April 15, 2020

பரம்பொருள்-பதிவு-199


               ஜபம்-பதிவு-447
              (பரம்பொருள்-199)

“கண்ணிமைக்கும்
நேரத்தில்
அந்த இடமே
மாறத்
தொடங்கியது “

“வானத்தில்
திரிந்து
கொண்டிருந்த
மேகங்கள்
அனைத்தும்
ஒன்றாகக் கூடி
கருமையாக
மாறியதால்
அந்த இடத்தில்
உள்ள
வெளிச்சம்
முழுவதும்
மறையத்
தொடங்கியது ; “

“வெளிச்சம்
மறையத்
தொடங்கியதால்
ஒளியால்
நிரம்பியிருந்த
அந்த இடமே
இருளால் சூழத்
தொடங்கியது “

“இருளால்
சூழப்பட்டு
இருந்ததால்
இரவு என்று
நினைக்கும்
வகையில்
அந்த இடம்
இருந்தது “

“கதிரவன்
தன்னை
மறைத்துக்
கொண்டு
எங்கு
சென்றான்
என்றே
தெரியவில்லை “

“பலமாக அடித்த
காற்றினால் 
அந்த
இடத்தில்
உள்ள
இலைகள் ;
தழைகள் ;
பூக்கள் ;
அனைத்தும்
காற்றினால்
அடித்துச்
செல்லப்பட்டுக்
கொண்டு
இருந்தது “

“மழை
வருவதற்கான
எந்தவிதமான
அறிகுறியும்
தென்படவில்லை “

 “ஆனால்
இடியும்
மின்னலும்
மாறி மாறி
அடித்துக்
கொண்டு
இருந்தது “

“நரிகள்
ஒன்றாகக் கூடி
ஊளையிடும்
சத்தம் கேட்டது ;
ஆந்தைகள்
ஒன்றாகக் கூடி
அலறும்
சத்தம் கேட்டது ;
கோட்டான்கள்
ஒன்றாகக் கூடி
குமுறும் சத்தம்
கேட்டது ;

“காட்டில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
பல்லாயிரக்கணக்கான
மிருகங்கள்
அனைத்தும்
காட்டில்
அங்கும்
இங்கும்
பயத்துடன்
ஓடத்
தொடங்கியது “

“பல்லாயிரக்கணக்கான
பறவைகள்
அனைத்தும்
அச்சத்தில்
ஒரே
சமயத்தில்
வானத்தை
நோக்கி
பறக்கத்
தொடங்கியது “

“பல்லாயிரக்கணக்கான
விலங்குகள்
எழுப்பிய
ஒலியும்  ;
பல்லாயிரக்கணக்கான
பறவைகள்
எழுப்பிய
ஒலியும் ;
இதயத்தை
வெடிக்கச்
செய்யும்
வகையில்
இடி எழுப்பிய
ஒலியும் ;
அந்த
இடத்தையே
அதிர
வைத்துக்
கொண்டிருந்தது ; “

“என்ன
நடந்து
கொண்டிருக்கிறது
என்று
கணிக்க முடியாத
அளவிற்கு
அச்சத்தை
ஏற்படுத்தும்
வகையில்
அந்த இடமே
மாறி
விட்டிருந்தது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment