்தம்
வானத்தை
நோக்கியும் ;
தலையிலிருந்து
சிந்திய இரத்தம்
பூமியை
நோக்கியும் ;
சிந்தத்
தொடங்கியதால்
அந்த இடமே
இரத்தக் காடாக
மாறி இருந்தது “

“அந்த இடம்
முழுவதும்
அரவானுடைய
இரத்தம்
ஆறாக ஓடிக்
கொண்டிருந்தது  

“அந்த இரத்த
ஆற்றில் தான்
அனைவரும்
நின்று
கொண்டிருந்தனர்  

“அரவான் தலையை
வெட்டிய போது
சிதறிய இரத்தம்
பஞ்ச
பாண்டவர்களின்
உடலையும்  ;
கிருஷ்ணனின்
உடலையும்
நனைத்தது ;”

“தரையில்
ஓடிய இரத்தம்
பஞ்ச
பாண்டவர்களின்
காலையும்
கிருஷ்ணனின்
காலையும்
நனைக்கத்
தொடங்கியது “

“வலது கையில்
இரத்தம் வழியும்
வாளுடனும் ;
இடது கையில்
வெட்டப்பட்டு
இரத்தம் வழிந்து
கொண்டிருக்கும்
தலையுடனும் ;
கழுத்து
அறுபட்ட நிலையில்
நின்று
கொண்டிருக்கும்
உடலுடனும் ;
அரவான்
காளிதேவியின்
முன்னால்
நின்று
கொண்டிருந்தான் “

“பஞ்ச
பாண்டவர்களுடைய
உடல் மீது
அரவானுடைய
இரத்தம் சிதறியதால்
அவர்களுடைய
உடல் சிவப்பாக
மாறி இருந்தது “

“கிருஷ்ணனின்
உடல் மீதும்
அரவானுடைய
இரத்தம் சிதறியதால்
கிருஷ்ணனுடைய
உடலும் சிவப்பாக
மாறி இருந்தது “

“அரவானுடைய
உடலும்
அரவானுடைய
இரத்தத்தாலேயே
சிவப்பாக மாறி
இருந்தது “

“பசுமையாக இருந்த
அந்த இடமே
இரத்தத்தால்
சிவப்பாக
மாறி இருந்தது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment